Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசியலும், நடிகர்களும்...!

Featured Replies

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியலில் கல கலப்பூட்ட இதோ அடுத்த பஃபூனாக நடிகர் விஜய் 'என்ட்ரி' கொடுத்துவிட்டார். "திரையில்தான் நான் கதாநாயகன்... நிஜத்தில் பஃபூன்!" என்று சொல்வதுபோன்று நடிகர் விஜயின் முதல் பொதுக் கூட்ட நிகழ்ச்சி அரங்கேறி இருக்கிறது.

திரையில் ஹீரோவாக நடித்து ஓரளவுக்கு ரசிகர்கள் கூட்டமும் சேர்ந்துவிட்டால், நமது வெள்ளித்திரை நாயகர்கள் எல்லோருக்கும் கோட்டையில் உள்ள முதல்வர் நாற்காலி கனவு வந்துவிடுகிறது. அந்த அளவிற்கு தமிழக முதல்வர் நாற்காலியை கைப்பற்றுவதை மலிவாக எடை போட்டு வைத்திருக்கிறார்கள் நம் அவதார நாயகர்கள்.

திரையில் வெற்றிக்கொடி நாட்டிய எம்.ஜி. ராமச்சந்திரன், அரசியலிலும் சாதித்தார் என்றால் அது, இப்போதைய நாயகர்கள் நினைப்பது போன்று ஒரே நாளில் நடந்த 'மேஜிக்' அல்ல.திரையில் நடித்தபடியே திமுகவில் பல ஆண்டு காலம் பணியாற்றி, அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களிடம் அரசியல் கற்று பொது வாழ்க்கைக்கு வந்தவர் அவர்.

ஆனால் இன்றைய நமது ஹீரோக்களுக்கு சினிமா மார்க்கெட் 'டல்' அடிக்க தொடங்கிவிட்டால் அடுத்த பிழைப்பாக அரசியல்தான் கண்ணுக்கு தெரிகிறது.இல்லையெனில் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட தனிப்பட்ட கோபதாபத்தை பழி தீர்த்துக்கொள்வதற்கு அரசியலை ஒரு கருவியாக பயன்படுத்தி அதை கையில் எடுக்க நினைக்கின்றனர்.

இந்த நினைப்புடன் அரசியலுக்கு வந்து மண்ணை கவ்வியவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போனாலும்,நம்மவர்களுக்கு எதுவும் உறைக்கவில்லை என்பது அடுத்தடுத்து அரசியல் அவதாரம் எடுக்கும் நடிகர்களின் பட்டியலை பார்த்தால் நிரூபணமாகிறது.

மிக சமீபமாக நடிகர்கள் கார்த்திக், சரத்குமார் போன்றவர்கள் மண்ணை கவ்வி இன்று ஜெயலலிதாவிடம் ஒரு சீட்டும், 2 சீட்டுமாக பெறும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், அடுத்த பரிதாப பட்டியலில் இடம் பெற விஜயகாந்துடன் போட்டிக்கு குதித்துள்ளார் விஜய்.

இதுநாள் வரை, "மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி!; திமுக, அதிமுக ஆகிய இரண்டு கழக கட்சிகளுமே ஊழல் கட்சிகள்தான்" என்றெல்லாம் வீராவேசம் காட்டிய விஜயகாந்த், இன்று ஜெயலலிதாவுடன் 'சீட்' பேரம் நடத்திக்கொண்டிருக்கிறார்.

அதுவும் குடும்ப ஆதிக்கம் என்று அதிமுகவில் சசி கலாவையும், குடும்ப ஆட்சி என்று திமுக ஆட்சியையும் விமர்சித்தவர், இன்று தமது மனைவி பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி கேட்டு பேரம் பேசுவதாக தகவல் வருகிறது.

அதே சமயம் இவரது பேரத்திற்கெல்லாம் ஜெயலலிதா ஒப்புக்கொள்ளாததால், இன்று ஜெயலலிதா கொடுக்கும் சீட்டுகளை பெற்றுக்கொண்டு அதிமுகவுடன் கூட்டணி என்ற நிலைக்கு வந்துவிட்டார் விஜயகாந்த்.

இன்னும் சில தினங்களில்,"திமுக ஆட்சியை அகற்றத்தான் இந்த கூட்டணி வைத்தேன். இது ஒரு வித ராஜதந்திரம்...!" என்றெல்லாம் தன்னிலை விளக்கம் கூறி தமிழக மக்களின் - மன்னிக்கவும் - தமது ரசிகர்களின் காதில் டன் டன்னாக பூ சுற்றத்தான் போகிறார்.

ஒருவேளை -ஒருவேளைதான்- ஜெயலலிதா, ஆக குறைச்சலான எண்ணிக்கையில் சீட்டுகளை கொடுத்து, அதை ஏற்கமுடியாமலோ அல்லது மறைமுகமாக காங்கிரஸ் கட்சியுடன் நடத்தும் பேரம் காரணமாகவோ அவரது தேமுதிக கட்சி தனித்து போட்டியிடவும் கூடும்.

அப்படி போட்டியிட்டாலும் கூட, ஜெயலலிதாவுடன் கூட்டணி பேரம் பேசியபோதே அவர் மீதான மிஸ்டர் பரிசுத்தம் இமேஜ் அடிபட்டுவிட்டது.

இத்தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியமைத்தால் நிச்சயம் விஜயகாந்த் கட்சியை பிளவுப்படுத்தி காலி செய்துவிடுவார்.தோற்றாலோ கட்சி தானாகவே காலியாகிவிடும். இதுவும் விஜயகாந்திற்கு நன்றாகவே தெரியும்.எனவே போட்ட முதலை கைப்பற்ற ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி தமது கட்சியை காங்கிரஸிடம் -விற்றதை- மன்னிக்கவும் இணைத்ததை போன்றே இவரும், அதே பாதையை தேர்ந்தெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கூடவே சேலத்தில் சமீபத்தில் தேமுதிக நடத்திய தமிழர் மீட்புரிமை மாநாட்டில், விஜயகாந்த் பேசிய பேச்சை பார்த்தவர்களுக்கு அவர் எந்த அளவிற்கு அரசியல் கத்துக்குட்டியாக உள்ளார் என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்தியது.பக்குவமில்லாத, முதிர்ச்சியற்ற மற்றும் நாக்கு குழறலான அவரது பேச்சு எதையோ உணர்த்தியது.

அதே கதைதான் இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நேற்று நாகப்பட்டிணத்தில் தமது 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் நடந்த பொதுக்கூட்டத்திலும் அரங்கேறியுள்ளது.

இவரது சமீபத்திய 'காவலன்' திரைப்படத்தை திரைக்கு வரவிடாமல் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினரும், திமுகவினரும் தடுத்ததாக விஜய் குற்றம்சாட்டியிருந்தார்.அதில் உண்மை இல்லாமலும் இல்லை.

இந்த காரணத்திற்காகத்தான் இவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து முறையிட்டு அவரது உதவியை கோரினார்.அதற்கு பிரதிபதிலனாக விஜய் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்று உத்தரவாதம் அளிக்கப்பட, அதன்பின்னரே விஜய்க்கு நம் மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்படுவது கண்டு கண்களில் தாரைதாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது.

உடனே தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நாகப்பட்டிணத்தில் தமது 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் கண்டனம் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

அதாவது 'நூல்விட்டு பார்ப்பது' என்று சொல்வார்களே அதுமாதிரி எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்கினால் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டாமாக இதை கருதினார்.

கூடவே எதிர்காலத்தில் தமது திரைப்படம் வெளிவர இடையூறு செய்தால், அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று திமுக தரப்பை பூச்சாண்டி காட்டவும் இந்த அஸ்திரம் பயன்படும் என்றும் நினைத்ததாக தெரிகிறது.

பாவம் நம் மீனவர்கள். அரசியல்வாதிகளுக்கும் அரசியல் செய்ய அவர்கள்தான் தேவைப்படுகிறார்கள். அரசியலுக்கு வர திட்டமிடுபவர்களுக்கும் அவர்கள்தான் பயன்படுகிறார்கள்.

சரி எதிர்காலத்தில் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரது அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை இதோ நேற்று அவர் பேசிய பொதுக்கூட்ட மேடை பேச்சே காட்டிவிட்டது.

பேசுவது மக்கள் முன்னர்; திரைப்பட 'செட்'டில் அல்ல அவர் மறந்தே போய்விட்டார் போல! அவர் பேசிய பேச்சுக்களையும், நடந்த நிகழ்வுகளையும் கீழே படியுங்கள்.

"நாம் புலிப்பால் குடித்த பரம்பரை.நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட."

"மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும்."

"இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? நாம் புலிப்பால் குடித்த பரம்பரை ! "

இனி தமிழர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன்"

நல்லாத்தான் காமெடி பண்றாங்கப்பா...!

"வாய்ச்சதும் சரியில்ல... வந்ததும் சரியில்ல!" என்கிற மாதிரி தமிழக மக்களுக்கு வாய்ச்ச அரசியல்வாதிகள்தான் அப்படின்னா...வர்றதும் இந்த லட்சணத்தில்தான் இருக்கு!

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1102/23/1110223056_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.