Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போன புலி உறுப்பினர் தொடர்பில் அரசு பதில் அளிக்கவேண்டும் - HRW

Featured Replies

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 8, 2011

இலங்கை அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர்பில் பதில் சொல்லியே ஆகவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பில் நேற்று வெளியான மனித உரிமை கண்காணிப்பக ஆசிய பிரதினிதி அடம் சிமித் அவர்களின் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப்படையினரால் கைது செய்யப்பட்ட, கடத்தப்பட்ட ஏராளமான தமிழ் இளைஞர்கள், விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எல்லோரிடமும் ஏன் இலங்கை அரசிடம் அதன் நல்லிணக்க ஆனைக்குழுவிடம் முரையிட்டும் இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை இந்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் மனித உரிமை கண்காணிப்பகமும் தனது கருத்தை வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 20 பேர் அரச படைகளினால் உயிருடன் பிடிக்கப்பட்டோ/ சரணடைந்தோ இருக்கின்றமைக்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன . ஆனால் அவர்கள் இல்லையென அரசாங்கம் கூறுகின்றது.

ஒட்டுமொத்தமாக சரண்டந்த புலிகள் உறுப்பினர் மற்றும் கைது செய்யப்பட்ட, காணாமல் போன தமிழ் இளைஞர்களுக்கு இலங்கை அரசே ப்தில் கூறவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

http://eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-hrw

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டை இராணுவம் நிராகரிப்பு

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதியில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் பலர் தொடர்பான விபரங்கள் இல்லையென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்த குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் நிராகரித்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் உறவினர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டதுடன் இந்நபர்களை உறவினர்கள் அணுகவும் வாய்ப்பளிக்கப்பட்டது. எனவே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் முன்னர் விடுத்த அறிக்கையொன்றில் 26 வருடகால யுத்தத்தின் முடிவில் கைது செய்யப்பட்ட ஒவ்வொருவர் தொடர்பாகவும் அரசாங்கம் விபரங்களை கொண்டிருக்க வேண்டும். அவர்கள் காணாமல் போயிருக்கலாம் என உறவினரக்ள் அச்சம் கொண்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமது உறவினர்கள் தொடர்பான விபரங்கள் குறித்து குடும்ப அங்கத்தவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளின் பின்னரும் அதிகாரத் தரப்பினர், இது குறித்து தீவிர விசாரணைகளை நடத்தியதாகத் தெரியவில்லை எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காணாமல் போனோர் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதற்குப் அப்பால், இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் மேற்படி அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/19448-2011-04-08-13-48-26.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.