Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அச்சத்தில் கொழும்பு : ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கை இன்று வெளியாகின்றது

Featured Replies

இலங்கைப் போரின் இறுதிக்காலகட்டத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று 12 ஆம் திகதி செவ்வாய்கிழமை வெளியிடப்படவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான தயாரிப்புக்களில் இலங்கை அரசு இப்போது ஈடுபட்டுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படும் இந்த அறிக்கை உடனடியாகவே பகிரங்கப்படுத்தப்படமாட்டாது என இன்னர் சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கை தெரிவிக்கின்றது.

கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த அறிக்கை இலங்கைக்குப் பாதகமாக அமையலாம் எனத் தெரிவிக்கின்றது. இருந்தபோதிலும் குறிப்பிட்ட அறிக்கை உடனடியாகப் பகிரங்கப்படுத்தப்படாமலிருப்பது இலங்கைக்குப் பாதுகாப்பாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அறிக்கை சில சமயங்களில் பகிரங்கப்படுத்தப்படாமலேயே விடப்படலாம் எனவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படாவிட்டாலும், இலங்கை தொடர்பான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இந்த அறிக்கைதான் அடிப்படையாக அமையும் என நிச்சயமாக நம்பலாம்! அதேவேளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கை ஒன்றின் பேரிலேயே இந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்தாமலிருப்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் தீர்மானித்ததாகவம் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை இறுதியாக்குவதற்கு முன்னர் நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யும் எனவும், இலங்கையிலும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்திருந்த போதிலும், அந்தத் திட்டம் இறுதியில் இலங்கை அரசின் கடுமையான ஆட்சேபனை காரணமாகக் கைவிடப்பட்டிருக்கின்றது.

இந்த அறிக்கை வெளிவரவிருக்கும் அதேவேளையில், அமெரிக்க தரப்பிலிருந்து உருவாகியிருக்கும் புதிய அழுத்தங்களும், போர்க் குற்றங்கள் தொடர்பாக ஹியூமன் ரைற் வோச் எனப்படும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டுள்ள மனித உரிமைகள் காப்;பகத்தமின் சார்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள போர்க் குற்றங்களை ஆதாரப்படுத்தும் ஒளிநாடாவும் இலங்கை அரசுக்குப் பெரும் சங்கடமான நிலையைக் கொடுத்திருக்கின்றது.

போர்க் குற்றங்கள் தொடர்பான நிபுணர்குழுவை ஐ.நா. சபை அமைத்துக்கொண்ட போதே இலங்கை அரசாங்கம் அதற்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்திருந்தது. இது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் ஒரு செயற்பாடு எனவும், நாட்டின் இறைமையை மீறும் நடவடிக்கை எனவும், இதனை அனுமதிக்கப் போவதில்லை எனவும் அரசாங்கமும் இனவாதக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. போரின் வெற்றியை யாருக்கும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை என ஜனாதிபதியும் கடும் தொனியில் அறிவித்திருந்தார். இலங்கையின் அமைச்சர் ஒருவரும் இதற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தி மூன்றாவது நாள் அதனைக் கைவிட்டிருந்தார்.

இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெறவில்லை என்றால் விசாரணைகளுக்கு அனுமதியுங்கள் அதன் மூலம் நாம் எதனையும் மூடி மறைக்க முற்படவில்லை என்பதை உலகுக்குக் காட்டிக்கொள்ளலாம் என பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. தெரிவித்த கருத்து அரச தரப்பினால் ஏற்கப்படவில்லை. இதுவும் ஒரு காட்டிக்கொடுப்பாகவே அரச தரப்பால் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஐ.நா. நிபுணர்குழு தன்னுடைய விசாரணைகளை முடித்துக்கொண்டு, அதனை வெளியிடுவதற்காகக் காத்திருக்கும் நிலையில் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற ஒத்திகை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பிட்ட அறிக்கை வெளியிடப்படும் போது, ஐ.நா. அலுவலகம் தாக்குதலுக்குள்ளானால் எவ்வாறான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவே இந்த ஒத்திகை இடம்பெற்றது. ஒரு போர் ஒத்திகையை ஒத்ததாக இடம்பெற்ற இதன்போது பல அம்சங்கள் கவனத்திற்கொள்ளப்பட்டன.

முதலாவதாக - ஐ.நா. அலுவலகம் திடீர்த் தாக்குதல் ஒன்றுக்கு உள்ளானால் அங்குள்ள பணியாளர்களை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றுவது என்பது இந்த ஒத்திகையின் போது கவனத்திற்கொள்ளப்பட்டது.

இரண்டாவதாக- அங்குள்ள பணியாளர்கள் பணயமாக வைக்கப்பட்டால் அதனைத் தடுப்பது அல்லது அவர்களைப் பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பாகவும் இந்த ஒத்திகையின் போது கவனம் செலுத்தப்பட்டது.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசுக்க சாதகமாக அமையப்போவதில்லை என்பதை உணர்த்துவதாகவே இந்தத் தற்காப்பு ஒத்திகையும் அமைந்திருக்கின்றது. இந்த ஒத்திகைக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றது. ஒன்று ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. செயலகம் சில மாதங்களுக்க முன்னர் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட போது அங்குள்ள பணியாளர்கள் பலரும் கொல்லப்பட்டிருந்தார்கள். அதேபோன்ற ஒரு நிலை கொழும்பிலும் இடம்பெறவதை ஐ.நா. விரும்பவில்லை.

இரண்டாவதாக - ஐ.நா. நிபுணர் குழுவை அமைத்துக்கொண்டபோதுதான் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்கள். அப்போது ஐ.நா. பணியாளர்களைப் பணயமாக வைக்கப்போவதாகவும் அவர்கள் அறிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் அரச படைகளின் ஆதரவுடன் பின்னர் பணியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கைக்குப் பாதகமாக வெளிவரும் பட்சத்தில் ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பை இச்சம்பவம் ஏற்படுத்திவிட்டுள்ளது.

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் மேற்கொண்ட இந்தத் தற்காப்பு ஒத்திகை இலங்கை அரசுக்கு தெளிவான ஒரு செய்தியைத் தெரிவித்திருக்கின்றது. அதாவது நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கைக்குச் சாதகமாக வெளிவரப்போவதில்லை என்பதுதான் அந்தச் செய்தி!

இந்த நிலையில் கொழும்பும் உஷாரடைந்திருக்கின்றது. கொழும்பைப் பொறுத்தவரையில் இந்த அறிக்கையை வெளிவராமல் தடுப்பதற்கு அல்லது அதனைப் பகிரங்கப்படுத்தப்படாமல் தடுப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் சிலவற்றை முதலில் மேற்கொண்டது. இலங்கையின் சட்டமா அதிபர் மோஹான் பீரிஸ் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழு ஒன்று நியூயோர்க் சென்று ஐ.நா. செயலாளர் நாயகத்தையும் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து இரகசியப் பேச்சுக்களை நடத்தியிருந்தது.

இந்தப் பேச்சுக்களில் இலங்கையின் சார்பில் பங்குகொண்டவர்களில் முன்னாள் படைத் தளபதிகளில் ஒருவரான சவேந்திர சில்வாவும் ஒருவர். ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பரதிநிதியாகப் பணிபுரியும் இவர், போரின் இறுதிப்பகுதியில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க் குற்றங்கள் பலவற்றில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுபவர்.

இந்த நிலையில்தான் இந்தப் பேச்சுக்கள் தொடர்பான செய்திகள் இரு தரப்பினராலும் வெளியிடப்படாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்ன. இருந்தபோதிலும் ஊடகங்கள் மூலமாக இது தொடர்பான செய்திகள் பின்னர் கசிந்திருந்தது. ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தாமல் தடுப்பதற்கான முயற்சிகளையே இதன்போது இலங்கைத் தரப்பினர் மேற்கொண்டனர்.

இருந்தபோதிலும் அது சாத்தியமாகாது என்பதைத் தெரிந்துகொண்ட நிலையில், அதனைப் பகிரங்கப்படுத்துவதற்கு முன்னதாக, அதன் பிரதியை தமக்குத் தருமாறு இலங்கை அரசின் சார்பில் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிக்கை வெளிவரும்போது அதற்கான பதிலுடன் தயாராக இருக்கலாம் என்பதற்காக இந்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்கலாம். ஐ.நா.வின் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு அச்சத்துடன் காத்திருக்கின்றது என்பதை இவை புலப்படுத்துகின்றன. இருந்தபோதிலும் இலங்கை அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக ஐ.நா.வின் பிரதிபலிப்பு எவ்வாறானதாக இருந்தது என்பது தொடர்பாக எந்தத் தகவலும் இல்லை.

இந்த நிலையில் இன்று வெளிவரவிருக்கும் ஐ.நா. நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை தொடர்பிலேயே அரசியல், இராஜதந்திர வட்டாரங்களின் கவனம் குவிந்திருக்கின்றது.

இந்தப் பின்னணியில் அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் இலங்கை மீது தொடர்ச்சியாக சுமத்திவரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்திருக்கும் அரசாங்கம், சர்வதேச சுயாதீன விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளது. சர்வதேசம் கண்களை மூடிக்கொண்டு சுமத்தும் பழிகளை இறைமையுள்ள ஒரு அரசாங்கம் ஏற்றத்தானாக வேண்டும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சரவைப் பேச்சாளர் பிரியதர்ஷன யாப்பா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார். போர்க் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கத் தரப்பிலிருந்து இவ்வாரத்தில் வெளியிடப்பட்ட சில கருத்துக்களுக்கான தனது பிரதிபலிப்பை வெளியிட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். போhக் குற்றங்கள் தொடர்பாக தெரிவிக்கப்படும் எந்தக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வதற்கு அரசு தயாராகவில்லை என்பதை இச்செய்தி உறுதிப்படுத்தியிருக்கின்றது.

இந்த நிலையில் இன்று ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படும் அறிக்கை உடனடியாகப் பகிரங்கப்படுத்தப்படாவிட்டாலும், ஐ.நா.வின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அதுவே வழியைக் காட்டுவதாக அமைந்திருக்கும். இதனைப் பகிரங்கப்படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டில் ஐ.நா. இருந்தாலும் இது ஊடகங்கள் மூலமாக கசியாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை!

கொழும்பிலிருந்து பூராயத்துக்காக சத்தியன்.

http://pooraayam.com/mukiaya/1575-2011-04-12-03-23-15.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.