Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டும் உலகமும் வேறுவேறல்ல!

Featured Replies

விளையாட்டும் உலகமும் வேறுவேறல்ல! - 'இலங்கையின் கொலைக்களம்' விளையாட்டு வீரர்கள் இடையே ஏற்படுத்திய அதிர்வுகள்!!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கோள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் அவுஸ்திரேலிய துடுப்பெடுத்தாட்ட வீரர்களை கடுமையாகப் பாதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சியின் 'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படத்தை அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் பார்வையிட்ட அந்நாட்டின் பிரபல துடுபபெடுத்தாட்ட வீரர் ஒருவர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், பயங்கரமான கனவுகளைக் காண்பதாகவும் தெரிய வருவதாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் இருந்து வெளிவரும் The Sydney Morning Herald எனும் ஊடகத்தில் Peter Roebuck என்பவர் எழுதியுள்ள செய்திக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற போரின் போது சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதவுரிமைகள் சட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான விவகாரத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தலையிட வேண்டும் என அந்நாட்டின் விளையாட்டுச் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைத் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலையானது 1980ஆம் ஆண்டு சிம்பாவே மக்களுக்கு ஏற்பட்டதைப் போன்றதொரு சம்பவம் என அவுஸ்திரேலிய விளையாட்டுச் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்திரேலிய அதிகாரிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அந்நாட்டின் விளையாட்டுச் சம்மேளனத்தால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இவ்வூடகம் தெரிவித்துள்ள முக்கியமான பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

'இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் வரை அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், சிறிலங்காவுடன் எந்தவொரு விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. 1950ஆம் ஆண்டுகளில் மேற்கிந்திய துடுப்பெடுத்தாட்ட அணியின் தலைவராக ஒரு கறுப்பு இனத்தவரை நியமிக்க மறுப்புத் தெரிவிக்கப்பட்ட போது சிலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கவலைகளற்ற கிழ்ச்சியான மேற்கிந்திய மக்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்கும் பண்புகளைக் கொண்ட இலங்கை மக்கள் தொடர்பான புகைப்படங்களை நாம் அனைவரும் பார்வையிட்டுள்ளோம். ஆனால், இந்நாடுகளில் ஏற்படுகின்ற அரசியல் மாற்றங்கள் இத்தகைய புகைப்படங்களின் உண்மைத் தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன.

துடுப்பெடுத்தாட்ட வரலாறானது கடந்த 40 ஆண்டுகளில் கறுப்பு இனத்தவர்கள் மீதான நிறவெறி ஆட்சி மற்றும் சிம்பாவேயின் ஒடுக்குமுறை ஆட்சிகளை எதிர்த்திருந்தது. இந்நிலையில், இலங்கையின் போர்க்குற்ற விவகாரத்தை துடுப்பெடுத்தாட்ட உலகம் ஆழ்ந்த கவனத்தில் கொண்டுள்ளது.

சிறிலங்கா துடுப்பெடுத்தாட்ட அணியுடன் அடுத்த ஆண்டு போட்டிகளில் விளையாடவுள்ள பிரித்தானிய துடுப்பெடுத்தாட்ட அணி இலங்கைக்கான தமது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

இதனிடையில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய அரசாங்கத்திடம் அந்நாட்டின் துடுப்பெடுத்தாட்ட அணியின் தலைவர் Michael Atherton வலியுறுத்தியுள்ளார்.

எதியோப்பியாவின் உணவுப் பஞ்சத்திற்குப் பின்னர் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய 'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக இவர் கூறியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் படைத்தரப்பினரால் போர் நியமங்களுக்கு மாறான வகையில் போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இப்போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் பெரும் தடையாகவுள்ளது.

துடுப்பெடுத்தாட்ட உலகமானது தனக்கான பெருமைகளைக் கொண்டுள்ள அதேவேளையில் துறைசாரா திருப்திகரமான பல செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.

கறுப்பு இனத்தவர் ஒருவரை மேற்கிந்தியத் துடுப்பெடுத்தாட்ட அணியின் தலைவராக நியமிப்பதற்கு வழிவகுத்தமை, முஸ்லீம் இனத்தவர் ஒருவர் அவுஸ்திரேலிய துடுப்பெடுத்தாட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டமை, இந்திய முஸ்லீம் இனத்தவர் ஒருவரை அந்நாட்டு துடுப்பெடுத்தாட்ட அணியின் தலைவராக நியமித்தமை, தமிழர் ஒருவர் தனது நாட்டுக்காக 800 டெஸ்ற் விக்கற்றுக்களைக் கைப்பற்றியமை போன்ற விடயங்கள் துடுப்பெடுத்தாட்ட உலகால் சாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விளையாட்டுத்துறை வீரர்கள் தாம் பிறிதொரு உலகில் வாழ்வது போன்று பாவனை செய்து கொண்டு வாழ  முடியாது. உலகம் வேறு - விளையாட்டு வேறு அல்ல. ஒருவருடைய துன்பங்களில் பங்கு கொள்ளாது தப்பித்துக் கொள்வது என்பது சிறுபிள்ளைத்தனமான செயல்' என இச்செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={AE59771C-3544-4DE7-8990-AE2F622C1D0A}

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.