Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடனான நினைவலைகள்

Featured Replies

எனது முகப்பு புத்தகத்தினூடாக பேராசிரியர் காலமாகிய செய்தி அறிந்து நீண்ட காலமாக தொடர்புகள் இல்லாத எனது பள்ளி தோழனுக்கு தொலைபேசி செய்தேன். தொலைபேசி அழைப்பு அமைந்த பொழுது எனது குரலை அறிந்து கொண்ட அவனது குரலும் வறண்டு கர கரத்தது . அவன் எனது பெயரை விளித்து நீ அறிந்தியோ தெரியாது .என்று தொடங்க. விசயம் அறிந்து தான் எடுத்தேன் என்று சொல்வதுடன் சம்பாசணை தொடங்கியது.சம்பாசணையில் அவரை பற்றிய நினைவுகளும் விவரங்களும் வேறு விடயங்களும் தொடர்ந்தது.அவன் வேறு யாருமல்ல சிவத்தம்பி அவர்களின் நெருங்கிய உறவினன்.அவன் ஹாட்லி கல்லூரியில் உயர்தர வகுப்பில் என்னோடு ஒன்றாக படித்தவன்.உயர்தர, வகுப்பு படிக்கும் பொழுது தான் அவனுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.

எங்களுக்கு 16 அல்லது 17 வயதுகள் தான் அப்பொழுது இருக்கும் .வல்வெட்டித்துறையிலுள்ள ஊரிக்காடு என்னுமிடத்தில் ஒரே மாதிரி அமைப்புடைய மூன்று வீடுகளில் ஒன்றில் ஒரு முறைஅவனுடன் சென்ற பொழுது சிவத்தம்பி அவர்களின் அறிமுகமும் சந்திப்பும் நிகழ்ந்தது.தடித்த பிரமாண்டமான உருவம் வெறும் பள்ளிகூட பசங்கள் என்று நினைக்காமால் அன்புடன் புன்முறுவலுடன் வரவேற்றது. வித்தியோதையா பல்கலைகழகமோ அல்லது வித்தியலங்கரா பல்கலைகழகமோ தெரியாது அத்தருணம் அங்கு பேராசிரியராக இருந்திருக்க வேணும். அந்த பல்கலைகழகங்கள் தான் இப்பொழுது களனி பல்கலைகழகமாகவும் ஜெயவர்த்தனபுர பல்கலைகழகமாக மாற்றம் பெற்றிருக்கவேண்டும்.விடுமுறையில் வந்திருந்த பொழுது அவரை சந்தித்து இருந்தோம்,அவர் ஏதோ ஒரு பல்கலைகழகத்தில் வாத்தியார் மற்றும் கரவெட்டியை பிறப்பிடமாக கொண்டவர் என்பதை தவிர அவரை பற்றி கேள்விப் பட்டதன் மூலம் ஏற்பட்ட விம்பங்கள் எனக்கு விருப்பபட்டதாக இருக்கவில்லை .ஏனெனில் அப்பொழுது சிறிமா அரசாங்கம் நடைபெற்று கொண்டிருந்தது. அந்த அரசாங்கத்தில் மொஸ்கோ சார்புடைய கம்னீயூஸ் கட்சியும் அங்கம் வகித்து இருந்தது ,இவரும் மொஸ்கோ சார்பு கம்னியூஸ் கட்சி சார்பு அரசியல் நிலைப்பாடு உடையவராக இருந்தார்.அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த so call இடதுசாரிகள் என்று அழைக்கபடுவோரும் அமைச்சர்களாக அங்கம் வகித்தனர். .அவர்கள் இவருடைய நண்பர்கள் என்று அறிந்திருந்தேன். தமிழ் அரசியலையே மட்டும் தெரிந்து கொண்டு அதையே அப்பொழுது ஆதரித்து கொண்டு இருந்த எனக்கு அவரின் இந்த விம்பங்கள் இயல்பாக பிடிக்காமால் இருக்கும் தானே.

என்னை அவன் அவருக்கு அறிமுக படுத்தி இருந்தான் இந்த ஊர் தான் இவனும் என்று . தொடர் விசாரிப்புகளினூடாக இன்னாரின் நெருங்கிய உறவினன் நான் என்று அறிந்தவுடன் மிகவும் மகிழ்வுடன் பேச்சை தொடங்கினார் ,ஏனெனில் எனது நெருங்கிய உறவினரின் மிகவும் நெருங்கிய நண்பராம் ஒரு காலத்தில்

.,பேராதனை பல்கலைகழகத்தில் கைலாசபதி ,அவர், எனது உறவினர் எல்லாரும் ஒன்றாக படித்ததாகவும் கூறினார் .அவை பற்றிய நினைவிலைகளையும் எங்களுடன் அப்பொழுது பகிர்ந்து கொண்டார்.

அவர்களுடனான அந்த முதல் சந்திப்பே எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது

அவனுக்கும் அவருக்கும் சம்பாசனை அரசியல் இலக்கியமென்று மாறி விவாதமாக மாறியது ,அவனுக்கு இந்த சிறிய வயதிலையே நிறைய வாசிப்பு பழக்கம் இருக்கு என்று எனக்கு ஏற்கனவே தெரிந்த பொழுதிலும் , இப்படி பெரிய பேராசிரியருடன் சமனுக்கு சமன் வாக்கு வாதம் செய்வான் என்று நினைக்கவில்லை. அதற்க்கு மேலாக உறவினன் என்றாலும் அவனை ஒரு பள்ளிகூட பயல் என்று பார்க்காமால் அங்கீகரித்து இவ்விடயங்களை பேசியது ஆச்சிரியத்தை தந்தது.பின்னர் தான் அறிந்து கொண்டேன் இப்படி அவர்கள் அடிக்கடி விவாதிப்பது வழக்கமென்று.

அவன் இந்த சிறிய வயதில் சீன சார்பு கம்னீயூஸ் கட்சியிடம் (வீ ஏ கந்தசாமி-கார்த்திகேசு பிரிவு) அரசியல் ஞானம் பெற்றவன் .அதனால் அங்கு பீகிங் மொஸ்கோ யுத்தம் நடப்பது போல் எனக்கு முதலில் தோன்றியது..ஆனால் பின்னர் அவன் பீகிங்கையும் சாடியது தெரிந்தது, அது ஏன் என்று விளங்கவில்லை ஏனெனில் உண்மையை சொல்லப்போனால் அத்தருணம் திராவிட மற்றும் தமிழ் அரசியலை தாண்டிய எதுவும் நான் அறிந்திருக்கவில்லை.இலக்கியமென்றால் இராமாயணம் மகாபாரதம் என்று பள்ளி புத்தங்களில் படித்ததுண்டு ,வீரகேசரி பிரசுரங்கள் மற்றும் கல்கியின் பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதத்துக்கு மேலாக அப்பொழுது எதுவும் வாசித்து இருக்கவில்லை .அதனால் அவர்கள் நடத்தும் இலக்கியம் பற்றிய பரிபாசைகள் எனக்கு அவர்கள் தமிழில் கதைத்து கொள்ளுகிறார்கள் என்று உணர்ந்து கொண்டாலும் அன்னியமாகவே இருந்தது, அப்பொழுது எனது தொடர் மெளனத்தை அவதானித்த பேராசிரியர் என்னையும் விவாதத்தில் இணைத்து கொள்ளலாமோ என்ற மாதிரி கேள்வி எழுப்பி இருக்க வேணும் .அதுக்கு அவன் இவனுக்கு பெரிதாக இவைகள் பற்றி தெரியுமென்று சொல்ல இயலாது அதோடை இவைகள் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் சொல்ல இயலாது என்றான் . அத்துவித தத்துவம் போல் இருந்தது அவன் எனக்கு சான்றிதழ் கொடுத்த விதம்.

,

பின்னர் அவனுடன் சேர்ந்து பேராசிரியரை சந்திக்கும் வாய்ப்பு பல முறை கிடைத்தது.பேராசிரியரின் நண்பருமாகிய எனது உறவினருடனும் சேர்ந்து அவரை சந்தித்து இருந்தோம் .அப்பொழுது நாங்கள் இருவரும் உயர்தர உயிரியல் பிரிவில் இருமுறை தோற்றி மட்டை அடித்து இருந்தோம் .எனது உறவினர் அதை பற்றி கவலையோடு கூற அதற்க்கு பேராசிரியர் இப்படி கூறியிருந்தார். இவங்கள் ;கலைப்பிரிவில் படித்திருந்தாங்கள் என்றால் எப்பவோ பல்கலைகழகத்துக்கு போயிருப்பாங்காள் என்று. அவருடைய நம்பிக்கையை வீண் போக்காமால் ;நானும் அவனும் குறுகிய கால காலத்தில் கலை பிரிவில் படித்து பரீட்சை எழுதி பல்கலை கழகத்துக்கு தெரிவாகி இருந்தோம் .

பேராசிரியருடனான இந்நினைவிலைகளில் என்னால் இலக்கியம் படைப்புகள் மற்றும் ஆழமான விசயங்களை பகிர முடியவில்லை . ஏனெனில்;இவனுக்கு பெரிதாக இவைகளை பற்றி தெரியுமென்று சொல்ல இயலாது அதோடை இவைகள் பற்றி ஒன்று தெரியாது என்றும் சொல்ல இயலாது

என்று.அவன் அப்ப பேராசிரியருக்கு என்னை பற்றி கொடுத்த சான்றிதழ் இப்பவும் பொருந்தும் என்ற நிலமை ..எனது வாசிப்புகளின் அளவு இப்பவும் மிக குறைவு ..அதனால் இத்துடன் பேராசிரியர்

பற்றிய எனது நினைவலைகளை முடித்து கொள்ளுகிறேன்

http://sinnakuddy.blogspot.com/2011/07/blog-post.html

Edited by sinnakuddy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.