Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே - டில்லி மா நாடு

Featured Replies

இலங்கையில் நடந்த போர் தமிழனத்தைக் கொன்று குவித்த இனப் படுகொலையே என்று கூறிய லோக் ஜன சக்திக் கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், வங்கதேசத்திற்கு ஒரு கொள்கை, இலங்கைக்கு ஒரு கொள்கையா என்று வினா எழுப்பினார்.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை வெளியிட்டு, டெல்லி பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் சங்கம் கடந்த திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பாஸ்வான் இவவாறு கூறினார்.

‘ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜிந்தர் சச்சார், மனித உரிமைப் போராளி பேராசிரியர் ஜக்மோகன் சி்ங், லோக் ஜன சக்திக் கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் டி.இராசா, பேராசிரியர் மணிவண்ணன், இதழாளர் சத்யா சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கருத்தரங்கில் பேசியவர்கள் அனைவரும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.

இக்கருத்தரங்கில் பேசிய பேராசிரியர் ஜக்மோகன் சிங், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை வெளியான பின்பும், தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்கு துணை நின்ற நாடுகள் ஒன்று அமைதி காக்கின்றன அல்லது அப்படி ஏதும் நடைபெறவில்லை என்பதை மறுக்கின்றன. இந்தப் போரில் தனது பங்கை இந்திய அரசால் மறுத்தவிட முடியாது. சிறிலங்க அரசு செய்த குற்றத்தில் இந்திய அரசின் பங்கும் உள்ளது. இலங்கையில் நடந்த போர் தமிழர்களுக்கு எதிரானது என்பதில் அந்த ஐயமும் இல்லை என்று கூறினார்.

கச்சத்தீவை சிறிலங்காவிற்கு தாரை வார்த்துக்கொடுத்த காரணத்தால்தான் தமிழக மீனவர்கள் இதுவரை பல நூற்றுக்கணக்கில் சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் தமிழர்கள் பிரச்சனையில் பாராமுகத்துடனேயே இந்திய அரசு நடந்துகொள்கிறது என்றும் ஜக்மோகன் சிங் கூறினார்.

தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடந்த போரை நிறுத்துவதில் உரிய அளவிற்கு தமிழக அரசியல் சக்திகள் செயலாற்றவில்லை என்று கூறிய ஜக்மோகன், இலங்கையில் நடந்தது இனப் படுகொலையே என்றும், அதனை உறுதி செய்ய பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்திய அரசு அமைதி காக்கக் கூடாது

போர் தொடர்பான குற்றங்களை எதை வேண்டுமானாலும் கூறுங்கள், அதனை சிறிலங்க படைகள் செய்திருக்கும் என்று கூறிய நீதிபதி ராஜேந்தர் சச்சார், சிறிலங்க அரசமைப்பில் உள்ள ஒருதலைப் பட்சமான நிலையை விளக்கினார்.

இலங்கையில் நடந்த போரின்போது போர் நடந்த பகுதியில் சிக்கிய தமிழர்களுக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டதும், தமிழப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதும் அது இனப் படுகொலைதான் என்பதை உறுதி செய்கிறது என்று கூறிய பேராசிரியர் மணிவண்ணன், ஆனால் இப்படிப்பட்ட குற்றங்களை தி இந்து உள்ளிட்ட நாளிதழ்கள் திட்டமிட்டு மறைத்தது மட்டுமின்றி, சிறிலங்க அரசு கூறுவதையே செய்தியாக்கின என்று குற்றம் சாற்றினார்.

போர் நடந்தபோது சிறிலங்க அரசின் பொதுத் தொடர்பு மேலாளராகவே இந்திய அரசு செயல்பட்டது என்று கூறிய இதழாளர் சத்யா சிவராமன், சிறிலங்க அரசிற்கு எல்லா வகையிலும் இந்திய அரசின் அதிகாரிகள் சிலர் உதவியுள்ளனர் என்று கூறினார்.

“நடந்த போர்க் குற்றங்களுக்கு சிறிலங்க அரசு பொறுப்பேற்க வேண்டும். அந்நாட்டில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க வந்த ஐ.நா.குழுவை அனுமதிக்காததும் குற்றமே. இதற்கு மேலும் இந்தியா அமைதி காக்கக் கூடாது. பேசுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று நீதிபதி சச்சார் கூறினார்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போரை நடத்தியது சிறிலங்க அரசுதான் என்றாலும், அதன் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டுள்ளது என்று கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் டி.இராசா, சிறிலங்க அரசின் தமிழினப் படுகொலைத் திட்டத்திற்கு இந்திய அரசு எவ்வாறு உதவலாம்? என்று வினவினார்.

சிறிலங்கா தொடர்பான இந்திய அரசின் அயலுறவுக் கொள்கை முற்றிலும் தோற்றுவிட்டது என்று கூறிய இராசா, ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் மீது தனது விளக்கத்தை இந்தியா அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இன அழித்தல் கொள்கையை கடைபிடிக்கும் சிறிலங்க அரசால் அந்நாடு மிகப் பெரிய உள்நாட்டுக் குழப்பத்தில் சிக்கப்போகிறது என்பதை 1083ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது என்று கூறிய லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், ஒரு மொழி, ஒரு பண்பாடு என்கிற ஒரு தலைப்பட்சமான ஒரு கொள்கையை கொண்டுள்ள சிறிலங்க அரசு, தமிழர்களுக்கு சுயாட்சி அளிப்பதை மறுத்து வருகிறது என்றார்.

வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கும் நமது நாடு இலங்கைப் பிரச்சனையை மட்டும் தமிழ் பயங்கரவாதம் என்று கூறி சிறுமைபடுத்துகிறது என்று கூறிய பாஸ்வான், இலங்கையில் தமிழர்கள் படும் துன்பதை தமிழர் அல்லாத இந்தியர்களிடம் மறைக்கும் முயற்சி இந்த நாட்டில் நடைபெறுகிறது என்று கூறினார்.

“இலங்கையில் நடப்பது இனப்படுகொலையே. வங்கதேசத்திற்கு ஒரு கொள்கையும், இலங்கைக்கு ஒரு கொள்கையும் கடைபிடிக்கக் கூடாது” என்று கூறிய பாஸ்வான், இதற்கு மேலும் இந்தியா மெளனம் காக்கக் கூடாது என்று கூறினார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப் படுகொலைப் போரில் சிறிலங்க அரசுடன் எந்த அளவில் இணைந்து செயல்பட்டோம் என்பது குறித்து இந்திய அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.