Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரம்பரை காரணமாகவும் புற்று நோய் வரலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரம்பரை காரணமாகவும் புற்று நோய் வரலாம்

புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயல்ல என்று மருத்துவ உலகம் இன்று நிரூபித்து வருகின்ற தருணத்தில், மேலைத்தேய நாட்டவர்களைப் போல் தெற்காசியாவில் வாழ்பவர்களுக்கு பெருங்குடலில் புற்று நோய் வருவதில்லை என்றும், ஆனால் இன்றைக்கு மாறிவிட்ட உணவு பழக்கத்தாலும் இவ்வகையான புற்று நோய் வரக்கூடும் என்று எச்ரிக்கை செய்கிறார் சென்னையில் பணியாற்றி வரும் புற்று நோய் சத்திர சிகிச் சை நிபுணர் டொக்டர் எம். பி. விஸ்வநாதன். சென்னை இராயப்பேட்டை அரசினர் மருத்துவமனையின் புற்று நோய் சிகிச்சையில் நிபுணராக பணியாற்றி வரும் இவரை சந்தித்து புற்று நோய் குறித்து சந்தேகங்களுக்கு விளக்கம் தருமாறு கேட்டோம்.

புற்று நோய் கட்டியாக உருவெடுப்பதன் மருத்துவ காரணம் என்ன?

ஜெனிடிக் மியூட்டேஷன் காரணமாகத்தான் புற்று நோய் உடலில் எந்த பகுதியிலாவது கட்டியாக உருவெடுக்கிறது. எம்முடைய உடல்களில் ஓன்கோ ஜீன்ஸ் என்ற மரபணுகள் உள்ளது. அதனுடன் அதனை எதிர் த்து செயலாற்றும் மரபணுக்களும் இருக்கிறது. புற்று நோயை தூண்டும் காரணிகளான புகை பிடிப்பது, மது அருந்துவது, பான் பராக் போடுவது என ஏதேனும் ஒரு காரணிகளால் உள்ளுக்குள் இருக்கும் ஓன்கோ ஜீன்ஸ் தூண்டப்பட்டு, புற்று நோயை பரப்பும் செல்கள் தங்களின் பணியை தொடங்குகின்றன. அதே தருணத்தில் ஓன்கோ ஜீன் ஸை செயல்படவிடாமல் தடுக்கும் மரபணுக் களை, புற்று நோயை தூண்டும் காரணிகள் முடக்கிவிடுகின்றன.இதனால் புற்றுநோயை பரப்பும் செல்கள் வேகமான வளர்ச்சியை பெற்று, கட்டியாக உருவெடுக்கின்றன. அத்துடன் காரணமில்லாமல் உடலின் மற்ற பகுதிகளில் பயணித்து, ஆரோக்கியமாக உள்ள செல்களையும் தாக்கத் தொடங்குகின்றன. எந்த பகுதியில் உள்ள செல்கள் இதன் தாக்குதலை எதிர்கொள்ளாமல் வலுவிழக்கிறதோ அங்கே தங்கி, உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்குகிறது.

உதாரணமாக மார்பகத்தில் உருவாகும் புற்று நோய், அக்குள் பகுதி, விலா எலும்பு பகுதி, கல்லீரல் என தொடர்ந்து தன்னுடைய பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டேச்செல்கின்றன. இதன் காரணமாக ஓரிடத்தில் புற்று நோய் உருவாகியிருந்தால் எங்களைப் போன்ற மருத்துவ நிபுணர்கள், சிகிச்சையளிக்கும் முன் அந்த புற்று நோய் வேறு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டறிந்த பின்னரே முழுமையாக சிகிச்சையளிக்க தொடங்குகிறோம்.

மார்பக புற்று நோய் வருவதற்கு பரம்பரையும் ஒரு காரணமென தற்போது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து முதல் பத்து சதவீத மார்பக புற்று நோயாளிகள், பரம்பரையின் காரணமாகவே இவ்வித பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அத்துடன் மாசடைந்து வரும் சுற்று சூழல் காரணமாகவும் புற்று நோய் வரலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. எம்முடைய உணவு முறையையும், வாழ்க்கை நடைமுறையையும் மாற்றியமைத்துக்கொண்டதாலும் கூட சிலருக்கு புற்று நோய் வந்திருப்பதை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. துரித உணவு, பைக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்கும் உணவு, பர்கர், பீஸா, ரசாயனம் கலக்கப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவை எம்முடைய கலாச்சார உணவல்ல. எனவே இதனை முழுமையாக தவிர்த்திடுங்கள். அதே தருணத்தில் கடினமான உடலுழைப்பையும் எம்மில் பலர் குறைத்துக்கொண்டுவிட்டதால் புற்று நோய் தாக்குவது எளிதாகிவிட்டது. அதனால் எம்முடைய முன்னோர்களின் உணவில் இடம்பெற்ற கம்பு, கேழ்வரகு போன்ற நார் சத்து மிக்க உணவுகளையும், பச்சை காய்கறிகளையும் நாம் மீண்டும் சாப்பி டுவதில் ஆர்வம் காட்டவேண்டும். உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் கூட புற்று நோய் க்காளாகிறார்கள். அதனை விட புகையிலை,பான் பராக்,மது அருந்துதல் ஆகிய பழக்கமுள் ளவர்கள் புற்று நோயின் பாதிப்பிலிருந்து தப்பமுடியாது. எனவே இதனை குறைத்துக்கொள்வதும், முழுவதுமாக அதிலிருந்து மீளுவதும் தான் சிறந்தது.

புற்று நோய்க்கான சிகிச்சையில் கீமோதெரபி என்ற சிகிச்சையின் வெற்றிவீதம் என்ன?

எம்.ஆர்.ஐ ஸ்கேன், பி இ டி ஸ்கேன், சி டி ஸ்கேன் ஆகியவற்றின் பரிசோதனையில் கண்டறியப்படும் புற்று நோயை அகற்ற சத்திர சிகிச்சை உதவி புரிகிறது. மைக்றோ மெட்டாஸ்டீக் என்றழைக்கப்படும் கண்ணுக்கு புலப்படாத இரத்த அணுக்களில் கலந்திருக்கும் புற்று நோய் செல்களை அழிக்க சிஸ்டடிமக் ட்ரீட்மெண்ட் எனப்படும் கீமோதெரபி என்ற சிகிச்சை தான் பலன் தரவல்லது. இவை ரத்த நாளங்களிள் மூலமாக செலுத்தப்படும் ஒரு வகையான கதிர்வீச்சு சிகிச்சை. மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பெண்மணிக்கு, புற்று நோயின் கட்டி மார்பகங்களில் அளவுக்கதிமாக பெரியதாக இருந்தால் மூன்று முறை கீமோதெரபி கொடுத்து, அவற் றை அளவில் சிறியதாக்குகிறோம். அதனைத் தொடர்ந்து சத்திர சிகிச்சை செய்து, மார்பகத்தை அகற்றுகிறோம்.

அதற்கு பிறகும் மூன்று முறை நியோ அக்கியூரஸி கீமோதெரபி என்ற சிகிச்சையை வழங்கி அவர்களை குணப்படுத்துகிறோம். ஒரு சில புற்று நோயை தவிர பெரும்பாலான புற்று நோயை குணப்படுத்துவதில் கீமோதெரபியின் பங்களிப்பு அதிகம். இரத்த புற்று நோய்க்கு கீமோதெரபி சிகிச்சை தான் சிறந்தது.

கைஃபர் நைஃப் சிகிச்சையின் முக்கியத்துவம் என்ன?

புற்று நோயை மிகத்துல்லியமாக அகற்றுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பத்திலான கதிர்வீச்சு சிகிச்சை தான் சைஃபர் நைஃப். மருத்துவ நிபுணர்கள், வேறு துறை வல்லுநர்களுடன் இணைந்து இயந்திர மனிதனை உருவாக்கி, அதனை வைத்துக் கொண்டே சத்திர சிகிச்சைகளை செய்கிறார்கள். இதன் முக்கியத்துவம் தெரிய வேண்டும் என்றால் ஐம்பதாண்டுகளுக்கு பின்னோக்கி செல்லவேண்டும். அந்த காலகட்டத்தில் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் அப்பகுதியில் இருந்த மலப்பையும், மூத்திர பையும் பாதிப்புக்குள்ளானது. இதனை களைவதற்கான ஆய்வு தொடர்ந்தது. பல்வேறு ஆய்வுகளுக்கு அப்பால் இந்த சைஃபர் நைஃப் என்ற சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எந்த நிலையிலான புற்று நோயை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை நோயாளிக்களுக்கு வந்துள்ளது. அதேப் போல் முதுகெலும்பு பகுதிகளில் ஏற்படும் புற்று நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சையில் துல்லியம் அவசியமாகிறது. அத்தகைய தருணங்களில் இந்த நவீன சிகிச்சை தான் பலன் தருகிறது.

வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்பும் விடயம் என்ன?

உடலில் எங்கேனும் புண் ஏற்பட்டு அவை மூன்று வாரங்களுக்கு மேல் ஆறவில்லை என்றாலோ, தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் தொடர்ந்தாலோ, பத்து தினங்களுக்கு மேல் பசியின்மை இருந்தாலோ,மலம் கழிக்கும் போது இரத் தம் வெளியேறுவது ஒரு வாரத்திற்கு மேல் தொடர்ந்தாலோ, உடலில் இருக்கும் மச்சங்கள் திடீரென்று வளர்ந்தாலோ உடனடியாக அருகில் உள்ள மருத்துவர்களை சந்தித்து, ஆலோசனை பெற்று பரிசேதனையை செய்துகொள்ளுங்கள். தாமத திருமணம், குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர்ப்பது, மது அருநதுவது, புகைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது உறுதி என்பதால் இதனை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

http://www.medicalon...Cancer&catid=73

அரபு நாட்டு பயோ டெக்னாலஜி (Bio Technology) நிறுவனம் புற்று நோய் மருத்துவம் பற்றி ஆய்வு நடத்தியது. பல்வேறு அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஒட்டகம் பால் மற்றும் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்தனர். எலிக்கு புற்று நோயை ஏற்படுத்தி இந்த மருந்தை அந்த எலிக்கு செலுத்தினார்கள். 6 மாதமாக மருந்து கொடுக்கப்பட்டது. இதில் எலிக்கு புற்று நோய் முற்றிலும் குணமாகிவிட்டது.

எலி உடலில் இருந்த புற்று நோய் செல்கள் அனைத்தும் அகன்று வீரியத்துடன் கூடிய புதிய செல்கள் உருவாகி உள்ளன. இப்போது இந்த எலி மற்ற ஆரோக்கியமான எலிகளை போல துள்ளி குதித்து ஓடுகிறது.

ஒட்டகம் பால்- சிறுநீரில் இருந்து தயாரான இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக உருவாக்குகிறது. இது பாதிக்கப்பட்ட புற்று நோய் செல்களை அளித்து விட்டு புதிய செல்களை உருவாக்குகிறது.

இந்த மருந்தால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படு வது இல்லை. எனவே மனிதர் களுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தி புற்று நோயை குணப்படுத்தி விடலாம் என விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக இப்போது மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.

இதிலும் வெற்றி ஏற்பட்டால் மருந்து பயன்பாட்டுக்கு வந்து விடும். உலகில் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் புற்று நோய்க்கு பலியாகிறார்கள். அரபு நாடுகளில் இதய நோய் மற்றும் தொற்று நோய் அடுத்து புற்று நோயால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.