Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலத்தை கொள்ளையடிக்கும் புத்தியோடு படையெடுக்கும் புத்தர்சிலைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிலத்தை கொள்ளையடிக்கும் புத்தியோடு படையெடுக்கும் புத்தர்சிலைகள்

25 ஏப்ரல் 2011

காணிகளில் விகாரை கட்ட அனுமதித்தால் ஆறு லட்சம் ரூபாவை வீடமைக்க வழங்குவோம் என்று தமிழ் பௌத்த சங்கம் என்று உருவாக்கப்பட்ட அமைப்பு தெரிவித்த கருத்து தமிழ் மக்களை பெரும் அச்சத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. நிலக்கொள்ளையில் இப்படி வெளிப்படையான அறிவிப்பை விடுத்திருக்கும் பௌத்த சங்கம் தமிழர்களின் நிலத்தின்மீது எதை விதைக்க விரும்புகிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. யுத்தத்தால் நொந்து போயிருக்கிற ஈழத்து மக்களை இப்படியும் ஏமாற்றலாம் என்றும் இப்படியும் அவர்களின் நிலத்தை கொள்ளையடிக்கலாம் என்றம் பௌத்த சங்கம் என்று உருவாகியுள்ள அமைப்பு நம்புகிற அளவில் ஈழத்து தமிழர்களின் நிலமை இருக்கிறது என்பதுதான் மிகவும் அவலமானது.

யாழ்ப்பாண நாக விகாரையும் இராணுவத்தினரும் அனுசரனையாளர்களாகச் செயற்படும் இந்தத் திட்டத்தில் தமிழர்களின் நிலம் நீண்டகால நோக்கில் குறி வைக்கப்பட்ருக்கிறது. தமிழர்களின் பூமியை சிங்கள பூமியாக்குவதற்கான பொளத்த சிங்கள இராணுவ மனோநிலைத்தன்மையே இப்படி தமிழர்களின் அவல நிலையை சாதகமாக்கி தங்கள் திட்டங்களை விதைக்கப்பாக்கிற எண்ணத்தை நடைமுறைக்கு கொண்டு வர முயல்கின்றன. இந்தச் செய்தி யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்றில் இடம்பெற்றதைக் கண்ட மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். ஒட்டு மொத்த ஈழத்து மக்களும் விழிப்படைய வேண்டிய அவசியமான நிலையிருக்கிறார்கள். வாழ வேண்டிய நிலத்துக்கு ஆபத்து ஏற்பட்ட காலத்தில் ஈழத்து மக்கள் இந்த விடயத்தைப் பற்றி அதிகமதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் மக்களின் நிலங்கள் அதற்கேயுரிய அடையாளத்துடன் இருப்பது இலங்கை அரசிற்கும் அதன் இராணுவத்திற்கும் பெரும் பிரச்சினையாக உள்ளது. யுத்தத்தால் நிலத்தை முற்றுகையிட்டு முகாங்களை அமைத்து குடியமர்ந்துள்ள இராணுவத்தினர் அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்கிற வற்புறுத்தல்களும் கோரிக்கைகளும் தொடர்;சியாக மக்கள் தரப்பால் முன் வைக்கப்பட்டு வருகிறது. எண்பதுகளின் இறுதியில் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளை இலங்கை இராணுவம் கைப்பற்றியிருந்தது. அப்பொழுது பலாலி, வலிகாமம் வடக்கு போன்ற இடங்களில் இருந்த மக்கள் அகதிகளாக்கப்பட அந்த மக்களின் வாழ்விடயங்களில் இராணுவம் குடியேறியது. தொடர்ந்து யாழ்ப்பாணத்தை 1995இல் முழுமையாக கைப்பற்றிய இராணுவம் பரவலாக மக்களின் வாழிடங்களில் முகாங்களை கட்டி எழுப்பியிருந்தது.

யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பொழுதிருந்தே இராணுவம் முகாங்களுக்கு ஈடாக விகாரைகளையும் அமைத்து வந்திருக்கின்றன. யாழ்ப்பாண வைத்தியசாலையின் பின் வீதி சுமார் இருபது வருடங்களின் பின்னர் திறக்கப்பட்ட பொழுது அங்குள்ள மக்களுக்குச் சொந்தமான காணிநிலங்களில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டு விகாரைகளாக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது. இராணுவம் கைப்பற்றிய இடங்களிலிருந்து வெளியேறிச் செல்லும் பொழுது மிகவும் வேரோடிய, கிளைபரப்பிய புத்தர்சிலைகைளை படைகள் பொறிகளாக அல்லது சாபமாக விட்டுச் செல்ல முனைகிறார்கள்.

வடக்கு கிழக்கு எங்கும் இந்த நிலமைகள்தான் வரலாறு முழுவதும் நடக்கின்றன. தமிழ் மக்களிடத்தில் புத்தர்சிலைகள் பெரும் அபாயத்தை உண்டு பண்ணியுள்ளன. அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளன. இலங்கை அசுகளினதும் இலங்கை இராணுவத்தினதும் ஆக்கிரமிப்பு மனநிலைகளின் வெளிப்பாடுகளாகவே புத்தர்சிலைகள் உருவாக்கப்படுகின்றன. வரலாறும், வாழும் ஆசையும், தியாகங்களும், இரத்தமும், உழைப்பும் புதைந்த ஈழத்து நிலத்தில் அவற்றை அறுத்தெறியும் கூர்மையான வாட்களைப்போல புத்தர்சிலைகள் நிலத்தை ஊடுருவி அறுத்தெறிகின்றன.

சிங்கள பௌத்த ஆதிக்கம், ஆக்கிரமிப்பு மற்றும் இனவாதம் நிரப்பட்ட சிலகைளாக தமிழர்கள் புத்தசிலைகளைப் பார்க்கிறார்கள். அந்தச் சிலைகள் எப்பொழுது இனவாதத்தை கொட்டப் போகிறது? எப்பொழுது வன்முறைகள துப்பப் போகிறது? எப்பொழுது எங்களை இந்த நிலத்தை விட்டு அறுத்தெறியப் போகிறது? என்ற பலவிதமான அபாயங்களை சிலைமுட்ட முட்ட நிரப்பி வைத்திருப்பதைப்போலான அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு அமைதியே வடிவாக உறங்கிக் கொண்டிருக்கும் புத்தசிலைகளை சிங்கள மனோபாவத்துடன் இலங்கை அரசுகளும் அதன் படைகளும் பாவித்த விதம்தான் காரணமாயுள்ளது.

வன்னியை கையகப்படுத்திய பிறகு அங்கு பரவலாக புத்தர்சிலைகளின் ஆக்கிரமிப்பு நீடித்து வருகிறது. யுத்த வேலைகள் ஏதுவுமற்ற படைகள் எங்கெங்கு முகாம் அமைக்கலாம்? எங்கெங்கு புத்தர்சிலைகளை அமைக்கலாம்? எங்கெங்கு அரச மரங்கள் நிற்கின்றன? எங்கெங்கு பௌத்தத்தை விதைக்கலாம் என்று நாளும் பொழுதுமாக செயற்பட்டு வருகின்றனர். இப்பொழுது தாம் பெறும் ஊதியத்துக்கு அந்த வேலைகளையே படைகள் செய்து வருகின்றன. அரச மரங்கள் எங்கெல்லாம் நிற்கிறதோ அங்கெல்லாம் புத்தர்சிலைகள் வைத்து சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.

மாங்குளத்தில் விகாரைகள் கட்டப்படுகின்றன. மிகவும் பிரமாண்டமான அந்த விகாரைகளுக்கு துப்பாக்கி ஏந்திய இராணுவம் பாதுகாப்பு அளிக்கிறது. பரந்தன் சந்தியிலும் ஒரு புத்தசிலை வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் வைக்கப்பட்ட புத்தசிலைக்கு கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்த நிலையில் அகற்றப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கிளிநொச்சி நகரத்தில் அமைக்ப்பட்டுள்ள புத்தர்சிலை கிளிநொச்சி நகரத்தில் பௌத்த அடையாளத்தை பரப்பிக் கொண்டிருக்கிறது.

கிழக்கில் பல இடங்களில் புத்தர்சிலைகள் திணிக்கப்பட்டுள்ளன. திருமலை நகரத்தில் புத்தர்சிலை வைக்கப்பட்டுள்ளது. கிழக்கில் சிங்கள கிராமங்களாக அபகரித்து மாற்றப்பட்ட இடங்கள் எல்லாம் புத்தர்சிலைகளால் வேலியடப்பட்டிருக்கின்றன. தமிழர்களின் புராதனங்கள் கரைக்கப்பட்டு ஆழ் நிலத்தில் புதைக்கப்பட்டு சிங்கள முகங்களுடன் எத்தனை நிலங்கள் மாற்றப்பட்டு விட்டன. அவற்றை எல்லாம் கண்மூடி உறங்கும் புத்தர் சிலைகளின் கைகளிலேயே திணித்திருக்கிறார்கள். சிங்கள இன மக்களின் நம்பிக்கை புத்தரில் எந்தளவு ஆழமானதோ அந்தளவில் புத்தரை தமிழர்களின் தாயகத்தை நோக்கி படையெடுக்க வைக்கிறார்கள்.

போர் ஈழத்து மக்கள் பலரை வீடற்ற அகதிகளாக்கியிருக்கிறது. சொந்த நிலத்தை இழந்தவர்களும் சொந்த நிலமிருந்தும் வீட்டை இழந்தவர்களுமாக இருக்கிறார்கள். அழிக்கப்பட்ட வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில் நீடிக்கும் அரசியல் மக்களை வீடழிந்த வெளியில் வைத்து கடுமையாக துன்புறுத்துகிறது. ஒரு சின்ன வீட்டைக்கூட கட்ட முடியாத நிலையில் மக்கள் வாழ்கிறார்கள். உழகை;கம் துணைகளை இழந்தமை, சொத்துக்களை இழந்தமை, பொருட்களின் விலையேற்றம், வேலையில்லாமை போன்றவை மக்களை வறுமையின் கொடுமைக்கு ஆளாக்குகிறது. இந்த கையறு நிலையை பயன்படுத்தி மக்களின் காணிநிலங்களில் புத்தர்சிலைகளை விதைத்து நிலத்தினை கொள்ளையடிக்க நன்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி மக்கள் உடன்படும் பட்சத்தில் அவர்களின் காணிகளில் புத்தர்சிலைகளை நட்டு விகாரைகளை அமைத்துக் கொண்டு அந்தக் காணிக்குரிய மக்கள் வீடமைக்க ஆறு லட்சம் ரூபா தருகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். இது வீடு தாருகிறோம்! காணியைக் கொடுத்துவிடு!! என்கிற ஆக்கரமிப்பு அல்லது கொள்ளையடிப்புத்தான். வீடு தருகிறோம்! நிலத்தை பலியிடு!! என்கிற இந்த கொள்ளைக்கு புத்தரை பலியாக்க நினைக்கிற அளவில் அவர்களின் புத்தி போயிருக்கிறது என்பதைவிட அதற்கு தமிழர்களை அவர்களின் அவலத்தை பலியாக்குகிற, தமிழ்களின் நிலத்தை பலியாக்குகிற அளவில் நிலமை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியம் என்பதுபோல காலம் எல்லாவற்றுக்கும் எல்லா அநியாயங்களுக்கும் வளைந்து கொடுக்கிற நிலையில் இருக்கிறது. அல்லது வளைத்துப் பார்க்கலாம் வளையம் என்கிற நிலைக்கு வந்துள்ளது. இப்படியொரு ஒப்பந்தம் பேசிக் கொண்டு தமிழர்களின் நிலத்தில் புத்தசிலைகளை நட்டு பௌத்தத்தை விதைக்கிற அளவில் துணிச்சலும் ஆசையும் ஏற்பட்டிருக்கிறது. நிலக்கொள்ளைக்கு ஒரு வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஈழத்து மக்களின் நிலங்களில் புத்த சிலகைளை நட்டு விகாரைகளை அமைத்துவிட்டு பின்பு கொஞ்ச காலம் போன பிறகு இங்கு பொளத்தர்கள் வாழ்;நதார்கள் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் என்றும் இது பொளத்த சிங்கள பூமி என்றும் வரலாறுகளை எழுதி ஒட்டு மொத்த ஈழத்து மண்ணையும் சிங்கள பூமியாக்கவே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வேறோன்றுமில்லை. இன்று வீடுகளை கட்டித்தந்து இருக்கவிட்டு எங்கள் எதிர்காலத் தலைமுறைகளை நிலமில்லாமல் தவிக்க வைக்கவும் அவர்களை இந்த நிலத்தைவிட்டு துரத்தலுமே இந்தத் திடடம் கொண்டு வரப்பட்டுள்ளது. வேறொன்றுமில்லை. இந்த அபாயமும் அநிநாயமும் எத்தனை வெளிப்படையாக கிளம்பியிருக்கிறது? எவ்வளவு பிற்போக்குத்தனமாக கோமாளித்தனமாக இப்படி நிலக்கொள்ரைள அறிவிப்பை விடுத்திருக்கிறது.

நிலத்திற்காக போராடி அளப்பெரிய தியாகங்களை செய்து லட்சம் உயிர்களை நிலத்திற்குள் பலி கொடுத்து அலைய கொடுத்திருப்பது இதற்காகவா? இந்தத் திட்டத்தை புறக்கணித்து எமது நிலங்களை காக்க வேண்டும். புத்தர்சிலைகள் எங்கள் பிள்ளைகளை நிலமில்லாத ஆபத்து நிறைந்த எதிர்காலத்துக்கு தள்ள நிற்கிறது. வீடில்லாமல் நிலத்தோடு வாழ்ந்தாலும் அவலங்களை சுமந்தாலும் ஆக்கிரமிப்பு நிறைந்த இந்தத் திட்டத்தை புறக்கணித்து நிலத்தை உணர்ந்து பொறுப்புடன் காக்க வேண்டியது போராடும் ஒவ்வொரு ஈழத்தமிழரதும் கடமையாகும்.

புத்தர்மீதான மதிப்பையும் அவரின் பொதுத் தத்துவத்தையும் தகர்த்து சிங்கள பௌத்த அடையாளம் கொடுக்கப்பட்டு சீருடை அணியப்பட்ட ஆக்கிரமிப்பாளனாக மாற்றிய பெருமையை அரசும் அதன் படைகளும் பெறுகின்றன. புத்தர் சிலைகளோ இலங்கையின் இரண்டு தேசங்களின் உறவை பாதித்து வன்முறைகளை கிளறும் அபாயங்களாகிவிட்டன. ஆக்கிரமிப்பின் கால்களாகிய புத்தர்சிலைகளே ஈழத்தின் அடுத்த கட்ட முரண்பாடுகளை தொடர்ச்சியாக்கப் போகின்றன என்ற அபாயம் இன்னுமின்னும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான சூழலையே அரசும் இந்தத் திட்டங்களும் உருவாக்குகின்றன. கண்மூடிய புத்தர் சிலைகள் நகர்ந்து வரும் இந்தக் காலத்தில் நாங்கள் கண் விழித்து உறங்காதிருக்க வேண்டும்!

GTN

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போதித்த புத்தனை வழிபடும் தகுதி சிங்களவருக்கு இருக்கிறதா? என்பது ஒரு முக்கியமான வினாவாக உள்ள சூழலில்; இந்த தமிழ் பௌத்த சங்க அமைப்பின் தலைவரென்ற போர்வையில் சிங்களத்தினதும், அரசினதும் நவீன வடிவிலான சிங்களத்தின் புலனாய்வுத்துறையாகுமென்பதே எனது ஐயப்பாடாகும். நேரடியாக இராணுவ உடையோடு, தனது புலனாய்வாளர்கள், துணைக்குழுக்கள் ஊடாகக் காணிகளைக் கேட்டால் அல்லது வாங்கினால் நேரடியாக அரசின்மீது அந்தப்பழி திரும்பும் என்பதால், திட்டமிட்ட அடிப்படையில் தமிழரைத் தெரிவுசெயது நன்கு பயிற்றுவித்து, அதாவது பௌத்த சங்கமென்ற போர்வையில் தமிழரிடையே சிங்களபௌத்தத் திணிப்பையும் நிலப்பறிப்பையும் செய்கிறதென்பதே உண்மையாகும்.இது கூட சிங்களத்தின் உளவுத்துறையேயாகும். உடை மட்டுமே வெள்ளை அல்லது செம்மஞ்சள். தாயக உறவுகள் அவதானமாக நகர வேண்டிய சூழலில் புத்திஜீவிகள் இது குறித்து பேச முன்வரவேண்டியது அவசியமாகும். புத்தர் சிலை வைக்கும் பணத்தை உண்மையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க முன்வரலாமே என்று அரசையோ இதற்குத் துணைபோவோரையோ கேட்கலாம் அல்லவா?

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பொழுதிருந்தே இராணுவம் முகாங்களுக்கு ஈடாக விகாரைகளையும் அமைத்து வந்திருக்கின்றன. யாழ்ப்பாண வைத்தியசாலையின் பின் வீதி சுமார் இருபது வருடங்களின் பின்னர் திறக்கப்பட்ட பொழுது அங்குள்ள மக்களுக்குச் சொந்தமான காணிநிலங்களில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டு விகாரைகளாக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது. இராணுவம் கைப்பற்றிய இடங்களிலிருந்து வெளியேறிச் செல்லும் பொழுது மிகவும் வேரோடிய, கிளைபரப்பிய புத்தர்சிலைகைளை படைகள் பொறிகளாக அல்லது சாபமாக விட்டுச் செல்ல முனைகிறார்கள்.

சரித்திரம் நேர் கோட்டில் பயணிக்கின்றது!!

வட இந்தியர்கள் சிவலிங்கங்களைப் பயன் படுத்தியே தங்கள் வருகையைத் தென்னிந்தியாவில் உறுதிப் படுத்தினார்கள்.

அக்கிரகாரங்கள் அன்று அழைக்கப் படும் குடிமனைத் தொகுப்புக்களே புனிதப் பிரதேசங்களாகப் பிரகடனப் படுத்தப்பட்டு, இவர்கள் பல்கிப் பெருகினர்.

இதே புத்த கோவில்கள் கேடுகெட்ட படையினரின் பாதுகாப்பில் அக்கிரகாரங்களாக ஆகப் போகின்றன!!!

இந்தச் சீருடையணிந்த படைக்கும், காவி உடை அணிந்த படைக்கும் இலங்கையில் எந்த வித்தியாசமும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.