Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் கொலைக்களங்களின் விளைவு – சுற்றுப்பயணத்தை நிறுத்துமா அவுஸ்ரேலிய துடுப்பாட்ட அணி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் கொலைக்களங்களின் விளைவு – சுற்றுப்பயணத்தை நிறுத்துமா அவுஸ்ரேலிய துடுப்பாட்ட அணி?

[ வெள்ளிக்கிழமை, 15 யூலை 2011, 16:25 GMT ] [ நித்தியபாரதி ]

அவுஸ்ரேலிய துடுப்பாட்ட அணி சிறிலங்காவுக்கான சுற்றுப் பயணத்தைப் புறக்கணிக்கத் தீர்மானித்தால், உலக துடுப்பாட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று சிறிலங்காவின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான காட்சிகளை உள்ளடக்கிய, சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணத் திரைப்படம் அவுஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சியின் நான்கு கோணங்கள் நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பப்பட்டது.

இதன்பின்னர் அவுஸ்ரேலிய துடுப்பாட்ட அணியிலுள்ள சில வீரர்கள் தனிப்பட்ட ரீதியாக, சிறிலங்காவுக்கு சுற்றுப்பயணம் செய்வது தொடர்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

'சிறிலங்காவுக்கான சுற்றுப் பயணத்தை அவுஸ்ரேலிய துடுப்பாட்ட அணி மேற்கொள்ள வேண்டுமா?' என்று 'The Age' இணையத்தளம் நடத்திய கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 3527 பேரில் 81 வீதமானவர்கள் 'இல்லை என்று பதிலளித்துள்ளனர்.

இந்தநிலையில் தனிப்பட்ட ரீதியாக அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர்கள் எடுத்துள்ள தீர்மானம; உலகத் துடுப்பாட்டத்துக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும் என்று துடுப்பாட்ட உலகின் புகழ்பெற்ற வீரர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

'விளையாட்டும் அரசியலும் வேறுபட்டது. அவுஸ்ரேலியாவானது சிறிலங்கா, பாகிஸ்தான், சிம்பாப்வே போன்ற நாடுகளுடன் விளையாட முன்வராவிட்டால், அந்தநாட்டு வீரர்களால் சில நாடுகளுடன் மட்டுமே விளையாட முடியும். இதன் விளைவாக உலகத் துடுப்பாட்டமானது செயலிழந்து போய்விடும். ஐபிஎல் முடிவுக்கு வந்து விடும்' என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அண்மையில் சிறிலங்கா துடுப்பாட்ட அணி வீரர்கள் இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, அங்குள்ள தமிழ் மக்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக, கருத்துத் தெரிவித்த போதே முத்தையா முரளிதரன் இவ்வாறு கூறியுள்ளார்.

இத்தைகைய ஆர்ப்பாட்டங்களானது அஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் தஞ்சம் கோரி வாழும் தமிழர்களின் சுயநலத்தின் வெளிப்பாடு என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 'உண்மையில் துடுப்பாட்ட வீரர்களின் நிலைப்பாட்டை தான் விளங்கிக் கொள்வதாகவும், சனல் 4 தொலைக்காட்சிச் சேவையால் வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படத்தைப் பார்வையிட்டு அது தொடர்பான தமது சொந்தத் தீர்வை அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் எடுத்துக் கூறவேண்டும்' என்று தமிழர்களுக்கான அவுஸ்திரேலிய ஒத்துழைப்புச் சங்கத்தைச் சேர்ந்த விக்ரர் ராஜகுலேந்திரன் தெரிவித்துள்ளார்.

“விளையாட்டையும் அரசியலையும் கலக்க வேண்டாம் என சிலர் வாதிடுகின்றனர்.

ஆனால் தென்னாபிரிக்கா, சிம்பாவே போன்ற நாடுகளில் ஏற்பட்ட அரசியல் ரீதியான பிரச்சினைகளிலும் விளையாட்டு வீரர்கள் தமது அழுத்தத்தைப் பிரயோகித்திருந்தனர்.

அதைப் போன்று ஏன் இப்போது அவர்கள் செய்யக் கூடாது? இது தனிப்பட்ட விளையாட்டு வீரர்களைப் பொறுத்தது“ என்று ராஜகுலேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

“அவுஸ்ரேலிய அரசாங்கமானது, சிறிலங்காவுக்குச் செல்ல வேண்டாம் என துடுப்பாட்ட வீரர்களிடம் கூறமாட்டாது.

ஆனால் அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர்கள் இவற்றை மிக ஆழமாக அவதானித்து இது தொடர்பாக தீர்மானத்தை எடுக்க முடியும்.

அவர்கள் ஒத்த முடிவொன்றை எடுத்து அதனை அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் தெரிவிக்க முடியும்.

ஆனால் இவ்வாறான நாடொன்றில் விளையாடுவதை நாம் விரும்பவில்லை. முன்னர் இது ஒரு பாதுகாப்பிற்கு அச்சறுத்தலான விடயமாக இருந்தது. தற்போது இது ஒரு மனித உரிமை விவகாரமாக உள்ளது' என்று ராஜகுலேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

2007 இல் சிம்பாப்வேக்குச் செல்ல வேண்டாம் என தனது நாட்டுத் துடுப்பாட்ட வீரர்களை அவுஸ்ரேலிய அரசாங்கம் தடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஓகஸ்ட் 06ம் நாள் தொடக்கம் அவுஸ்ரேலிய துடுப்பாட்ட அணி சிறிலங்கா துடுப்பாட்ட அணியுடன் 20-20 அனைத்துலக துடுப்பாட்ட போட்டி தவிர, 05 ஒரு நாள் போட்டிகளிலும், 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20110715104287

'விளையாட்டும் அரசியலும் வேறுபட்டது. அவுஸ்ரேலியாவானது சிறிலங்கா, பாகிஸ்தான், சிம்பாப்வே போன்ற நாடுகளுடன் விளையாட முன்வராவிட்டால், அந்தநாட்டு வீரர்களால் சில நாடுகளுடன் மட்டுமே விளையாட முடியும். இதன் விளைவாக உலகத் துடுப்பாட்டமானது செயலிழந்து போய்விடும். ஐபிஎல் முடிவுக்கு வந்து விடும்' என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

முன்பு தென் ஆப்பிரிக்காவின் இனவெறியைக் கண்டித்து சர்வதேச அளவில் அந்த நாட்டுடன் யாரும் கிரிக்கெட் உறவுகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்தது. இதனால் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாமல் போனது தென் ஆப்பிரிக்கா.அதேபோல ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியையும், அதன் இனவெறிக்காக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் புறக்கணித்து வருகின்றன.

http://thatstamil.oneindia.in/news/2011/07/15/muralitharan-warns-oz-not-boycott-sl-series-aid0091.html

  • கருத்துக்கள உறவுகள்
<_< அவர்கள் விளையாடத்தான் போகிறார்கள். பணத்தின் முன்னால் மனிதவுரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் செல்லாக்காசு !!!

ஒரு பிரபல்யமான அவுஸ்திரேலியா இல்லை இங்கிலாந்து வீரர் புறக்கணித்தாலே ( யார் பூனைக்கு மணி கட்டுவது ? அது ஒரு பொறியாக பரவிவிடும்.

அப்படியான ஒருவரை இனம்கண்டு நாமும் அணுகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.