Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டனில் இருந்து இலங்கை சென்ற இளைஞர் யாழ் நகரப் பகுதியில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இருந்து இலங்கை சென்ற இளைஞர் யாழ் நகரப் பகுதியில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்

22 மார்ச் 2011

லண்டனில் இருந்து இலங்கை சென்று யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் யாழ் நகரப் பகுதியில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். யாழ் நகரின் ஸ்ரான்லி வீதியையும் மின்சார வீதியையும் இணைக்கும் இணைப்பு வீதியில் உள்ள வர்த்தக வங்கிக்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே வெள்ளை வானில் வந்தவர்களால் இவர் கடத்தப்பட்டுள்ளார் என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியைச் சேர்ந்த 29 வயதுடைய கதிரவேலு அஜந்தன் என்பவரே கடத்தப்பட்டவராவார். இவர் இலங்கையின் முன்னணி காப்புறுதி நிலையமான சிலிங்கோ நிறுவனத்தில் கடந்த 5 வருடத்திற்கும் மேலாக வேலை செய்துள்ளார். பின்னர் தமது வேலையை ராஜினாமா செய்த பின்னர் மாணவர் விசாவில் லண்டனுக்கு சென்றுள்ளார். சுமார் 3 மாதங்களே அங்கு தங்கியிருந்த போதிலும் தற்போது அவரது சிலிங்கோவில் பணியாற்றியமைக்கான ஆவணங்களை கையளிக்க வேண்டியுள்ள நிலையில் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார். இந்த நிலையிலே நேற்று நண்பகல் அளவில் கடத்தப்பட்ட இவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் கைகள் கண்கள் கட்டப்பட நிலையிலே தான் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் வெள்ளை வான் ஒன்றில் ஏற்றப்பட்ட பின் அந்த வாகனம் சுமார் ஒரு மணித்தியாலம் வரை ஓடித் திரிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்கள் கட்டப்பட்ட நிலையில் தான் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் சிகரெட்டால் சுடப்பட்டதாகவும் லண்டனுக்கு சென்றதற்கான காரணம் , செல்வதற்கு பணம் வழங்கியது யார், சென்று 3மாதங்களில் ஏன் திரும்பி வந்தது போன்ற குறித்த கேள்விகளையே திரும்பி திரும்ப கேட்டு சித்திரவதை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இவர் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இவர் கல்லுண்டாய் வீதியில் வாகனமொன்றிலிருந்து தள்ளி விழுத்தப்பட்டுள்ளார். ஆட்களற்ற பகுதியில் தள்ளிவிடப்பட்ட இவர் ஒருவாறு மீண்டெழுந்து இப்பகுதியில் சென்ற வாகனமொன்றில் பயணித்து யாழ் நகரப் பகுதியை சென்றடைந்துள்ளார்.

இவரிடமிருந்த கைத்தொலைபேசியை பறித்த நபர்கள் அதன் சிம்மைக் கூட பிடுங்கி எடுத்துள்ளனர். இதன் பின்னரே இவர் விடுவிக்கப்பட்டு குடும்பத்தவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்கள் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். எனினும் சாவகச்சேரி காவல்நிலையத்தினர் முறைப்பாட்டை ஏற்க மறுத்த போதும் சம்பவம் இடம்பெற்ற யாழ் நகர காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

gtn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இருந்து யாழ் திரும்பிய இளைஞரைக் காணவில்லை! கடத்தப்பட்டவர் விடுவிப்பு!! (2ஆம் இணைப்பு)

செவ்வாய், 22 மார்ச் 2011 20:20

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் முறைப்பாடு செய்யயப்பட்டுள்ளது.

மீசாலை மேற்கைச் சேர்ந்த 29 வயதேயான கே.அஜந்தன் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போனவர் ஆவார்.

இவர் காணாமல் போனமை தொடர்பாக நேற்றைய தினம் அவரது அண்ணாவே முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவர் கடந்த டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து லண்டனிற்கு படிப்பதற்காக சென்றுள்ளார்.

பின்னர் விடுமுறையில் யாழப்பாணத்திற்கு வருகை தந்தபோது இவர் காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2ஆம் இணைப்பு

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய 29 வயதுடைய கே. அஜந்தன் என்பவர் கடத்தப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று மாலை கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவது, யாழ் நகரிலுள்ள வங்கி ஒன்றிற்கு தனியே நடந்து சென்று கொண்டிருந்த போது வெள்ளை வேனில் வந்த ஆயுதம் தாங்கிய சில மர்ம நபர்கள் இவரைக் கடத்தியுள்ளனர்.

கைகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வேனில் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் கடுமையாகத் தாக்கிய அந்த மர்ம நபர்கள், கண்கள் கைகள் கட்டிய நிலையில் இவரை இன்று மாலை அராலிப் பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இவரைக் கடத்திச் சென்றவர்கள் கொச்சை தமிழில் உரையாடியதுடன் சிங்களத்தில் சரளமாக உரையாடியுள்ளனர் என்று தெரிய வருகின்றது.

தற்போது இவர் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் காணமல் போனது தொடர்பாக ஏற்கனவே இன்று காலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சாவசக்சேரி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

tamilenn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்னைக் கடத்தியவர்கள் கதறக்கதற முட்கம்பிகளாலும் மரச் சலாகைகளாலும் தாக்கினர் - கதிரவேலு அஜந்தன்

25 மார்ச் 2011

தன்னைக் கடத்தியவர்கள் கதறக்கதற முட்கம்பிகளாலும் மரச் சலாகைகளாலும் தாக்கினர் - லண்டனில் இருந்து இலங்கை சென்றவர்:-

தன்னைக் கடத்தியவர்கள் தனது கண்களையும் கைகளையும் கட்டிவிட்டு கதறக்கதற முட்கம்பிகளாலும் மரச்சலாகைகளாலும் தாக்கியதாகவும் பல தடவைகள் மயங்கி வீழ்ந்த போதும் பல இடங்களில் காயம் ஏற்படுமளவுக்கு சிகரெட்டினால் சுட்டதாகவும் கடத்தப்பட்டு வயலில் வீசப்பட்ட லண்டனில் இருந்து இலங்கை சென்றிருந்த இளைஞர் கூறியுள்ளார்.

ஒருவர் சிங்கள மொழியில் ஏதேதோ கேள்விகள் சொல்லச் சொல்ல இன்னொருவர் அதனை மொழி பெயர்த்து தமிழில் கேட்டவாறு இருவரும் தாக்கினர் எனவும் லண்டனில் இருந்து சென்றிருந்த வேளை இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு 27 மணித்தியாலங்களின் பின்னர் வயல்வெளியில் வீசப்பட்ட மீசாலை மேற்கைச் சேர்ந்த 29 வயதான கதிரவேலு அஜந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் கடத்தப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த இளைஞன் கடந்த டிசெம்பர் மாதம் மாணவர் விசாவில் லண்டன் சென்றிருந்தார். இந்த நிலையில் விடுமுறையில் தனது செந்த இடத்துக்கு சென்ற அவர் தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக கடந்த திங்கட்கிழமை யாழ். நகருக்கு வந்தபோது இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார்.

தபாற்கந்தோர் வீதியூடாக ஸ்ரான்லி வீதிக்குச் செல்லும் போது இவருக்கு பின்புறமாக வந்த வெள்ளை வானில் இருந்த இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார். வெள்ளை வானுக்குக் கீழே வீழ்த்தப்பட்டு அவர் அணிதிருந்த ரீசேட்டை கழற்றி அவரது கண்களை கட்டினர்.

கயிற்றினால் கைகளை பின்புறமாக வைத்துக் கட்டினர். லண்டனுக்கு சென்றதற்கான காரணம், அதற்கான பணம் எவ்வாறு கிடைத்தது, திரும்பி வந்ததற்கான காரணம் என்ப வற்றை விசாரித்ததோடு ஒன்லைன் மூலமாகப் பணம் பெற்றுக் கொள்ளும் வங்கி அட்டைகள் பேர்ஸ் என்பவற்றையும் எடுத்து வைத்து வங்கியில் எவ்வளவு பணம் உள்ளது என்று கேட்டனர்.

இந்த விசாரணைகள், தாக்குதல்கள் வீடொன்றில் வைத்தே இடம்பெற்றது. பின்னர் மறுநாள் செவ்வாய்க்கிழமை பி.ப.3.30 மணியளவில் அராலி வீதியில் கல்லுண்டாய் வீதிப் பகுதியிலுள்ள வயற்காணி ஒன்றினுள் அவரைத் தூக்கி வீசிவிட்டு வெள்ளை வான் குழு தப்பிச் சென்றது. அங்கிருந்து பேரூந்து மூலம் யாழ்.நகர் சென்ற அவர் தற்போது யாழ். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். யாழ். காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

gtn

தன்னைக் கடத்தியவர்கள் கதறக்கதற முட்கம்பிகளாலும் மரச் சலாகைகளாலும் தாக்கினர் - கதிரவேலு அஜந்தன்

25 மார்ச் 2011

தன்னைக் கடத்தியவர்கள் கதறக்கதற முட்கம்பிகளாலும் மரச் சலாகைகளாலும் தாக்கினர் - லண்டனில் இருந்து இலங்கை சென்றவர்:-

தன்னைக் கடத்தியவர்கள் தனது கண்களையும் கைகளையும் கட்டிவிட்டு கதறக்கதற முட்கம்பிகளாலும் மரச்சலாகைகளாலும் தாக்கியதாகவும் பல தடவைகள் மயங்கி வீழ்ந்த போதும் பல இடங்களில் காயம் ஏற்படுமளவுக்கு சிகரெட்டினால் சுட்டதாகவும் கடத்தப்பட்டு வயலில் வீசப்பட்ட லண்டனில் இருந்து இலங்கை சென்றிருந்த இளைஞர் கூறியுள்ளார்.

ஒருவர் சிங்கள மொழியில் ஏதேதோ கேள்விகள் சொல்லச் சொல்ல இன்னொருவர் அதனை மொழி பெயர்த்து தமிழில் கேட்டவாறு இருவரும் தாக்கினர் எனவும் லண்டனில் இருந்து சென்றிருந்த வேளை இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு 27 மணித்தியாலங்களின் பின்னர் வயல்வெளியில் வீசப்பட்ட மீசாலை மேற்கைச் சேர்ந்த 29 வயதான கதிரவேலு அஜந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் கடத்தப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த இளைஞன் கடந்த டிசெம்பர் மாதம் மாணவர் விசாவில் லண்டன் சென்றிருந்தார். இந்த நிலையில் விடுமுறையில் தனது செந்த இடத்துக்கு சென்ற அவர் தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக கடந்த திங்கட்கிழமை யாழ். நகருக்கு வந்தபோது இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார்.

தபாற்கந்தோர் வீதியூடாக ஸ்ரான்லி வீதிக்குச் செல்லும் போது இவருக்கு பின்புறமாக வந்த வெள்ளை வானில் இருந்த இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார். வெள்ளை வானுக்குக் கீழே வீழ்த்தப்பட்டு அவர் அணிதிருந்த ரீசேட்டை கழற்றி அவரது கண்களை கட்டினர்.

கயிற்றினால் கைகளை பின்புறமாக வைத்துக் கட்டினர். லண்டனுக்கு சென்றதற்கான காரணம், அதற்கான பணம் எவ்வாறு கிடைத்தது, திரும்பி வந்ததற்கான காரணம் என்ப வற்றை விசாரித்ததோடு ஒன்லைன் மூலமாகப் பணம் பெற்றுக் கொள்ளும் வங்கி அட்டைகள் பேர்ஸ் என்பவற்றையும் எடுத்து வைத்து வங்கியில் எவ்வளவு பணம் உள்ளது என்று கேட்டனர்.

இந்த விசாரணைகள், தாக்குதல்கள் வீடொன்றில் வைத்தே இடம்பெற்றது. பின்னர் மறுநாள் செவ்வாய்க்கிழமை பி.ப.3.30 மணியளவில் அராலி வீதியில் கல்லுண்டாய் வீதிப் பகுதியிலுள்ள வயற்காணி ஒன்றினுள் அவரைத் தூக்கி வீசிவிட்டு வெள்ளை வான் குழு தப்பிச் சென்றது. அங்கிருந்து பேரூந்து மூலம் யாழ்.நகர் சென்ற அவர் தற்போது யாழ். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். யாழ். காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

gtn

சிங்கள வானொலி என்ன சொல்கிறது தெரியுமா?

இந்த மாணவர் இலண்டனிற்கு திரும்பி சென்று அசைலம் கேட்பதற்காக செற்றப்பண்ணி செய்திருக்கலாம் என பொலிசாரை மேற்கோள்காட்டி கதை அளக்கின்றது.

உண்மையில் இந்த செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடககங்கள் மேலும் ஆதாரத்துடன் வெளியிட்டால் சிங்களத்தின் பொய்களை உடைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.