Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”நாங்கள் மிக ஒழுக்கமானவர்கள்” பாலித கேகன்ன மன்னிப்பு சபை தலைவருக்கு விளக்கம்

Featured Replies

வவுனியா நிருபர்

புதன்கிழமை, யூலை 20, 2011

ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் போர்க்குற்றவாளியுமான பாலித கொஹனவை சர்வதேச மன்னிப்புச் சபையின் ஐ.நா. அலுவலகத் தலைவர் ஜோஸ் லூயிஸ் டயஸ் சந்தித்துள்ளார். கடந்த மாதம் ஐ.நா. தேவாலய நிலைத்தில் சனல் 4 வீடியோ ஒளிபரப்பப்பட்டமை தொடர்பாக பாலித கொஹனவும் சவேந்திர சில்வாவும் வெளியிட்ட அறிக்கைகளை அடுத்து இத்தொடர்பு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

.

இந்த சந்திப்பில் பாலித கூறியதாவது;

நாங்கள் நீண்ட பாரம்பரியம், நல்லொளுக்கம் உள்ள நாடு, ஜனனாக பண்புகளை மதிக்கும் நாடு, எம்மீதான குற்றச்சாட்டுக்களை நாமே விசாரித்து தண்டனை வழங்கும் ஏற்பாடு எம்மிடம் உண்டு .எடுத்துக்காட்டாக ஹெயிட்டியில் எமது படையினர் குற்றம் புரிந்தபோது நாம் அவர்களில் 110 பேரை திரும்ப அழைத்து தண்டனை கொடுத்துள்ளோம்.

.

சனல்4 காணொளியினை வைத்து எம்மீது குற்றங்களை சுமத்துவது தவறு, புலிகளிடம் இருந்து பெற்ற வீடியோக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் ஒருபக்க சார்பானது என்று கூறினார் பாலித.

ஈழ நாதம்

கயவர்களின் வழித்தோன்றல்களான ஒழுக்கம்கெட்ட பௌத்த சிங்களக் காட்டுமிராண்டிகள் ஒழுக்கம்பற்றி பேசுவதை ஏமாளிகளே நம்புவர்.

இரட்டை பிரசா உரிமை கொண்ட இந்த புத்திஜீவி செய்யும் சேவை சிங்கள இனத்திற்கு மகத்தானது.

டிஸ்கி: எமதினத்தில் உண்மையை கூட உரக்கசொல்ல்ககூடிய புத்திஜீவிகள் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 வீடியோ போலியானது – ஐ.நா.விடம் மன்றாட்டமாக கூறிய பாலித கோஹோனாவும் சுவேந்திர சில்வாவும்!

Published on July 21, 2011-3:01 am

இலங்கை நாட்டு ராணுவத்தின் மனித உரிமை மீறல் தொடர்பான, சனல் 4 வீடியோ குற்றச்சாட்டு குறித்து, ஐ.நா.வின் சர்வதேச அரசியல் பொது மன்னிப்பு அமைப்பின் தலைவர் ஜோஸ் லூயிஸ் டியாஸ்சை சந்தித்து, இலங்கை பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர்.

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர், 2009ம் ஆண்டின் இறுதியில் முடிவுக்கு வந்தது. அப்போது, இலங்கை ராணுவத்தினரால், தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகளை, பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, ஐ.நாவின் சர்வதேச அரசியல் பொது மன்னிப்பு அமைப்பின் தலைவர் ஜோஸ் லூயிசை நியூயார்க்கில், ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர தூதர் பலிதா கோஹோனா மற்றும் துணைத் தூதர் சுவேந்திர சில்வா சந்தித்து விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனல் 4 வீடியோ போலியானது. இந்த வீடியோவில் தெளிவு இல்லை. மொழி மாற்றம் செய்யப்பட்டு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் இணையதளத்தில் இருந்து சில விஷயங்கள் எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. இலங்கை ராணுவத்தின் மீதான இக்குற்றச்சாட்டை, சனல் 4 தொலைக்காட்சியால் நிரூபிக்க முடியாது.

போர் முடிந்து, தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் கண்ணி வெடிகளை நீக்குவது, உட்கட்டமைப்பு ஏற்படுத்துவது, அப்பகுதியில் இருந்து வெளியேறியவர்களை அங்கு குடியமர்த்தி, உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ வசதிகளை கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இலங்கை அரசு உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த, இலங்கை சட்டமா அதிபர் அலுவலகம் மூலம் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. முழு விசாரணை மேற்கொள்ள குழுவிற்கு போதிய அவகாசம் தேவை. நெருக்கடியின் கீழ் விசாரணை மேற்கொள்வது கடினம். ஆவண தொகுப்புக்களிலிருந்து சில காட்சிகள் எடுக்கப்பட்டு, சனல் 4 காட்டிய வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளன. உண்மையான வீடியோவில், கொடூரச் செயலை நிறைவேற்றுபவர்கள் தமிழ் மொழி பேசுகின்றனர்.

இலங்கை அரசின் மீது நம்பகமற்ற தன்மையை உருவாக்கவே, சனல் 4வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் இலங்கையுடன் ஒளிவுமறைவு இல்லாத பேச்சுவார்த்தை நடத்த, சர்வதேச அரசியல் பொது மன்னிப்பு அமைப்பை வரவேற்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

http://www.saritham.com/?p=26917

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.