Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வந்த சிறுவர்களை மலேசியா அனுப்ப திட்டம்

Featured Replies

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வந்த தனிமையாகவுள்ள சிறுவர்களை மலேசியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அந்த சிறுவர்கள் தொடர்பான விபரங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் காலத்தில் அவர்கள் தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்படவுள்ளனர். இந் நடவடிக்கையானது புகலிடம் கோரி வருபவர்களுக்கும் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கும் பலமான செய்தியொன்றை வழங்குவதாக அமையும் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ்போவென் தெரிவித்தார்.

மலேசியாவுடன் அவுஸ்திரேலியா நடத்தி வரும் சர்ச்சைக்குரிய பேச்சுவார்தைகளின் ஒரு அங்கமாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மலேசியாவை அடிப்படையாகக் கொண்ட சில அகதிகள் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படவுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் சிறுவர்கள் தனிமையாக ஏறி இங்கு ஏதாவது மன்னிப்பை பெறலாம் என நினைத்து அல்லது அறிந்து வருவதை நான் விரும்பவில்லை என கிறிஸ்போவென் ஏ.பி.சி. தொலைக்காட்சி சேவைக்கு வியாழக்கிழமை இரவு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என நம்பும் புகலிடம் கோருபவர்களுக்கு வழிகாட்டும் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களது நடவடிக்கைகளை தமது இந்த திட்டம் முறியடிக்கும் என அவர் கூறினார்.

அளவுக்கதிகமானோரை ஏற்றி வந்த படகொன்று அவுஸ்திரேலிய கடற்கரையை அடைய முயற்சித்த போது விபத்துக்குள்ளானதன் விளைவாக சிறுவர்கள் பலர் மாண்ட சம்பவம் இதன் பின்பு மீளவும் ஒருபோதும் இடம் பெறாது என நம்புவதாக அவர் தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றி வந்த படகொன்று கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் கைக் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் பலியானார்கள்.எனினும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த திட்டமானது மேற்படி தனிமையாகவுள்ள சிறுவர்களின் குறிப்பாக இளம் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து கடும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

கிறிஸ்மஸ் தீவிலுள்ள மலேசியாவுக்கு அனுப்புவதற்காக அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சிறுவர்களில் சிறுமிகளும் உள்ளடங்குகின்றனர். மேற்படி தனிமையாகவுள்ள சிறுவர்களின் சட்டபூர்வமான பாதுகாவலனாக தான் உள்ளதை குடிவரவு அமைச்சர் மறந்து விட்டார் என அவுஸ்திரேலிய கிறீன் கட்சியின் செனட் சபை உறுப்பினர் சாரா ஹன்ஸன் யங் தெரிவித்தார். மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையிலுள்ள அந்த சிறுவர்கள் தொடர்பில் தனக்குமுள்ள கடப்பாடுகளை மறந்து குடிவரவு அமைச்சர் அரசியல் ரீதியாக விரைவான நடவடிக்கையொன்றை எடுத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

கிறிஸ் போவெனின் அறிவிப்பு திகைப்பையும் அதிர்ச்சியையும் தருவதாக உள்ளது என அவுஸ்திரேலியாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சிறுவர் முகவர் நிலையமான யுனிசெப்பின் தலைமை நிறைவேற்றதிகாரி நோர்மன் கில்லெஸ்பி தெவித்தார்.

இது மிகவும் கடுமையான திட்டம் என அவர் குறிப்பிட்டார். மலேசிய தடுப்பு நிலையங்களில் தனித்து விடப்படும் பெண்களும் சிறுமிகளும் குழுக்களாலும், யோக்கியமற்ற உத்தியோகத்தர்களாலும் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படலாம் என சர்வதேச மன்னிப்பு சபை கூறியது. மலேசியாவுக்கு அனுப்பப்படும் அனைத்து புகலிடம் கோருபவர்களும் மனித உரிமைகள் துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தனிமையாகவுள்ள பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்றைகள் மற்றும் பாலியல் அத்து மீறல்களை எதிர் கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபையின் பேச்சாளர் கிரஹம்தொம் தெவித்தார்.

புகலிடம் கோருபவர்கள் மத்தியில் தற்கொலை, கலகங்கள், மனஅழுத்தம் என் பன ஏற்படுத்தும் வகையில் அவர்களை தடுத்து வைப்பதற்கு உத்தரவிடுவதை முடிவுக்கு கொண்டுவர அவுஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் மேற்படி திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் மனித உமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் கண்டனம் தெவித்துள்ளார். அவுஸ்திரேலிய அரசியல் வாதிகள் அரசியல் ஆதாயத்துக்காக புகலிடம் கோரி வருபவர்களை அச்சுறுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

எனினும் மேற்படி திட்டமானது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சர்வதேச உயர் குடியேற்ற அலுவலகம் என்பவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் கெவின் ரூத் தெவித்தார். கடந்த ஆண்டு 134 படகுகளில் 6535 அகதிகள் அவுஸ்திரேலியாவை வந்தடைந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

இந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதியிலான தரவுகளின் பிரகாரம் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதியில் 4522 அகதிகளும் கிறிஸ்மஸ்தீவில் 1748 அகதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.