Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெ. வலியுறுத்தல் : சிவசங்கர் மேனன் உறுதி

Featured Replies

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று மாலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சந்தித்து பேசினார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

’’இந்த சந்திப்பின்போது தமிழக முதல்வர் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தனது கவலையை தெரிவித்து இரு நாடுகளுக்கிடையேயான உறுதிமொழிகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதையும், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது நிறூத்தப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்க தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்பதையும், கச்சத்தீவில் ஏற்கனவே தமிழக மீனவர்களுக்கு இருந்த உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் எடுத்துரைத்தார்கள்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தமிழர்கள் எவ்வளவு பேர் இடம் பெயர்ந்தனர் என்பது குறித்தும் எவ்வளவு பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் என்பது குறித்தும் எவ்வளவு பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது என்பது குறித்தும், வெவ்வேறான தகவல்கள் பல்வேறு தரப்பில் இருந்து வருவதை சுட்டிக்காட்டிய முதல்வர், இது குறித்து சரியான தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் வலியுறுத்தினார்கள்.

இது மட்டுமல்லாமல் இன்னமும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு முழுமையான மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்றும்,

போருக்கு முன் வசித்த இடங்களிலேயே மீண்டும் அவர்கள் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், சிங்களர்களுக்கு வழங்கப்படுகின்றன அதே உரிமைகளும் சலுகைகளும் தமிழர்களுக்கும் வழங்கப்படவேண்டும்’என சிவசங்கரனிடம் வலியுறூத்தினார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவ்சங்கருக்கு இலங்கையில் அல்வா கிண்டி வைத்துள்ளார்களாம்.

சிவ்சங்கருக்கு இலங்கையில் அல்வா கிண்டி வைத்துள்ளார்களாம்.

நீஙள் இப்படி சொல்கிறீர்கள். ஆனாலும் எங்களின் அன்புக்குரிய இனிய மலையாள அன்பர்கள் மத்திய அரசில் வகிக்கும் அதிகாரங்கள் ஆயிரம் ஆயிரம். கீழே பாருங்கள்.

1என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,

2வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,

3டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,

4என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,

5பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,

6கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,

7ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,

8மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,

9நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,

10சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,

11ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,

12சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,

13கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,

14பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,

15சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,

16சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,

17வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,

18ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,

19கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,

20கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,

21ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,

22வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,

23பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,

24ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,

25சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,

26ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.

27பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.

28கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்,

29சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர் ,

30நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்,

31பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்,

32ரகு மேனன் - செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ,

33ராமச்சந்திரன் - நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ,

34ரீட்டா மேனன் - ஜவுளிச் துறை செயலாளர்,

35கங்காதரன் - கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்,

36சாந்தா ஷீலா நாயர் - குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்,

37விசுவநாதன் - சட்டத்துறை செயலாளர்,

38மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.

��நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.

அவர்கள்:

1ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,

2வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,

3விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,

4உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,

5ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது,

வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!

சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான். சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள்.

அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.

அப்பாடா இத்தனைபேரா? அப்ப நிறைய அல்வா கிண்ட வேண்டிவரும். :lol: :lol: சந்திப்பின் பின்னான சிவ்சங்கரின் அறிவிப்பைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நயவஞ்சக கூட்டம் சிங்கள அரச பயங்கரவாதிகள் வழங்கும் மதுவையும், விபச்சாரிகளையும், அன்பளிப்புகளையும் வழமை போல் வாங்கிக் கொண்டு வந்துவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.