Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊக்கமருந்து சோதனையில் உபுல் தரங்க தோல்வி

Featured Replies

ஊக்கமருந்து சோதனையில் உபுல் தரங்க தோல்வி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின்போது மேற்கொள்ளப்பட்ட தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வீரர் உபுல் தரங்க தோல்வியுற்றமை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விசாரணை நடத்தவுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இடது கை வீரரான உபுல் தரங்க அண்மைக் காலங்களில் சிறப்பாக விளையாடியவர். ஆனால் உலகக்கிண்ணப் போட்டிகளின்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, Prednisolone எனும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தாரங்கவிடமிருந்து பெறப்பட்ட சிறுநீர் மாதிரிகளில் காணப்பட்டுள்ளது.

வி.வி.ஐ.பி. ஒருவரின் மாற்று மருத்துவத்துறை மருத்துவர் ஒருவர் சிபாரிசினால் இம்மருந்தை அவர் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்திருப்பதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. இங்கிலாந்துடான அரையிறுதிப்போட்டியின்போது ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தாரங்க , ஆட்டமிழக்காமல் சதமொன்றைக் குவித்தார். அப்போட்டியில் இலங்கை 10 விக்கெட்டுகளால் வென்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி மாற்று மருத்துவரை குறித்த வி.வி.ஐ.பி., பல விளையாட்டு வீரர்களுக்கு சிபாரிசு செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், கௌதம் காம்பீர், ஆஷிஸ் நெஹ்ரா உட்பட பல விளையாட்டு நட்சத்திரங்கள் கொழும்புக்கு வந்து இம்மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளனர். இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஏனைய விளையாட்டு நட்சத்திரங்கள் பலரும் அண்மைக்காலத்தில் மேற்படி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதாகவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் நிசாந்த ரணதுங்க இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், இத்தகைய சம்பவம் எதுவும் குறித்து உத்தியோகபூர்வமாக எமக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார்.  பயன்படுத்தியமை குறித்து எந்த ஒரு நிறுவனத்திடமிருந்தோ முகவரிடமிருந்தோ அறிக்கை எதுவும் கிடைக்கப்பெறவில்லை என அவர் கூறியுள்ளார்.

எனினும் ஐ.சி.சி. விசாரணையை எதிர்கொள்வதற்கு தாரங்கவின் சட்டத்தரணிகள் தயாராகி வருவதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.  ஐ.சி.சி. பேச்சாளர் ஜேம்ஸ் பிட்ஸ்ஜெரால்ட், இது குறித்து கருத்து கூறுவதற்கு மறுத்துள்ளார்.

http://tamilmirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/22140-2011-05-29-14-06-44.html

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய அணித்தலைவர் திலகரத்தினா டில்சானின்( இஸ்லாம் மதத்தில் இருந்து பெளத்த மதத்துக்கும் மதம் மாறியவர்) மனைவியை உபுல்தரங்க இழுத்துக் கொண்டு ஒடி ஒன்றாக வாழ்பவர். இதனால் டில்சான் 2வது திருமணம் செய்திருக்கிறார். தற்போதைய மனைவி சிங்களத்திரைப்பட நடிகை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.