Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் இறுதி அடையாளத்தையும் குழி தோண்டிப் புதைக்க தமிழரசுக்கட்சி தயார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Monday, February 28th, 2011 | Posted by thaynilam

புலிகளின் இறுதி அடையாளத்தையும் குழி தோண்டிப் புதைக்க தமிழரசுக்கட்சி தயார்! கூட்டமைப்பு பதிவிற்கு உடன்பாடில்லையாம்! த.தே.ம முன்னணி மீதும் பாய்ச்சல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் தமது கட்சிக்கு உடன்பாடு கிடையாது என்று தமிழரசுக்கட்சி இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இன்று யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழரசுக்கட்சி இந்த முடிவினை பகிரங்கப்படுத்தியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் தமது கட்சிக்கு உடன்பாடு கிடையாது என்று தமிழரசுக்கட்சி இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இன்று யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழரசுக்கட்சி இந்த முடிவினை பகிரங்கப்படுத்தியது.பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வே.கே.சிவஞானம், கனகசபாபதி, சேவில் குலநாயகம், பரஞ்சோதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அவர்களில் சீ.வி.கே.சிவஞானம் பத்திரிகையாளர்கள் மத்தியில் உரையாற்றியிருந்தார்.சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் பேரன்னையின் இறுதி நிகழ்வில் உரையாற்றிய விடயங்களுக்கு பதில் வழங்கும் வகையிலேயே இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பினைக் கூட்டியிருந்ததாக தமிழரசுக்கட்சியினர் தெரிவித்தனர்.பத்திரிகையாளர் சந்திப்பின் தொடக்கம் முதல் இறுதிவரையில் ஐங்கரநேசனின் உரைக்கு பதில் வழங்குவதாக தமிழரசுக்கட்சியினரின் கருத்துக்கள் அமைந்திருந்தன.

தேசியத்தின் மூதாட்டியின் நிகழ்வில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தமையை இட்டு நாம் கவலையடைகிறோம் என்று தெரிவித்த சீ.வி.கே.சிவஞானம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்வதற்கான ஒப்புதல் அறிக்கையினை ஈபிஆர்எல்எப் கையளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் அங்கப்பெற்றதாக சொல்லப்படுகின்றது. உண்மையில் மூன்று கட்சிகளே உள்ளன. அப்பாத்துரை விநாயகமூர்த்தியை கட்சியாக எடுத்துக் கொள்ளமுடியாது.ஈபிஆர்எல்எப், ரெலோ ஆகிய கட்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் மட்டுமே அவர்களுடன் அப்பாத்துரை விநாயகமூர்த்தியையும் இணைத்தால் அவர்களில் ஐவர் மட்டுமே உள்ளனர். ஏனைய எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழரசுக் கட்சியினையே பிரதிநிதித்துவப் படுத்துவதால் தமிழரசுக்கட்சியே கூட்டமைப்பில் மிகப் பிரதானமான கட்சியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட வரலாற்றினைக் கொண்ட தமிழரசுக்கட்சியினராகிய நாம் பதிவுகள் மூலமோ, கூட்டுக்கள் மூலமோ எமது தனித்துவத்தினை இழக்க நாம் தயாரில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்யும் நடவடிக்கை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினை குழி தோண்டிப் புதைக்கும் நடவடிக்கையாகும்.தமிழரசுக்கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்வதில் உடன்பாடு இல்லை. ஆனால் கூட்டாக இணைந்து செயற்படத் தயார் என்றும் தெரிவித்தார்.

ஓடிய குதிரைகள் ஓடுகின்ற குதிரைகளுக்கு வழிவிட வேண்டும் என்று ஐங்கரநேசன் தனது உரையில் தெரிவித்த கருத்தைச் சுட்டிக்காட்டிய சிவஞானம் ஓடிய குதிரைகள் ஓடுகின்ற குதிரைகளுக்கு வழிவிட்டதால் தான் ஓடுகின்ற குதிரைகள் பாராளுமன்றத்தில் நாற்பதாயிரம் சவப்பெட்டிகளை தென்னிலங்கைக்கு அனுப்புவோம் எனத் தெரிவித்து இறுதியில் எமக்கு சவப்பெட்டிகள் அடிக்கப்பட்டன என்றும் தெரிவித்திருக்கின்றார்.

அதேவேளை தமிழ் மக்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் இரா.சம்பந்தனே தமிழினத்தின் தலைவர் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் என்றும் கூறினார்.இன்றைய தமிழரசுக்கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கெடுத்திருக்கவில்லை.இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலோ, தமிழ்த் தலைமைகளின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பிலோ எந்தக் கருத்தினையும் வெளியிட்டிருக்கவில்லை என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்து புத்திஜீவி ஒருவர் கவலை வெளியிட்டிருந்தார்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=3282

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.