Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்களை திசை திருப்ப ஈழப் பிரச்சினையில் கருணாநிதி போட்ட 'டிராமா'-தயாநிதி மாறன் அம்பலம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23-karuna-fast-marina-beach1300.jpg

சென்னை: ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மக்களை திசை திருப்புவதற்காக போட்ட நாடகம் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.

விக்கிலீக்ஸிடமிருந்து தி ஹிந்து நாளிதழ் பெற்ற தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியதாக அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் பேசுகையில், கூறியதாக பரபரப்புத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இதுதொடர்பாக தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி:

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு, அமெரிக்க துணைத் தூதர்ஆண்ட்ரூ சிம்கின் பெயரில் ஒரு கடிதம் போனது. அதில் தயாநிதி மாறனுடன், அமெரிக்க அதிகாரிகள் பேசிய விவரத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் பேசியதை குறிப்பிட்டுள்ளார் சிம்கின்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தனது கட்சி மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு நாடகம் என்று தயாநிதி மாறன் அப்போது தெரிவித்தார். மின் வெட்டுப் பிரச்சினை, அதனால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபம் ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே கருணாநிதி இவ்வாறு அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயலுக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்பதாக காட்டிக் கொள்ளும் நாடகமே இது. தானும் இதில் பங்கேற்று ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விட தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் நோக்கமே கருணாநிதியிடம் இருந்தது.

மேலும் கருணாநிதி அரசு இதுவரை எந்த அரசு மீதும் இல்லாத அளவுக்கு மக்கள் மிகவும் கோபமாக இருப்பதாகவும் தயாநிதி மாறன் கூறினார்.

ஆனால் கருணாநிதி நடத்திய நாடகத்தால், திமுகவிடமிருந்து காங்கிரஸ் குறிப்பாக சோனியா காந்தி விலகத் தொடங்கினார். கருணாநிதியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் சரியான பதிலடியை பொருத்தமான நேரத்தில் கொடுக்கும். அது உறுதி.

பிரபாகரனைக் கொல்லத் துடித்த ராகுல் காந்தி

கருணாநிதியின் மகள் கனிமொழியை சமீபத்தில் சந்திக்க மறுத்தார் சோனியா. இதற்கு திமுக மீதான சோனியா காந்தியின் அதிருப்தி அதிகரித்ததே காரணம்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்க வேண்டும், பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உறுதியாக உள்ளனர் என்றும் தயாநிதி மாறன் கூறியிருந்தார்.

திமுக தோற்கும்-தயாநிதி மாறன்

அதேபோல திமுக மீது ஊழல் கறை படிந்து விட்டது. இதை அகற்றாவிட்டால் திமுக பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும் அப்போது கூறியுள்ளார் தயாநிதி மாறன்.

இதன் மூலம் சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்வியை அன்றே கணித்துள்ளார் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்.கைவிட்டால் திமுகவுக்கு வழியில்லை-பீட்டர்

பீ்ட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தனது எம்.பிக்களை வாபஸ் பெற மாட்டார் கருணாநிதி என்று உறுதிபடக் கூறியிருந்தார். தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக, தான் வலுவாக இருப்பதாக காட்டிக் கொள்ளவே இவ்வாறு அறிவித்தார் (எம்.பிக்கள் ராஜினாமா செய்வதாக) கருணாநிதி. மற்றபடி, அனைத்துக் கட்சிக் கூட்டம், தீர்மானம் என்பதெல்லாம் சப்பைக் கட்டுதான்.

காங்கிரஸுடனும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனும் இணைந்து இருப்பது ஒன்றுதான் திமுகவுக்கு உள்ள ஒரே வழி என்று கூறியிருந்தார் பீட்டர்.

ஆனால் தாங்கள் ராஜினாமா செய்யப் போவதாக திமுக கூறியது காங்கிரஸ் மேலிடத்தை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியது உண்மை. மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பாதையில் திமுக திரும்புகிறதோ என்று காங்கிரஸ் கருதியது என்று கூறியுள்ளார் பீட்டர்.

'திமுக, காங்கிரஸின் சுய நல உறவு'

இந்த இருவரின் பேச்சுக்களையும் வைத்துப் பார்க்கும்போது இரு கட்சிகளுமே ஒரு சுயநலத்தோடுதான் உறவு வைத்துள்ளன என்பது தெரிய வருகிறது. முதல்வர் பதவியில் நீடிக்க காங்கிரஸின் தயவு கருணாநிதிக்குத் தேவை. அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு டெல்லியில் நீடிக்க கருணாநிதியின் தயவு காங்கிரஸுக்குத் தேவை.

இதன் விளைவாகவே இந்த அரசியல் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றியிருப்பதாக தெரிகிறது.

கருணாநிதியின் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் போதிய அவகாசம் கொடுத்ததால் தனது நாடகங்களை முடித்துக் கொண்டார் கருணாநிதி என்று அந்த கேபிளில் சிம்கின் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

ஈழப் பிரச்சினையை வைத்து கருணாநிதி நாடகமாடினார் என்று தயாநிதி மாறனே அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/05/23/maran-called-karunanidhi-october-2008-resignation-drama-aid0091.html

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் இத்தகைய நாடகங்களை (வேறுவழியில்லாமல்) ஆடத்தூண்டியவர்கள் தமிழகத்தின் தமிழின உணர்வாளர்களே (நெடுமாறன் ஐயா, வைகோ, சீமான் போன்றவர்கள்). மக்களிடம் இவர்கள் பிரச்சினைகளை எடுத்துச்சென்று விழிப்புணர்வை ஊட்டியது கலைஞரை இக்கட்டுக்குள் கொண்டுபோய் விட்டுவிட்டது. :rolleyes:

எழுபதுகளில் செய்த கபடத்தன அரசியலை மீண்டும் அரங்கேற்றிய தானைத்தலைவருக்கு விக்கிலீக்ஸ் போன்ற நவீனத்துவங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை (ஏன் நம் எல்லோருக்கும்தான் :D ). விளைவு மாட்டிக்கொண்டுவிட்டார். :wub:

ஓயாது வீணாகக் கத்துகிறார்கள் என்று தமிழகத்தின் இன உணர்வாளர்களை சிலர் எள்ளி நகையாடுவதுண்டு. :rolleyes: ஆனானப்பட்ட கலைஞரையே ஒன்றுமில்லாமல் செய்துவிட்டவர்கள் அவர்கள்..! :rolleyes:

இந்து மன்னிப்பு கேட்க வேண்டும்: தயாநிதி

திமுக பற்றி அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தான் கூறியதாக தெரிவிக்கப்படும் விக்கிலீக்ஸ் செய்திகளை பிரசுரித்தமைக்கு ஆங்கில நாளேடான இந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

இல்லையெனில் 5 கோடி ரூபாய் கேட்டு தான் மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி இந்தியா தலையிடாவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக நேரிடும் என்று கூறும் 2008 அனைத்துக் கட்சித் தீர்மானம் அன்றைய முதல்வர் கருணாநிதி அரங்கேற்றிய நாடகம், மற்றும் திமுகவில் ஊழல் மலிந்துவிட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றெல்லாம் தயாநிதி மாறன் 2008 நவம்பரில் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் இந்து நாளேடு இன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

அது குறித்து தன் வழக்கறிஞர் மூலம் அனுப்பியுள்ள தாக்கீதில் தயாநிதி மாறன் அச்செய்தி பற்றி தன்னிடம் விளக்கம் கேட்காமலும், எதையும் உறுதிப்படுத்தாமலும் வெளியிடப்பட்டிருக்கும் அக்கட்டுரைகள் பொதுமக்கள் மத்தியில் தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும், எனவே வருத்தம் தெரிவிக்காவிட்டால் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

நவம்பர் 2008ல் அமெரிக்க தூதரக அதிகாரியான கான்சல் ஜெனரல் ஆண்ட்ரூ சிம்கின்னை சந்தித்துப் பேசியபோது திமுக தலைவர் கருணாநிதியின் மருமகன் மறைந்த முரசொலிமாறனின் மகனும் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் இவ்வாறு கூறியதாக விக்கிலீக்ஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்து நாளேட்டில் வெளியான கட்டுரை ஒன்று, நவம்பர் 2008ல் கான்சல் ஜென்ரல் ஆண்ட்ரூ சிம்கின்னை தயாநிதி மாறன் சந்தித்துப் பேசியது பற்றிய விக்கிலீக்ஸ் விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

அச்சந்திப்பில் அன்றைய முதல்வர் கருணாநிதியின் தலைமையில் அக்டோபர் 14 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட எம்.பிக்கள் பதவி விலகுவதாக எச்சரிக்கும் தீர்மானமே, மாநிலத்தில் எழுந்திருந்த கடும் மின்சாரப் பற்றாக் குறையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அதிருப்தியை திசைதிருப்ப நிகழ்த்தப்பட்ட ஒரு நாடகம்தான், ஆனால் மத்திய அரசை மிரட்ட அவ்வாறு முயன்றது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்று தயாநிதி மாறன் கூறியதாக சிமிகின்னின் கேபிள் தெரிவிக்கிறது.

அனைத்துக் கட்சித் தீர்மானம் அக்டோபர் 28க்குள் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் எனக்கோரியிருந்தது. ஆனால் அக்டோபர் 26 அன்று சென்னை வந்து கருணாநிதியை அன்றைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்து ஒரு சில முன்முயற்சிகளை மத்திய அரசு எடுக்கும் என்று உறுதியளித்தவுடன் கருணாநிதி பதவி விலகல் முடிவை ஒத்திவைப்பதாக அறிவித்தார். 40 ஆண்டுகாலப் பிரச்சினையை 4 நாட்களில் தீர்த்துவிடமுடியாது என்றும் கருணாநிதி கூறினாரெனவும் சிம்கின்னின் கேபிள் குறிப்பிடுகிறது.

ஆனாலும்கூட அனைத்துக் கட்சி தீர்மானத்தால் எழுந்த கோபத்தின் விளைவாய்தான் சோனியா காந்தி கருணாநிதியின் மகள் கனிமொழியை அப்போது சந்திக்க மறுத்துவிட்டார் என்றும் மாறன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்க தருணத்தில் காங்கிரஸ் திமுகவிற்கு பதிலடிகொடுக்க்க்கூடும் என்று மாறன் அஞ்சியதாகவும் அக்கேபிள் தெரிவிக்கிறது.

தவிரவும் ராகுல் காந்தி உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப்புலிகளுக்கு முடிவுகட்டவேண்டும் என்று நினைப்பதாகவும், அத்தகைய சிந்த்னை காங்கிரசிற்கும் திமுகவிற்குமிடையே மோதலை ஏற்படுத்தியதாகவும் மாறன் மேலும் விளக்கியிருந்ததாக அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/05/110523_maranwikileak.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.