Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதுவருசம்: ஒரு பொழுது உணவுக்குத் தவித்திருக்க பலகாரத்துக்கு எப்படி ஆசைப்படுவது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுவருசம்: ஒரு பொழுது உணவுக்குத் தவித்திருக்க பலகாரத்துக்கு எப்படி ஆசைப்படுவது?

14 ஏப்ரல் 2011

வழமைய நாட்களே பெரும் துக்கங்களைதான் தருகின்றன. இதனிடையில் வரும் கொண்டாட்டங்களுக்குரிய நாட்கள் அதைவிடப் பெரும் துக்கங்களை தருகின்றன. ஏனேன்றால் அந்த நாட்கள் வாழ்வையும் போராட்டங்களையும் தவிர்க்க முடியாதபடி ஞாபகத்துக்குக் கொண்டு வருகின்றன. எப்படி இருந்த வாழ்வு? எப்படி இருந்த நாங்கள்? என்ற கேள்விகளை மனமெங்கும் நிரப்புகின்றன. யாராவது வாழ்த்துச் சொல்லும்பொழுதுதான் இன்னுமின்னும் வலியெடுக்கிறது. விரக்தி நிரம்பிய ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் எது கொண்டாட்டத்திற்குரிய நாள் என்பதை எப்படியோ எல்லாம் சொல்லிக் களைத்திருக்கிறார்கள்.

இன்று சித்திரைப் புதுவருசம். சில தொலைபேசி நிறுவனங்களும் சில அரசியல் தலைவர்களும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மும்மொழிகளிலும் வாழ்த்துக்களை அனுப்புகிறார்கள். அவர்களுக்கு இந்த நாட்கள் மிகுந்த கொண்டாட்டத்திற்குரிய நாட்களாகின்றன. எல்லாவற்றையும் இழந்து ஈடுசெய்ய முடியாத நிலமையில் துயரம் மட்டுமே வாழ்வாகிய சனங்களுக்கு இந்த நாள் எல்லாவற்றையும் ஞாபகப்படுத்துகிறது. எல்லோரும் கூடி மகிழ்ந்திருந்த நாட்கள் கொண்டாட்டத்திற்குரிய நாளாகியிருந்த ஒரு சித்திரை வருட தினம் கண்ணுக்குள் நிக்கிறது.

எல்லோருமாய் வீடு முழுக்க திரிந்த அந்த நாளை நாம் தொலைததிருக்கிறோம். குழந்தைகள் பட்டாசுகளை கையில் பிடித்து பற்ற வைத்த நாளை இழந்திருக்கிறோம். பலகாரங்களை ஊட்டி ரசித்த பெற்றோர்களை குழந்தைகள் பறிகொடுத்திருக்கிறார்கள். கொண்டாட்டங்கள் என்றால் எப்பொழுதும் உறவுகள் மட்டுமே ஞாபகத்திற்கு வருவார்கள். புதிய ஆடைகளை அணிந்து அவை தொடர்பில் நிறைய கதைகள் அளக்கப்படும். உடைகள் மாற்றப்படும். வேறுவேறு உடைகள் வாங்கி அணியப்படும். உடைகள் பரிசளிக்கப்படும். குடும்பத்துக்குள்ளான கொண்டாடுவதுடன் புத்தாடைகளுடன் உறவினர்களை வரவேற்பதும் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும் பெரும் மகிழ்வான கொண்டாட்டங்களாகின்றன. ஆனால் ஈழத்து மக்கள் இன்றிருக்கிற நிலமை இந்த நடைமுறைகளை மாற்றியமைத்திருக்கின்றன.

நாம் யாரையும் பார்த்து புது வருட வாழ்த்துக்கள் (ஹப்பி நியூ இயர்) என்று உண்மையில் இலகுவாக சொல்லி விட முடியவில்லை. பலரைப் பார்த்து இந்த வார்த்தைகளை சொல்ல முடியாத கோலத்திலேயே இருக்கிறார்கள். ஈழ மக்கள்மீதான போர் முடிவுபடுத்தப்பட்டு இருபத்திரண்டு மாதங்களை கடந்த நிலையிலும் அதன் வடுக்கள் இன்னும் மறையாமல் பெருகிக் கொண்டிருக்கின்றன. இரண்டாண்டுகள் கடந்தும் எங்கள் மக்கள் இழந்த எவையையும் பெற்றுக் கொள்ளவில்லை. ஈழத்தின் ஆயுதப் போராட்டத்தை அழித்த மகிந்த ராஜபக்ஷ கொல்லப்பட்ட உயிர்களை தவிர மிகுதி எல்லாவற்றையும் தருவேன் என்று குறிப்பிட்டிருந்தார். அவரால் துரும்புகளைக்கூட கொடுக்க முடியவில்லை என்பதைத்தான் அவர் பரிசளித்திருக்கிறார்.

சிதைக்கப்பட்ட வாழ்வில் உயிரோட்டமான நிகழ்வுகள் ஏதாவது நடபெற்றால்தான் நாட்களில் மாற்றங்கள் இருக்கும். ஆனால் போரின் பிறகு ஈழத்து மக்களின் நாட்களில் எந்த மாற்றங்களும் ஏற்பட்டிருக்கவில்லை. மாறாக நாட்களோ பிரச்சினைகளால் நிறைந்து இன்னும் இன்னும் விரக்தியால் வீங்கிக் கொண்டிருக்கின்றன. நாட்களோ மக்களை விரக்திக்கும் அவலத்துக்கும் தள்ளுகின்றன. இந்த கொண்டாட்ட நாட்களை கதைப்பதற்கும் வாழ்த்துவதற்கும் முன்பாக மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகளின் ஒன்றான இருப்பிடத்தைகூட அரசால் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. மாறாக அதில் தனது அரசியல்களை ஆக்கிரமிப்புக்களை வியாபாரங்களை ஏற்றி விட்டிருக்கிறது.

தாங்களே இருக்க மூடியா வீடுகள். நிமிர முடியாத வீடுகள். நீட்டிப் படுக்க முடியாத வீடுகள். இவைகளுக்குள் எப்படி கொண்டாடுவது? எதைக் கொண்டாடுவது? மீள்குடியேற்றம் என்ற பெயரில் இறக்கிவிடப்பட்டு வருடக் கணக்கில் கடந்த பிறகும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு நிமிடங்களையும் கடக்கப் பெரும் அவஸ்தையை அனுபவிக்கும் வீடுகளில் இந்தக் கொண்டாட்டம் ஒரு குறைச்சல்தானா? என்ற கேள்விதான் எழுதுகின்றது.

பலகாரங்களைப் பற்றிக் கதைக்கிறோம். அன்றாட உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் அல்லாடுகிறார்கள். கடந்த சில மாதத்துடன் வன்னி மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் புதுவருடத்தின் அரசின் செய்தியாக இதைத்தான் பகிர வேண்டும். ஒரு நேர உணவுக்குப் போராடும் நிலையில் பலகாரத்தைப் பற்றி எப்படி கதைப்பது? ஆசைவருமா? வன்னியில் வறண்ட பகுதிகளில் வாழும் மக்களின் நிலமை இன்னும் துயரமானது. கணவனை இழந்து, உழைப்பில்லாமல், முதலீடுகளை இழந்து, சொத்துக்களை இழந்து இருக்கும் மக்கள் நிவாரணத்தை நம்பியிருந்தார்கள். ஒரு பொழுது உணவுக்கு தவிக்கையில் பலகாரத்தைப் பற்றி எப்படி பேசுவது?

கொண்டாட்டங்களுக்குரிய சூழலையும் அரசு மறுத்திருக்கிறது. தமிழர் தாயகமெங்கும் துப்பாக்கி ஏந்திய இராணுவங்கள் பாதுகாப்பு என்ற பெயரில் அச்சுறுத்தியபடி நிற்கின்றன. வருசத்திற்காக வெடிக்கும் பட்டாசுகள் இராணுவத்தின் துப்பாக்கிளில் எதிரரொலிக்கிறது. சத்தங்களுக்கு அஞ்சி வாழ்ந்த வாழ்வில் பட்டாசுகள் பயமுறுத்துகின்றன. துப்பாக்கிகளை ஞாபகப்படுத்துகின்றன. வீட்டுக்கு வீடு முகாங்களும் சந்திக்கு சந்தி முகாங்களும் நிறைந்திருக்கும் சூழலில் எப்படி வாழ்வது? எதைக் கொண்டாடுவது?

இப்படி நிலமையில் படைகள் சித்திரைப்புதுவருடத்தை கொண்டடும்படி நிர்பந்திக்கின்றன. இசை விழாக்களையும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தும்படி நிர்பந்திக்கின்றன. இன்றைய தினம் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் இசை நிகழ்வு நடக்க இருக்கிறது. தெற்கிலிருந்து வரவழைக்கப்பட்டு அரைகுரை ஆடைகளுடன் நடனத்துடன் இசை விழா நடக்கப்போகிறது. கிராமங்களில் இருந்து படைகளினால் மக்கள் கொண்டு வரப்பட இருக்கிறார்கள். அரசின் பிரசாரம் கலந்த இசைவிழாவில் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் எந்தப் பிரச்சினைகளுமில்லாத நிலையில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று வெளிக்காட்டப்பட இருக்கிறது.

கொண்டு வரப்படும் மக்களின் உறவுகள் எத்தனை பேர் முகாங்களிலும் சிறைகளிலும் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் யுத்தத்தில் உறவுகளை இழந்திருக்கிறார்கள்? அங்கங்களை இழந்திருக்கிறார்கள்? அவர்கள் இந்த நாட்களை கொண்டாடும் மனநிலையில் இருக்கிறார்களா? அவர்களின் வாழ்க்கையில் என்ன முன்னேற்றங்கள் நிகழ்ந்தன? எதுவும் கண் கொண்டு பார்க்கப்படாமல் அவலமும் விரக்தியும் தொடர்ந்து தங்கள் அரசியலுக்கு பயன்படுத்தப்படுகிறது. சிங்கள தமிழ் புத்தாண்டு என்ற பெயரில் தமக்கு கொண்டாட்டத்திற்குரிய நாளாக இன்றைய நாள் விளங்குவதால் தமிழர்களையும் அதை கொண்டாட நிர்பந்திக்கப்படுகிறது.

இராணுவ வெற்றிகளையும் அரசியல் வெற்றிகளையும் பெற்று தமிழர்களை தோற்கடித்து தமிழர்களின் மண்ணில் கொடும் ஆட்சியை அரங்கேற்றி எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் தப்பித்து ஏமாற்றி அரசாட்சி நடத்துகிற இலங்கை அரசாங்கத்திற்கும், அவர்கள் புகழ்பாடும் நம்மவர்க்கும் அதனை ருசிக்கிற அவர்தம் பரிவாரங்களுக்கும் இந்த நாள் கொண்டாட்டத்திற்குரிய நாளாகிறது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக வன்னியிலிருந்து குமரா

  • கருத்துக்கள உறவுகள்

புதுவருசம்: ஒரு பொழுது உணவுக்குத் தவித்திருக்க பலகாரத்துக்கு எப்படி ஆசைப்படுவது?

14 ஏப்ரல் 2011 குளோபல் தமிழ் செய்திகளுக்காக வன்னியிலிருந்து குமரா

வழமைய நாட்களே பெரும் துக்கங்களைதான் தருகின்றன. இதனிடையில் வரும் கொண்டாட்டங்களுக்குரிய நாட்கள் அதைவிடப் பெரும் துக்கங்களை தருகின்றன. ஏனேன்றால் அந்த நாட்கள் வாழ்வையும் போராட்டங்களையும் தவிர்க்க முடியாதபடி ஞாபகத்துக்குக் கொண்டு வருகின்றன. எப்படி இருந்த வாழ்வு? எப்படி இருந்த நாங்கள்? என்ற கேள்விகளை மனமெங்கும் நிரப்புகின்றன. யாராவது வாழ்த்துச் சொல்லும்பொழுதுதான் இன்னுமின்னும் வலியெடுக்கிறது. விரக்தி நிரம்பிய ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் எது கொண்டாட்டத்திற்குரிய நாள் என்பதை எப்படியோ எல்லாம் சொல்லிக் களைத்திருக்கிறார்கள்.

இன்று சித்திரைப் புதுவருசம். சில தொலைபேசி நிறுவனங்களும் சில அரசியல் தலைவர்களும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மும்மொழிகளிலும் வாழ்த்துக்களை அனுப்புகிறார்கள். அவர்களுக்கு இந்த நாட்கள் மிகுந்த கொண்டாட்டத்திற்குரிய நாட்களாகின்றன. எல்லாவற்றையும் இழந்து ஈடுசெய்ய முடியாத நிலமையில் துயரம் மட்டுமே வாழ்வாகிய சனங்களுக்கு இந்த நாள் எல்லாவற்றையும் ஞாபகப்படுத்துகிறது. எல்லோரும் கூடி மகிழ்ந்திருந்த நாட்கள் கொண்டாட்டத்திற்குரிய நாளாகியிருந்த ஒரு சித்திரை வருட தினம் கண்ணுக்குள் நிக்கிறது.

எல்லோருமாய் வீடு முழுக்க திரிந்த அந்த நாளை நாம் தொலைததிருக்கிறோம். குழந்தைகள் பட்டாசுகளை கையில் பிடித்து பற்ற வைத்த நாளை இழந்திருக்கிறோம். பலகாரங்களை ஊட்டி ரசித்த பெற்றோர்களை குழந்தைகள் பறிகொடுத்திருக்கிறார்கள். கொண்டாட்டங்கள் என்றால் எப்பொழுதும் உறவுகள் மட்டுமே ஞாபகத்திற்கு வருவார்கள். புதிய ஆடைகளை அணிந்து அவை தொடர்பில் நிறைய கதைகள் அளக்கப்படும். உடைகள் மாற்றப்படும். வேறுவேறு உடைகள் வாங்கி அணியப்படும். உடைகள் பரிசளிக்கப்படும். குடும்பத்துக்குள்ளான கொண்டாடுவதுடன் புத்தாடைகளுடன் உறவினர்களை வரவேற்பதும் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும் பெரும் மகிழ்வான கொண்டாட்டங்களாகின்றன. ஆனால் ஈழத்து மக்கள் இன்றிருக்கிற நிலமை இந்த நடைமுறைகளை மாற்றியமைத்திருக்கின்றன.

நாம் யாரையும் பார்த்து புது வருட வாழ்த்துக்கள் (ஹப்பி நியூ இயர்) என்று உண்மையில் இலகுவாக சொல்லி விட முடியவில்லை. பலரைப் பார்த்து இந்த வார்த்தைகளை சொல்ல முடியாத கோலத்திலேயே இருக்கிறார்கள். ஈழ மக்கள்மீதான போர் முடிவுபடுத்தப்பட்டு இருபத்திரண்டு மாதங்களை கடந்த நிலையிலும் அதன் வடுக்கள் இன்னும் மறையாமல் பெருகிக் கொண்டிருக்கின்றன. இரண்டாண்டுகள் கடந்தும் எங்கள் மக்கள் இழந்த எவையையும் பெற்றுக் கொள்ளவில்லை. ஈழத்தின் ஆயுதப் போராட்டத்தை அழித்த மகிந்த ராஜபக்ஷ கொல்லப்பட்ட உயிர்களை தவிர மிகுதி எல்லாவற்றையும் தருவேன் என்று குறிப்பிட்டிருந்தார். அவரால் துரும்புகளைக்கூட கொடுக்க முடியவில்லை என்பதைத்தான் அவர் பரிசளித்திருக்கிறார்.

சிதைக்கப்பட்ட வாழ்வில் உயிரோட்டமான நிகழ்வுகள் ஏதாவது நடபெற்றால்தான் நாட்களில் மாற்றங்கள் இருக்கும். ஆனால் போரின் பிறகு ஈழத்து மக்களின் நாட்களில் எந்த மாற்றங்களும் ஏற்பட்டிருக்கவில்லை. மாறாக நாட்களோ பிரச்சினைகளால் நிறைந்து இன்னும் இன்னும் விரக்தியால் வீங்கிக் கொண்டிருக்கின்றன. நாட்களோ மக்களை விரக்திக்கும் அவலத்துக்கும் தள்ளுகின்றன. இந்த கொண்டாட்ட நாட்களை கதைப்பதற்கும் வாழ்த்துவதற்கும் முன்பாக மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகளின் ஒன்றான இருப்பிடத்தைகூட அரசால் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. மாறாக அதில் தனது அரசியல்களை ஆக்கிரமிப்புக்களை வியாபாரங்களை ஏற்றி விட்டிருக்கிறது.

தாங்களே இருக்க மூடியா வீடுகள். நிமிர முடியாத வீடுகள். நீட்டிப் படுக்க முடியாத வீடுகள். இவைகளுக்குள் எப்படி கொண்டாடுவது? எதைக் கொண்டாடுவது? மீள்குடியேற்றம் என்ற பெயரில் இறக்கிவிடப்பட்டு வருடக் கணக்கில் கடந்த பிறகும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு நிமிடங்களையும் கடக்கப் பெரும் அவஸ்தையை அனுபவிக்கும் வீடுகளில் இந்தக் கொண்டாட்டம் ஒரு குறைச்சல்தானா? என்ற கேள்விதான் எழுதுகின்றது.

பலகாரங்களைப் பற்றிக் கதைக்கிறோம். அன்றாட உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் அல்லாடுகிறார்கள். கடந்த சில மாதத்துடன் வன்னி மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் புதுவருடத்தின் அரசின் செய்தியாக இதைத்தான் பகிர வேண்டும். ஒரு நேர உணவுக்குப் போராடும் நிலையில் பலகாரத்தைப் பற்றி எப்படி கதைப்பது? ஆசைவருமா? வன்னியில் வறண்ட பகுதிகளில் வாழும் மக்களின் நிலமை இன்னும் துயரமானது. கணவனை இழந்து, உழைப்பில்லாமல், முதலீடுகளை இழந்து, சொத்துக்களை இழந்து இருக்கும் மக்கள் நிவாரணத்தை நம்பியிருந்தார்கள். ஒரு பொழுது உணவுக்கு தவிக்கையில் பலகாரத்தைப் பற்றி எப்படி பேசுவது?

கொண்டாட்டங்களுக்குரிய சூழலையும் அரசு மறுத்திருக்கிறது. தமிழர் தாயகமெங்கும் துப்பாக்கி ஏந்திய இராணுவங்கள் பாதுகாப்பு என்ற பெயரில் அச்சுறுத்தியபடி நிற்கின்றன. வருசத்திற்காக வெடிக்கும் பட்டாசுகள் இராணுவத்தின் துப்பாக்கிளில் எதிரரொலிக்கிறது. சத்தங்களுக்கு அஞ்சி வாழ்ந்த வாழ்வில் பட்டாசுகள் பயமுறுத்துகின்றன. துப்பாக்கிகளை ஞாபகப்படுத்துகின்றன. வீட்டுக்கு வீடு முகாங்களும் சந்திக்கு சந்தி முகாங்களும் நிறைந்திருக்கும் சூழலில் எப்படி வாழ்வது? எதைக் கொண்டாடுவது?

இப்படி நிலமையில் படைகள் சித்திரைப்புதுவருடத்தை கொண்டடும்படி நிர்பந்திக்கின்றன. இசை விழாக்களையும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தும்படி நிர்பந்திக்கின்றன. இன்றைய தினம் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் இசை நிகழ்வு நடக்க இருக்கிறது. தெற்கிலிருந்து வரவழைக்கப்பட்டு அரைகுரை ஆடைகளுடன் நடனத்துடன் இசை விழா நடக்கப்போகிறது. கிராமங்களில் இருந்து படைகளினால் மக்கள் கொண்டு வரப்பட இருக்கிறார்கள். அரசின் பிரசாரம் கலந்த இசைவிழாவில் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் எந்தப் பிரச்சினைகளுமில்லாத நிலையில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று வெளிக்காட்டப்பட இருக்கிறது.

கொண்டு வரப்படும் மக்களின் உறவுகள் எத்தனை பேர் முகாங்களிலும் சிறைகளிலும் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் யுத்தத்தில் உறவுகளை இழந்திருக்கிறார்கள்? அங்கங்களை இழந்திருக்கிறார்கள்? அவர்கள் இந்த நாட்களை கொண்டாடும் மனநிலையில் இருக்கிறார்களா? அவர்களின் வாழ்க்கையில் என்ன முன்னேற்றங்கள் நிகழ்ந்தன? எதுவும் கண் கொண்டு பார்க்கப்படாமல் அவலமும் விரக்தியும் தொடர்ந்து தங்கள் அரசியலுக்கு பயன்படுத்தப்படுகிறது. சிங்கள தமிழ் புத்தாண்டு என்ற பெயரில் தமக்கு கொண்டாட்டத்திற்குரிய நாளாக இன்றைய நாள் விளங்குவதால் தமிழர்களையும் அதை கொண்டாட நிர்பந்திக்கப்படுகிறது.

இராணுவ வெற்றிகளையும் அரசியல் வெற்றிகளையும் பெற்று தமிழர்களை தோற்கடித்து தமிழர்களின் மண்ணில் கொடும் ஆட்சியை அரங்கேற்றி எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் தப்பித்து ஏமாற்றி அரசாட்சி நடத்துகிற இலங்கை அரசாங்கத்திற்கும், அவர்கள் புகழ்பாடும் நம்மவர்க்கும் அதனை ருசிக்கிற அவர்தம் பரிவாரங்களுக்கும் இந்த நாள் கொண்டாட்டத்திற்குரிய நாளாகிறது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக வன்னியிலிருந்து குமரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.