Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கம் மீண்டும் மாணவர் அடக்குமுறைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றச்சாட்டு:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் மீண்டும் மாணவர் அடக்குமுறைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றச்சாட்டு:-

04 பெப்ரவரி 2011

அரசாங்கம் மீண்டும் மாணவர் அடக்குமுறைகளை ஆரம்பித்துள்ளதாக மாணவர் அமைப்புகள் குற்றம்சுமத்தியுள்ளன. தம்மிக சமித் குணவர்தன என்ற மாணவர் அவரது வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, நேற்றிரவு (03) 11 மணியளவில் சினிமோதர பிரதேசத்தில் வைத்து கந்தர காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 3 மணியளவில் இரண்டு மாணவர்கள் வெள்ளை வானில் சென்ற மாத்தறை காவற்துறையினரால் கடத்திச் செல்லப்பட்டு, இரண்டு மணிநேர விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வாறான அநீதியான முறையில் மாணவர்கள் கைதுசெய்யப்படுவதற்கு எதிராக ருஹூணு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நேற்று எதிர்ப்பு பேரணியொன்றை நடத்தினர். அத்துடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார மற்றும் விவசாய பீடத்தின் மாணவர் சங்கத் தலைவர் அமில கருணாதிலக்க ஆகியோர் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராகவும் அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நேற்று கைதுசெய்யப்பட்ட சஞ்சீவ பண்டார 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 28 ஆம் திகதி ருஹூணு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புள்ளதாக கூறி, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் ஆஜராகிய பின்னரே சஞ்சீவ பண்டாரவை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். சஞ்சீவ பண்டார சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் தியாகொட காவற்துறையினரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

GTN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.