Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேளிக்கை வரியை ரத்து செய்து ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்த கருணாநிதி. அதிர்ச்சி தகவல்.

Featured Replies

ஆட்சியாளர்கள் எதைச் செய்தாலும் அதன் பின்னணியில் மக்களின் நலன் இருக்க வேண்டும். ஆனால், கருணாநிதி எதைச் செய்தாலும் ‘தம் மக்கள் நலன்’ மட்டுமே பார்ப்பார் என்பார்கள். ‘தமிழ்ப் படங்களுக்கு கேளிக்கை வரி ரத்து’ என்ற அறிவிப்பினால் மட்டும் கருணாநிதி குடும்பம் ஆயிரம் கோடி லாபம் அடைந்திருக்கிறது என்கிற அதிர்ச்சித் தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் திரைத்துறையினரே ஆட்சி செய்து வருகின்றனர்.இதனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் திரையுலகினருக்கு என்ன சலு கைகள் கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே இருந்து வருகிறது. 91-ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா வந்தபோது தமிழ்ப் படங்களுக்கு 25 சதவிகித கேளிக்கை வரி ரத்து அறிவிப்பை வெளியிட்டார். அதன்பின்பு முதல்வராக வந்த கருணாநிதி மேலும் 25சதவிகித கேளிக்கை வரி ரத்து என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த கருணாநிதி, ‘தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு முழு கேளிக்கை வரி ரத்து’ என அறிவித்தார். இதற்கான அரசாணை 4.12.2006 அன்று வெளியிடப்பட்டது. இதன் பிறகு கேளிக்கை வரி ரத்து அறிவிப்பில் நடந்த குளறுபடிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியில் கொண்டு வந்திருக்கிறார் கருப்பன் சித்தார்த்தன். இவர் ‘அநீதிக்கு எதிரான தகவல் மற்றும் நடவடிக்கைக்கான ஆய்வாளர்கள் குழுமத்தின் தலைவராக இருக்கிறார்.

“கடந்த ஜனவரி மாதம் முதலே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேளிக்கை வரி ரத்து அறிவிப்பிற்குப் பின் நடந்த விவரங்களைக் கோரி இருந்தேன். கேளிக்கை வரி ரத்து அறிவிப்பால் பல ஆயிரம் கோடி ரூபாய் வீணாகிறதே என்ற ஆதங்கத்தில் வணிக வரித்துறை அதிகாரிகள் நான் கேட்ட ஆவணங்களைக் கொடுத் தனர். அத்தனையும் படித்துப் பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானேன்.

கருணாநிதியின் அறிவிப்பால் மட்டும் ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் மக்கள் பணம் உறிஞ்சப் பட்டிருக்கிறது. ஐந்தாண்டுகளில் நான்காயிரம் கோடி ரூபாய் மக்களுக்குச் சென்று சேராமல் தனிநபர்களின் கணக்குகளுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது’’ என அதிர்ச்சியை அள்ளித் தெளித்த கருப்பன் சித்தார்த்தன், தொடர்ந்தார்.

“2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 1225 படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 2011 வரையில் மேலும் 250 படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தியேட்டரில் 50 ரூபாய்க்கு ஒரு டிக்கெட் விற்கப்பட்டால் கேளிக்கை வரி 14 ரூபாய் கட்டப்பட வேண்டும். பெரிய தியேட்டர்களில் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படுகிறது. அப்படியானால் 28 ரூபாய் வரி செலுத்தப்பட வேண்டும்.

ஆனால், வரி ரத்து அறிவிப்பின் பலன் சாமானிய மக்களுக்குச் சென்று சேருவதில்லை. இதன் பலனை முழுமையாக உறிஞ்சியவர்கள் கடந்த ஆட்சியில் திரையுலகத் திமிங்கிலங்களாக இருந்த சன் டி.வி. உள்ளிட்ட தி.மு.க. குடும்பத்தினர்தான். இவர்களால் நடிகர்களின் சம்பளமும் தாறுமாறாக உயர்ந்து விட்டது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி குடும்பம் தயாரித்து வெளியிட்ட படங்கள் 130. இந்தப் படங்களின் மூலம் அரசுக்கு வந்திருக்க வேண்டிய கேளிக்கை வரி ஆயிரம் கோடி ரூபாய். அப்படி இவர்கள் எடுத்த படங்கள் பண்பாட்டைக் காப்பாற்றியதா என்றால் அதுவும் இல்லை. ‘குவார்ட்டர் கட்டிங்’ எனப் பெயர் வைத்துவிட்டு, ஒற்றை எ ழுத்தில் ‘வ’ எனப் பெயர் வைத்துக் கொள்ளையடித்தார்கள்.

‘வெளியாகும் படங்களின் பெயர்கள் தமிழ்தானா? எனக் கண்டறிய கமிட்டி ஏதேனும் அமைக்கப்பட்டிருக்கிறதா?’ என தமிழ் வளர்ச்சித் துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டேன். ‘அப்படி எந்த கமிட்டியும் அமைக்கப்படவில்லை’ எனப் பதில் வந்தது. அடுத்த கேள்வியாக, ‘ எந்திரன், சிவாஜி, கோவா படங்களின் பெயர்கள் தமிழ்தானா? எனக் கண்டறிய கமிட்டி அமைக்கப்பட்டதா?’ என்ற கேள்விக்கு, ‘ஆம்’ என்ற பதில் வந்தது. அப்படியானால், ‘கமிட்டி உறுப்பினர்கள் பெயர் சொல்லுங்கள்?’ என்றபோது, ‘இல்லை’ என்ற பதில்தான் கிடைத்தது. இதிலிருந்தே எவ்வளவு மோசடித்தனம் நடந்திருக்கிறது என்பது அம்பலமாகிறது.

தமிழ்ப் பெயர்தான் எனக் கண்டுபிடிக்கிறவர்கள் அந்தப் படத்தில் இடம் பெறும் கலாசாரத்தைக் கெடுக்கும் விஷயங்கள், இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசக் காட் சிகளை முற்றாகக் கண்டு கொள்ளவில்லை. கருணாநிதியைப் பார்த்து விட்டால் எந்தப் படத்திற்கும் வரி விலக்கு கிடைத்துவிடும் என்ற அவல நிலையே நீடித்தது. ரஜினி படங்களுக்கு இணையாக இன்றைக்கும் எம்.ஜி.ஆர். படங்களைத் திரையிட்டால் நல்ல லாபம் கிடைக்கிறது என்ற நோக்கில் அவரது ‘அன்பே வா’ உள்பட பல பழைய படங்களுக்கும் வரி விலக்கை வாங்கியிருக்கிறார்கள்.

பழைய பட வரிசையில் புதிய பறவை, வியட்நாம் வீடு, தங்கப் பதக்கம், அண்ணன் ஒரு கோயில், திரிசூலம், ரத்த பாசம், அந்த நாள், பக்த பிரகலாதா, களத்தூர் கண் ணம்மா, கற்பகம், குலதெய்வம், குழந்தையும் தெய்வமும், ஓர் இரவு, பச்சை விளக்கு, பார்த்தால் பசி தீரும் உள்பட பழைய படங்களுக்கும் வரி விலக்கு வாங்கி தனிநபர்கள் கொள்ளையடித்திருக்கிறார்கள்.

எனக்குக் கிடைத்த புள்ளிவிவரப்படி, ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் 400 கோடி ரூபாய் வரை கேளிக்கை வரி வசூலாகியிருக்கிறது. ஆனால், கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் 2005-06-ல் 44 கோடி ரூபாயும், 06-07-ல் 25 கோடியும், 07-08-ல் 16 கோடியும், 08-09-ல் 12 கோடியும், 09-2010-ல் 10 கோடியே 62 லட்ச ரூபாயும் வசூலாகியிருக்கிறது.

படங்களின் எண்ணிக்கை உயர்ந்த நிலையில், ஏறுமுகமாக இருந்த வரி வசூல் ஆட்சி முடியும் தறுவாயில் வெறும் பத்துக் கோடி ரூபாயாக சுருங்கிவிட்டது. சுமார் நான் காயிரம் கோடி ரூபாய் மிக எளிதாக விரயமாகிவிட்டது. இதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்லப் போகிறார்?

கேளிக்கை வரி ரத்து அறிவிப்பால் தியேட்டர்கள் கட்டணத்தைக் குறைத்திருந்தால் மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். கடந்த ஆட்சியில் இவர்களே தியேட்டர்களைக் குத்தகைக்கு எடுத்து நடத்தினார்கள். அத்தனை லாபமும் கருணாநிதி குடும்பத்திற்கே செல்லும் வகையில் உருவாக்கப்பட்டன. இதற்கு ‘தமிழை வளர்க்கிறேன்’ என்ற மோசடி வார்த்தைகள் வேறு’’ எனக் கொந்தளித்தவர்,

இறுதியாக, “இப்போது பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா, ‘ஆபாசக் காட்சிகள் இல்லாமல் பண்பாட்டைக் காப்பாற்றும் வகையில் எடுக்கப்படும் தமிழ்ப் படங்களுக்கே வரி விலக்கு அளிக்கப்படும். இதற்காக கமிட்டி அமைக்கப்படும்’ என அறிவித்தார். இது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இதன் மூலம் அரசின் கஜானாவிற்குச் சேர வேண்டிய பணமும் வந்து சேரும். திரையுலகினரும் திருந்த வேண்டிய சூழல் ஏற்படும்’’ என்றார் கருப்பன் சித்தார்த்தன்

Thanks to kumudam reporter

இச்செய்தி குறித்த படங்கள் பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=31881

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.