Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான்

20090120105946_20081018%20-%20p1000321%20-%20800x.jpg

இலங்கை அரசால், இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க 13 மாதங்களுக்கு முன் அய்.நா அமைத்த நிபுணர் குழு, ‘இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்ற தகவலோடு அறிக்கையை அய்.நா.பொதுச் செயலர் பான் கீ மூனிடம் கொடுத்துள்ளது.

ராஜபக்சே அரசால், கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாகவே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருக்கிறது.

இந்தச் சூழலில், ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது நடந்த இரண்டாவது தேர்தலில், தமிழகத் தமிழர்கள் இதுகாறும் இல்லாத அளவிற்கு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக 80 சதவீதபேர் வாக்களித்துள்ளனர். (இந்த வேகம்கூட ஈழ மக்களின் துயரங்களுக்காக அல்ல.)

பிரச்சினைகளுக்கு தீர்வாக தமிழர்கள் எப்போதும் இரண்டு வழியை நாடுகிறார்கள்.

ஒன்று கடவுள், இன்னொன்று தேர்தல்.

இந்த இரண்டும் எப்போதும் அவர்களுக்கு உதவியதில்லை என்று அனுபவரீதியாக உணர்ந்தும், மீண்டும் அந்த வழிகளையே தேர்தெடுக்கிறார்கள்.

பிரச்சினைகளை எதிர்த்து போராடுவதைவிட, இந்த இரண்டுவழிகளும் அவர்களுக்கு சுலபமாகவும், சுவாரஸ்யங்கள்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருப்பதாலும் இவைகளையே விரும்புகிறார்கள்.

நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினருக்கு, வெளியூருக்கு கூட்டிபோய் சிகிச்சை அளிப்பதற்கு கணக்குப் பார்க்கிற அல்லது ‘அட யார் போய் கஷ்டப்படறது’ என்று அலுத்துக்கொள்கிற தமிழர்கள், ஆன்மீக சுற்றுலா செல்வதற்கு தயங்க மாட்டார்கள்.

ரேஷன் கடைகளில் கிடைக்காத பொருள்களுக்காகவும், விலைவாசி உயர்வையும் எதிர்த்து போராட முன் வராத தமிழர்கள், சபரிமலைக்கு சென்று நெரிசலில் சிக்கி சாவதை பொருட்படுத்த மாட்டார்கள்.

மழை நேர வெள்ளத்தில், வீட்டுக்குள் தண்ணீர் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசை எதிர்த்து போராடினால், ‘போலிஸ், ஜெயிலுன்னு போன என் பொழப்பே போயிடும்’ என்று தயங்குகிற தமிழர்கள், வெள்ள நிவாரண நிதி வாங்குகிற கூட்டத்தில் சிக்கி உயிரையே போக்கிக் கொள்கிறார்கள்.

4288806.jpg

சுனாமியின் போது வேளாங்கண்ணி மாதக்கோயிலின் சுவற்றில் மோதியே நூற்றுக்கணக்கானவர்கள் மாண்டார்கள். மாதாவுக்கு மகிமை இல்லை என்று தெரிந்தும், தங்கள் மன்றாடுதலை நிறுத்துவதில்லை தமிழர்கள்.

dargah_310409f.jpg

நோயுற்றபோது, திருப்பதிக்கும், வேளாங்கண்ணிக்கும் வேண்டிக்கொள்வதுபோல், விலைவாசி உயர்வின்போதும், ‘வரட்டு்ம் தேர்தல்’ என்று வஞ்சம் கொள்கிறார்கள். பிறகு திருப்பதிக்கும், வேளாங்கண்ணிக்கும், நாகூருக்கும்ம் போய் வந்த பிறகும் என்ன நடந்ததோ,அதுவேதான் தேர்தல்களுக்கு பிறகும நடக்கிறது.

அவர்களின் நம்பிக்கை ‘மூடநம்பிக்கை’ என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் ‘அது மூடநம்பிக்கை’ என்று அவர்கள் ஒத்துக்கொள்ளத் தயாரக இல்லை. ஒததுக்கொண்டால் அதை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டிவருமே.

இந்த மனோபாவம் கொண்டதினால்தான் நாமும், நம் கண் முன்னே நம் தமிழர்கள் இலங்கையில் கொலை செய்யப்பட்டபோது, அனுதாபம் பட்டுக் கொண்டோம்.

பக்தர்கள் பிரச்சினைகளுக்கு கடவுளை சரணாகதி அடைவதைப்போல், நம் கோபத்தையும், வீரத்தையும் கருணாநிதி ஆதரவு, ஜெயலலிதா ஆதரவு என்று கோஷ்டியாக பிரிந்து ஓட்டுக் கேட்டு, ஓட்டு போட்டோம். இந்திய தேசியத்தை பாதுகாத்தோம்.

‘அப்படி செயல்படுவதுதான் நமக்கு பாதுகாப்பனது. நம் அரசியல் எதிர்காலத்திற்கும் நல்லது.’ என்கிற ஒர் உள்குத்தும் உடன் இருந்தது.

ஆனால், ஈழத் தமிழர்களுக்கு…?

ஒரு ரவுடி, சமூக விரோதி அவன் கொலைசெய்யப்பட்டால்கூட, அவன் இருந்த பகுதியில் கடையடைப்பும், வன்முறையும் நடக்கும். இயல்பு வாழ்க்கை நிலைகுலையும்.

ஆனால், நம் தமிழர்கள் மீது விமான தாக்குதல் நடத்தி குவியலாக கொன்றபோதும் சரி, நம் போராளிகளையும் அதன் தலைவர்களையும் நம்ப வைத்து சதி செய்து கொலைசெய்த போதும் சரி, நாம் குமுறி, குமுறி அழுதிருக்கிறோம். பிறகு, முறைப்படி காவல் துறையிடம் அனுமதி பெற்று அனுமதி மறுத்தால் நீதி மன்றத்தை நாடி ‘போராட்டங்களை’ நடத்தியிருக்கிறோம்.

எம்.ஜி.ஆர், ஆட்சிக்காலத்தில் அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பந்த் அறிவித்தால், “ஆளும் கட்சியும் பந்தில் கலந்து கொள்ளும்” என்று எம்.ஜி.ஆர் செய்த திட்டமிட்ட கோமளித்தனங்களைப்போல், ஈழப் பிரச்சினை, மீனவர் மீது தாக்குதல் இவைகளுக்காக நம் போராட்ட முறைகளிலேயே மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி அரசும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

ஆனால், அதற்கு மாற்றாக ஈழத்தமிழர்களின் படுகொலையை முன்னிறுத்தி, இந்திய அரசை கண்டித்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்ற வன்முறையான செயல்களில் நாம் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. எதையும் சட்டப்படி செய்து சட்டம் ஒழுங்கை பாதுகாத்திருக்கிறோம். எப்போதும் இல்லாத அளவிற்கு ஈழத்தமிழர்களின் உச்சகட்ட துயரத்தின் போதுதான் தமிழகம் அமைதிபூங்காவாக திகழ்ந்தது. திகழ்கிறது. அமைதிப்பூங்காவாக தொடர்ந்து தமிழகம் முதலிடத்தில் இருப்பது தமிழர்களுக்கு அவமானம்.

ஆனால், இன்னொருபுறம். சட்டம் ஒழுங்கை பாதுக்காக்கவே பிறந்தவர்களாக சொல்லிக்கொள்கிற காந்தியவாதிகளான காங்கிரஸ்காரர்கள், நாம் செய்ய வேண்டிய போராட்டங்களை அவர்கள் செய்கிறார்கள்; சத்தியமூர்த்திபவனை அடித்து நொறுக்குவது, சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது என்று, இரண்டு பேர்களை எதிர்த்து, இரண்டே பேர்கள் போராடுகிறார்கள். (மொத்தமே நாலுபேர்தான். அதுக்கு பேரு உட்கட்சி சண்டையாம்.)

ஒப்பிட்டளவில் காங்கிரஸ்காரர்களைவிட ஈழஆதரவாளர்கள் அதிகம் பேரை கொண்ட நாம்…? காங்கிரஸ்காரர்களையே மிஞ்சும் அளவிற்கு கோஷ்டிகளாக பிரிந்து, தமிழர்களின் ஒற்றுமைக்கு அழைப்புவிடுத்தோம். அதன் விளைவாக,

ஈழ மக்களின் துயரங்களின்போது தமிழகம் மவுனமாக தனது மயான அமைதியைதான் ஆறுதலாக தந்ததது. அதனால்தான் இன்று ஈழமே சுடுகாடாக காட்சியளிக்கிறது.

காங்கிரஸ்காரர்கள் கோஷ்டிகளாக பிரிந்து இருப்பது, ஒவ்வொருவரும் தனக்கான முக்கியத்துவத்தைக் கருதியும், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே. அதுவேதான் ஈழ ஆதரவாளர்களான நமக்கும் என்று நினைக்கும்போது, ‘ச்சீ… காங்கிரஸ்காரர்களைவிடவா நாம் மோசமானவர்கள்’ என்கிற அருவருப்பான எண்ணமே ஏற்படுகிறது.

முத்துக்குமார் என்கிற வீரன் மூட்டிய தீயை, பெரும் நெருப்பாக பற்றவைப்பதற்கு பதில் அதில் குளிர்காய்ந்தவர்களே ஏராளம்.

ஈழ மக்களுக்கு ஆதரவான போராட்டங்களில் மிக குறிப்பிடத்தக்கது, கோவையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நடத்திய, ‘ஆயுதங்கள் நிறைந்த ராணுவ வாகனம் மீதான தாக்குதல்’ போராட்டம் தான். அதுபோன்ற போராட்டங்களை நாம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடத்தியிருந்தால், ஈழத் தமிழர்களை காப்பாற்றி இருக்கலாம். தமிழீழப் போரட்டமும் தொடர்ந்து இருக்கும்.

மாறாக, வயிற்று வலி தீர, திருப்பதிக்கு வேண்டிகொண்டு தீர்வு காண முயற்சித்த பக்தர்களைப்போல், பழிதீர்ப்பதாக சவால் விட்டு, பிறகு வின்னர் பட வடிவேலுவைப் போல் சுருதி குறைத்து, தேர்தலில் பதுங்கி கொண்டோம்.

இலங்கை, இந்திய அரசுகள் மூடிமறைத்தபோதும், ‘ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்கிற செய்தி அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

என்ன செய்யப்போகிறோம் நாம்?

பிரச்சினைகளுக்குத் தீர்வாக, திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான். காரணம் அது தீர்வல்ல, பிரச்சினையே அதுதான்.

சாதியத்திற்கெதிராகவும் ஈழ விடுதலை உணர்வோடும்

கீழ்.கா.அன்புச்செல்வன்

தனி நாடு அமையும் வரை நானும் ஒரு அகதி தான்

http://groups.google.com/group/thanthaiperiyar

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.