Jump to content

மார்க்சியமும் தேசியப் பிரச்சினையும்


Recommended Posts

8:53 PM | 4வது பறை , கட்டுரை , நேர்காணல்

தமிழில் -வளர்மதி

சர்வதேசியம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சாத்தியம்தானா, விரும்பத்தக்கது தானா? சோஷலிச அரசியலில் அதற்குரிய உண்மையான இடம் என்ன?

லட்ச ரூபாய் மதிப்புள்ள கேள்வியைக் கேட்டீர்கள்! இதற்கு மட்டும் ஒரு பதில் இருக்கிறதென்றால் கேட்கக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதைத்தான் நாம் எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறோம் - சர்வதேசியம் இன்று எங்கே இருக்கிறது? நம்முடைய ஆசைகளை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைததுவிட்டு வரலாற்று உண்மைகளிலிருந்து தொடங்குவோம்.

முதலில் (நான் ஏற்கனவே சொன்னது போல) புரட்சிகர சோஷலிச வெற்றிகள் எப்போதுமே ஏதாவதொரு வகையில் தேசிய விடுதலை இயக்கங்களோடு -அவை காலனிய எதிர்ப்பாக இருந்தனவோ இல்லையோ, தொடர்புடையவையாக இருந்தன. இரண்டாவதாக, ஒரு முதலாளிய நாட்டில் ஏற்படுகிற ஒவ்வொரு நெருக்கடியின் போதும் வர்க்க அடையாளத்தைவிட- வெகுமக்களின் மிகப் பெருந்திரளினரான பாட்டாளி வர்க்கத்தின் மத்தியிலும் கூட - தேசிய அடையாளமே வலுவாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை. 1914-ல் சமூக-ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி ஏதோ விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலான தலைவர்களின் துரோகத்தால் விளைந்தது அல்ல - லெனின் இந்தக் கருத்தைக் கடுமையாக எதிர்த்தால் ஏகாதிபத்திய வல்லரசுகள், அவற்றில் சலுகை பெற்ற பாட்டாளி வர்க்கம், இவற்றின் எழுச்சியான, ஒரு மொத்த சமூக வரலாற்று சகாப்தத்தின் விளைவும் அல்ல. அதைவிடவும் ஆழமான ஒரு காரணி சொல்லப்பட்டது என்று நினைக்கிறேன். (இந்த வகையிலான மற்ற பிரச்சினைகளிலும் கூட இவற்றையொத்த மாற்றுகளில் இதே போன்ற தேர்வுகள் (Choices) முன்வைக்கப்படுகின்றன.) அதாவது, தனித்தனியான பண்பாட்டுப் பிரிவுகளான இனங்கள், தேசங்கள், மக்கட்கூட்டங்கள் போலல்லாமல், குறுக்குவெட்டு வர்க்கப் பிரிவினைகள் சமூக வரலாற்றில் மிகவும் பிற்பட்டே தோன்றின என்று சொல்கிறேன். இங்கு, ஒரு தேசிய உருவாக்கத்தின் அல்லது ஒரு தனிநபருடைய ஆளுமை உருவாக்கத்தின் ஆழமான அடுக்குகளே மற்ற எல்லாவற்றையும்விட நீண்ட காலம் நீடித்திருப்பவை என்கிற ஒரு மானுடவியல் விதி இருக்கிறது. உளவியலிலும் சரி, சமூக அமைவிலும் சரி தனி உயிரியின் தோற்ற வளர்ச்சியிலும் சரி (ontorg....) இவைவகையின் தோற்ற வளர்ச்சியிலும் எப்போதுமே தொன்மையானவையே (philogeticaly) உறுதியே இருப்பவை. மிகத் தொன்மையான அடுக்குத்தான் மிக செயலுhக்கமானது 'அடிப்படையான உளவியல், வரலாற்று ஆய்வுண்மை இது.

மன்னியுங்கள், ஒரு சிறிய கேள்வி - 1914 ம் ஆகஸ்டில் தொழிலாளர் இயக்கங்களின் தலைவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இதற்குப் பதில் சொல்வது கஸ்டம்! மிகவும் ஒருபக்கச் சார்பான கேள்வி இது. ஒரு ஸ்டாலினிஸ்டு விசாரணகை; கமிசனுக்கு முன்னால் நிறுத்தப்பட்டதைப் போல என்னை உணரச் செய்கிறது. மேலும், இந்தக் கேள்வியில் உண்மையில் ஒரு பொறி இருக்கிறது. ஏனென்றால், சரியான பதில் எதுவென்று எல்லோருக்கும் தெரியும்: 'சமூக ஜனநாயகவாதிகளின் துரோகத்திற்கு எதிராகப் போராடுங்கள், சுவிட்ஸ்லாந்துக்கு ரயிலைப் பிடியுங்கள் என்று போகும். ஆனால், நான் கேட்க விரும்புகிற கேள்வி இது அல்ல் பின்னோக்கிப் பார்த்து ஒருவருடைய நிலைப்பாடு என்னவாக இருந்திருக்க வேண்டும் என்பதில் எனக்கு அக்கறையில்லை. அதற்குப் பதில், அந்தக் காலத்தில், அந்த இடத்தில், வெகுமக்களும் சமூக ஜனநாயகவாத முன்னணிப் படையினரும் என்ன புரிந்திருந்தார்கள், என்ன செய்தார்கள் என்பதை உள்ளது உள்ளபடியே பார்ப்பதும் புரிந்து கொள்ள முயற்சிப்பதுமே எனக்கு முக்கியம்.

ஆனால், உங்களுடைய புரிதல் சரியானதாக இருக்குமானால், எல்லோருக்குமே அது சரியானதாக இருக்க வேண்டும். இது ஒன்றும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக - உதாரணத்திற்கு, ரசியாவிலோ இத்தாலியிலோ நடைபெறவில்லை இல்லையா. ஜெர்மனியில், - பிரான்சில், ப்ரிட்டனில் நிகழ்ந்த போல இன்னொரு இடத்திலும் நடக்க வேண்டும் என்று எதுவும் விதிக்கப்பட்டிருக்கவில்லையே. தொழிலாளர் இயக்கங்களின் பார்வைகளில் வெளிப்படையாகவே உணரத்தக்க வித்தியாசங்கள் இருந்தன. மேலும், ரசிய வெகுமக்கள் முதலிலேயே விழுந்துவிட்டதைப் போல இல்லாமல் மென்ஷ்விக்குகள் பெருந்தேசிய வெறிக்குள் அவ்வளவு வேகமாக எழுந்துவிடவில்லை, இல்லையா.

இதைச் சுலபமாக விளக்கிவிட முடியும். நீங்கள் எழுப்பும் கேள்விகளை எனது வரலாற்றுப் பிரச்சினைப்பாட்டுக்குள்ளேயே பொருத்திவிட முடியும். இத்தாலி அப்போதுதான் உருவான ஒரு இளம் தேசம். பலவீனமான ஒரு தேசம். ஜெர்மனியிடம் அதற்கும் பகையுணர்ச்சி எதுவும் இருக்கவில்லை. ஆனால் ரசியா, ஒரு உண்மையான அர்த்தத்தில், ஒரு தேசிய அரசாக இருக்கவில்லை. மிகவும் பலவீனமா. விரிந்த ஒரு தேசிய அடையாளத்தோடு, நிறைய கலப்புக்கு உள்ளாகியிருந்த ஒரு மக்கள் கூட்டமாகவே அது இருந்தது. அதனால், தேசிய நலன்கள் மிகவும் குறைவான செல்வாக்கே செலுத்தியிருக்க முடியும் என்பது அங்கு இயல்பான ஒரு விஷயம்.

ஒரு பொருள்முதல்வாதி என்ற முறையில் உணர்வுபூர்வமான (consious) நிலையை விட, உள்ளுணர்வே (instinct) தீர்மானகரமான ஒரு காரணியாக - ஒரு விரிந்த அர்த்தத்தில் - இருக்கிறது என்று சொல்வேன். அதாவது, என்ன சொல்ல வருகிறேன் என்றால், இங்கு, ஒரு சர்வதேச உள்ளுணர்வைவிட, ஒரு சர்வதேச உணர்­வுநிலை இருக்கிறது. இந்த உண்மையி­லிருந்து, சர்வதேச உணர்வுநிலையோடு தேசிய உள்ளுணர்வு மோத நேர்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரக்ஞையே மிகவும் வலுவானதாக வெளிப்படுகிறது என்று ஊகிக்கிறேன். இந்த விடயத்தில், யதார்த்தம் என்னோடு இருக்கிறது. அவ்வளவுதான். இந்த நிலைகளுக்காக நான் வருந்தவேயில்லையா? ஆமாம், வெறுக்கத்­தான் செய்கிறேன். என்றாவது ஒரு நான் இறக்க வேண்டும் என்ற உண்மையை எவ்வளவு வெறுக்கிறேனோ அதேயளவு இதையும் வெறுக்கிறேன். ஆனால் என்ன செய்வது, இது என் தலையில் எழுதியிருக்கிறது.

இது எல்லாம் என் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த கொடுரமான, சமகாலச் சம்பவங்களின் வரலாற்றோடு நேரடியாகவும் சம்பந்தப்பட்டிருக்கிறது. பொலிவியாவில் சே-வுக்கு நேர்ந்த கதியை எடுத்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றி பெரிதாகக் கதையளந்து கொண்டிருக்காமல் நேரடியாக ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். 1971 ல் பொலிவிய அரசு எதிர்ப்பாளர்களின் குழு ஒன்று 'வானவிற்கு வந்தது. அவர்களில் ஒருவர் (பொலிவிய சுரங்கத் தொழிலாளர் சம்மேளனத்திலிருந்து வந்த ஒரு சுரங்கத் தொழிலாளி) ஜுலை 26 கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். சமீபகாலங்களில் பொலிவியாவில் நிகழ்ந்த வெகுமக்கள் கிளர்ச்சிகளைப் பற்றி ஒரு உரை ஆற்றினார். புரியாத புதிரான ஒரு மறதியில் சே- வுடைய கெரில்லாப் போரைத் தன்னுடைய பேச்சில் ஒரு இடத்தில் கூட அவர் குறிப்பிட­வேயில்லை. 'சே” வின் கெரில்லாப் போர் நமது சமகாலத்திய நிகழ்வுகளில் மிகத் தூய சர்வதேசியப் பார்வை கொண்டிருந்த ஒரு போராட்டம். ஆனால், பொலிவிய தேசிய யதார்த்ததிற்குள்ளாக அது செரித்துக் கொள்ளப்படவே இல்லை. வெகுமக்களின் நினைவில் அது இன்னும் ஏதோ ஒரு அந்நி­யமான நிகழ்வு போலவே படிந்திருக்கிறது. இது ரொம்பவும் சோகமானது. ஆனால் நாம் இதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கத்­தான் வேண்டும். முழுக்க முழுக்க ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று. ஆனால், மறுக்கமுடியாத ஒரு யதார்த்தம். ஒரு மார்க்சியவாதி என்கிற முறையில் யதார்த்தத்தின் விதிகளை மதித்துபப் புரிந்துகொள்ளவே நான் முயற்சிக்கிறேன். என்னுடைய விதிகளை அதன் மீது திணிப்பதில்லை.

காவுட்ஸ்கி தொடங்கி கய் மோஸ்- வரைக்கும் இரண்டாம் அகிலத்தின் மிக மோசமான பிழை ஏகாதிபத்தியத்தின் சேவையில் இருந்து ஐரோப்பிய-மையவாதம் தான் என்று உங்கள் கட்டுரையில் எழுதியிருந்தீர்கள். ப்ரெஞ்ச் சோஷலிஸ்டு கட்சி (PSF) இந்தத் தவறிலிருந்து விலகிவிட்டதா?

இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். PSF இன்னும் அதிலிருந்து விலகிவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. எந்த மாற்றமோ முன்னேற்றமோ இல்லை என்று இதற்கு அர்த்தம் இல்லை. ஆனால், மொத்தத்தில் அதன் பொதுப்போக்கு ஐரோப்பிய மையவாதமாகவே இன்னமும் இருக்கிறது. சோசலிச அகிலத்திற்குள் அது உறுப்­பினராக சேர்ந்திருப்பது இதற்கு அமைப்பு ரீதியான வடிவம் கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். சமூக ஜனநாயகம் மூன்றாம் உலக நாடுகளில் தன்னை அறிமுகம் செய்து கொள்வதில் எப்போதுமே அக்கறையாக இருந்து வந்திருக்கிறது என்பதையும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். வர்க்கப் போராட்ட நலன்கள் என்ற நோக்கில் இதைப் புரிந்துகொள்ள முடியும் இந்த நாடுகளின் எதிர்ப்புரட்சியின் ஒரே சாத்தியமான வடிவம் சீர்திருத்தம்தான். அதனால்தான் லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, போர்டுகல் நாடுகளில் சோஷலிச அகிலத்தில்தான் தீவிரமான செயற்பாடுகள், அதிலும் குறிப்பாக, ருளுயு வின் ஏஜென்டாக ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் செயல்பாடுகள் இருக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை.

1919-ல் பல்வேறு தேசிய அங்கங்களை உள்ளடக்கிய கட்டுப்பாடு மிகுந்த ஒரு சர்வதேசக் கட்சியாக லெனின் அமைத்த மூன்றாம் அகிலம், தேசியம் என்ற மறுக்கமுடியாத யதார்த்தத்தின் வலுவைக் குறைத்து மதிப்பிட்ட ஒரு வரலாற்றுத் தவறு என்று நினைக்கிறீர்களா?

அது ஒரு பிழை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வரலாறு தவிர்க்க முடியாதாக்கிய ஒன்று. அப்போதைய நிலைமைகளில் சரி என்று பட்டதையொட்டி அந்தப் பரிசோதனை முயற்சித்துப் பார்க்க வேண்டியதொன்றாக இருந்தது. ஏனென்றால், வரலாறு அதைத் தவறு என்று அதுவரையிலும் நிரூபித்தி­ருக்கவில்லை. ஆனால் தவறு உலகப் பாட்டாளி வர்க்கத்தை தேசிய, பண்பாட்டுத் தனித்துவங்கள், வித்தியாசங்களற்ற ஒரு ஒற்றை முழுமையாகப் பார்த்ததில்தான் இருக்கிறது. ஜினோவாவின் இராணுவ மாதிரியில், அந்தச் சகாப்பதத்தில் நிலவிய மற்ற இராணுவாத உருவகங்களின் அடி­ப்படையில் அமைந்த, ஒரு ஊழியர் அணி­யின் தலைமையில் நடைபோடக்கூடிய சர்வதேச பாட்டாளி வர்க்க இராணுவம் ஒன்று சாத்தியம் என்று அப்போது நம்பப்­பட்டது. இது முழுக்க முழுக்க ஒரு கருத்­துமுதல்வாத அடிப்படையிலமைந்த தவறு. அதனால், ஒரு வகையான தன்முனைப்­புவாத அமைப்புமுறை சார்ந்த வடிவம்.

இதை இன்னும் கொஞ்சம் பின்னுக்கு கொண்டு போக முடியும். பொதுவாகச் சொல்வதென்றால், அகிலங்கள் அவை தோன்றியதற்கு சொல்லப்பட்ட காரணங்­களை எப்போதுமே நிறைவு செய்ததில்லை. 1864-ல் தோன்றிய முதல் அகிலத்திலிருந்து (சர்வதேச உழைப்பாளர்கள் சங்கம்) நான்காம் அகிலம் (இதைப் பற்றி என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்) வரைக்கும் அவற்றின் இலக்கு சோசலிசப் புரட்சி. ஆனபோதிலும், இடைப்பட்ட நுhற்றாண்டின் யதார்த்தமான வரலாற்றில் நிகழ்ந்த ஒவ்வொரு சோசலிசப் புரட்சியும், சோஷலிசத்தை நோக்கிய ஒவ்வொரு முயற்சியும், ஒவ்வொரு முன்னோக்கிய அடிவைப்பும் அவற்றைச் சார்ந்திராமல் சுதந்திரமான முயற்சியில் நடந்தவை பாரீஸ் கம்யூனிலிருந்து 1959-ல் நிகழ்ந்த க்யூபப் புரட்சி வரை. உங்களுக்கே தெரியும், அந்த நிகழ்வைப் பதிவு செய்து என்பதைத் தவிர முதலாம் அகிலத்திற்குக் கம்யூனோடு எந்தச் சம்பந்தமும் இருக்கவில்லை. தற்செயலாக, அந்த நிகழ்வு, அது நிகழ்ந்த பிறகு அகிலத்தை இழுத்து மூடுவதற்கு ஒரு வகையில், ஒரு காரணமாக அமைந்து விட்டது. இரண்டாவது அகிலம், தோல்விகளைத் தவிர வேறு எதையும் தரவில்லை. அந்தக் காலத்தின் ஒரே வெற்றி ரசியப் புரட்சி, அதற்கு எதிராக நிகழ்த்தப்பட்டது. அதேபோல மூன்றாம் அகிலமும் - ஜெர்மனி, இத்தாலி, ஹங்கேரி, ஸ்பெயின் - அதனுடைய உதவியே இல்லாமல், சொல்லப் போனால் அதற்கு எதிராகவே சீனப் புரட்சி வெற்றி பெற்றது. (இரண்டு வாதங்களும் சாத்தியமே. ஒன்றை ஒன்று விலகியலை அல்ல என்றும் சொல்லலாம்) 1944-ல் கிழக்கு அய்ரோப்பாவில் தோன்றிய சோஷலிச நாடுகளைப் பொருத்த வரையில் மூன்றாம் அகிலம் கலைக்கப்பட்டதற்கு அடுத்த ஆண்டில், நீங்கள் ரசியப் பெருந்தேசிய வெறி என்று சொல்லக்கூடிய அதன் பாங்குகளுக்கு எதிராகத் தோன்றியவை.

க்யூப, வியட்நாமியப் புரட்சிகள் மற்றும் பொதுவில் காலனிய எதிர்ப்பும் புரட்சிகள் என்று சொல்லப்படுபவற்றை எடுத்துக் கொண்டால், இத்தகைய எழுச்சிகளை உருவாக்கியதற்கான சட்டகமாக சொல்லிக் கொண்ட எந்த ஒரு அமைப்போடும் இவற்­றுக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. எல்லா அகிலங்களுமே ஊழியர்களைப் பயிற்றுவிக்கும் மழலையர் பள்ளிகளாகவும் கடைசியில் அவற்றுக்கு எதிராகவே திரும்பிய தேசியக் கட்சிகளைக் கட்டுவதற்கு உதவும் பணியையுமே செய்தன. அடிநிலையில் பார்த்தால் ஒரு அகிலத்தின் வெற்றி என்பது அதன் முடிவைக் குவிப்பதாகவே இருந்தது. இதைச் சரியாகப் புரிந்திருந்தாலேயே மார்க்ஸ் மிக உவப்போடு முதல் அகிலத்தைக் கலைக்க முன்வந்தார். இயக்கம் வளர்ந்துவிட்டது என்றும் அதன் வலுவிற்கு ஆதாரம் - அதற்கு இனிமேலும் ஒரு மையப்படுத்தப்­பட்ட அமைப்பு தேவையாக இல்லை என்றும் சொன்னார். அகிலத்தின் நோக்கம் நிறைவேறுவது என்பது அகிலத்தைக் கலைப்பதாக இருந்தது. நோரெஸ், டோக்லியாட்டி, சாண்டியாகோ கரில்லோ போன்ற ஏனையவர்களைப் பயிற்றுவிக்கும் சர்வதேசியத்தையும் அகிலத்தையும் காலப்போக்கில் சவக்குழிக்கு அனுப்பிய தேசிய வெகுமக்கள் கட்சிகளைக் கட்டுவதற்கு உதவியதற்கும் மேலாக மூன்றாம் அகிலம் வேறு என்ன செய்துவிட்டது. இது ஒரு சோகமயமான இயங்கியல் உண்மை. ஆனால், சில இழப்பீடுகளையும் தரவே செய்திருக்கிறது.

இப்போதெல்லாம், நாம் மையத்திலி­ருந்து விலகிச் செல்லும் ஒரு பொதுவான போக்கையே பார்க்கிறோம். எப்படியிருந்­தாலும், வரலாற்று வளர்ச்சிப் போக்கே அப்படி இருக்கிறது. மூன்றாம் அகிலத்தை நிறுவி, சோவியத்துகளின் சர்வதேச் குடியரசை நிறுவ லெனின் அறைகூவல் விடுத்தபோது, உலகில் ஒரு சோவியத் அரசு கூட இருக்கவில்லை. இலக்கின் பிரம்மாண்டமே வழிகளின் வறட்சியைக் குறிப்பதாக இருந்தது. பிறகு, வழிகள் வளர வளர இலக்கு மெல்ல மறைந்து போனது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், சர்வதேசியவாதியாக இருப்பதற்கான ஒரே வழி சொந்த நாட்டில் புரட்சியை நடத்துவது என்பதாகிவிட்டது. இந்த அடக்கமான முடிவு ஒரு வாய்வீச்சாகக்கூடத் தோன்றலாம். ஆனால், நிகழ்வுகளைப் பார்க்கும் போது யாரும் மறுக்கமுடியாத ஒரு உண்மை.

உங்கள் கடைசிக் கேள்விக்கான பதில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மையில் வரலாற்றை நிகழ்த்துபவர்கள் வெகுமக்களே, என்கிற முரணான ஒரு கருத்தில் இருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த இந்த உண்மையை விடாமல் பின்பற்றுங்கள்; உணர்ச்சி ஊக்கம் தருகிற அல்லது சோர்வடையச் செய்கிற முடிவுகளுக்கு நீங்கள் வந்து சேர்வீர்கள் - எப்படியிருந்தாலும் நீங்கள் நம்பிக்கை வைத்துத் தொடங்கிய, வெகுமக்கள்தான் வரலாற்றை நிகழ்த்துபவர்கள் என்பது உண்மையென்றால், நிலவுகிற பண்பாடுக­ளுக்கும் மொழிகளுக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்ட, அவற்றோடு தொடர்பில்­லாமல் மேலே அந்தரத்தில் சுற்றிக் கொண்டி­ருக்கிற ஒரு அருவம் அல்ல அவர்கள் என்பது உண்மையானால் - வரையறுக்­கப்பட்ட இயற்கையான பண்பாட்டுக் குழுமங்களாக மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள் என்றால் - அப்போது அவர்கள் அவர்களாலேயே, அவர்களது நிலைமைகளிலிருந்தே, விண்ணிலிருந்து அல்ல மண்ணிலிருந்தே, உலகுதழுவி அல்ல உள்ளுர் அளவிலேயே வரலாற்றைப் படைப்பார்கள். எல்லோருக்கும் ஒன்றேயான வரலாறு என்று எதுவும் இல்லை; வரலாற்றின் காலம் டோக்கியோவிலும், பாரீசிலும், பீக்கிங்கிலும், வெனீசுவலாவிலும் ஒன்றாக இல்லை. ஒரு உலகப் புரட்சித் திட்டம் பன்முகத் தன்மைகளை எல்லாம் ஒருமுகப்படுத்தி, மொத்த இயக்கத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முயற்சிக்கும் போது அது வரலாற்று இயக்கத்திற்கு எதிராகப் போய் முடிகிறது ஏனென்றால், அந்த இயக்கம் எப்போதும் ஒருமுகத்தன்மையிலிருந்து பன்முகத் தன்மையை நோக்கி நகர்வதாகவே இருக்கிறது. நிகழ்வுகள் எப்போதும் கீழிருந்தே தொடங்குகின்றன் பன்முகத் தன்மையே எப்போதும் வெற்றி பெறுகிறது. மேலிருந்து வடிக்கப்பட்ட எந்தவொரு திட்டமும் ஒரு உள்ளார்ந்த கருத்துமுதல்­வாதக் கருவைக் கொண்டிருக்கிறது. அதன் காகித ஆரவாரத்திற்கும், வரலாற்றில் அதற்கு இடமில்லாமல் போவதற்கும் காரணம் இதுதான். புரட்சி என்பது ஆணைகள் பிறப்பிக்கும் அறைகளிலிருந்து ஒருபோதும் நிகழ்த்தப் போவதில்லை. பராகுவே-யின் எல்லைக்கு அருகில் இருக்கிற ஒரு தடம் விலகிய கிராமத்தில் இருந்து புரட்சி தொடங்குகிறது என்றால், அதற்கு ஏதோ 19, 000 கி.மீ. தொலைவில் இருக்கிற ஒரு மூளை காரணமல்ல அந்தக் கிராமத்து தெருமுனை பெட்டிக் கடைக்காரன் நிகழ்த்த வேண்டும் என்று முடிவு செய்ததாலேயே நிகழ்கிறது. அந்த மூளை செய்யக்கூடிய தெல்லாம், தெருமுனையைக் கூட தாண்டிப் போயிருக்காத, ஆனால் கிராமத்தின் போது அபிப்பிராயத்தின் மீது செல்வாக்கு செலுத்துபவனாக இருக்கிற அந்தப் பெட்டிக் கடைக்காரன் அதை நிகழ்த்துவதற்கு, அவனுக்கு துhண்டுகோலாக இருந்தது எது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது, கிராமத்து விவசாயிகளின் தேவைகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது, அவ்வளவுதான். அவர்க­ளுக்கு உலகப் புரட்சி அவசியமில்லை ஏனென்றால், அதுபற்றி அவர்களுக்குத் தெரியாது கிராமத்தையே தாண்டியிராத­வர்களுக்கு உலகம் என்பதே தெரியாது. 1967-ல் முயோபாம்பா-வின் மக்களிடம் பொலிவிய கெரில்லாக்கள் வியட்நாமை ஆதரிக்க வேண்டும் என்று விளக்கிப் பேசியபோது, அவர்கள் வியட்நாமை ஏதோ அவர்கள் கேள்விப்பட்டிராத, பக்கத்திலி­ருந்து ஒரு கிராமம் என்று நினைத்திருந்­தார்கள். வாழ்நாளில் ஒரு அமெரிக்­கனைக் கூடப் பார்த்திராத அவர்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று சுத்தமாகத் தெரியவில்லை. ஆனால், அதற்கு மாறாக, அருகில் ஒடிய ஆற்றின் மீதிருந்த பாலத்தை பழுது செய்யாமல் இருந்த உள்ளுர் ஆட்சியின் மீது அவர்கள் கடும் கோபத்திலிருந்தார்கள்.

ஆகையால், அங்கு புரட்சியை ஆரம்பிப்பது என்பது அவர்களுக்கு அந்த பாலத்தில் பிரச்சினையில் உதவுவது, ஏன் அந்த அதிகாரி அந்தப் பாலத்தை சரி செய்யாமல், அக்கறையற்று இருக்கிறான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள உதவியது. அது எப்போதுமே கீழிருந்து, தன்னடக்கமாக, பெரிய எழுத்துக்கள் இல்லாமல் தொடங்குவது. ஆனால், அகிலம் என்பது அதன் வரையறுப்பிலேயே பெரிய எழுத்துக்கள் தேவைப்படுவது - ஆனால், செயலற்ற ஒரு மேல்கட்டுமான­மாகவே இருக்கச் சபிக்கப்பட்டது. ஆனால், தேசம் ஒரு மேல்கட்டுமாணம் இல்லை; மாறாக (மொழியைப் போல, பண்பாட்டைப் போல்) ஒரு உண்மையான உள்கட்டு­மாணம் (infra – structure). அகிலங்கள் வெறுமனே மேல்கட்டுமாணங்களாகவே இருக்கின்றன் அந்தக் காரணத்தாலேயே வரலாற்று ஓட்டத்தில் அடித்துச் செல்லக்கூடியவையாக இருக்கின்றன.

வியட்நாம் போருக்கும் உள்ளுர் ஆற்றுப் பாலத்திற்கும் இடையிலான இந்த முரணைத் தாண்டிச் செல்வதுதான் இயங்கியல் முறையியலின் நோக்கம். பொலிவியாவில் ஒரு இரண்டாவது போர் முனையைத் துவக்கி, வியட்நாம் புரட்சிக்கு உதவவேண்டும் என்று நினைக்கிற ஒரு சர்வதேசப் புரட்சியாளர், தன்னுடைய இலக்கு உள்ளுர் பாலம் குறித்த விவாதத்தைத் துவக்கி வைப்பதைச் சார்ந்திருக்கிறது எனவும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வழியில், பொதுவானதற்கும் குறிப்பானதற்கும் இடையிலான முரண்பாட்டை ஒருவர் இயங்கியல் ரீதியாக கடந்து செல்ல முடியும். பொதுமைக்கும் குறிப்பானதற்கும் இடையிலான, தலைகீழ் விகிதத்திலான ஒரு இயங்கியலின் ஊடாக - நீங்கள் பிரச்சினையை வைக்கும் முறையில் சுத்தமாக மறைந்துவிடுகிற ஒரு இயங்கியல் - பருண்மையான உள்ளுர் யதார்த்தங்களிலிருந்து தொடங்கி சர்வதேச இயக்கத்திற்கு நகர்த்தல், மார்க்சிய சர்வதேசியவாதத்தின அணுகுமுறை இதுதான்.

ஒப்புக்கொள்கிறேன். எனது அணுகு­முறை விவாத நோக்கில் இருந்ததால் சற்று ஒருதலைச் சார்பானதாக இருந்தது; ஒரு மிகைப்படுத்தலுக்கு எதிராக இன்னொரு திசையிலான மிகைப்படுத்தலாக இருந்தது. உண்மையைச் சொல்வதென்றால், நீங்கள் சொல்வது சரிதான் நாம் ஒரு இயங்கி­யலைக் கட்டமைக்க வேண்டும். ஆனால், இதில் நாம் ஒன்றுபட்டாலும்கூட, அதன் தன்மைக்கு வரும்போது, நாம் முரண்பட்டுக் கொள்வோம். தேசியப் போராட்டங்களில் புரிந்துகொள்வதற்கான தீர்மானகரமான கோட்பாட்டுச் சட்டகம், உலக அளவில் நடைபெறும் வர்க்கப் போராட்டம் குறித்த ஒரு சர்வதேசிய கோட்பாட்டுச் சட்டகம்தான் என்று நம்புகிறேன். உலகப் போராட்டம் குறித்த கோட்பாட்டின் முக்கிய சரடுகளை முன்கூட்டியே கற்றுத் தேறாமல் பொலிவியாவில் நடைபெறும் நிகழ்வுக்களை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது. என்றாலும், நடைமுறையில் துவக்கப் புள்ளியாக இருப்பது, நடைமுறை தீர்மானகர காரணியாக இருப்பது, தேசம்தான். பொலிவியாவின் தேசிய வர்க்கப் போராட்ட நிலைமைகள் குறித்த ஆய்வே துவக்கப் புள்ளியாக இருக்க வேண்டும்; இல்லையென்றால், உலக நிலைமை பற்றிய விரிந்த கோட்பாட்டுக்கு ஆய்வு பயனுள்ளதாக இருக்காது; உண்மையான வரலாற்று மாற்றங்களைக் கொண்டுவர அதனால் முடியாது. இங்கு, ஒரு பரஸ்பர வினையாக்கம் இருக்கிறது. கோட்பாட்டளவில் முதன்மையாக இருப்பது எப்போதும் செயலளவில் முதன்மையா­னதாக இருக்க முடியாது. ஒருவேளை இதில் சர்வதேசியத்தை எப்போதும் மனதில் வைத்துக் கொண்டே தேசிய நிலை­மைகளைக் கையாள்வது, ஆனால் சர்வதேசியத்தை அங்கே வைக்காமலி­ருப்பது என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது போல. தப்பித்தவறி அதை வைத்துவிடுவது, எல்லாம் கெட்டுவிடுவதற்கான அறிகுறியா­கி­­விடக்கூடும்.

இறுதியாக, நாம் எப்போதும் சர்வதேச அளவில் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அதைப் பற்றிப் பேசக்­கூடாது என்று வேண்டுமானால் சொல்ல­லாம். அதைப் பேசுவதை நிறுத்தும்போது­தானே ஒரு கட்சி வலுவானதாக அதாவது தேசியமானதாக ஆகிறது. அந்தப் புள்ளியில் தானே ஒரு குழுவாக இருப்பதி­லிருந்து மாறி, ஒரு வெகுமக்கள் கட்சியாக 'பின்னடைவுக்கு” சபிக்கப்பட்டதாக மாறுகிறது. இதுபோன்ற திருப்பங்கள் சர்வதேச பொதுவுடமை இயக்க வரலாற்றில் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. 1935-36 காலகட்டத்தில் Pடுகு ஒரே மூச்சில் உள்ளுரளவிலான ஒரு மூடிய பாட்டாளி வர்க்க முன்னணிப்படை என்ற நிலையிலி­ருந்து ஒரு வெகுமக்கள் கட்சியாக மாறிய அந்த நிகழ்;வு ப்ரெஞ்சு கம்யூனிச இயக்க வரலாற்றில் முக்கியமான ஒன்று. இது பிறகு திரும்பிப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வு. 1943-ல் இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் இதே நிகழ்ந்தது.

ஆக, சர்வதேசியத்திற்கு ஒரு நியாயம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால், அதை வெகுமக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதால் அதைப் பற்றி ஒருவர் பேசக்கூடாது என்று சொல்ல வருகிறீர்கள். முன்னணிப் படை புரிந்து கொண்டதை உதராணத்திற்கு, சர்வதேசப் பரிமாணம், இன்ன பிற - கிரகித்துக் கொள்ளவே முடியாத, திருத்த முடியாத மந்தைக் கூட்டம் என்கிற, வெகுமக்கள் குறித்த ஒரு இயங்காவியல் கண்ணோட்டம் இல்லையா இது?

இல்லை. இது தேர்தல் பாதைக்கு மாறிவிடுவதோ வெகுமக்களின் நிலைக்குத் தாழ்ந்துவிடுகிற சந்தர்ப்பவாதமோ இல்லை. எந்த ஒரு சமூகச் சூழலிலும் செயல்படுகிற சக்திகளின் படிநிலை வரிசைகளில் உள்ளுர் காரணிகளின் அமைப்பே தீர்மானகரமா­னதாக இருக்கிறது என்பதே இங்கு முக்கி­யமான புள்ளி. இது ஒரு செயல் அளவி­லான பிரச்சினை. இப்போது, 1976-ல், ப்ரான்சில் நாம் செய்யவேண்டியது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கான பதில் ப்ரெஞ்சு சமூக அமைவிற்கு இருக்கிறதே ஒழிய அதற்கு வெளியில் எங்கும் இல்லை. சர்வதேச அல்லது ஐரோப்பிய போராட்டங்கள் பற்றிய இருப்புநிலை அறிக்கையிலேயே (Balance-sheet), ஆய்விலோ அதைத் தேட முடியாது. பகுதியே (local) எப்போதும் தீர்மானகரமான காரணியாக இருக்கிறது. நாம் ஒரு மிகச் சாதாரணமான உண்மையை சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருக்­கிறோம். 'அகக் காரணியின் ஊடாகவே புறக்காரணி செயல்பட முடியும்” என்று மாவோ இதை அழகாகச் சொல்லியிருக்­கிறார். அகக்காரணி அவசியம் உள்ளுக்­குள்தான் இருக்கும். செயலில் இருக்கும் எந்த ஒரு சக்தியிலும் அதிகபட்ச வினாவைக் குறிக்கும் புள்ளியாக இருப்பதால் இந்த அகக்காரணிக்கே எப்­போதும் அதிக அழுத்தம் தரப்பட வேண்டும். மிக எளிமையான, இயக்க நுட்பம் குறித்த கேள்வி என்று ஒருவர் இதைச் சொல்லலாம். காரணத்தை சரியாகப் புரிந்து கொண்டு, அதன் பிறகு, நிலைமையை மாற்றியமைக்­கும் சாத்தியங்களை உள்ளடக்கிய இந்தப் புள்ளியின் மீது முழுச் சக்தியையும் ஒருவர் பிரயோகிக்க வேண்டும். செயலுhக்கமான காரணிகள் எப்போதுமே நுண்ணிய பொருண்மையானவை; பிரம்மாண்டமான கற்பனைத் திட்டங்களோ, ஆதாரப் புள்ளிக்கு வெளியே இருக்கிற அலங்காரங்களோ அல்ல. ஆக, மிகச் சாதாரண, இயக்க நுட்பம் குறித்து கேள்வி இது. வெகுமக்க­ளுக்குப் புரியாத ஒரு மொழியில் அவர்களி­டமிருந்து விலகி நின்றுப் பேசுவதைத் தவிர்ப்பது பற்றியது அல்ல. வியட்நாமைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது என்றால், அந்தப் பிரச்சினை அவர்களுக்கு நேரடியாக தொடர்பில்லாத 'ஆனால் மறைமுகமாகத் தொடர்புள்ள” ஒன்று என்று யதார்த்தத்­திலிருந்து எழுகிற ஒரு உபவிளைவு என்பதுதான் விடயம். நேரடியான காரணங்கள், அக்கறைகள் மீது ஒருவர் நேரடியாகத்தான் வினையாற்ற வேண்டும்.

ஆகஸ்டு 1914 -ஜெர்மனி பற்றிய உதாரணத்திற்கு திரும்பவும் போக விரும்புகிறேன். புரட்சிகர நடவடிக்கையை விரும்பிய அன்றைய புரட்சியாளர்கள், அந்தக் காலத்திய ஜெர்மானிய சமூக அமைப்பு, சமூக வர்க்கங்கள், அரசியல் சக்திகள், வெகுமக்களின் உணர்வுநிலை, ஜெர்மன் தேசியப் பாரம்பரியம் இன்ன பிறவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையெல்லாம் சொல்லத் தேவையில்லை. ஆனால், வெகுமக்களால் சர்வதேசியத்தை என்றுமே புரிந்துகொள்ள முடியாது என்று ஒருவர் எடுத்துக் கொள்ள முடியாதவரை, இந்தப் பருண்மையான நிலைமைகள் குறித்த ஆய்வு, ஒருவரை வெகுமக்களை அப்போதைய அவர்களது உணர்வுநிலைக்கு மேலாக கொண்டுவர - அதாவது தேசிய வெறியிலிருந்து, கெய்சரை ஆதரிப்பதிலிருந்து - உதவக்கூடிய ஒரு யுத்த தந்திரத்தையும் போர்த் தந்திரத்தையும் வகுப்பதற்கு இட்டுச் செல்ல வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நிலவுகிற சமூக அமைவை பருண்மையான துவக்கப் புள்ளியாகக் கொள்வதற்கும் சர்வதேச யுத்த தந்திரம் ஒன்றை வகுத்துக் கொள்வதற்கும் இடையில் எந்த முரணும் இல்லை. ப்ரான்சில் இன்றைக்கு புரட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தற்போது அவர்கள், மூவர்ணக் கொடியையும் தேசிய கீதத்தையும் நிராகரிக்கவும், 'எல்லா எல்லைகளும் தகரட்டும்” என்று முழங்குவதையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதேநேரத்தில் இன்னொரு பக்கம் பிரிட்டானியர்கள் (Bretons) மற்றும் கார்ஸிக்கர்களுடையழூ உரிமைகளுக்காகப் போராடவும் செய்கிறார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தேசியச் சின்னங்கள், அடையாளங்கள், மன அமைவுகளைப் பொருத்தவரையில், புரட்சிகர மதிப்புகள் என்று சொல்லப்படுகிற­வற்­றுக்கு எனது நிலை முற்றிலும் எதிரானது. தேசிய பாரம்பரியத்தை மீட்டெடுக்காத வரைக்கும் ப்ரான்சில் புரட்சி சாத்தியமே­யில்லை என்பது என் நம்பிக்கை. தேசியப் பாராம்பரியம் என்கிற இந்தச் சரியான பாதைக்கு திரும்புவதன் வழியாகத்தான் அதிலிருந்து விடுபடுவது பற்றி நாம் யோசிக்கவே முடியும். தொடர்ச்சியும் புதுமை புனைதலும் என்கிற உயர்வான இயங்கியல் என்பதற்கு மேலாக இதில் எதுவும் இல்லை: பழையவற்றின் தொடர்ச்சியை அங்கீகரிக்­கும்போதே புதுமை புனைதல் சாத்தியம். எனக்குத் தெரிந்த புரட்சியாளர்கள் எல்லோருமே தனிப்பட்ட முறையில் மிகத் தீவிரமான தேசபக்தர்களாக இருந்தவர்கள் - ஆச்சரியம்! ஆச்சரியம்!” அவர்களுடைய 'சர்வதேசியம்” பொதுவில் ஒரு தேசிய மீட்;புவாதமாகவே (messianism) இருந்தது. மேலும், கியூபாவிலும் வியட்நாமிலும் ஒரு புரட்சியாளராக இருப்பது என்பது - இப்போது தொழிலாளர் அரசுகள் இருக்கும்போது மட்டுமல்ல, அதற்கும் முன்னும் கூட - தேசியவாதியாக இருப்பதுதான். ஒரு ஆதிக்க தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிற நாம், நம்முடைய தேசியப் பாரம்பரியம் அனைத்தையும் நிராகரித்துவிட வேண்டுமா அல்லது அந்தப் பாரம்பரியத்தில் ஆதிக்கக் கறை படிந்ததை அதன் ஏகாதிபத்திய வேர்களை மட்டும் விலக்கிவிட வேண்டுமா என்பது நம் முன் உள்ள கேள்வி. மோசமான பக்கங்களை விலத்திவிட வேண்டுமா என்பது நம் முன் உள்ள கேள்வி. மோசமான பக்கங்களை விலத்தவிட்டு, சாதகமான அம்சங்களை விதைக்க வேண்டும் என்பது என் கருத்து; அதுவும் பிந்தையவற்றுக்கு ஃப்ரான்சில் ஒரு வலிமையான வரலாறு இருக்கும் போது.

இந்த நாட்டில், இதன் வரலாற்றில் மிகச் சிறந்ததாக இருக்கிற அத்தனையையும் உருவாக்கிய உரு புரட்சி, தற்போது வெறுமனே ஒரு தேசிய ஜனநாயகப் புரட்சி என்று இகழ்ந்து பேசப்படுகிற - இங்கு நிகழ்ந்திருப்பது நமது அதிர்ஸ்டமே. வேல்மி, புனித ஜஸ்ட், பாரீஸ் கம்யூன், ஆக்கிரமிப்பு எதிர்ப்பு முன்னணி (resistance), என்று நமது புரட்சிகரப் பாரம்பரியம் செறிவானது. மேலும், அதன் இயற்கையிலேயே மிகப் பிற்போக்கானதாக இருக்கிற, வெகுமக்கள் முன்னணியை விட ஹிட்லரை விரும்புகிற, வெளிநாட்டுச் சக்திகளின் உதவியை நாடுகிற ஒரு ஆளும் வர்க்கம் நமக்குக் கிடைத்திருக்கிற போது இவற்றை நாம் இன்னும் முழுமையாக பயன்படு;த்திக் கொள்ள வேண்டும். புரட்சியின் நலன்க­ளோடு தேசிய நலன்களும் கலந்திருப்பதால் நாம் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையின்மையோ சந்தர்ப்பவாதமோ இங்கு உதவாது. பாருங்கள், மார்செய்ல்ஸ் (சர்வதேசிய கீதம்) 'சபியுங்கள் அதை, ஒரு புரட்சிப் பாடல் இல்லையா;” எங்கோ பொலிவியத் தொழிலாளர்கள் அதைக் பாடக் கேட்டிருக்கிறேன். ஈக்லின் போட்டியர் (Eugene Pottia) என்ற கைவினைஞன் 1871- ல் இயற்றிய இந்த ப்ரெஞ்சுப் பாடலை மாஸ்கோவின் செஞ்சதுக்கத்திலும் பீகிங்கின் டியன் -மென் சதுக்கத்திலும் கோடிக்கணக்­கானவர்கள் பாடக் கேட்கும் போது, ஒரு ப்ரெஞ்சுக்காரன் என்ற முறையில் நான் புல்ல­ரித்துப் போகிறேன். நமது சொந்த மக்களுடைய தேசிய வேர்களை அங்கீ­கரிக்க மறுத்தவிட்டு, மற்ற தேசத்து மக்களு­டைய உணர்ச்சிகளை அக்கறையோடு பார்ப்பதை, சீன தேசியத்தை ('மாவோயிசம்” என்ற போர்வையில் மறைந்து கொண்டி தேசியவாதம்), அல்ஜீரிய தேசியத்தை, கியூப, வியட்நாமிய தேசியங்களை மதிப்பதையே சர்வதேசியம் என்று நமது புரட்சிக்காரர்கள் சொல்லும்போது, எனக்கு எரிச்சலும் குழப்பமுமாகவே இருக்கிறது.

கோட்பாட்டளவிலும் சரி, நடைமுறையி­லும் சரி, செங்கொடிக்கும் மூவர்ணக் கொடிக்கும் எந்த முரண்பாடு தெரியவில்லை. தேசியப் பொதுவுடமைப் பாதையை நான் முழு மனதோடு ஏற்றுக் கொள்­கிறேன். எங்கெல்லாம் பொதுவுடமை கொஞ்­சமாவது அர்த்தமுள்ளதாக இருக்­கிறதோ அங்கெல்­லாம் அது யுகோஸ்லோ­வியாவைப் போல, சீனா, கியுபாவைப் போல, தேசியப் பொதுவுட­மையாக இருக்கிறது. தெய்பிங்குகளை முன்னோர்க­ளாக வரித்துக் கொண்ட சன்யாட்சென்-னின் வழி வந்தவராக சொல்லிக் கொண்டே மாவோ ஜப்பானியர்களை எதிர்த்து நின்றார். கியுபாவில் ஃபிடல் உருவானது ஜோஸ் மார்ட்டியின் வழித்தோன்றலாகவே. இன்றைய ஃபிரான்சில் ஒரு புரட்சியாளனாக இருப்பதன் அர்த்தம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், புரட்சிகரமான ஒரு மாபெரும் தலைவன் இங்கு உருவானால் நிச்சயம் அவன் கடந்தகால ப்ரெஞ்சு தேசிய நாயகர்க­ளின் மிகச் சிறந்த பண்­புகளையும் பாரம்பரியங்­களையும் உட்கிரகித்துக் கொண்டவனாக இருப்­பான் என்று உணர்கிறேன். வெட்டவெளிச்சமான உண்மை இது. ஆனால், பிரான்சில், தேசிய உணர்வுகள் மழுங்கிக் கொண்டிருக்கிற தந்போ­தைய சூழலில் - இந்த மேலோட்­டமான தோற்றத்­தைக் கண்டு நாம் மயங்கிவிடக் கூடாது என்றாலும் கூட 'மிகவும் அழுத்தமாக சொல்லப்பட வேண்டிய ஒரு உண்மை. ஒடுக்கும் தேசத்திற்கும் ஒடுக்கப்படும் தேசத்திற்குமி­டையிலான பண்பளவிலான வித்தியாசம் மட்டுமே இங்கு நம்மை வழிநடாத்துவதாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஒடுக்கும் தேசத்தின் தேசியப் பாரம்பரியத்திற்குள்ளேயே நமது கவனத்தைக் கோருகிற மறைக்கப்பட்ட கூறுகள், பழைய அடக்குமுறைகளின் நினைவுச் சின்னங்கள் நிறைய இருக்­கின்றன. பேட்சின் (Petsin) இங்கு நமக்குத் தேவையில்லை; ஆனால் ஜீன் மொலினின் - ஒரு உதாரணத்திற்கு, பாரம்பரியம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு புரட்சிகர கட்சி பாரம்பரியத்தையும் வரலாற்றுத் தொடர்ச்சியையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லும்போது நான் அதோடு உடன்படவே செய்கிறேன். ஆனால், எல்லாவிதமான வர்க்க சமரசங்களுக்கும் தேசப்பற்று அல்லது, தேசியக் கருத்தியலே (ideology) வசதியான ஒரு கருவியாக, எல்லா சமூக முரண்பாடுகளையும் பூசிமெழுகி விடுவதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ஒரு புனிதக் கூட்டாக அதனால் ஆதிக்கக் கருத்தியலின் மிக இயல்பான ஒரு ஊடகமாக இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். தொடர்ச்சியை சுவீகரித்துக் கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை; குறைந்தபட்சம் ஒருவர் அதை விமர்சிக்க வேண்டும்; அடித்து வளைக்க வேண்டும். சீனா, கியுபா போன்ற ஒடுக்கப்பட்ட தேசங்களில் பிரச்சினை இது போல இல்லை. ஆனால் பிரான்சில் மூவர்ணக் கொடி கம்யூனை நசுக்கிய வெர்செய்ல்சின் - முதலாளிகளின், பேரரசின் கொடியாகவும் இருந்தது. விஷயங்கள் அவ்வளவு நேராக இருப்பதில்லை. தேசப்பற்று ப்ரெஞ்சு மக்களின் அபினாகவும் இருந்திருக்கிறது; 1914-ல், 19139-ல் நிகழ்ந்தது போன்ற எல்லாவிதமான அட்டூழியங்களும் அதன் பெயராலேயே நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால், ஒருவர் என்னதான் முயற்சித்தாலும் கூட முயற்சிக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறேன் - இந்தத் தொடர்ச்சியை எந்தப் புரட்சிகர நோக்கத்திற்காகவும் சுவீகரித்துக் கொள்ளும் முயற்சி மிகவும் சிரமத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது. பிரான்சுக்கு பல பாரம்பரியங்கள் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்; இதில் எதை எடுத்துக் கொள்வது, எந்தப் பருண்மையான வழியில் இதைச் செய்வது என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும்.

நீங்கள் சொல்லும் விமர்சனப்பூர்மவான தேர்வு என்பது மிகவும் அவசியமானதுதான். அதில் சந்தேகமில்லை. வரலாற்று ரீதியாக ஒரு ஒடுக்கும் தேசத்தைக் சேர்ந்தவர்கள் என்கிற நிலைமை எழுப்பும் சிக்கலோடு இது பிணைந்திருக்கிறது. என்றாலும், தேசியத்தை அதற்குள் ஒடுக்கப்பட்டு, மறைக்கப்பட்டிருக்­கிற கூறுகளோடு சேர்த்து, ஒட்டுமொத்தமா­கவே நிராகரித்துவ விடுவது என்பது மோசமான விளைவுகளை விலைகொடுத்து வாங்கிவிடுவது போலா­கிவிடும். ஜாகோபி­யன் மீட்புவாதத்தின் (Jacobian Messianism) பால் எனக்குள்ள தனிப்பட்ட விருப்பை, சாய்வை இந்தச் சந்தர்ப்பத்தில் வெளிப்­படையாக அறிவித்துக் கொள்கிறேன். 1792இ 1848-களின் ஜாக்கோபியன்வாதம் எனக்குப் பிடித்தமானது மட்டுமல்ல, ஒரு அர்த்தத்தில் எனது இயல்பும் கூட. ஐரோப்பாவின் விடுதலைக்கு ப்ரான்ஸ் மறுபடியும் புரட்சிச் சுடரை ஏந்தும் என்று எப்போதுமே நான் நம்பி வந்திருக்கிறேன். விடுதலைப் பாதையை உறுதியாகப் பிடித்து புரட்சிகரமான ப்ரான்சின் மேலாண்மையில் கீழில்லாமல் ஐரோப்பாவிற்கு வேறு எந்த நம்பிக்கையும் எனக்குத் தோன்றவில்லை. 'போக்ருக்கு எதிரான” (anti-Boche) அந்த மொத்த புராணக் கற்பனையும் ஜெர்மனிக்­கெதிரான மத அடிப்படையில்லாத நமது பகையும் என்றாவது ஒருநாள் புரட்சியை ஏன் நமது தேசிய ஜனநாயகப் பாரம்பரியத்­தைக்கூட காப்பதற்கு நமக்கு உதவாமலா போய்விடும் என்று சிலநேரங்களில் நான் வியப்பதுண்டு. ஆனால், தயவுசெய்து மன்னியுங்கள். இதோடு ஒரு அரசியல், கோட்பாடு விவாதத்தைச் தூண்டச் செய்வதற்கான எனது இந்த முயற்சியை முடித்துக் கொள்ள அனுமதியுங்கள். எதிர்முனைகளில் நின்று கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க, பரிச்சியமானவற்றுக்கு அப்பால் போகத் துணியத் தூண்ட, செய்த முயற்சி இது. அதன் மூலம் நாம் எல்லோரும் வாழவும் சிந்திக்கவும் பழகிக் கொண்ட ஒரு அமைப்பின் உறுதியை சோதித்­துப் பார்க்க உதவுவது மார்க்சியத்தை ஒழித்துக்கட்­டுவதற்கு அல்ல, அதை உலுக்கி மீண்டு உறுதியாக்கவே இந்த முயற்சி.

New Left Review, Number : 105

http://www.dalitnet.net/2008/12/blog-post_7111.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மார்க்சீயம், சோசலிசம் என்று கிழம்பி கிடைக்க போராடும் தமிழ் ஈழத்தை தட்டி வீழ்த்தாதீர்கள். என்ன தான் சர்வதேசம் என்று அழைத்தாலும் சர்வதேசம் இப்போது தங்கி இருப்பது என்னவோ முதலாளித்துவத்தில் தான்.

எம்மில் இரண்டு மில்லியன் மக்களை அடித்து விரட்டிய ஸ்ரீ லங்காவும் சோசலிசம் தான். எமக்கு கமூயினிச சீனாவா அல்லது கியூபாவா உதவியது?

கமூயினிச ரசியாவும், சீனாவும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ஸ்ரீ லண்கவிட்கு கொடுத்து ஐ. நா. சபையில் ஸ்ரீ லண்கவை காப்பாற்ற போராடியவை.

முதலாளித்துவ மேற்கத்தைய நாடுகள் தானே உதவின? வளர்த்தன? உயர்த்திவிடுகின்றன? தமிழருக்கு ஏன் உதவும் கையை கடிக்க அத்தனை ஆவல்?

நாம் சோஷலிச நாடு வெல்ல போகிறோம் என்று மீண்டும் எம்மை தனிமை படுத்த இந்திய ரோ வுடன் இயங்கும் தமிழ் அரசியல்வாதிகள் தூண்டுவார்கள்.

எமக்கு தேவை ஒரு டெமோக்ரடிக் சன நாயக நாடே!

Link to comment
Share on other sites

குழவி அவர்களே டெமொக்கிரசி என்றால் சனனாயகம்.சனனாயகத்தின் உயரிய வடிவமே சமதர்மம்.இன்று உலகில் சமதர்ம நோக்கில் அமைந்த பொருளாதாரக் கொள்கைகளே அமெரிக்கா போன்ற நாடுகளிலும் அமுல் படுத்தப்பட்டு வருகின்றன.உதாரணத்திற்க்கு சுகாதாரம் வைத்தியம் வங்கிகள் எல்லாம் தனியார் சொத்துடமையில் இருந்து அரசிடமையாக்கப்பட்டுள்ளன.

மேலுள்ள கட்டுரையின் மையக் கருத்து சர்வதேச சோசலிசப் புரட்ச்சி என்பது இல்லாத ஒன்று, மக்களிற்க்கு இருக்கும் பிரதான பிரச்சினைகளின் அடிப்படையிலையே போராட் டங்கள் எழ முடியும்.தேசிய இனவிடுதலைப் போராட்டங்களே சோசலிசப் புரட்ச்சிகளின் அடித் தளமாகவும் இருந்து இருக்கின்றன,உதாரணத்திற்க்கு சீன கியூபப் புரட்ச்சிகள்.இந்தக் கட்டுரை மிக முக்கியமானது ஏனெனில் தம்மை மார்க்சியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பல தமிழர்கள் தேசிய இனவிடுதலையை நிரகரித்து இல்லாத சர்வதேசியக் கற்பனாவாதத்தில் மூழ்கி இருக்கின்றனர்.இந்தப் பேட்டி இவர்களை நோக்கியே மொழிபெயர்க்கப் பட்டு வெளியிடப் பட்டு இருக்கிறது. நாம் கருத்தியல் ரீதியாக தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை அனைத்துத் தரப்பினர் மத்த்தியிலும் வளர்த்து எடுப்பது அவசியம்.எமக்கு கியுபா சீனாவின் ஆதரவும் வேண்டும்.சிறிலங்கா தன்னை ஒரு முற்போக்கான நோக்குடைய நாடாகக் காட்டிக் கொண்டே மனித உரிமைகள் அமைவகத்தின் வாக்கெடுப்பில் பல நாடுகளின் வாக்கைப் பெற்றது. நாம் வெறுமனே மேற்குலகின் தயவில் நின்றால் முற்று முழுதாக அவர்களின் நலன்களுக்கு அடிபணிபவர்களாக மாற்றம் அடைவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.