Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகேஸ்வரி நிதியம், அங்கீகரிக்கப்படாத நிதியம்!

Featured Replies

மகேஸ்வரி நிதியம், அங்கீகரிக்கப்படாத நிதியம்!

வன்செயல்களுக்குப் பொறுப்பானவரின் வீட்டிற்குச் சென்று ஜனாதிபதி நட்புறவு கொள்கிறார்.

மணல் அகழ்வு மற்றும் மகேஸ்வரி நிதியம் என்பவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பிணமாகின்றனர். ஆர்ப்பாட்டம் தொடர்பாகச் செய்திகளை வெளியிடக்கூடாது என லொறிகளில் வரும் குண்டர்கள் குடாநாட்டு தமிழ்ப்பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுகின்றனர். இவ்வளவு வன்செயல்களுக்குப் பொறுப்பானவரின் வீட்டிற்குச் சென்று ஜனாதிபதி நட்புறவு கொள்கிறார்.அது தொடர்பான படங்கள் ஊடகங்களிலும் வந்துள்ளன. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு வேதனையளிக்கின்றது என சரவணபவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநட்டில் இடம் பெறும் தொடர் கொலை, கொள்ளை மற்றும் சட்டவிரோதச் சம்பவங்கள் தொடர்பாக இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்;

அங்கீகரிக்கப்படாத மகேஸ்வரி நிதியத்தின் நிதி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும். இந்த நிதியம் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஒன்று அல்ல. மகேஸ்வரி நிதியம் அரசினால் பதிவு செய்யபட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒன்று எனப் போலியாக விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றது. இதன் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே இருக்கிறார். இதனை உறுதிப்படுத்த சான்றுகளும் உள்ளன. (அவர்களால் அச்சிடப்பட்ட விளம்பரத்தையும் கடிதத்தலைப்பினையும் சபாநாயகருக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்றில் காட்டினார்.)

தென்பகுதியில் இடம் பெறும் சட்டவிரோதச் சம்பவங்களை உடனுக்குடன் கண்டுபிடித்துவிடும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் யாழ். குடாநாட்டில் இடம் பெறும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை மட்டும் கண்டுபிடிக்காதது ஏன்? இவற்றின் அடிப்படைத் தன்மை கண்டுபிடிக்கப்படவில்லையா? அல்லது கண்டுபிடிக்க விருப்பம் இல்லையா? நாம் எமது பிரதேசத்தில் இடம் பெறும் சம்பவங்கள் தொடர்பாக மிகவும் வேதனையுடன் உள்ளோம். ஆனால் தமிழ் மக்களின் இதயத்தை வெல்வோம் எனக்கூறும் பிரதமர் இந்தச் சம்பவங்களை யானையின் வாலில் இருந்து விழுந்த ஒரு மயிருக்குச் சமம் எனக் கூறுவது பொறுப்பற்ற வேதனைக்குரிய விடயமாகும் எனவும் கண்டித்தார்.

இப்பொழுது இந்த அங்கீகரிக்கப்படாத ஒரு நிதியத்தை நாடாளுமன்றத்தில் தவறான வழியில் அங்கீகாரம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு இடமளிக்கக் கூடாது யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய ஜனாதிபதி சமாதானத்தை அழிக்கும் வகையில் செயற்பட்டு வரும் எந்தவொரு சக்தியையும் விட்டுவைக்கமாட்டோம் என்று கூறிய சில நிமிடங்களில்

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சர்வசாதாரணமாகச் சுட்டுவிட்டுத் தப்பிச் செல்கின்றனர். இவர்கள் கைது செய்யப்படவில்லை.

முன்பு தமிழீழ விடுதலைப்புலிகள் பொது மக்களின் பணத்தைக் கொள்ளையடித்ததாக் கூறினார். ஆனால் இப்போது டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் “மகேஸ்வரி நிதியம்” என்ற பெயரில் சட்டவிரோதமான நிதியம் ஒன்று மக்களின் பணத்தைப் பகல் கொள்ளையடிக்கின்றது. இவர்களின் ஆதரவாளர்கள் குண்டர்களாகவே இயங்குகின்றனர். குடாநாட்டில் இடம் பெறும் சட்டவிரோத சம்பவங்களின் பின்னணியில் பாதாள உலகக் கோஷ்டியினர் சம்பந்தம் என்கிறார் ஜனாதிபதி, வடபகுதிக்குப் பொறுப்பான படைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க முன்னாள் போராளிகள் என்று கூறுகின்றார்.

அரச அதிபரோ இல்லை இல்லை அங்கு இடம்பெறும் சம்பவங்களுக்கு வறுமையே என்று சொல்கிறார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ தமிழ் ஊடகங்கள் விடயங்களைத் திரிவுபடுத்திவிடுகின்றன. என்று ஊடகங்கள் மீது குற்றஞ் சுமத்துகின்றனர்.

அதேவேளை மானிப்பாய் பொலிஸார் இந்தச் சம்பவங்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்கின்றனர். இந்த கூற்றுக்கள் அனைத்தும்

ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.

இதில் எத்தரப்பினர் கூறுவது சரியானது. இதில் மர்மம் புதைந்துள்ளது. சட்டவிரோதக் கும்பலுக்கு இராணுவத்தினர் ஆயுதத்தைக் கொடுத்துள்ளனர் என்று கூறுகின்றார். ஒரு படை ஆள் சாதாரண ஒரு மனிதருக்குத் தனது ஆயுதத்தைக் கொடுத்தார் என்றால் அவர்களுக்கு மத்தியில் உள்ள செல்வாக்கும் நட்புறவும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.alaikal.com/news/?p=55088

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.