Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுனாமி மோசடி போல வெள்ள நிவாரண மோசடியும் மஹிந்த மேற்கொள்ளப்போகின்றார்.

Featured Replies

ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு மில்லியன் யூரோக்களை கிழக்கில் வெள்ள அனர்த்த நிவாரண பணிக்காக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. இந்த நிதியினை இலங்கையின் அனர்த்த நிவாரண திணைக்களத்திற்கே வழங்கப்படுவதாக அறியமுடிகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியக கூட்டுறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான இயக்குனர் இந்த உதவியானது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு குடி நீர் நிவாரணத்திற்கு என கூறினார்.

இதே நேரம் யப்பான் மற்றும் இந்தியா ஆகியனவும் உதவிகளை வழங்கியுள்ளது. இந்தியா இலங்கை அரசின் குணாம்சத்தை நன்கு அறிந்ததனால் பொருட்களாகவே வழங்கியுள்ளது.

காரணம் வெள்ள அனர்த்தத்தை காட்டி நிதி வசூலிக்கும் படலங்களை ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகளை அழைத்து 500 மில்லியன் உதவியினை திரட்டுமாறு கோரியுள்ளது. இதனை ஐக்கிய நாடுகளின் கொழும்பு வதிவிட பிரதி நிதி உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் சில நாட்களில் கொழும்பு ஐக்கிய நாடுகள் காரியாலையம் இந்த உதவி கோரலை உலக கொடையாளரிடம் கோரவுள்ளது.

யுனிசெவ் அமைப்பு ஏற்கனவே நிவாரண பொதிகளை அரசாங்கத்திடம் கொடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் கிழக்கில் செஞ்சிலுவைச்சங்க, ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் காரியாலையம் ஆகியவற்றை மூடியுள்ளது. வடக்கிலும் இதே போன்று அலுவலகங்களை மூடுமாறு அறிவுறுத்தியதால் அனைத்துலக நிறுவனங்கள் தமது அலுவலகங்களை மூடியுள்ளன.

னிவாரண பணிகளை தம்மால் முகாமை செய்ய முடியும் என்றும், தமது அரசாங்கத்தினால் நிவாரண பணிகளை முன்னெடுக்க முடியும் எனவும் அரசாங்கம் மார்தட்டிக்கொண்டது. ஆனால் இப்போ அரசாங்கம் வெளி நாடுகளிடம் உதவியினை பெருமளவு கோரியுள்ளது.

வழங்கபப்டுகின்ற உதவிகள் கட்டாயம் கிழக்கு மாகாண மக்களுக்குத்தான் போய் சேரும் என்பதில் என்ன உத்தரவாதம். அனைத்துலக தொண்டர் நிறுவனங்கள் மஹிந்த அரசாங்கத்தை நம்புகின்றனவா? அனைத்துலக நிறுவனம் அள்ளிக்கொடுக்க போகும் உதவிகளுக்கான பணிகள் சரியாக செல்கின்றன என்பதனை நிதி வழங்குனர்கள் மேற்பார்வை செய்ய முடியுமா?

பாதிகப்பட்ட மக்களுக்கு உதவிகள் தேவை என்பதனை தவிர்க்க முடியாது ஆனால் அது ஒழுங்காக பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவேண்டும் என்பதனையும் உறுதிப்படுத்த வேண்டிய கடமைப்பாடு உள்ளது.

ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் உரிய முறைப்படி பங்கிடப்படவில்லை. இந்திய உதவிகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

சர்வதேசம், கொடையாளர்கள் இவற்றை சிந்திப்பார்களா? சுனாமி காலகட்டத்தில் மஹிந்த தானே ஒரு கணக்கை திறந்து அதனூடாக 80 கோடி ரூபாவினை வெளினாட்டு நிதியாக பெற்றார். பின்னர் அதனை தனது ஜனாதிபதி தேர்தலிற்காக முழுமையாக பயன்படுத்தினார். இதுதான் அவரது அரசியலிற்கான பெரும் முதலீடாக இருந்தது. இதனைவிட பல முஸ்லிம் தலைவர்கள் இஸ்லாமிய நாடுகளில் இருந்து பெறப்பட்ட நிவாரணங்கள் அவர்களது வணிக நிலையங்களுக்கே நேரடியாக சென்றது.

அதுபோலதான் வெள்ள நிவாரணத்திற்கும் நடக்கலாம்.

ஈழ நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.