Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வைகோ அவர்கள் இன்று பாரிசுக்கு வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Wednesday, June 1, 2011, 12:13இந்தியா, உலகம்

1ம் திகதி புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றிய நடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்திருக்கின்ற மதிமுக பொதுச்செயலாளர் மதிப்புக்குரிய வை. கோபாலசாமி அவர்கள் இன்று காலை பெல்ஐயத்திற்கு வருகை தந்து 1ம் நாள் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுடைய சந்திப்பில் கலந்து கொண்டு விட்டு மாலை பாரிசுக்கு வருகை மேற்கொண்டிருந்தார்.

தமிழின விடுதலைச் செயற்பாட்டாளர்கள், உணர்வாளர்கள், இளையவர்கள் மற்றும் இன்னும் பல முக்கியஸ்தர்களையும் சந்தித்திருந்தார்.

இச்சந்திப்பில் பல்வேறு தரப்பினரின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு தனது பயணக்களைப்பையும் பொருட்படுத்தாது பதிலளித்திருந்தார். ஈற்றில் அவர் கூறியதானது தமிழீழ விடுதலையும், அதன் பிதாமகன் தமிழின தேசியத்தலைவர் தம்பி பிரபாகரனும், தமிழீழ மக்களும் என்னுடைய மனதில் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்றும், தனது இறுதி மூச்சு இருக்கும் வரை எந்த இலட்சியத்தை நாம் விருப்புடன் ஏற்றுக்கொண்டோமோ அதை அடையும் வரை ஓயப்போவதில்லை என்றும், இதுவரை காலமும் தேசியத்தலைவன் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த அமைப்புக்கள் தொடர்ந்து அந்த வழியில் பயணிக்க வேண்டும் என்றதோடு தற்பொழுது உலகநாடுகளின் கவனத்தைத் திருப்பியுள்ள தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நியாயத்தன்மையை மேன்மேலும் வெளிக்கொண்டு வர உழைக்க வேண்டும் என்றும், தமிழினத்தின் இன அழிவுக்குக்காரணமான அனைவரையும் சேர்த்து கூண்டில் ஏற்றுவதற்கான அனைத்து வழிகளிலுமான செயற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன் அது சம்பந்தமான பல்வேறு ஆவணங்களை தமது கட்சியினர் தயாரித்து வைத்துள்ளதாகவும்தொடர்ச்சியாக பல போராட்டங்களை தழிழ்நாட்டில் செய்யவுள்ளதாகவும் கூறினார்.

குறிப்பாக சர்வதேசம் சூடான் நாட்டில் வடக்கு சூடான் தெற்கு சூடான் பிரிந்து செல்வதற்கு சுயாதீனமான மக்கள் வாக்கெடுப்பை எவ்வாறு மேற்கொண்டதோ அதேபோல தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை நடாத்த வேண்டும், அதைச் செய்விக்க உலகத்தை நாம்தான் நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும், மனித குலத்தை வதைத்து, துன்புறுத்திப் படுகொலை செய்தவர்களுக்குத் துணை போனவர்களுக்கே பல ஆண்டுகள் கழித்து, சர்வதேசம் நீதிமன்றம் தண்டனையை வழங்கியுள்ளமை முக்கியமான எடுத்துக்காட்டு என்றும், பிரான்சு மற்றும் உலகத்தமிழ் மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற அடங்காத ஆவல் மனதில் உள்ள போதும் காலத்தின் வேகத்தால் தமிழீழ விடுதலைக்காக ஆற்ற வேண்டிய பணி தமிழ்நாட்டில் இருந்து கொண்டிருப்பதால் பிறிதொரு சந்தர்ப்பம் அமையும் போது பிரான்சுவாழ் தமிழ் மக்களையும், உலகத்தமிழ் மக்களையும் சந்திப்பதாகவும், புலம்பெயர் தமிழ்மக்கள் நம்பிக்கையைத் தளரவிடாது, உறுதியோடு, ஒரு மூச்சாகத் தொடர்ந்தும் தமிழின விடுதலை ஆர்வாளர்களின் செயற்பாடுகளுக்கு அர்ப்பணிப்போடு தொடர்ந்து பங்காற்ற வேண்டும், என்று கேட்டுக்கொண்டு சரியான நேரத்தில் எல்லாமே சரியாக வந்து அமையும் அதற்கானதொரு சூழ்நிலையைத் தமிழ்நாட்டு மக்களும், புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களும் உருவாக்க வேண்டும் என்று கூறி நள்ளிரவைத் தாண்டி மீண்டும் பெல்ஐயத்திற்குத் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

எதிர்பாராத சந்திப்பு திடீர் சந்திப்பாக அமைந்தாலும் மிகக்காத்திரமானதொரு சந்திப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

source:tamilthai.

Edited by tamil arasu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.