Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுனாமியையும் அணுகுண்டையும் தொடர்புபடுத்திய "இளம்புயல்"

Featured Replies

தற்போது ஜப்பானில் நடைபெற்றுள்ள சுனாமி ஜப்பானின் அணுசக்தி நிலையத்தை தாக்கி அதை உடைத்து அணுக்கதிர்களை பரவச் செய்து பேரவலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடைபெறும்போது இப்படியொரு கதையை இதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே சிந்தித்து திரைப்படமாக தந்துள்ளார்கள் டென்மார்க்கில் உள்ள தமிழர்கள் என்று தமிழக திரைப்பட இயக்குநர் பாவல்சங்கர் தெரிவித்தார்.

அணு குண்டை வெடித்து செயற்கைச் சுனாமியை ஏற்படுத்தினால் என்னவாகும் என்று இளம்புயல் திரைப்படம் கூறியது. இப்போது அடுத்த பக்கமாக சுனாமியே புறப்பட்டுவந்து அணு உலையை உடைத்து அணுகுண்டு வெடிப்பை ஏற்படுத்தியுள்ளது. அணு குண்டும், சுனாமியும் சந்திக்கும்போது உருவாகும் பேரவலமே எதிர்கால உலகத்தின் பேரவலம் என்று இளம்புயல் திரைப்படம் கூறியது. இன்று காதலுமம் களியாட்டமுமாக நகரும் தமிழக சினிமாக்காரர் கனவிலும் சிந்திக்கவே முடியாத ஒரு செய்தியை திரைப்படமாக்கி தமிழ் சினிமாவிற்கு புதிய முகம் கொடுத்தார்கள். இன்று மறுபடியும் அத்திரைப் படத்தைப் பார்க்கும்போது தமக்கு டென்மார்க்கில் இருந்து புறப்பட்ட தமிழ் சிந்தனை மகிழ்வு தருவதாக தெரிவித்தார்.

இளம்புயல் திரைக்கதைச் சுருக்கம் :

ஆதித்தமிழனான கணியன் பூங்குன்றன் கூறிய ஒன்றே உலகம் என்ற தத்துவத்தை விளக்க தீவு ஒன்றை வாங்கி இணையத்தின் மூலமாக உலக வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறான் புலம் பெயர் தமிழனான இனியன்.

அதற்கு மாறாக அணுகுண்டை சிறிய அளவில் தயாரித்து துறைமுக நகரங்களில் செயற்கையாக சுனாமியை ஏற்படுத்தி பேரழிவை விளைவிக்கிறான் வில்லனான விக்னேஸ்வர். அணு உலைகளை துறைமுகங்களுக்கு அருகிலேயே அமைக்க வேண்டும். காரணம் குளிர்மைப்படுத்தும் கட்டமைவு செயற்பட கடல் நீர் தேவை. அதை அண்டி செற்கை சுனாமியை ஏற்படுத்தினால் தனி மனிதனாகவே பேரழிவை ஏற்படுத்தி உலகை ஆட்டம் காண வைக்க முயல்கிறான் அவன். இன்று ஜப்பானில் ஏற்பட்ட அழிவை அவன் தனது அறிவால் கணக்கிட்டு சுனாமியை ஏவுகிறான். அழிவு சக்தியா ஆக்கசக்தியா வெற்றிபெறும் என்ற மோதல் நடைபெறுகிறது. இந்த சிந்தனை இதுவரை கொலிவூட்டில் கூட வரவில்லை.

அணுசக்தி, சுனாமி, நிலநடுக்கம் மூன்றும் தொழிற்படும்போது புயல் புகுந்தால் என்ன நடைபெறும்..? எல்லாப் பழமைகளையும் புயல் கணப்பொழுதில் புடுங்கி வீசும்.. உலகில் யாராலும் தடுக்க முடியாத சக்தியாக பிரவேசிக்கிறான் கதாநாயகனான புயல்.

தமிழன் உலக உச்சம்பெறும்போதெல்லாம் சுனாமி வரும். முருகன் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தபோது சுனாமி வந்தது. இன்று ஒன்றே உலகம் என்று அவன் எழுச்சி பெறும்போது சுனாமி வந்தது என்கிறான் வில்லன். சங்கம் வளர்த்த தமிழா இல்லை சங்கத் தமிழையே சாப்பிட்ட சுனாமியா சவால் என்கிறான் வில்லன்.

இணையம் – அணு குண்டு – சுனாமி – புயல் போன்ற பெரும் சக்திகளை தமிழன் அறிவோடு மோதவிட்டு ஒரு திரைக்கதையை அமைத்தவனும் தமிழன்தான். புலம் பெயர்ந்த ஈழத் தமிழனுக்கே அந்தப் பெருமை உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இளம்புயல் திரைப்படத்தை மறுபடி திரையிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

http://www.alaikal.com/news/?p=61046

Edited by akootha

  • தொடங்கியவர்

நில நடுக்கம் பற்றி இசைஞானி இளையராஜாவின் தூரப்பார்வை

சில ஆண்டுகளுக்கு முன்னார் ரஸ்யாவில் நடைபெற்ற நில நடுக்கத்திற்கு நிதி சேகரிக்கும் இசை நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய இளையராஜா சொன்ன கருத்து இன்று எல்லோர் மனங்களிலும் ஒரு சுற்று புரண்டு போகிறது.

அன்று மேடையில் பேசிய இளையராஜா ரஸ்யா உட்பட உலக நாடுகளை ஒரு கேள்வி கேட்டார். நீங்கள் பூகம்பத்தைப் பார்த்தும் திருந்தவில்லையா என்பதுதான் அந்தக் கேள்வி.

உங்கள் நாடுகளில் ஏற்படும் நில நடுக்கம் நீங்கள் அணு குண்டை வைத்திருக்கும் இடத்திற்குக் கீழே ஏற்பட்டால் உங்கள் நாடே அழிந்துவிடுமே. பூகம்பம் என்பது அழிவு மட்டுமல்ல அது அணு மையங்களை தாக்கினால் பேரவலமாகிவிடும் என்று இசைஞானி பேசியிருந்தார்.

இன்று ஜப்பானில் ஏறத்தாழ அதுதான் நடைபெற்றிருக்கிறது. இசைஞானியின் பேச்சை ரஸ்யர்களோ ஜப்பானியரோ செவி மடுக்கவில்லை. ஏன் இந்தியரே செவிமடுக்கவில்லை, அதற்குப் பிறகுதான் அவர்களுடைய அணு குண்டு பரிசோதனை நடந்தது. ஆனால் இப்படி ஒரு அபாயம் வருவதை அவர் முன்னரே பேசியிருக்கிறார், அவர் இசையில் மட்டுமல்ல பல விடயங்களில் ஞானி என்று கூறுவதற்கு இது ஓர் உதாரணம். இப்படி ஒரு பேச்சை நமது இளையராஜா பேசினாரே என்பதை தமிழ் நாட்டுக்காரர் மறந்து ஏக காலமாகிவிட்டது.

http://www.alaikal.com/news/?p=61277

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.