Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பட்டாம் பூச்சிகளின் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ ரீடர்ஸ்... "பட்டாம்பூச்சிகளின் வாழ்க்கை, எங்கள் மனசை பிசைகிறது...' என்று எழுதியிருந்தீர்கள். என்ன செய்வது? பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பர். இந்த வாரம் நாம் பார்க்கப் போவது, என் கல்லூரித் தோழியின் கதை...

என் தோழியின் பெயர் காஞ்சனா - பெயர் மாற்றியுள்ளேன்; நன்றாகப் படிப்பாள். இவர்கள் வீட்டில் நான்கு சகோதரிகள்; என் தோழி, இரண்டாவது பெண். தோழிக்கும் வந்தது காதல். இவள், உயர் ஜாதியைச் சேர்ந்த பணக்காரப் பெண். இவளது காதலனும் பணக்காரன்; ஆனால், சமுதாயத்தால் தாழ்ந்த ஜாதி என்று வர்ணிக்கப்படுபவன்.

அப்பாவி பெண்களுக்குக் கூட, காதல் வந்ததும் எப்படித்தான் வீரம் வருமோ... காஞ்சனாவின் அக்கா, ஒருவரை விரும்பினாள். விஷயமறிந்த பெற்றோர், காதலை காலில் போட்டு நசுக்கி, வீட்டில் அடைத்து வைத்திருந்து, வேறு ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

அக்காவின் கணவருக்கு, தன் மனைவியின் பழைய காதல் தெரிய வந்ததும், தினமும் அடி, உதை; எதற்கெடுத்தாலும் சந்தேகம் என, கொடுமைகளை அனுபவிக்கிறாள் தோழியின் அக்கா.

இதனால், காஞ்சனா தன் காதலனிடம், "எங்க வீடு, காதலுக்கு பயங்கரமான எதிரி. எனவே, கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் போதே, வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொள்வோம்...' என்று சொல்லி, இருவரும் திருட்டுத்தனமாக, "அலைபாயுதே' ஸ்டைலில் திருமணம் செய்து கொண்டனர்.

படிப்பு முடிந்தது. ஜோடிகள் வீட்டை விட்டு, "எஸ்கேப்' ஆகும் நேரம் வந்தது. விடிகாலை, 5:00 மணிக்கு, பையில் துணியுடன், பஸ் ஸ்டாண்டில் காஞ்சனா வெயிட்டிங்; காதலன் வந்து விடவே, இருவரும் பறக்க இருந்த நேரம் பார்த்து, அந்த ஊர் போலீஸ்காரர் பார்த்து, காதலனைப் பிடித்து, கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

"நீ யாரு... என்னை கேள்வி கேட்பதற்கு? இவள் என் மனைவி...' என்று சொல்ல, கொத்தாக அள்ளிச் சென்று, அவனை காவலில் வைத்து விட்டார்.

காஞ்சனா வீட்டிற்கு நியூஸ் பறந்தது. ஓடி வந்த பெற்றோர், மகளை அடி, அடியென அடித்தனர். பதிவு திருமணம் செய்து கொண்ட செய்தி கேட்டு, துடிதுடித்துப் போய் விட்டனர். காரணம், எங்கள் ஊர்க்காரர்களால், கேவலமாக எண்ணப்படும் கீழ் ஜாதியை சேர்ந்தவன் மாப்பிள்ளை.

பெண் வீட்டாரின், "பலத்தால்' காதலனை, பின்னி பெடலெடுத்து விட்டனர் போலீசார். ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து, பதிவு திருமணத்தை, "வாபஸ்' வாங்கினர். காஞ்சனாவை வீட்டுக்காவலில் வைத்தனர்.

பின், பெரிய நகர் ஒன்றில், தீராத விளையாட்டுப் பிள்ளையாக, உருப்படாமல் திரிந்த, பணக்கார பையனுக்கு, யாரும் பெண் கொடுக்க வராததால், காஞ்சனாவை அவன் தலையில் கட்டினர்.

தன் மகனுக்கு, பெண் கொடுக்க வந்தனர் என்ற குஷியில், பெண்ணை பற்றி அதிகம் விசாரிக்காமல், சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடித்தனர்.

கணவர் சரியான பொறுக்கி. மாமியாருக்கு எப்படியோ காஞ்சானாவின் முந்தைய திருமண விஷயம் தெரிந்து, அதிர்ந்தாள். தன் மகன் என்னதான் பொறுக்கியாக இருந்தாலும், தன் மருமகளின் லீலைகள், அவளை மிகவும் பாதிக்கவே, தினமும், "டார்ச்சர்' தான்.

"ஏண்டி... நானே எத்தனையோ பொண்ணுங்களுக்கு, "அல்வா' கொடுத்தேன்; ஆனால், நீ எனக்கே அல்வா கொடுத்து, என்னை, இரண்டாவது புருஷன் ஆக்கிட்டியே டீ...' என, குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறான் கணவன்.

இப்போது, தினமும் செத்து, செத்து பிழைக்கிறாள் காஞ்சனா.

அங்கே போலீஸ் அடித்த அடியில், மனநிலை பாதிக்கப்பட்டு, பைத்தியமாகவே ஆகி விட்டான் காதலன். இங்கே, காஞ்சனாவின் மற்ற இரு தங்கைகளும், 30 வயதை நெருங்கி கொண்டிருக்கின்றனர். ஒருவரும் பெண் கேட்டு வருவதில்லை.

தாழ்ந்த ஜாதி எனக் கூறப்படுவதால், காதலை பிரித்து, ஏமாற்றி இன்னொருவர் தலையில் கட்டியதால் வந்த வினையை பார்த்தீர்களா? ஏன் இந்த விபரீதம்; இதனால், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...

உங்கள் பிள்ளைகள், வரம்பை மீறி சென்ற பின், அவர்கள் வாழ்க்கையை நாசம் செய்யாதீர் பெற்றோர்களே...

— தொடரும்.

- ஜெபராணி ஐசக்

Dinamalar.com

Edited by SUNDHAL

இந்தக் கதையை பிரசுரித்த இணையம் அல்லது சஞ்சிகையின் பெயரை குறிப்பிடவும். உங்கள் ஆக்கம் இல்லயெனில் மிக கண்டிப்பாக அதன் மூலத்தை குறிப்பிடல் வேண்டும்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நிழலி அண்ணா காமடி பண்ணிக்கொண்டு? இப்பிடிலாம் எழுத நமக்கு வருமா?

இ தினமலர் பத்திரிகைக்கார ஜெபரானி ஜசக் எழுதியது............

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரியமானவர்களே... இந்த வாரம், இரண்டு சகோதரிகளின் கதையை சொல்லப் போறேன்...

இவர்களது அம்மா, பெண் பிள்ளைகளை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்; ஒரே மகனை சட்டை செய்ய மாட்டார். காரணம், பெண்கள் இருவரும் நல்ல நிறம், அழகு, உயரம், படிப்பு, விளையாட்டு, டான்ஸ் என, சகலகலா வல்லிகள்; ஆனால், ஆண் மகனோ, கறுப்பு, ரொம்பவும் அமைதியாக இருப்பான். இதனால், பெண் குழந்தைகளுக்கு ஓவர் செல்லம் கொடுத்து வளர்த்தார் தாயார். அப்பா பேச்சை கேட்க மாட்டார்கள்; அம்மா சொல்வது தான் வேதவாக்கு.

திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்தனர்... பார்க்கின்றனர்... பார்த்துக் கொண்டே இருக்கின்றனர். எந்த மாப்பிள்ளை என்றாலும், ஒரு நொட்டம் சொல்வர் பெண்கள் இருவரும். "இந்த மாப்பிள்ளை அழகாகத்தான் இருக்கான்; ஆனால், பி.எச்டி., பண்ணலியே...' என்பர்.

"இவனுக்கு படிப்பு, அந்தஸ்து எல்லாம் இருக்கு; ஆனா, அஜீத் மாதிரி இல்ல... ரொம்ப சாதாரணமா இருக்கான்!' என்பர்.

"என்னம்மா சொல்றீங்க... அழகெல்லாம் கொஞ்சம் நாளைக்கு தானேம்மா... ரொம்ப நல்ல குடும்பம்; பையனுக்கு சொத்து நிறைய இருக்கு... எம்.என்.சி., கம்பெனியில் வேலை செய்யறான்ம்மா...' என்பார் அப்பா.

அதற்கு அம்மாகாரி குறுக்கிட்டு, "என்னங்க... என் பொண்ணோட அழகுக்கு, இவன் ஏத்தவன் இல்லை. ரெண்டு பேரும் ஜோடியா வெளில போனா, விஜய் - த்ரிஷா மாதிரி இருக்க வேணாமா?' என்பார்.

"ஏய்... நீ இப்படி பேசியே உன் பொண்ணுங்க வாழ்க்கையில மண்ண போடுற... ஒழுங்கா உன் பொண்ணுங்களை அடக்கி வை... என்னால வெளில தல காட்ட முடியலடீ... ரெண்டு பொண்ண வச்சிகிட்டு எப்ப கல்யாண சாப்பாடு போடுவேன்னு எல்லாரும் பிடுங்கி எடுக்குறானுக. மரியாதையா சொல்றேன்... சீக்கிரமா நல்ல முடிவு எடுங்க!' என்று திட்டுவார் அப்பா.

"அப்பா... உங்க வேலைய பாருங்க. எங்களுக்கு வர்றவங்க சூப்பரா இருக்கணும்... அதே சமயம் நல்ல, "வெயிட்டு' பார்ட்டியா இருக்கணும்!' என்பர்.

"அப்படியா... அப்படின்னா நல்ல, "இரும்பு' வியாபாரியோட மகனா பார்க்குறேன்; அவன் தான், "வெயிட்' பார்ட்டியா இருப்பான்!' என்பார் அப்பா.

"இது நொட்டை... நொள்ளை...' என்று சொல்லி சொல்லியே, 30 - 32 வயது ஆகிவிட்டது. அடுத்து, மிகவும் அடக்கமான, பணக்கார குடும்பத்திலிருந்து உயர்ந்த வேலையில் உள்ள, மாப்பிளளை ஒருவன், இவர்களது அழகில் மயங்கி, திருமணம் செய்ய முன் வந்தான். எல்லா காரியமும் ஓ.கே., ஆகிவிட்டது. கடைசியில், நம்ம ஹீரோயின்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

"அம்மா... அந்தப் பையனோட அம்மா, நடுத்தர வயதுடன் ரொம்பவும் திடமா இருக்காங்க. இவங்க எப்ப போறது? அத்தோடு நாத்தனார் வேறு இருக்கு. எனக்கு பார்க்கிற மாப்பிள்ளை வீட்டில், மாமியார், நாத்தனார் எல்லாம் இருக்கவே கூடாது!' என்றனர்.

மகள்களுக்கு ஒரு அம்மா எப்படி புத்தி சொல்லணும்...

"மகள்களே... இதெல்லாம் ரொம்ப தப்பு... நாளைக்கு நாம் மாமியார் ஆக மாட்டோமா?' என்று சொல்லணுமா இல்லையா?, "ஆமாம்... ஆமாம்... என் மகள்கள் சொல்வது சரிதான். சரி... சரி... வேறு இடம் பார்ப்போம்...' என்றார்.

அப்பாவுக்கு வந்ததே ஆத்திரம்...

"ஏண்டீ... உன் மருமகளை மட்டும் நீ என்ன பாடு படுத்தற... அப்பாவிப் பொண்ணு வந்து உன்கிட்ட மாட்டிகிச்சி... நீ அதை ஒரு வேலைக்காரியை விட கேவலமா, "ட்ரீட்' பண்ற... அப்பப்ப எங்கே உன் மருமகள், மகனை உன்கிட்ட இருந்து பிரிச்சிகிட்டு போயிடுவாளோன்னு பயந்து, உன் மகனுக்கு என்னெல்லாம் தூபம் போடுற... இது உனக்கே அடுக்குமாடி...நீயும், பொண்ணுங்களும் எக்கேடோ கெட்டு ஒழியுங்கள். இந்த யுகத்தில், உன் பொண்ணுங்களுக்கு கல்யாணமே ஆகப் போறது இல்ல... இனி, உங்க விஷயத்துல நான் தலையிடவே மாட்டேன்!' என்று சபித்தார் அப்பா.

இதற்கெல்லாம் காரணம், பெண்கள் இருவரும் நன்றாக சம்பாதிக்கின்றனர். தனியாக ஒரு வீடு எடுத்து, அங்கே எல்லா பொருட்களையும் வாங்கி வைத்து, தனிக்காட்டு ராணிகள் போல், சுதந்திரமாகத் திரிவதுதான். அவர்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது... யாராவது கேள்வி கேட்டால், "எங்களது சுதந்திரத்தில் நீங்கள் தலையிடாதீங்க!' எனத் திட்டுவர்.

சமீபத்தில் மிகவும் அழகான ஒரு மாப்பிள்ளை வந்தார். மூத்த மகள், ஜொள்விட்டு, "அம்மா இந்த மாப்பிள்ளைய பேசி முடிச்சிடு!' என்று கிரீன் சிக்னல் காட்டினாள்.

குடும்பத்தினர் மிகவும் ஆச்சரியப்பட்டு, மாப்பிள்ளை வீட்டாருடன் பேசினர்; ஆனால், மாப்பிள்ளையோ, "பொண்ணு பார்ப்பதற்கு வயசானவள் போல் இருக்கிறார்... முகம் எல்லாம் கிழடு தட்டி விட்டது. நிச்சயமாகவே நீங்கள் சொல்ற வயசு பொய்... பெரிய பொம்பளையை என் தலையில் கட்டப் பாக்குறீங்களே...' என போட்டானே ஒரு போடு.

அம்மா, மகள்கள் மூவருக்கும் இப்படி ஒரு சாட்டையடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

தாங்கள் இன்னும், "அழகி மீனாக்கள்' என நினைத்து, "அந்த மாப்பிள்ளைக்கு பிரஷ் மீசை, இவனுக்கு பர்ஸ் வாய்... இவன் மூஞ்சி இடிச்சி வச்ச ஈயச் சொம்பு போல இருக்கு...' என திட்டியவர்கள், முதல் முறையாக இப்படிப்பட்ட அம்புகள் தாக்கியதும், மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இது, அவர்களது, "ஈகோவை' பயங்கரமாக தாக்கியது.

ஏறு, ஏறு... என்று ஏறினார் அப்பா.

"ஏண்டி... ஜாதகத்தை தூக்கிட்டு தேதியை மாத்தாதீங்க... போலி ஜாதகம் தயாரிக்காதீங்கன்னு... எத்தனை வாட்டி சொன்னேன் கேட்டீங்களா... எத்தனை மாப்பிள்ளைகளை, "இவன் நொட்ட, நொள்ளை, குள்ளம், கவுண்டமணி, செந்தில்...'ன்னு கிண்டல் செய்தீங்க. இப்ப உங்க நிலைமை என்னாச்சு... கிழடு தட்டிப் போன முகத்த வச்சிட்டு நீங்க, அஜீத், விஜய் மாதிரி மாப்ள எதிர்பார்க்கிறீங்களே... உங்களுக்கு ரஜினி, கமல் வயசுலதான் மாப்ள வருவான்னு எனக்கு தெரியும்; ஆனா, இப்ப இருக்கிற நிலமையை பார்த்தா, அதுவும் சந்தேகம் தான். இதுக்கெல்லாம் உங்க அம்மா தான் காரணம். இவளை நாலு போடு போட்டிருந்தா, இந்நேரம் நீங்கள் ரெண்டு பேரும் கையில் ஒரு குழந்தையுடன் இருந்திருப்பீங்க. உங்களை கெடுத்து வளர்த்ததும் இல்லாம, <உங்க வாழ்க்கையையே சீரழிச்சிட்டா...' என, புலம்பி தீர்த்தார்.

இப்போது உண்மையை <உணர்ந்த சகோதரிகள், ஓரளவுக்கு நல்ல வரன் வந்தாலே போதும் என நினைக்கின்றனர். ஆனால், வருவதெல்லாம் மனைவியை இழந்தவர், விவாகரத்து ஆனவர் போன்றோர் தான். அப்படியே முதல் தார மாப்பிள்ளைகள் வந்தாலும், முக்கால்வாசி வழுக்கை, தொப்பை போன்றவற்றுடன் வருவதால், சகோதரிகள் இருவரும் அழுது, கண்ணீர் வடிக்கின்றனர். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், தங்கள் தவறை ஒத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறார் தாயார்.

இப்படி மிதமிஞ்சிய கற்பனைகளை வளர்த்து, உங்கள் வாழ்க்கையில் கிடைத்த பொன்னான அதிர்ஷ்டங்களை மிஸ் பண்ணிடாதீங்க பட்டாம்பூச்சிகளே...

www.dinamalar.com

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பட்டாம்பூச்சியின் பெயர் சரிகா; மிகுந்த ஏழை குடும்பம். உள்ளூரில் ஒரு சிறிய ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றனர்.

அசப்பில் நடிகை சீதா போன்று இருப்பாள் சரிகா. ஓட்டலுக்கு மாவு அரைத்துக் கொடுப்பது, அதை பார்த்துக் கொள்வது என, எல்லா உதவிகளையும் பெற்றோருக்கு செய்து வந்தாள்.

இவளுக்கு ஒரு தங்கை; அவள் சுமாராகத்தான் இருப்பாள். சரிகாவை, "ஜொள்' விடுவதற்கென்றே ஓட்டலுக்குச் செல்வர் இளைஞர்கள். பிளஸ் 2க்கு மேல் படிக்கவில்லை.

தன்னுடைய அழகில் பெருமைப்பட்டு கிடந்த சரிகா, தன்னை மணக்க, அஜீத் போன்ற தோற்றத்தில், பணக்கார வாலிபன் வருவான் என, கனவு கண்டு, காத்திருந்தாள். இதற்கெல்லாம் காரணம், இன்றைய சினிமாக்களும், சீரியல்களும் தான். அதை பார்த்து, பார்த்து தங்கள் கற்பனையை, பயங்கரமாக வளர்த்துக் கொள்கின்றனர் இன்றைய பட்டாம்பூச்சிகள். சினிமாவில் வரும் பணக்கார ஹீரோ, ஹீரோயின்கள் போன்றே, தங்கள் வாழ்விலும் நடக்கும் என, "அதீத' கற்பனையை வளர்த்துக் கொள்கின்றனர்.

பிறகு, நிஜ வாழ்க்கையை சந்திக்கும் போது, அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல், "கிறுக்கு' பண்ணி, தங்கள் உண்மையான வாழ்க்கையை கெடுத்துக் கொள்கின்றனர்.

சரிகாவிற்கு, நிஜத்தில் வந்த மாப்பிள்ளை வசந்த், கரிய நிறத்தில், களையாக இருந்தான்; கொழுத்த பணக்காரன்.

வசந்த், சிவந்த நிறமுள்ள, அழகான பெண் வேண்டும் என ஆசைபட்டதில் தவறேதும் இல்லை. காரணம், கறுப்பு ஹீரோவின் அம்மா, பவுர்ணமி நிறம் என்றால், அப்பா அமாவாசை போன்று இருப்பார். "அம்மா நிறத்தில் பெண் எடுத்தால், தனக்கு பிறக்கும் வாரிசுகளும், தங்க நிறத்தில் இருப்பர்...' என, ஆசைப்பட்டான் வசந்த்.

எனவேதான், தங்களது ஜாதியை சேர்ந்த, ஏழைப் பெண்ணான சரிகாவை தேர்ந்தெடுத்தனர்.

கறுப்பு ஹீரோ கிடைத்ததில் மிகுந்த வருத்தம் தான். இருப்பினும், பங்களா, நகை, பணம் என்ற ஆடம்பர வாழ்க்கை, அவள் வாயை கட்டிப் போட்டது.

இவளது கணவனோ, பெற்றோர் சொல் கேட்டு நடப்பவன். பைக் ஓட்ட சொன்னால், ஓட்ட மாட்டான்; காரும் ஓட்ட மாட்டான்; டிரைவர்தான் ஓட்டுவார்.

கணவனுடன் பீச், பார்க், சினிமா என, ஊர் சுற்ற விரும்பினாள் சரிகா. அவனோ, "வீட்டிலேயே, ஹோம் தியேட்டர் இருக்கே... அதில் பார்க்கலாம்...' என்றான். ஜாலியாக ஊர் சுற்ற வராத கணவனை வெறுக்க ஆரம்பித்தாள் சரிகா.

"நீ ஒண்ணுக்கும் ஆகாதவன்... வேஸ்ட்... உனக்கு, வாழ்க்கையை ஜாலியாக,"என்ஜாய்' பண்ணவே தெரியல... எதற்கெடுத்தாலும், அம்மா பேச்சு கேட்குறே... என்னோட டேஸ்ட்டுக்கு ஒத்து வரல...' என, சண்டை போட்டாள் சரிகா.

இவளது இம்சை தாங்காமல், தவித்தான் வசந்த்.

அச்சமயம், சரிகாவின் தங்கைக்கு திருமணம் நடந்தது. அவளது கணவனோ, மிகவும் ஜாலி பேர்வழி; ஆண் அழகனும் கூட. சரிகாவுக்கு எப்படி எல்லாம் பிடிக்குமோ, அந்த மாதிரியே இருந்தான். மொத்தத்தில், வெட்டி பந்தா செய்வதில் கில்லாடி.

தன்னிடம் உள்ள பழைய காரில், பீச், ஓட்டல் என, மனைவியுடன் நன்றாக சுற்றுவான். மனைவியின் அக்கா பணக்காரி என்பதால், கடன் பட்டாவது, தன்னையும் பெரிய பணக்காரன் போல் காட்டிக் கொள்வான்.

"என்ன... இப்படி வீட்டிலேயே அடைந்து கிடக்கிறீங்க... வெளியே போக மாட்டீங்களா... வாங்க... நான் கூட்டிக்கிட்டு போறேன்...' என்று சொல்லி, சரிகாவை, "உசுப்பி' விட்டான்.

பிறகென்ன... மூவரும் ஊர் சுற்ற ஆரம்பித்தனர். சரிகாவின் பணத்தில், நன்றாகத் தின்று, "தீம்பார்க் - பீச்' என, சுற்றி திரிந்தனர்.

சரிகாவை, கணவன், மாமனார், மாமியார் கண்டித்துப் பார்த்தனர்; கேட்கவே இல்லை. "கணவனை அழைச்சிட்டுப் போ...' என்றாலும், போக மாட்டாள்.

"இந்த முசுடுக்கு ஜாலின்னா என்ன தெரியும்... நீ ஒண்ணும் வர வேண்டாம். நானும், என் தங்கை, அவள் கணவரும் செல்கிறோம்...' என்றாள்.

அத்துடன், "மருமகள் கர்ப்பமாகவில்லையே...' என்ற கவலையில், "டாக்டரிடம் போகலாம்...' என்றால், வரவே மாட்டாள்.

எவ்வளவோ பிடிவாதம் பிடித்து, அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்றனர்.

"இருவரும் நார்மல்; எந்தப் பிரச்னையும் இல்லை...' என்றே டாக்டர்கள் கூறினர்.

அப்புறம்தான், கர்ப்பமானால் அழகு போய்விடும் என்பதற்காக, சரிகா, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தாள் என்ற விஷயம் தெரிந்தது. அதையும் கூட பொறுத்துக் கொண்டான் வசந்த். ஆனால், தங்கை கணவனுடன், அவள் அத்துமீறிப் பழகுவதை அறிந்து, துடித்துப் போனான்.

பெரிய தகராறு ஆகி, "சீ...சீ... இந்த நாயை வெளியே துரத்துங்க...' என, துரத்தி விட்டனர் வசந்த் குடும்பத்தினர். இன்று இருவருக்கும், "டைவோர்ஸ்' ஆகி விட்டது. தங்கையின் கணவனோ, இவளை எவ்வளவு, "யூஸ்' பண்ண முடியுமோ அவ்வளவு, "யூஸ்' பண்ணிவிட்டு, கைவிட்டு விட்டான்.

விஷயமறிந்த தங்கை, "அடிப்பாவி... உன் மீது உள்ள பாசத்தில் உன்னை ஊர் சுற்ற அழைத்துச் சென்றேன். நீ என் மடியிலேயே கை வச்சிட்டியா?' என பேசி, ரகளை செய்து விட்டாள்.

தங்கையின் கணவனோ, "எனக்கு நீதாண்டி முக்கியம்... உன் அக்காதான் என்னிடம் வலிய வந்தாள்; நான் என்ன செய்வது?' என்று, "ப்ளேட்டை' மாற்றி விட்டான்.

சரிகாவின் கணவன், முன்பு, கறுப்பாக இருக்கிறாள் என்பதற்காக வேண்டாம் என்று சொன்ன, அத்தை மகளை மணந்து, சந்தோஷமாக இருக்கிறான்; குழந்தையும் உள்ளது.

தனக்கு அமைந்த மகாராணி போன்ற வாழ்க்கையை வீணடித்து, தங்களது சிறிய ஓட்டலுக்கு மாவு அரைத்து, பெற்றோருடன் ஒரு வேலைக்காரியை போல வாழ்கிறாள் சரிகா!

டியர் பட்டாம்பூச்சிகளே... சினிமா, சீரியல்களைப் பார்த்து, அதில் வரும் ஹீரோக்களின் சில்மிஷங்கள், வீர சாகசங்களைக் கண்டு மயங்கி, பல கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்களே வீட்டுக்கு போனால், நம்மை மாதிரி சாதாரண வாழ்க்கைதான் வாழ்கின்றனர் என்பதை மறந்துடாதீங்க. இப்படியெல்லாம் கற்பனை செய்ததால் தான், தனக்கு கிடைத்த ராஜ வாழ்க்கையை இழந்து, சீரழிகிறாள் சரிகா.

ஆண்களே... நீங்களும் உங்கள் மனைவியரின் ரசனைக்கேற்ப கொஞ்சம் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். அவர்கள் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பு கொடுக்காத போது, இப்படி சில ஆண்கள் பலவீனம் புரிந்து, வீழ்த்தி விடுகின்றனர். இதனால், எல்லாருக்குமே பாதிப்புதானே...

இன்றைய உலகில் பிறக்கும் குழந்தைகளே பல கற்பனை, கனவுகளோடு பிறக்கின்றன. அப்படியிருக்கும் போது, கணவன், மனைவி என்று ஆன பிறகு, ஒருவர் ரசனையை மற்றவர் புரிந்து, சற்று, "அட்ஜஸ்ட்' செய்து கொண்டால், வெற்றி ஜோடிகள் பட்டியலில் நீங்களும் வலம்

Thanks to dinamalar

அலோ சுண்டல் , சொல்லுறன் எண்டு கோபிக்க்கூடாது , உம்மால வடிவாய் சுண்டேலும் . கண்டகடியளையும் போட்டு கடுப்படியாதையும் . நானும் சுண்டல்பெடி விண்ணன் எண்டு இதுக்குள்ளை இறங்கிப் பாத்தால் தலைகீழாய் கிடக்கு . நீர் படிக்கேக்கையும் இப்பிடி இசக்குப்பிசக்காய் நடந்திருக்கும் தானே ? எடுத்துச் சுண்டி விடுறது . எடுத்துவிடும் சுண்டல் சியேர்ஸ் :D :D ............... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹிஹி கோம்ஸ் அண்ணா தெரியாதனமா இதுக்குள்ள இறங்கி பாத்திட்டிங்களோ?

நாங்கள் எல்லாம் எழுத வெளிக்கிட்டா மோகன் அண்ணா யாழ் களத்த இரவோட இரவா பூட்டிட்டு தலைமறைவு ஆகீடுவார் இதெல்லாம் தேவையா அண்ணா.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.