Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக மீனவர்களின் துயரம்

Featured Replies

தமிழக மீனவர்களின் துயரம்

கடந்த சில நாள்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தளத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி எப்போதும்போல தந்தி அடிப்பதோடு விட்டுவிடாமல், மத்திய அரசின் மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேசியுள்ளார் போலிருக்கிறது. முதல்முறையாக பிரணாப் முகர்ஜி, ‘இப்படியெல்லாம் செய்யக்கூடாது, ஆமாம்!’ என்று சொல்லியிருக்கிறார். இலங்கை அரசுத் தரப்பில் இந்தக் காரியத்தை அவர்கள் செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். கொல்லப்பட்ட மீனவர்கள் தாங்களே தற்கொலை செய்துகொண்டார்கள் என்றுகூடச் சொல்லிவிடுவார்கள் அடுத்து.

கரையோர மாவட்டங்கள் அனைத்திலும் மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் தெருவில் இறங்கிப் போராடியுள்ளனர். சோஷியல் மீடியா நெட்வொர்க்கான ட்விட்டரில் பல தமிழர்களும் முதல்முறையாக இந்தப் பிரச்னையை சர்வதேச அளவில் பொதுமக்களிடம் எடுத்துச்செல்ல இந்தத் தொடுப்பில் உரையாடியுள்ளனர். 140 எழுத்துகளுக்குள் அடங்கும் இந்த டிவிட்டர் குறுஞ்செய்தி முறையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எது தொடர்பாக உலகில் மக்கள் அதிகம் பேசிக்கொள்கிறார்கள் என்பதை டிரெண்டிங் என்று குறிப்பிடுவர். அப்படி, இந்தியாவிலிருந்து ட்விட்டரைப் பயன்படுத்துவோருக்கு மத்தியில் தமிழக மீனவர்களின் துயரம் முன்னணியில் இருந்தது.

ஆனால் இந்தியாவின் தமிழக மீனவர்களின் துயரத்தை அடக்கும்விதமாக வேறு எத்தனையோ விதமான துயரங்கள். கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானம் தயார் நிலையில் இல்லாத காரணத்தால் பிப்ரவரி 22 அன்று நடக்கப்போகும் இந்தியா-இங்கிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டம் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது அந்த மாநில மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆங்கிலத் தொலைக்காட்சி நிலையங்களுக்கோ வேறு ஒரு கவலை. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை போட்டதில் 6 கோடி ரூபாய் பணம், கணக்கில் காட்டாமல் சிக்கியுள்ளதாம்.

தமிழக மீனவர்கள் கடல் எல்லைகளை மதிக்கவேண்டும் என்பதாக தி ஹிந்து எழுதியுள்ள எடிட்டோரியல் தமிழர்களைக் கடுமையாக ஆத்திரமடையச் செய்துள்ளது. கடல் எல்லைகள் தொடர்பான புரிதல் அனைவருக்கும் இருக்கவேண்டும். பாகிஸ்தானிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் மீனவர்கள் கடல் எல்லைகள் தாண்டி வருவது வழக்கமே. முன்னர் அவர்கள் சிறையில் பல ஆண்டுகள் வாடுவதும் வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போதைய நடைமுறைப்படி, மீனவர்களை உடனடியாக விடுவித்து அவரவர் நாடுகளுக்கு அனுப்பிவைத்துவிடுகிறார்கள்.

ஆனால் இலங்கைக் கடற்படை அப்படி நடந்துகொள்வதில்லை. 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடந்த பத்தாண்டுகளில் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. வலிமையான ஒரு நாடு, அதன் வலிமையான கடற்படையைக் கொண்டு தங்கள் நாட்டின் மிக ஏழைகளான, மிக எளியவர்களான ஒரு சமூகத்தைக் காப்பாற்ற ஒரு முயற்சியையும் இதுவரை மேற்கொண்டதில்லை என்பதே பெரும்பாலான மக்களுக்குக் கடும் ஆத்திரத்தை வரவழைத்துள்ளது.

முன்னர் ஒருமுறை நான் அப்போதைய இலங்கைக்கான இந்தியத் தூதர் பேசிய பிரைவேட் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டேன். அவர் இப்போது இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலராக இருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பேசியதைப் பதிவு செய்யக்கூடாது என்பதால் ஒலிப்பதிவு செய்யவில்லை. அப்போது பேசிய தூதர், இந்திய மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்வதாலேயே இலங்கைக் கடற்படை அவர்களைச் சுடுகிறது என்று பொருள்படுமாறு பேசினார்.

இன்றுதான் புலிகள் இல்லையே? அப்படியும் துப்பாக்கிச் சூடும் கழுத்தில் சுருக்கிட்டுக் கொலையும் நடக்கிறது என்றால் நாம் என்னவென்று எடுத்துக்கொள்வது? இலங்கை என்ற நாட்டுக்கு மனித உயிர்கள்மீதும் இந்திய உயிர்கள்மீதும் எந்தக் கவலையும் இல்லை. இந்தியா என்ற அண்டை நாட்டின்மீது மதிப்பும் பயமும் இல்லை. இந்தியா தன் வலிமையான கப்பற்படையைப் பயன்படுத்தி இலங்கையின் ஓரிரு கடற்படைப் படகுகளை மூழ்கடித்தால்தான் ஒருவேளை இந்தப் பயம் வரும் என்றால் அதனைச் செய்துதான் ஆகவேண்டும்.

அதன்பிறகு, கடல் எல்லைகளைப் பற்றிய பாடங்களை மீனவர்களுக்கு நடத்தலாம்.

இது தேர்தல் நேரம். அதனால், எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை இப்போதைக்காவது கையில் எடுப்பார்கள். தமிழ் தேசியம், இடதுசாரி, வலதுசாரி என்று சகட்டுமேனிக்கு அனைவருக்கும் இதில் ஒரு கருத்து இருக்கும். ஆனால் இதில் முக்கியமாகக் கருத்து சொல்லவேண்டிய ஒருவர் எந்தக் கருத்தையும் இதுவரை சொல்லவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்.

இவர்மீது இந்தியாவின் வேறு எந்தப் பகுதியில் மரியாதை இருந்தாலும் தமிழகத்தில் ஒரு சிறிதும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. தன் மானத்தைக் காக்கவாவது இவர் பேசவும் வேண்டும். செயல்படவும் வேண்டும். அதில்தான் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே அடங்கியுள்ளது.

ட்விட்டர் உலகின் செயல்வீரர்கள் அவரைப் பேசவும் செயல்படவும் செய்துவிட்டால் அதுவே தமிழ் இணையத்தின் மாபெரும் வெற்றியாக இருக்கும்.

http://www.tamilpaper.net/?p=2399

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.