Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல்ஹெய்மின் வருகை யுத்தத்தை தடுக்குமா?

Featured Replies

சொல்ஹெய்மின் வருகை யுத்தத்தை தடுக்குமா?

* தினமும் நடைபெறும் சம்பவங்களானது முழு அளவிலான போரை நோக்கியே செல்கின்றது

நாட்டில் முழு அளவிலான போர் இதுவரை வெடிக்காத போதிலும், பாரிய மோதலைத் தோன்றுவிப்பதற்கான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தினமும் நடைபெறும் சம்பவங்கள் முழு அளவிலான போரை நோக்கியே செல்கின்றன.

புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்‌ஷவும், புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவும் பதவியேற்றது முதல் நிலைமை தலைகீழாகிவிட்டது. நிழல் யுத்தம் உச்சமடைந்து நிஜயுத்தமாகிக் கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்க நோர்வே அமைச்சரும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான எரிக் சொல்ஹெய்மின் வருகை உதவுமா என்பதுதான் மிகப்பெரும் கேள்வியாகும்.

தற்போதைய சூழ்நிலையில் தினமும் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. பொதுமக்களும் படையினரும் கொல்லப்படுகின்றனர். ஊடுருவல் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. பாரிய மோதலொன்றுக்கான மிக மோசமான தாக்குதல்களெல்லாம் இடம் பெற்றுவிட்டதால் முழு அளவிலான போர் எப்போது வெடிக்கப் போகின்றது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுப்பப்படுகிறது.

படையினர் மீதான தாக்குதல்களை மக்கள் படையே மேற்கொள்வதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். ஆனால், மக்கள் படையென்ற பெயரில் புலிகளே இந்தத் தாக்குதல்களை நடத்தி வருவதாக படைத் தரப்பு கூறுகின்றது.

கிழக்கில் கருணா குழுவென்ற பெயரில் இராணுவமே தங்கள் மீது தாக்குதலை நடத்துவதாகப் புலிகள் கூறிவந்த போதெல்லாம் அதனை முற்றாக மறுத்து வந்த இராணுவம், தற்போது மக்கள் படையே படையினர் மீது தாக்குதல் நடத்துவதாகப் புலிகள் கூறும்போது அதனை ஏற்க மறுக்கிறது.

கிழக்கில் தொடங்கிய நிழல் யுத்தம் தற்போது வடக்கில் முழு அளவில் மோதலாகிவிட்டது. கிளேமோர் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதுடன் துப்பாக்கிச் சூடுகளும் கைக்குண்டுத் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இவற்றுக்கெல்லாம் பதிலடியாக படையினர் அப்பாவிப் பொது மக்களையே தாக்குகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் படையினரின் தாக்குதல்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் பாரிய இராணுவ நகர்வுகளின் போதே மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறினர். ஆனால், இன்றோ யுத்த நிறுத்தம் அமுலிலிருக்கையில் வடக்கிலிருந்து தினமும் பெருமளவு மக்கள் பாதுகாப்புத் தேடி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்கின்றனர். மீண்டும் தமிழகம் நோக்கியும் அகதிகள் செல்லத் தொடங்கிவிட்டனர்.

இந்தச் சூழ்நிலையிலேயே எரிக் சொல்ஹெய்மின் வருகைக்காக அரசு காத்திருக்கிறது. ஆனாலும், அவரது வருகை சமாதானத்தை ஏற்படுத்துமா அல்லது முழு அளவில் போரைத் தொடக்கிவிடுமா என்ற அச்சமும் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் மிக மோசமானதொரு உறவு நிலையே உள்ளது. நிழல் யுத்தமும் பொதுக் கட்டமைப்பு நிராகரிப்பும் அரசுக்கும், புலிகளுக்கும் இடையிலான உறவை மிக மோசமாகப் பாதித்த அதேநேரம், நோர்வே அனுசரணையாளர்களுக்கும், புதிய அரசுக்குமிடையிலான உறவு நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது.

மோதலில் ஈடுபடும் இரு தரப்புகளுக்கும் இடையே சமரச முயற்சியில் ஈடுபடும் மூன்றாந் தரப்பின் நெருங்கிய உறவு நிலையே சுமுகமானதொரு சூழ்நிலையைப் பேண உதவும். நீண்டகாலப் போரில் ஈடுபட்ட இரு தரப்பும் மிகச் சிறியகால சமாதான முயற்சிகள் மூலம் நெருக்கமாகிவிடக்கூடிய சாத்தியமில்லை.

ஆனாலும், மோதலில் ஈடுபட்டவர்களின் வேண்டுகோளின் பேரில் சமரச முயற்சிக்கு வந்த அனுசரணையாளருடன், மோதலில் ஈடுபட்டவர்கள் சிறப்பான உறவைக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் சமரச முயற்சிக்கு மிக அவசியம்.

சம்பந்தப்பட்ட இரு தரப்பினரதும் வேண்டுகோளின் பேரில்தான் சமரச முயற்சிக்கு நோர்வே வந்தது. நோர்வேயை அழைத்த இரு தரப்பும் கூறினால் மட்டுமே அனுசரணை முயற்சியிலிருந்து நோர்வே வெளியேறும். ஒரு தரப்பின் வெறுப்புக்காக நோர்வே இங்கிருந்து வெளியேறுமென எதிர்பார்க்க முடியாது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையில் ஆட்சிமாற்றங்கள் அடிக்கடி ஏற்படுவதால் அரசு தரப்பும் அடிக்கடி மாறுகிறது. ஆனால், புலிகள் தரப்பில் மாற்றமெதுவுமில்லை. எனினும் அரச தரப்பில் மாற்றங்கள் வரும்போது அவர்கள் அனுசரணையாளர்களையும் தங்கள் விருப்பு வெறுப்புக்கேற்ப மாற்ற முயல்வதால் அரசு தரப்புக்கும், அனுசரணையாளர்களுக்கும் இடையிலான உறவு வலுவற்றதாயுள்ளது.

அதேநேரம், தமிழர் தரப்பு நியாயங்கள் சமாதானப் பேச்சுகளின் போது முன்னிலைப்படுத்தப்பட்டு அதற்கான நீதியான தீர்வு வலியுறுத்தப்படும்போது உரிய தீர்வை முன்வைக்குமாறு அனுசரணையாளர்கள் அழுத்தம் கொடுப்பர். ஆனாலும், நியாயமான தீர்வுக்குச் செல்லாது அதனைத்தட்டிக் கழிக்க வேண்டுமானால் அனுசரணையாளர்களின் அழுத்தத்திலிருந்து விடுபடவேண்டிய தேவை அரசுக்கு ஏற்படும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அனுசரணையாளர்களை மாற்றி நியாயமான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்காது, இலங்கையில் சமஷ்டி முறையிலான தீர்வு ஏற்பட்டால் அது தங்களது நாட்டில் பிரச்சினையைத் தோற்றுவித்து விடுமெனக் கருதி இங்கு நியாயமான தீர்வு எட்டப்படுவதை விரும்பாத ஒரு நாட்டை அந்த இடத்தில் அனுசரணையாளராக்கி பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விடவே இலங்கை அரசு முயல்கிறது.

தற்போதைய நிலையில் இலங்கையின் புதிய அரசுக்கும் நோர்வே அனுசரணையாளர்களுக்கும் இடையில் மோசமான உறவே நிலவுகிறது. சில அழுத்தங்களால் தான், அனுசரணைப் பணியைத் தொடருமாறு நோர்வேயை புதிய ஜனாதிபதி மகிந்த அழைத்துள்ளார். இவ்விருதரப்புக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பாரிய விரிசல் தற்போதைய மோதல் நிலைக்கு முடிவு கட்ட உதவாதென்றே கருதப்படுகிறது.

நாட்டில் மீண்டும் பெரும் போர் வெடிப்பதைத் தடுக்க வேண்டுமானால் அரசுக்கும் புலிகளுக்கும் இடையே உடனடியாக சந்திப்பொன்று நடைபெறவேண்டும். அந்தச் சந்திப்பானது போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்துவதற்குரியதாயிர

விரைவில் வெடிக்க இருக்கும் யுத்தத்தை தடுத்தால் பின்னர் தமிழீழத்தை எப்பொழுதான் பறித்தெடுப்பது? :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.