Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கணவன், மனைவி பிரிவது போல் தமிழ், சிங்கள மக்கள் பிரிய முடியாது!

Featured Replies

கணவன், மனைவி பிரிவது போல் தமிழ், சிங்கள மக்கள் பிரிய முடியாது! - அமைச்சர் டலஸ் அழகப்பெரும

இலங்கையில் தமிழ், சிங்கள மக்கள் சதோதரர்கள் போல வாழ்வதால் கணவன், மனைவி பிரிந்து விடுவது போல் அவர்கள் பிரிந்து விட முடியாது என சிறிலங்காவின் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

வவுனியா கலாசார மண்டபத்தில் நேற்று (06.06.11) புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் போராளிகளை விடுவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'தமிழ்,சிங்கள மக்கள் ஏன் பிரிந்து வாழமுடியாது என அண்மையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியிருந்தார். கணவனும் மனைவியும் பிரிவது போல் பிரிந்து விடலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார். கணவன், மனைவி பிரியலாம். ஆனால் தமிழர்களும், சிங்களவர்களும் சகோதரர்கள் என்பதால் அவர்கள் பிரியமுடியாது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதி கூறிய ஒரே நாடு ஒரே இனம் என்ற கருத்தை இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியிலேயே ஆட்சி செய்த தலைவர்கள் கூறியிருப்பார்களேயானால் எமது அகராதியில் சில வசனங்கள் இல்லாது இருந்திருக்கும். பயங்கரவாதிகள், புனர்வாழ்வு நிலையங்கள், குண்டுகள், ஷெல்கள் என்ற வார்த்தைகளே எமது அகராதியில் இல்லாது போயிருக்கும். எமது ஜனாதிபதியிடம் விஷேட தன்மைகள் உள்ளன. எந்தச் செயற்பாட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த செயற்பாட்டை உணர்வுபூர்வமாகவும் சிறந்த முறையிலும் செய்ய வேண்டுமென விரும்புவார். அதனால், ஒருவிடயத்தை தான் செய்வார் அல்லது உறவினரிடம் அந்தப் பொறுப்பை வழங்குவார். இந்த வகையிலேயே வடமாகாணத்திலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்குமாறு கோத்தபாய ராஜபக்சவிடம் பொறுப்பை கொடுத்தார். அதன் பின்னர் அப்பகுதியை அபிவிருத்தி செய்யுமாறு பசில் ராஜபக்சவிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

அமெரிக்கா, பிரித்தானிய போன்ற நாடுகள் மனித உயிர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனக் கூறுகின்றன. 30 வருடங்களுக்கு பின்னர் இன்று இலங்கையில் வாழும் மக்களின் வாழ்க்கைக்கு பெறுமானம் கிடைத்துள்ளது. அதற்கு நல்ல உதாரணம் தான் கட்டுநாயக்காவில் இடம்பெற்ற ஒரு மரணம். இந்த நாட்டைச் சேர்ந்த எல்லோரும் இது பற்றி எந்தளவுக்கு பேசினார்கள். இந்த நாடு ஒருவரது மரணத்தை பற்றி எந்தளவு அதிர்ச்சியடைந்தது.

இரண்டு வருடத்திற்கு முதல் இந்த நாட்டில் என்ன நிலையிலிருந்தது. நாய்களைப் போல் நூற்றுக்கணக்கில் மரணங்களை சந்தித்த நாடு. கிரிக்கெட் ஓட்டத்தை அறிவது போல் எத்தனை குண்டுகள் வெடித்தன, எத்தனை பேர் செத்தனர் என்று கேட்டுக் கொண்டிருந்தோம். 30 வருடங்களாக மரணத்தோடும், இரத்தத்தோடும், சதைகளோடும் வாழ்ந்தவர்கள் நாம். உங்களது பாதுகாப்பை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று அரச தலைவர்கள் கூறினார்கள். அன்று நாம் திகதியிடப்படாத மரணச்சான்றிதழை சட்டைப் பைகளுக்குள் கொண்டு சென்றோம். வவுனியாவிலிருந்து கொண்டு மேலைத்தேய நாடுகளுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். தொகை தொகையாக மரணங்கள் நடந்த இந்த நாடு ஒரு மரணத்தில் எவ்வாறு அதிர்ந்து போயுள்ளதென்பதை பார்க்குமாறு கூறுகிறேன். அதுவே இந்த நாட்டு மக்களினுடைய மனித நேயம், கௌரவம்' என்று அவர் தனதுரையில் கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் சிறிலங்கா அரசாங்கத்தால் இதுவரை எத்தகைய காத்திரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={7CC54B92-6B40-4FBC-86C8-1EDE5818CB25}

கணவன், மனைவி பிரியலாம். ஆனால் தமிழர்களும், சிங்களவர்களும் சகோதரர்கள் என்பதால் அவர்கள் பிரியமுடியாது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={7CC54B92-6B40-4FBC-86C8-1EDE5818CB25}

... ஒரு பக்க நெஞ்சு நோகிறது ... அவ்வளவு அன்பு ... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கணவனும் மனைவியும் பிரிவது போல் பிரிந்து விடலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார். கணவன், மனைவி பிரியலாம். ஆனால் தமிழர்களும், சிங்களவர்களும் சகோதரர்கள் என்பதால் அவர்கள் பிரியமுடியாது.

உண்மையான சகோதர்கள் இங்க தமிழ்நாட்டில் இருக்கம் ... இவர் ஒரு டமாஸ் பேர்வழி போல தெரியுது..

47831.gif47831.gif

எமது ஜனாதிபதியிடம் விஷேட தன்மைகள் உள்ளன. எந்தச் செயற்பாட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த செயற்பாட்டை உணர்வுபூர்வமாகவும் சிறந்த முறையிலும் செய்ய வேண்டுமென விரும்புவார். அதனால், ஒருவிடயத்தை தான் செய்வார் அல்லது உறவினரிடம் அந்தப் பொறுப்பை வழங்குவார். இந்த வகையிலேயே வடமாகாணத்திலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்குமாறு கோத்தபாய ராஜபக்சவிடம் பொறுப்பை கொடுத்தார். அதன் பின்னர் அப்பகுதியை அபிவிருத்தி செய்யுமாறு பசில் ராஜபக்சவிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

0060-0808-0415-5252_Dog_Burying_a_Bone_Clip_Art_clipart_image.jpg

எல்லாம் ஒக்கே .. ஒரு சின்ன டவுட்.. எலும்பு துண்டு வீசும் பொருப்பை யாரிடம் ஒப்படைக்க பட்டுள்ளது?? இல்ல நீங்க இனாமா வேலை செய்கிறீங்கள்

30 வருடங்களுக்கு பின்னர் இன்று இலங்கையில் வாழும் மக்களின் வாழ்க்கைக்கு பெறுமானம் கிடைத்துள்ளது. அதற்கு நல்ல உதாரணம் தான் கட்டுநாயக்காவில் இடம்பெற்ற ஒரு சிங்களவர் மரணம். இந்த நாட்டைச் சேர்ந்த எல்லோரும் இது பற்றி எந்தளவுக்கு பேசினார்கள். இந்த நாடு சிங்களவர் ஒருவரது மரணத்தை பற்றி எந்தளவு அதிர்ச்சியடைந்தது.

Laughing-smiley-face-3.gif

இவன் வவுனியாவில் போய் இப்படி பேசி விட்டு வந்திருக்கிறான் என்றால் எம்மக்களின் இயலாமை தான் விளங்குகிறது....

உண்மையில் எழும் கேள்வி இவன் தமிழனா, சிங்களவனா இல்லை டக்ளஸா இல்லை கருணாவா,......?

இவன் மகளை மானபங்கப்படுத்தி மனைவியின் முலை அறுத்திருந்தாலும் இப்படித்தான் பேசுவான் என்றால் இவனை விட்டு விடுவோம்.... இல்லை இல்லை இவரை மன்னித்து விடுவோம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.