Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசாங்கத்தின் அசமந்தத்தை தமிழ்நாடு பார்த்துக் கொண்டிராது

Featured Replies

“இந்திய இலங்கை நட்புறவில் தமிழ் நாட்டின் பங்களிப்பு மறுக்கப்படாத அளவுக்கு மதிக்கப்படுகின்றது. இந்தியாவில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் இந்த விடயத்தில் இரகசியமாகக் குழிபறிக்கும் வேலையை ஒழுங்காகச் செய்து வந்துள்ளன.

அதேவேளை, இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் இந்தியாவை வெளிப்படையான துரோகம் இழைத்துவிட்ட நாடாகவே பார்க்கின்றன' என்று சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொதுநிர்வாகத்துறைத் தலைவர் ரா மணிவண்ணன் “த வீக்கென்ட் லீடருக்கு' தெருவித்துள்ளார்.

அரசியல் சமத்துவ உரிமைகள் கோரி இலங்கைத் தமிழர்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக நடத்தி வந்த போராட்டம் இராணுவ நடவடிக்கை மூலம் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதில் இந்தியாவின் வகிபாகம் குறித்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் வினாக்கள் எழத் தொடங்கியுள்ளன.

இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசு காட்டி வரும் அசமந்தப் போக்கு நீடிக்கப் படுவதனை தமிழ் நாடு அரசு சும்மா பார்த்துக் கொண்டிருக்காது என்பதனை தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு தெட்டத் தெளிவாகக் கூறியுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிஸ் தி.மு.க. கூட்டணியை மண்கவ்வச் செய்வதில் இலங்கையின் தமிழர் விரோதக் கொள்கையே பிரதான காரணியாக விளங்கியமை தெரிந்ததே.

காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் இடையிலான வரலாற்று தொடர்பை, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சாதித்த கோபத்தின் மூலம் கொச்சைப்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்டப் போரில் இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்ததாக் கூறியிருந்த இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கூற்றை இந்திய வெளிவிவகார அமைச்சு மறுக்காததன் மூலம் தனது இரட்டை வேடத்தைக் காண்பித்தது.

இந்தப் பின்னணியில் இலங்கையில் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கு இந்தியா உடந்தையாக இருந்தமை பற்றிய குற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றே கூறவேண்டும்.

இந்தியாவின் இத்தகைய குளறுபடியான கொள்கைக்கு எதிராக தமிழ் நாட்டு மக்கள் போர்க் கொடி உயர்த்தத் தொடங்கியுள்ளனர். கடந்த மாதம் தமிழ் நாடு சட்டப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத்தடை உள்ளிட்ட இரண்டு பிரதான தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றியதன் மூலம் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உலக மக்கள் அனைவரும் உணரக்கூடியதாக இருந்தது.

மனித உரிமைகள் ஆர்வலர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை, டப்ளினில் இயங்கிவரும் நிரந்தரமான மக்கள் நியாய சபை உள்ளிடட சர்வதேச நிறுவனங்கள் என பல தரப்பிலிருந்தும் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எழுந்த எதிர்ப்பு அலைகளின் எதிரொலியாகவே இந்த இரு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன எனத் துணிந்து கூறலாம்.

இலங்கை பற்றிய தமிழ் நாட்டின் கொள்கையினை இந்தத் தீர்மானங்கள் மீளாய்வு செய்ய வழிவகுத்துள்ளதுடன் இலங்கை மீதான இந்தியாவின் கொள்கை பற்றிய நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் உரிமையை தமிழ் நாடு அரசாங்கம் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த எம்பி எலக்சன் வரைக்கும் இதே உணர்வு மற்றும் ஜெயலலிதா அவர்களின் செயல்பாடுகள் நன்றாக இருக்கவேண்டும் அப்பத்தான் 40 எம்பிக்களை ஒட்டுமொத்தமாக வாங்கி ஏதாவது செய்யமுடியும்..

டிஸ்கி:

வைக்கோவுக்கு கூட்டணியில் நின்றால் ஒரு 10 எம்பியும் அல்லது தனியாக நின்றால் ஒரு 20 எம்பிக்களும் கிடைத்தால் தான் எம்பிக்க செய்யும் ஆர்பாட்டத்தால் மக்களவையை ஒரு டெய்லி பேசிஸ்ல ஒத்தி வைக்க முடியும். :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.