Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமார் சங்கக்கார இலங்கை அணித் தலைவர் பதவியை துறக்கத் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குமார் சங்கக்கார இலங்கை அணித் தலைவர் பதவியை துறக்கத் தீர்மானம்:-

அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது:-

இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார தமது தலைவர் பதவியை துறப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

பதவியை இராஜினாமா செய்வது குறித்த தீர்மானத்தை இலங்கை கிரிக்கட் சபை நிர்வாகிகளிடம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தாம் உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து குமார் சங்கக்கார இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அணித் தலைவர் பதவியை வேறும் ஒருவர் ஏற்றுக் கொள்வதற்கு இதுவே சிறந்தத் தருணமாக தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடரை கருத்திற் கொண்டும் நீண்ட கால நலனைக் கருத்திற் கொண்டும் தாம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தேசிய கிரி;க்கட் அணிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமை வகிக்கக் கிட்டியமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதனைப் பெரும் பாக்கியமாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிப் போட்டியில் வெற்றியீட்ட கிடைக்காத போதிலும், இலங்கை அணி மிகச் சிறந்த திறமையை உலகக் கிண்ணப் போட்டியில் வெளிப்படுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்படும் தலைவருக்கு பூரண ஆதரவினை வழங்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக டெஸ்ட் அணியை வழிநடத்த தயார் எனவும், ஒருநாள் மற்றும் டுவன்ரி-20 போட்டிகளில் தலைமையேற்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது:-

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு குமார சங்ககாரவுக்கு அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சங்ககாரவும் தனது பதவி விலகல் கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்;;துள்ளன.கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக, நாமல் ராஜபக்ஷவின் இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்ட 'உங்கள் வாக்கின் மூலம் தாய் நாட்டை வெற்றிப்பெற செய்யுங்கள்' என்ற பிரசார நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதை நிராகரித்தமை தொடர்பில் குமார் சங்ககார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் மீது நாமால் ராஜபக்ஷ குற்றம்சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நெருங்கி வந்தால், அவர்கள் சம்பந்தமாக தீர்மானகரமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அணித் தலைவர் பதவிக்கு சங்ககாரவுக்கு பதிலாக எஞ்சலோ மெதியூஸ் நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியின் பாரியார் மாத்திரமல்லாது தெரிவுக்குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வாவும் யோசனை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதான அதிகாரி காமினி செனரத் திலான் சமரவீரவின் பெயரை அணித் தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த சூழ்நிலையில், உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளதால், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர்கள் இடையில் மட்டுமின்றி, அணியின் உறுப்பினர்கள் இடையில் கருது மோதல்கள் ஏற்பட்டுள்ளன. தெரிவுக்குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வாவுடன் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக குமார் சங்ககார அணித் தலைவர் பதவியை இராஜினமா செய்ய தீர்மானித்துள்ளதாக அணியின் சிரேஷ்ட விளையாட்டு வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/59901/language/ta-IN/----.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.