Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிச்சத்துக்கு வராத சந்திப்பு இரகசியங்கள்

Featured Replies

வெளிச்சத்துக்கு வராத சந்திப்பு இரகசியங்கள்

இலங்கை அரசாங்கம் அனுப்பிய உயர்நிலைப்பிரதிநிதிகள் குழு ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூனை சந்தித்துவிட்டு ஜெனிவாகிளம்பியுள்ளது.

இலங்கை அரசாங்கம் உச்சக்கட்டசர்வதேச அழுத்தங்களைச் சந்திக்கின்றநிலையில்தான்- எதிர்பாராத இந்தச்சந்திப்பு நிகழ்ந்தது.

இந்தச்சந்திப்புஎதற்காகநடந்தது? இதில் பேசப்பட்டவிடயங்கள் என்ன எடுக்கப்பட்ட முடிவுகள் என்னஎல்லாமே மர்மமாகத்தான் உள்ளது. அதற்குக்காரணம் இது அதிஉச்ச இரகசியம் பேணப்பட்ட ஒரு சந்திப்பு என்பதுதான்.

இலங்கை அரசின் வெளிவிவகாரச் செயலர் றொமேஷ் ஜெயசிங்கவும் சட்டமா அதிபர் மொகான்பீரிஸும் கொழும்பில் இருந்துபுறப்பட்டுச் சென்று நியுயோர்க்கை அடைந்தவரை இதுபற்றி வெளியே மூச்சுக்கூடவிடவில்லை.

பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராகூட அதை அறிந்திருக்கவில்லை என்கிறது ஒரு தகவல். அதனால் தான் அப்படியான சந்திப்புத்திட்டங்கள் ஏதும் கிடையாது என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால் உச்ச இரகசியம் பேணப்பட்ட இந்தச் சந்திப்புத் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தவிரும்பாமல் அவர்அப்படிக்கூறியிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித கொஹன்ன ஊடாகவே வழக்கமாக இலங்கை அரசுக்கான ஐ.நாவின் தகவல்கள் பரிமாறப்படும்.

ஆனால் இம்முறை நேரடியாகவே கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சைத்தொடர்புகொண்டு, இலங்கை அரசுடன் பேசவிரும்பும் தகவலைத் தெரிவித்துள்ளது.

இதனால் தான் வெளிவிவகாரச் செயலரும், சட்டமா அதிபரும் இரகசியமாக- நியுயோர்க் அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்கள் நியுயோர்க் சென்றடைந்த பின்னர், சந்திப்புத் தொடர்பாக பாலிதகொஹன்னவின் அலுவலகத்துக்கு ஐ.நாவில் இருந்துதகவல் அனுப்பப்பட்டது.

பாலித கொஹன்னவுடன் ஐ.நாவுக்கான பதில் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மேஜர்ஜெனரல் சவீந்திரசில்வாவும் இந்தச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

எல்லாமே இரகசியமாகப் பேணப்பட்டபோதிலும் இன்னர்சிற்றிபிரஸ் அதைமோப்பம் பிடித்துக்கொண்டது.

நாளை சந்திப்பு நடக்கவுள்ளது என்று அது கடந்த செவ்வாயன்று செய்தி வெளியிட்டது. ஆனால் அதை பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நிராகரித்தார்.

அவர் அப்படிக் கூறியிருந்த போதும் மறுநாள் இன்னர்சிற்றிபிரஸ் சொன்னது போலவே சந்திப்புநடந்தது. அந்த இரகசியச் சந்திப்பின் படங்களையும் இன்னர்சிற்றிபிரஸ் செய்தியாக வெளியிட அதுபரகசியமானது.

ஆனாலும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட உண்மையான விடயங்கள் பல வெளிவரவில்லை என்பதே உண்மை. ஏனென்றால் ஐ.நாவும் சரி இலங்கை அரசும் சரி இந்தச் சந்திப்புத்தொடர்பாக வெளியிடுகின்ற செய்திகள் ஒன்றுக் கொன்று முரண்படுவதாகவே உள்ளன.

இன்னர் சிற்றி பிரஸ் படங்களுடன் சந்திப்பை அம்பலப்படுத்திய பின்னர், உடனடியாகவே இலங்கை அரசின் சார்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

சட்டமா அதிபரும், வெளிவிவகாரச்செயலரும் சட்டஆலோசனைக்காக நியுயோர்க்சென்றிருந்தனர் என்றும் அப்போதே ஐ.நா பொதுச்செயலரை சந்தித்துப்பேசியதாகவும் அந்த அறிக்கை கூறியது.

ஏதோ போன வழியில் அவரைக் கண்டு பேசியது போல அமைந்திருந்தது அந்த அறிக்கையின் சாரம். ஆனால் இந்தச் சந்திப்பு முன்னரேதிட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று.

இந்தவிடயத்தில் ஐ .நா. பொதுச் செயலரின் அழைப்பின் பேரிலேயே இலங்கை அரசு தமது பிரதிநிதிகளை அனுப்பியதாக செய்தியை வெளியானால் அதுதரக்குறைவாக அமைந்துவிடும் என்று அரசாங்கம் நினைத்திருக்கலாம். அல்லது இந்தச்சந்திப்பின் உண்மைப்பரிமாணங்கள் வெளிவருவதைத்தடுக்க அது விரும்பியிருக்கலாம்.

அடுத்து இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்று இலங்கை அரசாங்கம் தெளிவாகக் கூறவில்லை. சட்டம் சார்ந்த விடயங்கள் குறித்துப் பேசப்பட்டது போன்று மேலோட்டமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனால், ஐ.நாபொதுச்செயலரின் பேச்சாளார் மார்ட்டின் நெவ்ஸ்கி, இலங்கையில் போருக்குப் பிந்தியமீள்கட்டுமானப்பணிகள் தொடர்பாகவே ஆராயப்பட்டதாகக்கூறியிருந்தார்.

இங்கேயும் இருதரப்பும் முரண்பாடானதும், குழப்பமானதுமான தகவல்களையே வெளியிட்டன.

அதேவேளை இப்போது கிடைக்கும் தகவல்கள், இந்தச்சந்திப்பின் அடிப்படை நோக்கம் ஐ.நா நிபுணர்கள் குழுமற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாகக் கலந்துரையாடுவதே என்று கூறுகின்றன.

ஐ.நா நிபுணர்கள் குழு இலங்கை வருவதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. வேண்டுமானால் அவர்கள் வந்து நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்சாட்சியம் அளிக்கலாம்- அதற்கு அப்பால் விசாரணை செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தது அரசாங்கம். இதன் காரணமாக இதுவரை அந்தக் குழு இலங்கை வரவில்லை.

ஆனால் ஐ.நா. பொதுச் செயலரோ நிபுணர் குழு இலங்கை செல்லும், அதற்கு வழி பிறந்துவிட்டது, அங்கு செல்வது பற்றி ஆராய்கிறது என்றெல்லாம் அவ்வப்போது கூறி வந்தார். ஆனாலும் அப்படி

எதுவும் நடக்கவில்லை.

இந்தக்கட்டத்தில் ஐ.நாநிபுணர் குழுவின் பணிக்காலம் முடிவுக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்தவாரம் அதன் அறிக்கை கையளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கையை ஐ.நா பொதுச் செயலர் பகிரங்கப்படுத்துவாரா என்பது முக்கியமான கேள்வி.

அதே வேளைஇந்த அறிக்கை ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 16வது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலையில்தான் ஐ.நா. பொதுச் செயலர் இலங்கை அரச பிரதிநிதிகளைப் பேச்சுக்கு அழைத்திருந்தார். இலங்கை அரசாங்கத்தை இராஜதந்திரவழிகளில் மிரட்டுவதற்காக அவர் இந்த அழைப்பை விடுத்தாரா அல்லது வேறேதாவது நோக்கங்கள் இருந்ததா என்பது மர்மமாகவே உள்ளது.

ஆனாலும் அரசாங்கம் அனுப்பியகுழு, நல்லிணக்க ஆணைக்குழு போற்றதக்கவகையில் செயற்படுவதாக ஐ.நா. பொதுச்செயலரிடம் கூறியிருக்கிறது.

பான்கீ மூனை நம்பவைக்கும் அளவுக்கு அது நடந்து கொண்டிருப்பதாக ஊடகச் செய்திகள் கசிகின்றன. இந்த நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஐ.நா. பொதுச் செயலர்முக்கியத்துவம் கொடுக்கப்போகிறாரா அல்லது தாம் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கைக்கு முக்கியம் அளிக்கப்போகிறாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.

இந்தச் சந்திப்பின் மூலம் இலங்கை அரசு தமக்கு ச்சார்பானநிலை ஒன்றைஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது விரைவிலேயே தெரிந்துவிடும்.

அதேவேளை, இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட முக்கியமான மூவர்பற்றிய சர்ச்சைகளும் தொடர்கின்றன. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் மேஜர் ஜெனரல் சவீந்திரசில்வாவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளார்.

அவருடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்வழக்கை எதிர்கொள்ளும்நிலையில் உள்ள பாலிதகொஹன்னவும் ஐ.நா. பொதுச்செயலரைச் சந்தித்தார்.

போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாவின்உத்தரவாதத்தின் பேரில் சரணடைய முன் வந்த புலிகளுக்குப்பாதுகாப்பு அளிக்கத்தவறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஐ.நாபொதுச் செயலரின்தலைமை அதிகாரியான விஜய்நம்பியாரும் இந்தச் சந்திப்பில் கூடவே இருந்துள்ளார்.

இவர் மீதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்ச்சைகள் நிரம்பிய மனிதர்கள் மத்தியில் ஐ.நா. பொதுச் செயலர் இந்தச் சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்.

அதுவும் கூட சர்ச்சைகளும், சந்தேகங்களும்நிறைந்தஒன்றாகவேஇருந்துள்ளது.

இந்தச் சந்திப்புயாருக்கு ஆதாயம் தேடுவதற்காக நடத்தப்பட்டது என்பது இன்னமும் தெளிவாகவில்லை. இலங்கை அரசுடன் முட்டிமோதி வந்த ஐ.நா. பொதுச்செயலர்- தான் பணிந்து போவதற்காக இந்தச் சந்திப்பை நிகழ்த்தியிருக்கலாம். அல்லது இலங்கை அரசை மிரளவைக்கவும் அவர் இப்படியான சந்திப்பை நடத்தியிருக்கலாம்.

இப்போது இந்தச் சந்திப்புத் தொடர்பான பல இரகசியங்கள் மறைக்கப்பட்டிருந்தாலும் அதுவிரைவிலேயே வெளிச்சத்துக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/17371-2011-03-02-06-41-10.html

  • தொடங்கியவர்

அமெரிக்கா... ஏதோ செய்யப் போகிறது

சர்வதேச நியமங்களுக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணைகள் இலங்கையில் மேற்கொள்ளப்படவேண்டும் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசுகளும் விடுதலைப் புலிகளும் பேச்சுக்கள் நடத்தியபோது- யுத்தம் புரிந்தபோ தெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாத அமெரிக்கா, இப்போது இலங்கை மீது அதிக கரிசனை காட்டிவருவது இங்கு நோக்குதற்குரியது.

வன்னி யுத்தம் நடைபெற்றபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசு ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு’ ஒன்றை நியமித்து விசாரணைகளை மேற் கொண்டது. உலக நாடுகளையும் ஐ.நா.சபையையும் சமாளிக்கும் வகையில் அந்த விசாரணைகள் இடம்பெற்றாலும் அதனை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இலங்கைக்கான அமெரிக்காவின் மீள்அறிவுறுத்தல் நிரூபித்துள்ளது.

அதேவேளை சர்வதேச அரங்கில் நாடுகள் சிலவற்றின் ஆட்சித் தலைமைகள் சந்திக்கும் பிரச்சினைகளிலும், அந்த ஆட்சி அதிகாரத் தை அகற்றுவதிலும் அமெரிக்காவின் பங்கு காத்திரமாக இருப்பதை மறுப்பதற்கில்லை. இதன்காரணமாக மக்களின் எதிர்ப்பை சந்தித்துள்ள வெளிநாடுகளின் அரசியல் கள நிலைமைகளை இலங்கையுடன் ஒப்பிட்டு நோக்கும் அளவிற்கு உலக அரசியல் திசைதிரும்பியுள்ளது. நிலைமை இதுவாக இருக்கும்போது இலங் கையின் போர்க்குற்ற விசாரணைகளை சர்வ தேச நியமங்களுக்கு அமைவாக மேற் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியிருப்பது சாதா ரண விடயமன்று.

விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றிக்குப் பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் இலங்கை அரசு அசமந்தமான அணுகு முறையையே பின்பற்றி வந்துள்ளது. விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படும் என்றே யுத்தத்திற்கு முன்னரும் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோதும் இலங்கை அரசு கூறி வந்தது. ஆனால் யுத்தம் வெற்றியில் முடிபடைந்த பின்னர் அரசின்போக்கு மாற்றமடைந்தது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற சர்வதேச நம்பிக்கை பலவீனப்பட்டபோது போர்க் குற்ற விசாரணைக்கான அழுத்தம் வலுப் பெற்றுள்ளது.

இதன் அடுத்த கட்டம் அமெரிக்காவின் தலையீடாக இருக்கும். அதற்கான பூர்வாங்கக் கிரிகைகளே அமெரிக்கா விடுக்கின்ற எச்சரிக்கை ஆகும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=16840

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.