Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மாடே மனிசனைக் கேவலமாகப் பார்க்கிறது" - சீமான் தடாலடி பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"மாடே மனிசனைக் கேவலமாகப் பார்க்கிறது" - சீமான் தடாலடி பேட்டி

‘‘காங்கிரஸை கருவறுப்போம்’’ என்ற ஒற்றை முழக்கத்துடன் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்து திரும்பியிருக்கிறார் சீமான். “ராமேஸ்வரத்தில் காணாமல் போன நான்கு மீனவர்களில் இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. ‘இனிமேல் தமிழக மீனவர்களை சுடமாட்டோம்’ என்ற வாக்கு றுதியை ராஜபக்ஷே காப்பாற்றி விட்டார். இந்தமுறை நம் மீனவர்களை சுடாமல் அடித்தே கொன்றிருக்கிறான். இறந்த மீனவர்களுக்காக சீமான் நியாயம் கேட்டால் தேசத் துரோகி என்பார்கள்’’ என்று கொதித்தவரை ஆசுவாசப்படுத்தி சட்டமன்றத் தேர்தல் பிரசாரப் பயணம் பற்றிக் கேட்டோம்.

“காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அவர்களின் கோரமுகத்தை அம்பலப்படுத்துவதுதான் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் இலக்கு. நான் பிரபலமான திரைக்கலைஞனோ, அரசியல் பாரம்பரியம் கொண்டவனோ இல்லை. இருந்தும் நான் சென்ற இடங்களில் எல்லாம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் வெயிலில் 3 மணியிலிருந்து 5 மணிநேரம் கால் கடுக்க நின்றபடி, என் பேச்சைக் கேட்டார்கள். காங்கிரஸ் உதவியால் ஈழத்தில் அரங்கேறிய அவலத்தைப் பேசும்போது மக்கள் க ண்ணீர் விட்டு அழுததைப் பார்த்தேன்.’’

‘உங்கள் தங்கையை எதிர்த்து பரப்புரை செய்ய வேண்டாம்’ என்று கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உங்களிடம் கேட்டதாக சொல்கிறார்களே?

“சமூக அக்கறை இருப்பவர்கள் யாராவது காங்கிரஸில் இருக்க முடியுமா? என் தங்கை ஜோதி நல்லவளாக இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சி தமிழின எதிரி. தமிழர்களைக் கொன்றொழிக்கத் துணை போன ராகுல் காந்தியின் நேரடிப் பரிந்துரையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஜோதி. நாம் தமிழர் இயக்கத்தினரிடம் ‘அ ண்ணன் சீமான் என்னை எதிர்த்துப் பரப்புரை செய்ய மாட்டார்’ என்று ஜோதி சொல்லி இருக்கிறார். காங்கிரஸில் இருந்து ஜோதி வெளியேறினால் அவரது வெற்றிக்காக இப்போதே பரப்புரை செய்யத் தயார் என்று கரூரில் நடந்த பரப்புரைக் கூட்டத்திலேயே அறிவித்தேன்.’’

அப்படியென்றால், காங்கிரஸில் நல்ல வேட்பாளர்களே இல்லையா?

“நல்லவர்களுக்கு அங்கே என்ன வேலை? காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் எனக்கு நன்கு அறிமுகமானவர். இருப்பினும், அவரது தொகுதியிலும் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்தேன். எந்த இடத்திலும் வேட்பாளர்களைத் தாக்கி நான் பேசவில்லை. ராஜபக்ஷேவின் சிபாரிசில் ராமேஸ்வரம் தொகுதியில் போட்டியிடும் ஹசன் அலி மட்டும் இதற்கு விதிவிலக்கு.’’

தேர்தல் அறிக்கையின் இலவச அறிவிப்புகளுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இருக்கத்தானே செய்கிறது?

“அய்யாவின் ‘கதாநாயகி’ தேர்தல் அறிக்கையையும் அம்மாவின் ‘கதாநாயகன்’ தேர்தல் அறிக்கையையும் ஒன்றாக ஆடவிட்டுப் பார்க்க வேண்டியதுதான் பாக்கி. கருணாநிதி மிக்ஸி அல்லது கிரைண்டர் தருகிறோம் என்றார். ஜெயலலிதா மிக்ஸி, கிரைண்டர் இரண்டும் தருகிறோம் என்றதும் கருணாநிதியின் அறிவிப்பு எடுபடாமல் போய்விட்டது. இலவசங்களைக் கொடுத்து மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கப் பார்க்கிறார்கள். என்னுடைய பேச்சால் திராவிட இயக்கங்களின் இலவசத் திட்டங்கள் தவிடுபொடியாகி வி ட்டன.’’

‘ஐந்தாண்டு ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்கிறோம்’ என்று கருணாநிதி சொல்லியிருக்கிறாரே?

“ஏறத்தாழ தமிழகம் முழுவதும் பயணம் செய்துவிட்டேன். எந்த ஊருக்கும் ஒழுங்கான சாலைகள் இல்லை. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி. மாட்டுக்குப் போடும் தவிடு கிலோ 24 ரூபாய். இப்போது மாடே மனுஷனை கேவலமாகப் பார்க்கிறது. தி.மு.க. அமைச்சர்கள் காய்ச்சல் வந்தாலே அப்பல்லோவில் போய் படுத்துக் கொள்கிறார்கள். சாமானியன் செல்லும் அரசு மருத்துவமனைகளின் நிலை என்ன? அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம், கல்வி மற்றும் தடையில்லா மின்சாரம் தர முடிந்ததா க ருணாநிதியால்?

மதவாதக் கட்சி என்று சொல்லப்படும் பா.ஜ. ஆளும் குஜராத்தில் தடையில்லா மின்சாரமும், ஊழல் இல்லா நிர்வாகமும் கிடைக்கிறது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இலவசங்களை அறிவித்து மக்களை பிச்சைக்காரர் ஆக்கவில்லை. மோடி அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருக்கிறார்.’’

காங்கிரஸைத் தோற்கடிக்க அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடச் சொன்னீர்கள். ஆனால், அ.தி.மு.க. தலைமை கடைசி வரை உங்களை கண்டு கொள்ளவில்லையே?

“நான் அவர்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸுக்கு எதிராக இரட்டை இலை, முரசு, சுத்தியல் அரிவாள் எது இருந்தாலும் ஆதரித்தேன். எங்கேயும் நான் ஜெயலலிதாவுக்கோ, அ.தி.மு.க.வுக்கோ ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கவில்லை.’’

காங்கிரஸ் மீது அப்படியென்ன கோபம்?

“ஈழத்தில் எம் இனம் அழிக்கப் பட்டிருக்கிறது. அதற்குத் துணை போனது இந்த காங்கிரஸ். எய்ட்ஸ் நோயாளிகளை வைத்து இன்றைக்கு ஈழத்தில் தமிழ்ப் பெண்கள், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். டப்ளின் தீர்ப்பாயம் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளி என்கிறது. லண்டனுக்குள் ராஜபக்ஷே நுழையமுடியவில்லை. இந் தியா மட்டும் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக இருக்கிறது.

காவிரி மற்றும் முல்லைப் பெரியாறில் தமிழருக்கு உள்ள உரிமைக்குக் குரல் கொடுத்தால் கர்நாடகா, கேரளாவில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று காங்கிரஸ் நினைக்கிறது. தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை தாரை வார்த்ததும் காங்கிரஸ்தான்.’’

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை எப்படி இருக்கிறது?

“மிகச் சிறப்பாக இருக்கிறது. அதிகாரிகள் அமுதா, சகாயம், உமாசங்கர்

ஆகிய மூன்று பேரின் நேர்மையைக் கூட கருணாநிதியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இந் தியா மீது நெருக்கடி நிலையைத் திணித்த காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டே, தமிழகத்தில் எமர்ஜென்ஸி நிலை இருப்பதாகப் புலம்புகிறார். ஈழத்தில் போர் நடந் தபோது, அதை நிறுத்த வலியுறுத்தி நடந்த போராட்டங்களை கருணாநிதி அடக்கவில்லையா?’’

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது?

‘‘தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவும் நிச்சயம் காங்கிரஸுக்கு எதிராக இருக்கும். காங்கிரஸைப் புறக்கணிப்பதில் பீகார் மக்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள் என்பதை நிரூபிப்பார்கள்’’ என்று முடித்துக் கொண்டார், சீமான்.

படம்: கணேஷ்

வேலு.வெற்றிவேல்

-குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.