Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆ.ராசாவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

Featured Replies

புதுதில்லி, பிப்.17: முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தில்லி திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

2ஜி ஊழலில் கைது செய்யப்பட்ட பின் ராசா சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதன்முறை. இதுவரை அவர் தில்லியில் உள்ள மத்திய புலனாய்வுத் துறை தலைமை அலுவலகத்தின் லாக் அப்பில் அடைக்கப்பட்டிருந்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெகுரா ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். 8-ம் தேதிவரை 3 பேரையும் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதன் பிறகு ராசாவுக்கு மட்டும் கடந்த 8-ம் தேதியும், 10-ம் தேதியும், பின்னர் 14-ம் தேதியும் சிபிஐ காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது.

சிபிஐ காவல் முடிந்து ராசா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராசாவை மேலும் காவலில் எடுக்க சிபிஐ அனுமதி கோராததால் அவரை மார்ச் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

திகார் சிறையில் ராசாவுக்கு புத்தகங்களும், மருந்துப் பொருட்களும் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் ரமேஷ் குப்தா நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். மேலும் வீட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவை அவருக்கு அளிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=378043&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

  • தொடங்கியவர்

இந்தியாவை ஊழல்தான் இயக்குகிறது

“இந்தியாவை ஊழல்தான் இயக்குகிறது என்பதுபோல் சித்தரித்துவிடாதீர்கள், அது நமது நாட்டின் பெருமையையும், நமது மக்களின் தன்னம்பிக்கையையும் பலவீனப்படுத்திவிடும்” என்று ஊடகவியலாளர்களை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏதோ 2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் ஆகியவற்றால் நமது நாட்டை ஊடகங்கள் இவ்வாறு சித்தரித்திருந்தால், பிரதமரின் கவலையை நாமும் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், இந்த நாட்டில் ஊழல் என்பது நாடு விடுதலைப் பெற்ற சில ஆண்டுகளிலேயே வேர் விட்டு, வளர்ந்து, இன்று ஆலமரம் போல பரந்து விரிந்து, ஊழல் இல்லாத இடமென்று ஏதுமில்லை என்று ஆகிவிட்ட நிலையில்தான், அப்படி ஒரு சித்தரிப்பு அவசியமாகிறது. ஏனெனில் அதுவே உண்மை நிலையை பிரதிபலிக்கிறது.

ஊழலே இல்லாத ஒரு ஆட்சி நடைபெறும் நாடாக இந்தியா இருந்திருக்கமானால், பல்லாயிரக்கணக்கில் (இலட்சத்தில் இழப்பு இல்லை என்ற பிரதமரின் கருத்தை தற்காலிகமாக ஏற்போம்) அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய இன்றைய ஊழல்கள் வெளிப்பட்டிருந்தால், அது இந்த நாட்டின் அரசை தூக்கி எறிந்திருக்கும். ஆனால் மக்கள்தான் அதிர்ந்தார்களே தவிர, அரசியல்வாதிகள் கவலைப்படவில்லையே! 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒரு பைசா கூட இழப்பு இல்லை என்றல்லவா தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகிறார். எவ்வளவு துணிச்சல்!

ஆனால், நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழு முன்பு சாட்சியமளித்த மத்திய புலனாய்வுக் கழகத்தின் தலைவர் ஏ.கே.சிங், இதுவரை தாங்கள் நடத்திய புலனாய்வில் 2ஜி ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.50,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஒப்புக்கொண்டாரே! இதற்குப் பிறகும் ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்று கூறிய கபில் சிபலை பிரதமர் கண்டிக்கவில்லையே?

இந்த நாட்டின் உணவுக் கிடங்குகளில் ரூ.60,000 கோடி மதிப்பிடத்தக்க உணவுப் பொருட்கள் அழுக்கிக் கொண்டிருக்கின்றன, அவற்றை வறுமையில் வாழும் ஏழைகளுக்கு இலவசமாக கொடுத்தால் என்ன? என்று கேட்டு தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரித்த இந்தியாவின் உச்ச நீதிமன்றம், அதனை ஒரு பரிந்துரையாகவே அரசுக்கு செய்தது. அதற்கு இந்த பிரதமர் கூறிய பதில் என்ன? “வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்களை வழங்கினால், அதனால் அரசுக்கு ஆண்டிற்கு ரூ.1,75,000 கோடி இழப்பு ஏற்படும். அதனைத் தாங்குவது சாத்தியமில்லை” என்றார். ஆனால், இப்படி பிரதமர் கூறிய ஒரிரு மாதங்களில் இந்த நாட்டின் தலைமை கணக்காய்வாளரும், தணிக்கையாளரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டினால் அரசுக்கு ரூ.1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மதிப்பிட்டு தணிக்கை அறிக்கை தந்தார். இப்போது எப்படி அரசு தாங்குகிறதாம்? ஏழைகளுக்கு அளிப்பதற்கு வலிக்கிறது. பெரு நிறுவனங்கள் அடித்துக் கொண்டுபோனால் தாங்க முடிகிறது.

எந்தெந்த பெரு நிறுவனங்கள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பலன் பெற்றனவோ அவைகள் தானே ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களை நியமித்துள்ளன? இதுதானே நீரா ராடியா உரையாடல் பதிவில் வெளியானது? அதனை அரசின் சார்பாக பிரதமரோ அல்லது கட்சியின் சார்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவோ மறுத்ததுண்டா? இல்லையே? அப்படியானால், இவ்வாறு பெரு நிறுவனங்கள் பரிந்துரைத்த நபர்களுக்கு அமைச்சர் பதவி (காங்கிரஸால்) அளிக்கப்பட்டது என்றால், அதற்காக கைமாறிய லஞ்சம் எவ்வளவு? லஞ்சம் இல்லாமல் காங்கிரஸில் காரியம் நடக்குமா? 35% என்கிறாரே விவரதாரியான சுப்ரமணிய சுவாமி.

அமைச்சரவை அமைத்ததில் இலஞ்சம், அமைச்சர்கள் பெரு நிறுவனங்களுக்கு அளித்த வசதிகளுக்கு இலஞ்சம்...சுரங்கக் கொள்கை வகுத்து, அதன் மூலம் பெரு நிறுவனங்கள் நாட்டின் வளத்தை கொள்ளையடித்துக் கொண்டு போக இலஞ்சம், அவர்களுக்கு வசதியான ஆட்சியைத தொடர வாக்காளர்களுக்கு இலஞ்சம். இப்படி ஆட்சியே ஊழலில் மிதக்கும்போது, இந்த நாட்டின் இதர துறைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்?

‘காசு கொடுத்தால் காரியம் நடக்கும்’ என்ற நிலையே எங்கும் நீக்கமற நிலவுகிறது. பள்ளியில் சென்று பிள்ளைகளை சேர்க்க நன்கொடை என்ற பெயரில் இலஞ்சம், உயர் கல்வி படிக்க கல்லூரிகளில் நன்கொடை, கல்வி தனியார் மயமாக்கப்பட்டு, ‘பணமில்லையேல் படிப்பில்லை’ என்ற நிலைதான் இன்று இந்தியாவின் நிதர்சனம். கல்விக்கே இந்த நிலை என்றால் வேறு எது இந்த நாட்டில் புனிதம்?

மத்திய அரசில் இருந்து மாநில அரசுகள் வரை, அவைகளின் எந்தத் துறைக்குச் சென்றாலும் இலஞ்சம்தான். இன்று அது உச்ச கட்டத்திற்கு வளர்ந்துள்ளது. இதுதான் உச்சம் என்று நினைக்கிறோம். ஆனால், 2ஜி எல்லாம் நத்திங்... சுரங்க ஊழல் வெளிப்படும்போது இந்த நாடு அதிர்ச்சியடையும் என்கிறார் சஜன் ஜிண்டால் என்கிற தொலதிபர். அவ்வளவு பெரிய ஊழலா என்று செய்தியாளர்கள் கேட்க, “ஊழலிற்கென்றே வகுக்கப்பட்டது சுரங்கக் கொள்கை” என்கிறார். இந்த நாட்டின் வளங்களை தனியாரும், பன்னாட்டு நிறுவனங்களும் கொள்ளையடித்துச் செல்ல - ஒரு தடையற்ற அனுமதி வழங்குவதுதான் மத்திய அரசின் சுரங்கக் கொள்கை என்கிறார். இது எல்லா ஊடகங்களிலும் வெளியானது, ஆனால் இதையெல்லாம் அறியாதவர் போல் பேசுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

தான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சிதான், இந்த நாட்டை உலுக்கிய மாபெரும் பாதுகாப்பு ஊழலின் முக்கிய குற்றவாளியான ஒட்டோவியோ குட்ரோக்கியை நாட்டை விட்டு வெளியேறவும், பிறகு அவருடைய கணக்குகளை விடுவிக்கவும், பிறகு வழக்கையே முடித்து அவருக்கு சுதந்திரம் அளித்தது என்பதை நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து பேசுகிறார்.

1991ஆம் ஆண்டு இந்த நாட்டின் பிரதமராக நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது அதில் நிதியமைச்சராகி, பொருளாதாரத்தை திறந்துவிட்டவர் மன்மோகன் சிங். அன்றிருந்து இன்றுவரை இந்த நாட்டின் பொருளாதாரத்தை விட ஊழலே பெரிதாக வளர்ந்துள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கையும், தாராள மயமாக்கலும், உலகமயமாக்கலும், இந்த நாட்டின் உழைக்கும் மக்களை அந்நியப்படுத்திவிட்டன, ஆனால் தொழில், வணிகர்கள் நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் செழித்துள்ளார்கள், அவர்களுக்கு கொள்கை வகுத்து உதவிய அரசியல்வாதிகளும், தலைவர்களும் செழித்துள்ளார்கள். அதனால்தான் இந்த நாட்டில் இன்னமும் பாதிக்கு பாதிப்பேர் வறுமையில் உழல்கின்றனர்.

இந்த உண்மை இந்த நாட்டின் பிரதமருக்கு தெரியாததாக இருக்கலாம், ஆனால் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1102/17/1110217058_2.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.