Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடைதலை கோத்தாபயவும், ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்: நிபுணர் குழு அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sunday, 24 April 2011 12:36

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடைதலை கோத்தாபயவும், ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்: நிபுணர் குழு அறிக்கை

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடைவது குறித்து பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் அதன் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனின் தலைமையில் சரணடையத் தயாராக இருப்பதாக சர்வதேச நாடுகள் மற்றும் முக்கிய அமைப்புகளுக்கு அறியப்படுத்தப்பட்டிருந்தது.

ஐக்கிய அமெரிக்கா, நோர்வே, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன அவற்றில் முக்கியமானவையாகும்.

பிரஸ்தாப சரணடைதல் விவகாரம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர்களும் அதனை ஏற்றுக கொண்டிருந்தனர் என்று நிபுணர் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆயினும் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களின் பிரகாரம் சரணடையச் சென்றிருந்த போதிலும் அவர்கள் போர்க்களத்தில் நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அவர்களின் சரணடைதல் விவகாரம் வெற்றியடைந்திருக்கும் பட்சத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் சரணடையத் தயாராக இருந்ததாகவும் நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

ஆயினும் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களின் படுகொலைகள் தொடர்பில் போதுமான சாட்சியங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும் நிபுணர் குழு தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

sankathi.com

Sunday, 24 April 2011 12:36

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடைதலை கோத்தாபயவும், ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்: நிபுணர் குழு அறிக்கை

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடைவது குறித்து பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் அதன் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனின் தலைமையில் சரணடையத் தயாராக இருப்பதாக சர்வதேச நாடுகள் மற்றும் முக்கிய அமைப்புகளுக்கு அறியப்படுத்தப்பட்டிருந்தது.

ஐக்கிய அமெரிக்கா, நோர்வே, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன அவற்றில் முக்கியமானவையாகும்.

பிரஸ்தாப சரணடைதல் விவகாரம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர்களும் அதனை ஏற்றுக கொண்டிருந்தனர் என்று நிபுணர் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆயினும் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களின் பிரகாரம் சரணடையச் சென்றிருந்த போதிலும் அவர்கள் போர்க்களத்தில் நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அவர்களின் சரணடைதல் விவகாரம் வெற்றியடைந்திருக்கும் பட்சத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் சரணடையத் தயாராக இருந்ததாகவும் நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

ஆயினும் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களின் படுகொலைகள் தொடர்பில் போதுமான சாட்சியங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும் நிபுணர் குழு தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

sankathi.com

"அவர்களின் சரணடைதல் விவகாரம் வெற்றியடைந்திருக்கும் பட்சத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் சரணடையத் தயாராக இருந்ததாகவும் நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது."

ஒவ்வொரு கரும் புலியை அனுப்பும் போதும் நீங்கள் முன்னாள் போங்கள் நான் பினால் வருகிறேன் என்று கூறிய

அந்த தலைவன் சரணடைய தயரகவிருந்ததாக கூறுவது நம்பமுடியாதது. அந்த முற்றுகைக்குள் தலைவர் இறுதிவரை இருக்கவில்லை.

தலைவர் மன்னார் சண்டை ஆரம்பித்த நாட்களிலேயே அவரது பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டது. இறுதிவரை முற்றுகைக்குள் முடங்கியிருக்க தலைவர் ஒன்றும் முட்டாள் இல்லை. அனால் புலிகள் இறுதி கணம் வரை தலைவர் முற்றுகைக்குள் இருந்து போரை வழி

நடத்துவதாகவே உலகம் முழுவதும் தெரிவித்து வந்தார்கள். எனவே அந்த முதல் கட்ட சரணடைதல் வெற்றியளிக்கும் பட்சத்தில் தலைவரும் சரணடைய தயார் என்று கூறியிருப்பார்கள். தலைவர் உள்ளே இருப்பதாக முழுமையாக நம்பிய மஹிந்த கூட்டம்

பேயாட்டம் ஆடி மக்களை கொன்று குவித்து தலைவரை என்ன விலை கொடுத்தேனும் அழித்துவிட வேண்டும் என்று விட பிடியாக நின்றார்கள்.

புலிகள் வைத்த அந்த போர் குற்ற பொறிக்குள் மஹிந்த கூட்டம் தம்மை அறியாமலேயே விழுந்து விட்டது. இப்போது தெளிவாக புரிகிறது ஏன் புலிகள் இறுதிவரை தலைவர் முற்றுகைக்குள் இருப்பதாக எல்லோரையும் நம்ப வைத்தார்கள் என்று. தலைவரின் குடும்ப புகை பட அல்பம் தலைவர் பாவித்த பொருட்கள் எல்லாவற்றையும் ராணுவம் கைப்பற்றுமாறு விட்டு சென்றார்கள். புலித்தேவனை பி பி சி தொலைபேசி ஊடாக போரின் இறுதி நாட்களில் செவ்வி கண்ட போது தலைவர் எங்கே என கேட்ட போது அவர் எம்முடன் நின்று போரை வழிநடத்துவதாக சொன்னார். நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள் என கேட்ட போது முல்லைத்தீவு கடற்கரையில் இருப்பதாக கூறினார்.

தலைவர் எங்கே தற்போது இருக்கிறார் என அவர்கள் மீண்டும் கேட்ட போது " எனக்கு அருகில் தான் இருக்கிறார்" என்று கூறினார். அதை யார் நம்பினார்களோ தெரியாது அனால் முட்டாள் சிங்களவன் நம்பி விட்டான்.

Edited by seeman

O

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்த யோகி படையினரால் கொண்டு செல்லப்பட்டதை கண்டேன்: மனைவி சாட்சியம்

Thursday, November 11, 2010, 18:29

சிறீலங்கா, தமிழீழம்40 views

Add a commentவன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது படைத் தரப்பினரிடம் சரணடைந்த தனது கணவர் யோகரத்தினம் யோகி படையினரால் பேருந்து ஒன்றில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டதாக அவரது துணைவி ஜெயவதனி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக தாமதமாக ஆரம்பமாகிய இந்த அமர்வு அரியாலை சன சமூக நிலையத்தில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகியது.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் இந்த அமர்வின் போது சாட்சியம் அளித்த யோகரட்ணம் யோகியின் துணைவி ஜெயவதனி, கடந்த வருடம் மே மாதம் 18ஆம் திகதி வட்டுவாகலில் வைத்து தனது கணவருடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐம்பதுக்கும் மேற்பட்ட போராளிகள் படையினரால் பேருந்து ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாக கூறியுள்ளார்.

அத்துடன், தனது கணவருடன், புதுவை இரத்தினதுரை, பேபி சுப்பிரமணியம் மற்றும் லோரன்ஸ் திலகர் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர்களும் படைத்தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்டதாக ஜெயவதினி உறுதிப்படுத்தியுள்ளார்.

வன்னி இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளின் போராளிகள் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என படைத்தரப்பு அறிவித்ததைத் தொடாந்து, ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின் படி தனது கணவர் படைத்தரப்பினரிடம் சரணடைந்ததாக ஜெயவதினி உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

ஆனால், இது வரை தனது கணவர் குறித்த எந்தச் செய்திகளையும் தன்னால் அறிந்து கொள்ள முடியவில்லை என அவர் உருக்கத்துடன் உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார்.

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் மனைவியும் இன்று சாட்சியமளித்தார். தனது கணவரின் உடல் நிலையையும் வயதையும் கருத்திற்கொண்டு அவரை விடுவிக்குமாறு அவர் ஆணைக்குழுவைக் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகரான க,வே.பாலகுமாரும், யோகரட்னம் யோகியும் வன்னி இறுதிகட்டப் போரின் போது கொல்லப்பட்டு விட்டதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர இவ்வருட நடுப்பகுதியில் தெரிவித்திருந்ததும், இரு தினங்களின் பின்னர் அவர்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அதனை மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilthai.com/?p=4789

புதினப்பலகை

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பாலகுமாரன், யோகி படுகொலை - உறுதிப்படுத்துகிறார் சிறிலங்கா அமைச்சர்

[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 03:26 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினர் யோகரட்ணம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அமைச்சர் டியூ.குணசேகர இதனை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான க.வே. பாலகுமாரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமராய்வுப் பொறுப்பாளராக இருந்தவருமான யோகி ஆகியோர் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்திருந்தனர்.

அவர்கள் கொழும்பில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கடந்த ஆண்டு கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் பின்னர் அவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்தநிலையிலேயே இவர்கள் வன்னி இறுதிப்போரின் போது கடந்த ஆண்டு கொல்லப்பட்டு விட்டதாகக் கூறியிருக்கிறார் சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மீளமைப்பு, புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர.

போரினால் கணவனை இழந்தவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு அவசரத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் கொழும்பு ஆங்கில நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

வவுனியா,யாழ்ப்பாணம். கிளிநொச்சிப் பகுதிகளில் போரினால் கணவனை இழந்த பெண்களைச் சந்தித்த பின்னரே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

அவர் அந்தப் நாளிதழுக்கு மேலும் கருத்து வெளியிடுகையில், தான் சந்தித்த கணவனை இழந்த பெண்களுள் க.வே. பாலகுமாரனின் மனைவி மற்றும் யோகரட்ணம் யோகியின் மனைவியும் உள்ளடங்கியிருந்தனர் என்று கூறியிருக்கிறார்.

பாலகுமாரன் கடந்த ஆண்டு வன்னி கிழக்கில் நடந்த போரின் போது கொல்லப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் யோகியின் மனைவியை கணவனை இழந்தவர் என்று கூறியுள்ள அமைச்சர் டியூ.குணசேகர அவர் எங்கே, எப்போது கொல்லப்பட்டார் என்ற தகவலை வெளியிடவி்ல்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கணவனை இழந்தோர் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள அமைச்சர் டியூ. குணசேகர, கடந்த ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் இதுபற்றி அரசாங்க அதிகாரிகளும் சரி உதவி நிறுவனங்களும் சரி காலத்துக்குக் காலம் வெவ்வேறு புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்தவாரம் வடக்கில் போரினால் கணவனை இழந்த பெண்களைச் சந்திப்பதற்கு முன்னர் தமது அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டது என்றும், இதற்கு 8000 பெண்களிடம் இருந்து பதில் கிடைத்ததாகவும் கூறிய அவர், இவர்களில் 98 வீதமானோர் இளம் கணவனை இழந்தோர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்தே கடந்த 10ம் திகதி யாழ்ப்பாணத்திலும், 11ம் திகதி கிளிநொச்சியிலும், 12ம் திகதி வவுனியாவிலும் அவர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

”போரினால் கணவனை பெண்களுக்கு ஐ.நாவிடம் இருந்து உதவிகளைப் பெறுவது தொடர்பாக விமல் வீரவன்சவின் உண்ணாநிலைக்கு முன்னதாக கொழும்புக்கான ஐ. நா வதிவிடப் பிரதிநிதி நீல் புனேயுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

ஆனால் ஐ.நாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் தோன்றிய இழுபறிகளால் இந்த உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.” என்றும் அமைச்சர் டியூ.குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.