Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்காவிற்கு இந்தியா – சீனா ஆதரவை வழங்காது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரசுரித்தவர்: admin June 3, 2011

இந்தியா மட்டுமல்ல சீனாவும் சிறீலங்காவிற்கு வெளிப்படையாக ஆதரவை தராது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுள்ள உலக அலையில் சிறீலங்காவை காப்பாற்றப் போய் சுழிக்குள் அகப்பட எந்த நாடுமே விரும்பாது. போர்க் குற்றவாளியை காப்பாற்றும் இடத்தில் இன்றய உலக அரசியல் இல்லை : உதயன் வெளியிட்ட செய்தி :

மனித உரிமைகள் மீறல் தொடர்பில் உலக அரங்கில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசு இந்த விடயத்தில் இந்திய ஆதரவைப் பெற எடுத்த இறுதி முயற்சியும் படுதோல்வி அடைந்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் கடந்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளிக்காத நிலையில், இந்தியாவைச் சாமாளித்துத் தனக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை அதனிடமிருந்து பெறுவதற்காகப் பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை அனுப்பிவைத்தார் ஜனாதிபதி. ஆனால், அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் நிபுணர்குழு அறிக்கைக்கு எதிரான இலங்கையின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டும் நோக்குடன் கடந்த மாதம் 16ஆம் திகதி இந்தியா சென்றார் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் உயரதிகாரிகளைச் சந்தித்து அவர் விரிவான பேச்சுக்களை நடத்தினார்.

அவரது பயணத்தின் இறுதியில் இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் மனித உரிமைகள் மீறல் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதேவேளை, இந்தியாவுக்கு இலங்கை வழங்குவதாக உறுதியளித்திருந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் இலங்கை திடசங்கற்பத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டறிக்கை இலங்கையில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்தியாவின் அழுத்தங்களுக்கு அரசு பணிந்து விட்டது என்று கட்சிகளும் ஊடகங்களும் கடும் கண்டனம் வெளியிட்டன.அதேவேளை, இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் இந்த விடயத்தில் விரைந்து செயற்படுமாறும் இந்த விடயத்தில் காணப்படும் முன்னேற்றத்தைப் பொறுத்தே எதிர் காலத்தில் சர்வதேச அரங்கில் இலங்கைக்கான எந்த வொரு இராஜதந்திர உதவியும் அமையும் என்றும் இந்தியா இறுக்கமாகத் தெரிவித்திருந்தது.இந்த நெருக்கடியான நிலையைத் தணித்து இலங்கை விவகாரத்தில் இந்தியா நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்பதற்காக அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை இரகசியமாக புதுடில்லிக்கு அனுப்பிவைத்தார் ஜனாதிபதி.புதுடில்லி சென்ற பஸிலுக்கு அங்கு பெரிதாக வரவேற்பு அளிக்கப்படவில்லை. இந்திய உயர் தலைவர்கள் எவரையும் சந்திப்பதற்கான வாய்ப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை.

இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மட்டுமே அமைச்சர் பஸில் ராஜபக்ஷவைச் சந்தித்தார். ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட விடயங்களில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தொடர்ந்து எதிர்கால நடவடிக்கைகள் இருக்கும் என்ற இந்திய அரசின் திட்டவட்டமான நிலைப் பாட்டை மேனன் அமைச்சருக்கு எடுத்துவிளக்கினார்.

“சொல்லவேண்டியவைகள் எல்லாம் அமைச்சர் பீரிஸிடம் சொல்லப்பட்டுவிட்டன. இப்போது பந்து இலங்கையின் பக்கமே உள்ளது. அதனைக் கவனமாக விளையாட வேண்டியது அதன் பொறுப்பு” என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய உயர்மட்டத் தலைவர்களைச் சந்திக்க அமைச்சர் பஸில் கடுமையாக முயன்றபோதும் அவை எவையும் வெற்றியளிக்கவில்லை. அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் அன்று மாலையே (26ஆம் திகதி) நாடு திரும்பினார் பஸில்.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் 26ஆம் திகதி காலையில் இந்தியா சென்று தேசிய பாதுகாப்புச் செயலர் சிவ்சங்கர் மேனனைச் சந்தித்துவிட்டு அன்று மாலையே நாடு திரும்பினார் என்று உறுதிப்படுத்தினார் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர்

source:Mykathiravan.

Edited by tamil arasu

சீனாவை தள்ளி வைக்கும் நிலையில் இலங்கை காப்பாற்றப்பட்டுவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.