Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகிரியிடம் பினாமிகளின் பெயர்களில் மூவாயிரத்து ஐந்நூறு கோடி

Featured Replies

அழகிரியிடம் பினாமிகளின் பெயர்களில் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவுக்கு மேல் சொத்து! -

தெஹல்கா ஊடகம் செய்தி!!

மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் தென் மண்டல அமைப்பாளருமான அழகிரிக்கு பினாமிகளின் பெயர்களில் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவுக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தெஹல்கா எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

புலனாய்வு குறித்த செய்திகளை வெளியிடும் இவ்வூடகம் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் சொத்து விவரங்கள் குறித்து விரிவாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இச்செய்தியில் அழகிரி தனது உண்மையான சொத்துகளின் விபரங்களை முழுமையாக வெளியிடவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'2009ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலுக்குப் பின்னர் அழகிரி தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார். அப்போது தன்னிடம் 133.65 கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் பினாமிகளின் பெயரில் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாக்கும் அதிகமாக அவரிடம் சொத்துக்கள் இருக்கிறது.

நிலம், திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகம், ரியல் எஸ்டேட், சுகாதாரம், சுரங்கம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அவர் தனது குடும்பத்தார் மற்றும் நெருங்கியவர்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளார்.

அத்துடன், அழகிரியின் மனைவி காந்தி, பினள்ளைகள், மருமகள் மற்றும் மருமகன்களின் பெயர்களில் ஏராளமான சொத்துக்களும், வர்த்தக முயற்சிகளும் உள்ளன.

இது தவிர மொரீஷியஸ், வெர்ஜின் தீவுகள், அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அவரது நம்பிக்கைக்குரியவர்கள் வர்த்தக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அழகிரி தனது சொத்துகளின் விபரங்களை முழுமையாக வெளியிடாமல் தனது சொத்துக்களின் மதிப்பை குறைத்தே வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருணாநிதி குடும்பத்தினர் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை மாற்றவே திரைப்படத்துறையில் நுழைந்ததாக திரைப்படத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அழகிரியின் பணம் மற்றும் பதவி மோகத்தால் தான் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலினை தோற்கடிக்க அழகிரி விரிந்த சாம்பிராயத்தை நிறுவியுள்ளார். கருணாநிதிக்கு அடுத்து தி.மு.க.வின் தலைவராக அழகிரி விரும்புகிறார். அதற்கு பண பலமும், ஆள் பலமும் சேர்த்து வைத்துள்ளார் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்' என தெஹல்கா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={15157451-99D7-41E1-976D-5D9A35E49481}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.