Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 சிப்பாய்களுக்கு மரண தண்டனை

Featured Replies

தமிழ் இளம் யுவதியை வன்புணர்வு செய்து கொன்ற 3 சிப்பாய்களுக்கு மரண தண்டனை:

ரஜனி கொலை வழக்கில் 15 ஆண்டுகளின் பின் தீர்ப்பு

1996ஆம் ஆண்டு உரும்பிராயில் தமிழ் இளம் பெண்ணைக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட் படுத்திக் கொலை செய்த இராணுவத்தினர் மூவ ருக்கு உயர் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்யும் உரிமை குற்றவாளிகளுக்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் ஜனாதிபதி கையெழுத்திட்டதும் இவர்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

உரும்பிராயைச் சேர்ந்தவரான வெற்றி வேலாயுதம் ரஜனி அல்லது ரஞ்சனி என்ற 24 வயதான இளம் பெண்ணை கோண்டாவிலில் வைத்துக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்தார்கள் என்று, இராணுவச் சிப்பாய்கள் மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. கொலை செய்தமைக்காக மூவருக்கும் மரண தண்டனை விதித்த நீதியரசர்கள் கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்களுக்காக மேலதிகமாகச் சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தனர்.

உரும்பிராயில் தமது மாமன், சகோதரனுடன் வசித்து வந்த ரஜனி, 1996 செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதி காணாமற்போனார்.

கொழும்பு செல்வதற்கு ஆயத்தமான அவர், அது குறித்து உறவினர்களுக்குத் தெரிவிப்பதற்காக மானிப்பாய்க்குச் சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

மறுநாள் அவரைக் காணவில்லை என்று பெற்றோரும் உறவினர்களும் தேடினர். பொலிஸாரிடம் முறையிடப்பட்டது. எனினும் இரு வாரங்களாக அவர் பற்றிய தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை. அதன் பின்னர், சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் இந்த விவகாரத்தை குடாநாட்டு இராணுவத் தளபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். அப்போது தான் இராணுவத் தளபதியாகப் பொறுப் பேற்றுக் கொண்டிருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, உடனடியாக விசாரணை நடத்தியதன் விளைவாக 13 நாள்கள் கழிந்து கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு அருகில் இருந்த வீடு ஒன்றின் மலசலகூடக் குழிக்குள் இருந்து ரஜனியின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவச் சிப்பாய்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். யாழ். நீதிமன்றத்தில் நடை பெற்ற வழக்கு அப்போதைய காலச்சூழல் காரணமாகப் பின்னர் கொழும்புக்கு மாற்றப்பட்டது. அவர்களில் மூவருக்கே தற்போது மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியாது என்று நீதிமன்றம் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளது. இதனால் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டதும் அது நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் பலர் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படாமல் சிறைகளில் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் பாடசாலைச் சிறுமியான கிருஷாந்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாயும் அவர்களில் அடங்குவார்.

http://onlineuthayan.com/News_More.php?id=1386#

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் இது வரை மரணதண்டனை நிறைவேற்றப்படாததால் இது ஒரு கண் துடைப்பாகவே பார்க்கலாம்.ஒரு வேளை மேற்படி குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஒரு சிங்களப்பெண்ணை வல்லுறவு கொண்டிருந்தால் தண்டனை பெற்றிருப்பார்கள்.இக்கண்துடைப்பு தம்மை நல்லவர்களாக காட்ட எத்தனிக்கிறார்கள்.

எல்லாம் போற்குற்ற விசாரணையின் தொடர்தான்

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது தான் இராணுவத் தளபதியாகப் பொறுப் பேற்றுக் கொண்டிருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, உடனடியாக விசாரணை நடத்தியதன் விளைவாக 13 நாள்கள் கழிந்து கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு அருகில் இருந்த வீடு ஒன்றின் மலசலகூடக் குழிக்குள் இருந்து ரஜனியின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது.

சக்கர நாற்காலியில் வலம் வரும் சிறிலங்காவின் நீதி தேவதையை, நடக்க வைக்கும் முயற்சிகளின் ஆரம்பம்.

'ஜனாதிபதி கட்டாயம் கையெழுத்து வைத்து விட்டுத்தான் மற்ற வேலை பார்ப்பார்'.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.