Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்க வேலைக்குக் கைமாறு : பொதுக்கூட்டத்துக்காக கொழும்புக்கு வரவேண்டும்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி யின் ஊடாக அரசாங்க உத்தியோகங்களைப் பெற்றவர்கள் அனைவரும் எதிர்வரும் மே முதலாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.டீ.பி யினரால் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மே முதலாம் திகதி அரசாங்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் ஒன்றுக்கே 100 பஸ்களில் ஆள்களை அழைத்துச்செல்வதற்கு ஈ.பி.டீ.பி யினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக தமது சிபார்சின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்.சுகாதார திணைக்களம், யாழ்.பல்கலைக்கழகம், வட பிராந்திய போக்குவரத்து சபை, யாழ்.மாவட்ட செயலகம் ஆகிய இடங்களில் நியமனம் பெற்றவர்களை இன்று தமது அலுவலகங்களுக்கு அழைத்த ஈ.பி.டீ.பி யினர் மேற்படி பொதுக்கூட்டத்துக்கு அனைவரும் கட்டாயமாக வரவேண்டும். அதற்கான பயண ஒழுங்குகளை செய்யுங்கள் எனவும் வர முடியாதவர்கள் - வரத்தவறுபவர்கள் உரிய முறையில் கவனிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப்பொதுக்கூட்டத்தில் சுமார் ஐயாயிரம் பேரைத் திரட்டி, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு அழைத்துச் சென்று மக்கள் மத்தியில் தமக்கு இன்னமும் செல்வாக்கு இருப்பதாகக் அரச உயர் மட்டங்களுக்கு காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு பகீரதப்பிரயத்தனமே இது என்று பேசப்படுகிறது.

இதே வேளை -

நடந்து முடிந்த தேர்தல் காலங்களிலும், இத்தகையவர்கள் பிரசாரப் பணிகளில் கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், வரத்தவறிய, நழுவிக் கொண்ட பலர் கடுமையான தாக்குதல் உட்பட பல அசௌகரியங்களை எதிர்கொண்டதாகவும், இம் முறையும் போகாமல் விட்டால் ஏதாவது நடந்துவிடும் என்னதால் தாம் பயண ஒழுங்குகளை ஆரம்பித்து விட்டதாகவும் அரச ஊழியர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க ஏனைய இடங்களில் என்றாலும் பரவாயில்லை, யாழ். வைத்தியசாலையில் நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு தொகையினர் ஒரே நாளில் லீவில் சென்றால் இந்த மூன்று நாட்களும் என்ன செய்வது என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தலையில் அடித்துக் கொள்வதாகவும், ஆனாலும் அடிமட்ட ஊழியரிலிருந்து, அதியுச்சத் தலைமைப்பதவி வரை தனது கைப்பொம்மைகளை நியமித்து தாம் நினைத்ததை சாதித்துவரும் ஈ.பி.டீ.பி யினருக்கு எதிராக நிர்வாகிகள் யாவரும் ”அடக்கியே வாசிப்பார்கள்” என்றும், வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

http://onlineuthayan.com/News_More.php?id=1962

பரதேசிகளே!

தமிழர் உங்கள் உறவு இல்லையா? உலகிலேயே இறந்த உடல்களுக்கு துகிலுரியும் சிங்கள வர்க்கத்திற்கு உங்கள் ஆதரவா? உங்களையும் ஒரு நாள் கொலை செய்து துகிலுரிவான் அப்போது உங்களால் உங்கள் உடலை பார்க்க முடியாது, ஆனால் நாங்கள் பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி யின் ஊடாக அரசாங்க உத்தியோகங்களைப் பெற்றவர்கள் அனைவரும் எதிர்வரும் மே முதலாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.டீ.பி யினரால் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மே முதலாம் திகதி அரசாங்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் ஒன்றுக்கே 100 பஸ்களில் ஆள்களை அழைத்துச்செல்வதற்கு ஈ.பி.டீ.பி யினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக தமது சிபார்சின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்.சுகாதார திணைக்களம், யாழ்.பல்கலைக்கழகம், வட பிராந்திய போக்குவரத்து சபை, யாழ்.மாவட்ட செயலகம் ஆகிய இடங்களில் நியமனம் பெற்றவர்களை இன்று தமது அலுவலகங்களுக்கு அழைத்த ஈ.பி.டீ.பி யினர் மேற்படி பொதுக்கூட்டத்துக்கு அனைவரும் கட்டாயமாக வரவேண்டும். அதற்கான பயண ஒழுங்குகளை செய்யுங்கள் எனவும் வர முடியாதவர்கள் - வரத்தவறுபவர்கள் உரிய முறையில் கவனிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப்பொதுக்கூட்டத்தில் சுமார் ஐயாயிரம் பேரைத் திரட்டி, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு அழைத்துச் சென்று மக்கள் மத்தியில் தமக்கு இன்னமும் செல்வாக்கு இருப்பதாகக் அரச உயர் மட்டங்களுக்கு காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு பகீரதப்பிரயத்தனமே இது என்று பேசப்படுகிறது.

இதே வேளை -

நடந்து முடிந்த தேர்தல் காலங்களிலும், இத்தகையவர்கள் பிரசாரப் பணிகளில் கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், வரத்தவறிய, நழுவிக் கொண்ட பலர் கடுமையான தாக்குதல் உட்பட பல அசௌகரியங்களை எதிர்கொண்டதாகவும், இம் முறையும் போகாமல் விட்டால் ஏதாவது நடந்துவிடும் என்னதால் தாம் பயண ஒழுங்குகளை ஆரம்பித்து விட்டதாகவும் அரச ஊழியர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க ஏனைய இடங்களில் என்றாலும் பரவாயில்லை, யாழ். வைத்தியசாலையில் நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு தொகையினர் ஒரே நாளில் லீவில் சென்றால் இந்த மூன்று நாட்களும் என்ன செய்வது என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தலையில் அடித்துக் கொள்வதாகவும், ஆனாலும் அடிமட்ட ஊழியரிலிருந்து, அதியுச்சத் தலைமைப்பதவி வரை தனது கைப்பொம்மைகளை நியமித்து தாம் நினைத்ததை சாதித்துவரும் ஈ.பி.டீ.பி யினருக்கு எதிராக நிர்வாகிகள் யாவரும் ”அடக்கியே வாசிப்பார்கள்” என்றும், வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

http://onlineuthayan.com/News_More.php?id=1962

இந்த உண்மையை எங்கள் ஊடகங்கள், குறிப்பாகத் தமிழ்நெட் போன்றவை ஏன் வெளியிடுவதில்லை எனத் தெரியவில்லை.தமிழ்நெட் பல வெளிநாட்டுத் தூதரகங்களால் பார்க்கப் படும் இணையத்தளமாகும்!!!

எங்களுக்குள் நாங்கள் கதைத்துக்கொண்டிருந்தால் மட்டும் இந்த உண்மைகள் போக வேண்டியர்வர்களுக்குப் போய்ச் சேராது!!! .

Edited by Punkayooran

கொஞ்சம் பொறுங்கோ!

எங்கடை ஊடகங்கள் ஜனநாயகத்தை வலுப் பெறச் செய்யிறதுக்கு அயராமல் உழைச்சுக் கொண்டிருக்கினம்.

அவையளுக்கு உதுகளைப் பற்றியோ அல்லது ஐநா அறிக்கை பற்றியோ சிந்திக்கிறதுக்கு கடுகளவும் நேரமில்லைப் பாருங்கோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.