Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் உங்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் சிறிதரனுடன் ஒரு நேர்காணல் - மர்மங்கள் துலங்குகின்றன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் உங்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் சிறிதரனுடன் ஒரு நேர்காணல் - மர்மங்கள் துலங்குகின்றன

குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:-

01. அண்மையில் உங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து குறிப்பிடுங்கள்? அன்று என்ன நடந்து?

02. இந்த தாக்குதலை யார் எதற்காக நடத்தியிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

03. இந்தத் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் இம்பெற்ற விவாதத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.? முக்கியமாக விமல்வீரவன்ச எழுப்பிய கேள்வியை பற்றிச் சொல்லுங்கள்.

04. போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பொழது உங்களுக்கான பாதுகாப்பு எப்படி இருக்கிறது?

05. மக்களின் இன்றைய தேவைகள் சார்ந்த பணிகளும் அதேவேளை தமிழ் தேசிய இலட்சியம் சார்ந்த நடவடிக்iயும் எப்படிப் போகிறது?

06. யார் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பார்கள்?

07. இறுதியாக, தமிழ்தேசியத்திந்கான அவசியம் பற்றிச் சொல்லுங்கள்?

இவை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் குளோபல் தமிழ்ச் செய்திகள் கேட்ட கேள்விகள். அவற்றிற்கு அவர் வழங்கிய பதில்கள் ஒலிவடிவில் தொகுக்கப்பட்டுள்ளது. அந்த செவ்வியின் பின் இணைப்பாக சிறீதரனின் தாக்குதலின் பின்னணியில் மர்மங்கள் துலக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி உள்ளிட்ட வன்னிப் பகுதியில் அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு கனவுகண்டு கொண்டிருக்கும் சக்திகளே என்மீதான தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக சிறீதரன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் முக்கிய தகவல்களை வழங்கியிருக்கிறார். அதன்படி புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் சிலரை ஈடுபடுத்தியே சிறீதரன் மீதான கொலை முயற்சி அல்லது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பில் இருந்து தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

பூமியின் மறுபெயரை ஆரம்ப பெயராகக் கொண்ட இந்த முன்னாள் போராளி வழியின்றி அரசாங்க புலனாய்வுத் துறையினதும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் முக்கிய தமிழ்த் தரப்பினதும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டியவராகி உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் படைத்தரப்பின் உள்ளகத் தகவலை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மே 18ன் முடிவில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பலமான சக்த்தியாக வளர்ந்து வருவதனை விரும்பாத அரசாங்க தரப்பும் படை புலனாய்வுத் துறையும் கூட்டமைப்பை பயமுறுத்தி பணிய வைப்பது அல்லது ஒரு சிலரை களை எடுப்பது என்பதன் மூலம் வழிக்கு கொண்டு வர முடியும் என்ற திட்டத்தின் மூலமே முதலாவது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதில் தாக்குதல் வெற்றி பெற்றால் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எனவும் அது கூட்டமைப்பினராலேயே திட்டமிட்டு மேற் கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகளை சுமத்தவே முன்னாள் புலிப் பொராளிகள் சிலர் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் மறுநாள் விமல் வீரவன்ச நாடாளுமன்றில் ஆற்றிய உரையினையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். ஏற்கனவே திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் விமல் வீரவன்ச கூட்டமைப்பே சிறீதரன் மீதான தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக தெரிவித்திருந்தமை தாக்குதலின் பின்னணியை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக சிறீதரன் குறித்து வெளிவரும் தகவல்கள் குறிப்பாக அரசாங்கத்திற்கும் அதன் முக்கிய அமைச்சரான பசில் ராஜபக்ஸவுக்கும் சிறிதரனுக்கும் இடையில் நெருக்கம் இருப்பதாக அரச தரப்பாலேயே கசிய விடப்பட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு கூட்டமைப்பே சிறீதரனை புலிகளின் அனுசரனையுடன் பலி எடுத்தது எனக் கூறுவதே அரசாங்க மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவின் முக்கிய இலக்காக காணப்பட்டது என படைத்தரப்பின் உள்ளகத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சதி திட்டத்தின் பின்னணியில் அரசாங்கம் பல திசைகளில் இலாபங்களை ஈட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

1) புலிகளின் அச்சறுத்தல் தொடர்ச்சியாக இருப்பதாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் புலிகள் தொடர்ச்சியாக ஈடுபடுவதாகவும் வெளியுலகத்திற்கு காட்டுவது.

2) சர்வதேச ரீதியாக எழுகின்ற யுத்தக் குற்றச்சாட்டுகளை திசை திருப்புவது.

3) விடுதலைப்புலிகளின் ஆதரவு சக்த்திகள் சர்வதேச ரீதியாக பலம் பெற்று வருவதனை தடுப்பது.

4) உலக நாடுகளை புலிகளுக்கு எதிரான மனநிலையில் வைத்திருப்பது.

5) இலங்கையில் தொடர்ச்சியாக அவசரகாலச் சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பது.

6) தமிழ்க் கூட்டமைப்பைச் சட்டரீதியாக சிக்க வைத்து தமது விருப்பத்திற்கு ஏற்ப ஆட வைப்பது.

7)தாம் நினைத்தவாறு வடக்கு கிழக்கில் தமது அடிவருடிகளிற்கு அரசியல் பலத்தை பெற்றுக் கொடுப்பது.

8)கூட்டமைப்பினுள் முரண்பாடுகளை தோற்றுவித்து அந்தக் கட்சியின் ஒற்றுமையை சின்னாபின்னமாக்குவது.

முதலான எண்ணங்களை நிறைவேற்றுவதாக அமைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனாலேயே இந்த தாக்குதலை திட்டமிட்டவர்களை தெரிந்திருந்தும் அரசாங்கத் தரப்பு அதனை ஊக்குவித்ததாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் படைத்தரப்பு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/59179/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.