Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயுததாரிகளைக் கண்ட இடத்தில் சுட உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரசுரித்தவர்: admin July 2, 2011

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலிருப்பதால் படையினர், பொலிஸாரைத் தவிர ஆயுதங்களுடன் நடமாடுவோரை கண்டதும் சுடுமாறு படையினருக்கும் பொலிஸாருக்கும் உத்தரவிட்டுள்ளதாக கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு திமிலைத்தீவு மக்கள் வங்கியில் இடம்பெற்ற கொள்ளையை தொடர்ந்து வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பாக மேலதிக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வங்கி முகாமையாளர்களையும் மட்டக்களப்பில் முன்னர் ஆயுதக்குழுக்களாக இருந்து அரசியல்கட்சியாக உள்ளவர்களையும் நேற்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே மேஜர் ஜெனரல் பொனிபெக்ஸ் பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்;

மட்டக்களப்பில் பாதுகாப்பு அதிகமாகவுள்ள திமிலைத்தீவு பகுதியில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளையானது வெறுமனே சாதாரணமான ஒரு விடயமல்ல.கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டக்களப்பிலேயே அதிக கொள்ளைகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளன. இதற்குக் காரணம் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இருந்துகொண்டு ஆயுதங்களை பயன்படுத்திவருவதாகும்.இந்த ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பில் எமக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன.

அவற்றை நாங்கள் தேடியழிப்போம்.நிச்சயம் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்ட ஐந்து பேரையும் சுட்டுக் கொல்வோம்.

இந்த நாட்டில் ஆயுதம் வைத்திருக்கக் கூடியவர்கள் படையினர் மற்றும் பொலிஸாரே.வேறு எவரும் ஆயுதம் வைத்திருக்க முடியாது.அவ்வாறு வைத்திருந்தால் அவர்கள் யாராயிருந்தாலும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.அவற்றை பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் தேடுதல்களையும் சுற்றிவளைப்புகளையும் வீதித்தடைகளையும் ஏற்படுத்த வேண்டியேற்படும்.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.இவற்றை எவராலும் தடுக்க முடியாது.எந்த அரசியல் கட்சியாயிருந்தாலும் சரி அவர்கள் எவராக இருந்தாலும் சரி நாம் கடும் நடவடிக்கையெடுப்போம்.இங்கு கூறப்படும் கூற்றுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.

ஆரம்பத்தில் ஐந்து இயக்கங்களிடம் ஆயுதங்கள் இருந்தன.பின்னர் அவர்களில் விடுதலைப்புலிகள் தவிர ஏனையவர்கள் ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்தனர். இறுதியில் விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டின் பயங்கரவாதத்துக்கு இடம் கிடையாது.

அபிவிருத்திக்கும் சுதந்திரத்திற்கும்தான் இடமுண்டு.மனதில் உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு சமாதானத்துக்கானவர்கள் போல நடிக்க முடியாது.அவ்வாறு நடிப்பவர்களை எமக்கு தெரியும்.எமது நாட்டின் அமைதியை சீர்குலைக்க முனைபவர்களை தேடி அழிப்போம்.அபிவிருத்திக்கோ சமாதானத்துக்கோ குந்தகம் விளைவிக்கும் சம்பவம் இருந்தால் அதுபற்றி அறிவிக்க வேண்டும்.அறிவிக்காமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

24 மணிநேரமும் நாங்கள் பாதுகாப்பிற்காகக் கஷ்டப்படுகின்றோம். ஆனால் ஆயுதம் தரித்த ஐந்து, பத்துப்பேர் இவற்றைச் சீர்குலைத்து வருகின்றனர். நான் பொலநறுவை உட்பட கிழக்கு மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்கள் இணைந்ததான பாதுகாப்பிற்கு பொறுப்பாகவுள்ளேன். இந்த மாவட்டங்களில் மட்டக்களப்பிலேயே அதிக கொள்ளை, கொலை, கப்பம் கோருதல் என்பன இடம்பெற்றன.

மட்டக்களப்பில் ஆயுதக் குழுக்களாக இருந்தவர்கள் வியாபாரிகளிடம் கப்பம் பெற்றுக் கொண்டு சொகுசாக வாழ்ந்து வந்தார்கள். அந்த நிலை குறைந்திருந்தாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டக்களப்பிலேயே அதிக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து சில அரசியல் கட்சிகளின் பின்புலம் தொடர்பிலும் தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன.

திமிலைத்தீவில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளைக்கு அந்த வங்கியிலே இடம்பெறவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக இடம்பெறாமையும் ஒரு காரணம் என அறிகின்றேன். ஏற்கனவே களுவாஞ்சிக்குடியிலும் இவ்வாறான வங்கிக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தக் கொள்ளையுடன் தொடர்புபட்டவர்களை பிடித்ததுடன், ஒருவரை பிடிப்பதற்கான நடவடிக்கையில் நாம் ஈடுபட்டுள்ளோம். பிடித்தவர்களிடமிருந்து 30 இலட்சம் ரூபா பணத்தையும் மீட்டுள்ளோம். இதேபோன்று இந்தக் கொள்ளையுடன் தொடர்புட்டவர்களையும் விரைவில் பிடிப்போம். அந்த ஐவரையும் அழிப்போம்.

வங்கி முகாமையாளர்கள் வங்கிப் பாதுகாப்புத் தொடர்பான சகல நடவடிக்கைகளையும் பலப்படுத்தவேண்டும். அனைத்து வங்கிகளுக்கும் இன்றிலிருந்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இதற்கு மேலாக இராணுவப் பாதுகாப்பை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வங்கிகளுக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படும் போது அதனை தெரியப்படுத்துவதற்கான தந்திரோபாயங்களை வங்கியில் மேற்கொள்ள வேண்டும். அவற்றில் அபாய ஒலிகளை எழுப்பக்கூடிய சமிக்ஞைகளை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். அதனை முகாமையாளர் எவருக்கும் தெரியாதவாறு எழுப்புவதற்கான ஒழுங்கினை செய்ய வேண்டும். அந்த அபாய ஒலியானது வங்கியின் சுற்றுப்புறத்தில் நூறு மீற்றருக்காவது கேட்கக் கூடியவாறு அமையவேண்டும்.

இன்றிலிருந்து வங்கிக்குள் எந்த வாகனமும் உட்செல்ல அனுமதிக்கக் கூடாது. வங்கி முகாமையாளர் உட்பட பாதுகாப்புத் தரப்பினரின் வாகனங்களும் உட்செல்ல முடியாது. இதனை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். வங்கிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பாதுகாப்புக் கமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். அத்துடன் வங்கியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வங்கிகளுக்கு அருகிலிருக்கும் வீட்டு உரிமையாளர்களுடன் உறவுகளைப் பேணவேண்டும். அவர்களை மாதம் ஒரு முறையாவது அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் ஊடாக பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும்.

வங்கிகள் தங்களது பாதுகாப்புகளை தாங்களே உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அவர்களது பாதுகாப்பு ஊழியர்களைக் கொண்டே பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டியெழுப்ப வேண்டும். பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தல்களை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இந்தக் கலந்துரையாடலுக்கு நேரத்துக்கு சமுகம் தராத வங்கி அதிகாரிகள் குறித்தும் கண்டனம் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் பாதுகாப்புத் தரப்பினர் சார்பாக மட்டக்களப்புஅம்பாறை மாவட்டங்களின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் மகிந்த முதலிகே, மட்டக்களப்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கரவிட்ட மற்றும் படை உயர் அதிகாரிகள், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈரோஸ், ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

http://mykathiravan.com/ta-news/?p=11207

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாயை சுடுவது போலவா .......?

இந்த சிங்கள ராணுவ பயங்கரவாதி ஏன் இப்பிடித் துள்ளுகிறான்?

இதுவரை எத்தனை தமிழர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். எத்தனையோ கொள்ளைகள், கப்பங்கள், கடத்தல்கள் இடம்பெற்ற பொழுதும் கண்ணை முடிக்கொண்டிருந்த சிங்களப் பயங்கரவாதி, இப்ப அரச வங்கி கொள்ளையடிக்கப்பட்ட உடன் துள்ளுகிறான்.

இவனை உசுப்ப ஒரே வழி அரச வங்கிகளைக் கொள்ளையடிப்பதே என்று சொல்கிறானோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.