Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்காஆதரவு எனும் குற்றச்சாட்டில் எவ்வித அடிப்படையுமில்லை: பிளேக் _

Featured Replies

இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்கா பலமான மற்றும் நீண்டகால பங்காளித்துவம் ஒன்றை கொண்டிருக்க உறுதிபூண்டுள்ளது.

ஆட்சிமாற்றத்துக்கு நாம் ஆதரவு வழங்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித அடிப்படையுமற்றவை என்பதனை நான் இலங்கை அரசாங்கத்துக்கு உறுதிபடக் கூற விரும்புகின்றேன். உள்நாட்டு யுத்தத்தின் அழிவுகளிலிருந்து மீளும் அரசாங்கத்துக்கு நான் பூரண ஆதரவு அளிக்கின்றேன்.

அத்துடன் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சமாதானமிக்க ஐக்கிய ஜனநாயக இலங்கையை நோக்கி முன்னெடுத்து வைக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் நான் ஊக்கமளிக்கின்றேன் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ. மூனுடனும் அவரது குழுவினருடனும் இலங்கை சுமுகமான உறவை பேணவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் விடுத்துள்ள அறிக்கையும் அவருடன் தொடர்புகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளமையும் என்னை ஊக்கமடையச் செய்வதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சுபிட்சமான ஜனநாயக ஐக்கிய இலங்கைக்கு நிலையான அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கோட்டிட்டுக்காட்டுகின்றது. ஆயினும் இலங்கை அரசாங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான பேச்சுக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எனக்கூறிய அவர் அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பல சுற்றுப் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளன. எதிர்வரும் 12 ஆம் திகதி மற்றுமொரு சுற்று பேச்சு இடம்பெறவுள்ளது.

இந்த பேச்சுக்கள் மூலம் ஏற்படும் இணக்கப்பாடு யுத்தம் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதாக அமைவதுடன் அனைத்து இலங்கையரும் சம உரிமையுடன் எதிர்காலத்தில் வாழும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

இலங்கைக்கõன இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து உரையாடியதுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கும் சென்று அங்கு அமெரிக்க உதவியுடன் நடைபெறும் கண்ணிவெடி அகற்றும் திட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை அமெரிக்க நிலையத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாடிய ரொபட் ஓ பிளேக் மேலும் கூறியதாவது,

நான் கொழும்புக்கு வந்து மீண்டும் எனது பழைய நண்பர்களை சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சியடைகின்றேன். நான் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர் ஆகியோரை சந்தித்து உரையாடினேன்.

அத்துடன் முதற் தடவையாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கு செல்லும் சந்தர்ப்பமும் கிடைத்தது. நான் இலங்கையில் தூதுவராக இருந்த சமயம் குறித்த இரண்டு பிரதேசங்களும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. எனவே குறித்த பிரதேசங்களில் அமெரிக்க உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை பார்வையிட நான் மனப்பூர்வமாக விரும்பினேன்.

அத்துடன் எமது உதவியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் அ“ங்கு இடம்பெற்றுவருகின்றன. கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதன் காரணமாக மீண்டும் பாடசாலைகளுக்கு செல்லும் சிறுவர்களை சந்தித்தேன். அத்துடன் கிளிநொச்சியில் விழõ ஒன்றிலும் நான் கலந்துகொண்டேன். மேலும் இடம்பெயர்ந்த மக்களுக்கு நாலாயிரம் நீர் பம்பிகளை வழங்கினோம். அவை 17 ஆயிரம் குடும்பங்களுக்கு பயனளிக்கும். முல்லைத்தீவில் நான் நன்னீர் மீன் வளர்ப்பில் ஈடுபடும் மீனவர்களையும் சந்தித்தேன். அமெரிக்க அரசு அவர்களுக்கான புதிய வளங்களையும் வழங்கியுள்ளது.

ஒசாமா பின்லேடனின் மரணமும் அமெரிக்கா அதனை வெற்றிக்கொண்டமையும் அமைதி, பாதுகாப்பு, கௌரவத்தை விரும்பும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும் ஒன்றாகும். அவரது அழிவு பாதுகாப்பான உலகுக்கு வழி செய்வதாக இருக்கும்.

இதேவேளை பிளேக்கிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அல் கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனையும் அமெரிக்கா எவ்வாறு நோக்குகின்றது என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பிளேக் பதிலளிக்கையில், இருவரும் உலகில் மோசமான நம்பிக்கைக்கு பாத்திரமற்ற பயங்கரவாத இயக்க தலைவர்கள் என்பதில் வேறுபாடு கிடையாது. பின்லேடன் அமெரிக்காவுக்கு எதிராக மோசமான தாக்குதலை முன்னெடுத்தவர் என்று கூறினார்.

மேலும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு தாங்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ளீர்கள். அங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பிளேக் பதிலளிக்கையில், அவை முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் மேலும் அதிகமாக செய்யப்படவேண்டியவைகள் உள்ளன என்றார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31405

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.