Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியமே இல்லை

Featured Replies

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை அரசாங்கமே வழங்க வேண்டுமே தவிர பாராளுமன்றம் வழங்க முடியாது. இது மஹிந்த சிந்தனையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமே இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கருத்து தெவிக்கையில், 13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு அவசியமில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இதற்காக மக்கள் ஆணையும் கிடைத்தது.

அத்தோடு அமைச்சர் திஸ்ஸ விதாரண ஆணைக்குழு, சர்வகட்சி நிபுணர்கள் குழு என்பன ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டன. அந்த ஆணைக்குழுக்களும் அரசியல் தீர்வு தொடர்பான பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் கையளித்தன.

இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாம் ஏற்றுக் கொண்டோம். அதனடிப்படையில் அரசியல் தீர்வை வழங்க முடியும். அத்தோடு அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் உள்ளது.

எனவே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை. அரசாங்கத்தினாலேயே அரசியல் தீர்வை வழங்க முடியும். சர்வதேசத்தையும் இந்தியாவையும் ஏமாற்றுவதற்கும் காலத்தை இழுத்தடிக்கவுமே பாரளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

காலத்தை இழுத்தடித்து அரசியல் தீர்வை வழங்காமல் இருப்பதற்கே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த ஐந்து வருடங்களாக ஐ.தே.க. அரசியல் தீர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. ஆனால் அரசாங்கம் எதனையும் கண்டு கொள்ளவில்லை.

இன்று எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லையென குறைகூறுகிறது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் ஆணையும் கிடைத்துள்ளது. அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே இதுவொரு கடினமான காரியமல்ல.?

அதேவேளை 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் முன்னெடுக்க முனைந்தால் அர சாங்கம் பிளவுபடும்.

ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உட்பட மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற கடும் இனவாதக் கட்சிகள் அரசாங்கத்திலிருந்து வெளியேறும்.இதனால் அரசாங்கம் வீழ்ச்சியடையும் ஆபத்தான சமிக்ஞையும் உள்ளது.

எனவே 13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து அதிகாரப் பரவலாக்கலுடனான அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை. எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க யுத்த நிறுத்த புரிந்துணர்வை ஏற்படுத்தி அழிவுகளில்லாமல் யுத்தம் இல்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற் கொண்டார்.

ஆனால் அம்முயற்சி சந்திகா, ஜே.வி. பி. மஹிந்தவினால் தோல்வியடையச் செய்யப்பட்டன என்றார்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசியல் வாதிகளிடம், தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும் என்ற எண்ணம் என்றைக்குமே இருந்தது கிடையாது!

இனி மேல் அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையும் துளி கூட இல்லாமல் போய்விட்டது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.