Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கைமாறும் பொருளாதார அதிகாரம்!

Featured Replies

கைமாறும் பொருளாதார அதிகாரம்!

மேற்கத்திய வல்லரசுகள்தான் உலக அரசியலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. ராணுவ பலமும் அரசியல் ராஜதந்திர உத்திகளும் அந்நாடுகளுக்குச் சாதகம். ஆனால், பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மேற்கத்திய நாடுகளின் செல்வாக்குக் குறையும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள்.

"பிரிக்' நாடுகள் என்று சொல்லப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் சந்தைகளே வருங்காலத்தில் உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கும் என்று அவர்கள் கணித்திருக்கிறார்கள். அதாவது 5 முதல் 10 சதவீதம் வரையிலான வர்த்தகம் மேற்கத்திய நாடுகளிடமிருந்து "பிரிக்' நாடுகளுக்குச் செல்லக்கூடும் எனக் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த மாற்றத்துக்கு உலகம் தயாராகி வந்திருக்கிறது என்பதும் உண்மையே.

சமீபத்திய மாற்றங்கள் சில, இந்தக் கருத்துக்கு உரமிடுகின்றன. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்ட நாடான ஜப்பானை சுனாமியும், அதைத் தொடர்ந்து நடந்த அணு உலை வெடிப்புகளும் நிலைகுலையச் செய்யும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

பெரும் பணக்கார நாடு ஒரே நாளில் பொருளாதார நெருக்கடியில் சிக்கிவிட்டது. செல்வந்தர்கள் தெருவுக்கு வந்துவிட்டார்கள். நிறுவனங்கள் நஷ்டமடைந்து, அரசின் உதவியை எதிர்பார்த்திருக்கின்றன. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கே அரசு திணறி வருகிறது. ஆள்குறைப்பு, சிக்கன நடவடிக்கைகளால் மக்கள் அதிருப்தியடைந்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகள், தங்களது வலுவற்ற பொருளாதாரக் கொள்கைகளால் இப்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்றன. கிரேக்கத்தைத் தாக்கிய பொருளாதார நெருக்கடி என்கிற நச்சுக் கிருமி போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி என கொஞ்சம் பலவீனமான நாடுகளையெல்லாம் ஒருகை பார்த்துவிட்டது. பொருளாதார வல்லரசாகத் தெரியும் பிரிட்டன்கூட அச்சத்தில் இருக்கிறது. ஆனாலும் தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனநிலையில் யாரும் இல்லை. எல்லாம் நன்றாகவே இயங்குகின்றன, நாங்கள் சமாளித்துவிடுவோம் என்பது போன்று அரசுகள் பேசிக் கொண்டிருக்கின்றன. ஆனால் வேலை இழப்புகளாலும், நலத் திட்டங்கள் முடக்கப்பட்டதாலும் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மக்கள், உண்மையை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உலக வல்லரசான அமெரிக்காவே பொருளாதார நெருக்கடிக்குத் தப்பவில்லை. அவர்களது கடன் பிரச்னை மிகவும் சிக்கலானது. கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுக்காமல் இதிலிருந்து மீள முடியாது. ஆனால், அதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், தாற்காலிகமான தீர்வைத்தான் இப்போது எடுத்திருக்கிறார்கள்.

அளவுக்கு அதிகமான பணப்புழக்கம், பிரிக் நாடுகளில் முதலீடு ஆகியவற்றால் எதிர்பார்த்த அளவுக்கு அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு பெருகவில்லை. வேலைவாய்ப்பின்மை அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இத்தகைய நிலையில், அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் ஆட்சியாளர்களுக்கு அக்கினிப் பரீட்சையாகவே இருக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பாதிப்பு இந்தியா உள்ளிட்ட பிரிக் நாடுகளையும் கண்டிப்பாகத் தாக்கும். ஆனால், இதையெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்றில்லை. எல்லாவற்றுக்கும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தால் பிரச்னைகளை எளிதாகச் சமாளிக்கலாம். அரசுதான் இதைச் செய்ய வேண்டும்.

இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு கூட்டணிக் குழப்பங்கள், சமரசங்களிலேயே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. குழப்பங்கள் நீங்கி தெளிவான நிலைக்கு வந்தால் மட்டுமே பொருளாதார நெருக்கடியைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

ஆனால், நமது ஆட்சியாளர்கள் இதைப் புரிந்துகொண்டதுபோலத் தெரியவில்லை. 2ஜி விவகாரத்திலும், காமன்வெல்த் முறைகேடுகளிலும் பிரதமருக்கு எதுவும் தெரியாது என்பதை நிரூபிப்பதிலேயே அரசு எல்லா நேரத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக்கூட அவர்கள் கவலைப்படவில்லை.

நவீனத் தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் ரகசியம் என்று எதுவுமில்லை என்பதை பலமுறை கூறியிருக்கிறேன். விக்கிலீக்ஸýம் நியூஸ் ஆப்த வேர்ல்ட் பத்திரிகையும் இதற்கு நல்ல உதாரணங்கள். அதனால், நம்நாட்டில் ரகசியங்கள் அம்பலமாகும்போது அதிர்ச்சியடையத் தேவையில்லை.

இப்படித்தான் சட்டவிரோதச் சுரங்கங்கள் பற்றிய நீதிபதி சந்தோஷ் ஹெக்டேயின் அறிக்கையும் ஆளுநரிடம் வழங்கப்படுவதற்கு முன்பே ஊடகங்களில் வெளியானது. இதில் ஊடகங்களை எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது. அவர்களது கடமையைத்தான் அவர்கள் செய்தார்கள்.

ஆனால், ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டிய நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, ஆளுநரிடம் அறிக்கை அளிப்பதற்கு முன்பே, தொலைக்காட்சிகளில் தோன்றி அதுபற்றி விவாதிக்கத் தொடங்கியிருந்தார். நிருபர்களின் பல்வேறு ஊகங்களுக்கு விடையளித்தார். சந்தேகங்களை உறுதி செய்தார்.

இரண்டே நாள்களில் கர்நாடக அரசியலில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி எடியூரப்பா பதவியிழந்தார். அதேவேகத்தில் அடுத்த முதல்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சம்பந்தப்பட்ட அறிக்கை ஆளுநரின் கைக்குச் செல்வதற்கு முன்பே இதெல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

காமன்வெல்த் போட்டிகள் தொடர்பான மத்திய தலைமைக் கணக்கு அதிகாரியின் (சிஏஜி) அறிக்கையும் இப்படித்தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்பே, ஊடகங்களில் கசிந்தது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும், துணைநிலை ஆளுநரும் குற்றம்சாட்டப்பட்டனர். ஷீலா மீது தனிப்பட்ட வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது போலத் தெரிந்தது.

அரசியல்வாதிகளில் பெரும்பாலானோரை மக்கள் நம்புவதில்லை. ஆனால், சந்தோஷ் ஹெக்டே போன்ற நீதிபதிகள் அப்படியில்லை. அவர்கள் மீது மக்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். அண்ணா ஹசாரே இயக்கத்தில் இருக்கும் அவர், லோக்பால் வரைவுக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்படிப்பட்டவர், தமது அறிக்கை வெளியாவதற்கு முன்பே ஊடகங்களில் தோன்றி பேட்டியளித்தது சரியான முன்னுதாரணமல்ல.

தமது அறிக்கை அதிகாரப்பூர்மாக ஆளுநரிடம் அளிக்கப்படுவதற்கு முன்பு, ஊடகங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதைப் பற்றி அவர் கொஞ்சமாவது சிந்தித்தாரா என்று தெரியவில்லை. அது திருடப்பட்டதா அல்லது ஊடகங்களுக்கு வேண்டுமென்றே வழங்கப்பட்டதா என்பதையும் அவர் விசாரிக்கவில்லை.

எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டு அவர் பதவி விலக வேண்டும் என்கிற நோக்கம் மட்டும் ஒருவழியாக நிறைவேறிவிட்டது.

சந்தோஷ் ஹெக்டே செய்தது சரியானதாக இல்லாமல் இருந்தாலும், அவரது அறிக்கையில கூறப்பட்டிருக்கும் அம்சங்கள் அனைத்தும் மிகவும் முக்கியமானவை. சட்ட விரோதச் சுரங்கத் தொழில் எப்படி அரசுகளை ஆட்டிப்படைக்கிறது என்பதை கர்நாடக அரசியலில் இருந்து புரிந்துகொள்ள முடியும். ஆனால், இது கர்நாடகத்துடன் முடிந்துவிடக் கூடியதல்ல.

பிகார், ஒரிசா, ராஜஸ்தான், ஹரியாணா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், கோவா என நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அரசு நிர்வாகத்தை சட்டவிரோதச் சுரங்கத் தொழில் ஆட்டிப் படைக்கிறது. இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அதற்கு கர்நாடகம் தொடக்கமாக இருக்கட்டும்.

அதற்காக, அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது. ஏதோ ஆட்சியாளரை நீக்கிவிட்டால், நாடு சுபிட்சமடைந்துவிடும் என்கிற மனநிலை நிறையபேரிடம் இருக்கிறது. அது உண்மையல்ல.

ஆட்சியாளர்கள் நீக்கப்பட்ட பிறகும், மத்திய கிழக்கு நாடுகளிலும், பாகிஸ்தானிலும் அரசியல் நிச்சயமற்ற நிலைதான் நீடிக்கிறது. 1986-ல் சோவியத் யூனியனிலும் இதேபோன்ற நிலையைக் காண முடிந்தது. ஏதோ தவறு நடக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே 1990-ல் நாடு சின்னாபின்னமாகச் சிதறிவிட்டது. நமது நாட்டிலும் இதுபோன்ற நிலைதான்.

நாட்டில் மோசடியை அம்பலப்படுத்துகிறேன் என்று அநேகம் பேர் கிளம்பிவிட்டார்கள். இதில் பலருக்குப் பொதுநலம் இல்லை. தங்களது சுயநலத்துக்காகவே தகவல்களைச் சரிபார்க்காமல் தங்கள் இஷ்டப்படி செய்திகளைப் பரப்புகிறார்கள். ஊழலுக்கு எதிரானவர்களாகக் காட்டிக் கொள்பவர்களும் இதில் அடங்குவர்.

லோக்பால் விவகாரத்தில் அண்ணா ஹசாரேயின் கோரிக்கைகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் ஏற்கப்படும் என்று நான் கருதவில்லை. இந்த விவகாரத்தில் மக்களின் கருத்து என்ன என்பது அடுத்தடுத்து வரவிருக்கும் பேரவைத் தேர்தல்களில் தெரிந்துவிடும்.

இப்போதைக்கு பஞ்சாபிலும் உத்தரப்பிரதேசத்திலும்தான் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும் என்கிற கருத்து இருக்கிறது. ஆனால், ஆந்திரப் பிரதேசத்திலும் கர்நாடகத்திலும் ஏதாவது அரசியல் விபத்துகள் நடந்தால், அவையும் தேர்தல் களம் காண வேண்டிவரும்.

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial Articles&artid=457011&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=கைமாறும் பொருளாதார அதிகாரம்!

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.