Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமஷ்டி ஆட்சி முறைக்கு ஆதரவளிக்கத் தயார் - ஜே.வி.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டி ஆட்சி முறைக்கு ஆதரவளிக்கத் தயார் - ஜே.வி.பி

வெள்ளிக்கிழமை, 11 பிப்ரவரி 2011 01:01

நாடு பிரிவுபடாத வகையிலான சமஷ்டி ஆட்சி முறைக்கு தமது கட்சி பூரண ஆதரவளிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று திடீர் அறிவிப்புச் செய்துள்ளது. ஜே.வி.பியின் ஆறாவது வருடாந்த மகாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றபோது கட்சியின் தலைவரான சோமவன்ச அமரசிங்க இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், சமஷ்டி என்பதற்கு இந்த நாட்டில் இரண்டு கருத்துகள் உள்ளன. பிரிவினையுடனான சமஷ்டி, ஒன்றுபட்ட சமஷ்டி என்பனவையே அவை. இவற்றில் இரண்டாவது முறையை நாம் ஆதரிப்போம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் சமஷ்டி ஆட்சிமுறை ஒன்று உருவாக்கப்படுமாயின் அதனை நாம் ஆதரிக்கத் தயார் என அவர் தெரிவித்தார்.

sangamam

ஒன்றிணைந்த சமஷ்டி என்றால் என்ன? - சோமவன்ஸ அமரசிங்கவின் கருத்துத் தொடர்பில் மனோ கணேசன் கேள்வி!

ஒன்றிணைக்கும் சமஸ்டி என்றால் என்ன என்பதை தமிழ் மக்களுக்கு சோமவன்ச அமரசிங்க விளக்கி கூறவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஒன்றிணைந்த சமஷ்டி முறைமைக்கு ஜே.வி.பி ஆதரவளிக்கத் தயாராகவுள்ளதாக அக் கட்சியின் ஆறாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும் போது தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்திருந்தார்.

இவரின் இக் கருத்துத் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கையிலேயே அவர் இக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரிந்து செல்லும் சம்ஸ்டியை எதிர்ப்பதாகவும், நாட்டை ஒன்றிணைக்கும் சமஸ்டியை தமது கட்சி ஆதரித்து ஏற்றுக் கொள்வதாகவும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அக் கட்சியின் மாநாட்டின் போது தெரிவித்துள்ளார்.

இது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியாகும். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடித்து நிலைக்க வேண்டுமென்றால், தான் குறிப்பிடும் நாட்டை ஒன்றிணைக்கும் சமஸ்டி என்றால் என்ன என்பதை தமிழ் மக்களுக்கு சோமவன்ச அமரசிங்க விளக்கி கூறவேண்டும்.

கடந்த 30 வருட யுத்தம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்டது என காலத்திற்கு காலம் சொல்லப்பட்டாலும், அது தமிழர்களுக்கு எதிரான யுத்தமாகவே நடைமுறையில் நடைபெற்றது. இந்த யுத்தத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்த கட்சி; ஜேவிபியாகும்.

ஆனால் இதுதொடர்பில் ஜே.வி.பி.யை மாத்திரம் குறிப்பிட்டுகூற முடியாது. ஆளுகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான சுதந்திரக் கட்சியும், அதன் தீவிரவாத பங்காளி கட்சிகளும் இத்தகைய நிலைப்பாட்டையே முன்கொண்டு சென்றன. ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த நிலைப்பாட்டில் ஏனைய பெரும்பான்மை கட்சிகளுக்கு சளைத்தது அல்ல.

விடுதலைப் புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்க முடியாது என இந்த மூன்று பெரும்பான்மை கட்சிகளும் சொல்லி வந்தன. விடுதலைப் புலிகளுக்கு இராணுவ தீர்வு, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு என ஆளுங்கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் யுத்தத்தை நியாயப்படுத்தி வந்தன. இன்று போர் நிறைவு பெற்று, விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். இதை அரசாங்கம் அறிவித்துவிட்டது.

போர் நடைபெற்ற பொழுது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என பேசிவந்த பெரும்பான்மைக் கட்சிகள், இன்று கதையை மாற்றிப் பேசுகின்றன. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தற்போது இல்லை என்பதால் தேசிய இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தமும், அதிகாரப் பரவலாக்கலும் தேவையில்லை என்ற தொனியில் ஆளுங்கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் சமீப காலமாக பேசிவருகின்றன. ஜே.வி.பி ஒருபடி மேலே போய் யுத்தகாலத்திலேகூட அதிகாரப் பரவலாக்கலை கடுமையாக எதிர்த்து வந்த கட்சியாகும்.

இந் நிலையில், இன்று ஜே.வி.பி புதியவிதமான ஒரு சமஸ்டியை பற்றிப் பேசுகின்றது. இது எத்தகைய சமஸ்டி என்பது தமிழ் மக்களுக்கு விளக்கப்பட வேண்டும். எழுதப்பட்ட சட்டங்கள், கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் நடைமுறையாகாத இந் நாட்டிலே வெறும் வார்த்தைகளை நம்பி ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை.

ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு பொறுப்புள்ள கட்சி என்ற முறையில் நாம் இந் நாடு இன்று எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பிலே ஜே.வி.பி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுகின்றோம். அந்த செயற்பாடானது அக் குறிப்பிட்ட விவகாரங்கள் தொடர்புபட்டவையாகும்.

ஆனால் தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலே பெரும்பான்மை கட்சிகள் தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரத்தை பிரித்துத் தருவதற்கு இணங்காத வரையில் எந்தவொரு தமிழ், முஸ்லிம் கட்சிகளும் பெரும்பான்மை கட்சிகளுடன் முழுமையாக உடன்பட முடியாது.

அதுபோல் தமிழ் பேசும் மக்களும் பெரும்பான்மை கட்சிகளை கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடப் போவதில்லை. எனவே சோமவன்ச அமரசிங்க தனது ஒன்றிணைக்கும் சமஸ்டி என்ற கருத்து தொடர்பில் கொள்கை விளக்கம் அளிக்க வேண்டும்' என மனோ கணேசன் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={5706C9A6-5B7C-4CAB-BE87-307E1754C010}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.