Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோப்பாயில் ஜோடியாகத் தூக்கில் தொங்கிய நிலையில் இருவர் சடலம் (காணொளி)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காலை கோப்பாய் இராஜவீதி பொலிஸ் நிலையத்திற்கு சற்றுத் தொலைவில் உள்ள ஒரு வீதியில் பனையில் கயிறு போட்டுத் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் மற்றும் ஆணொருவரின் சடலமும் ஜோடியாக தொங்கிய நிலையில் காணப்படுகின்றது. மேலும்

http://www.youtube.com/user/jaffnatv#p/u/0/xfyMx2rZv9c

கோப்பாய் தெற்கு வெள்ளவாய்க்கால் பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றில் வளைந்த பனை மரமொன்றில் ஆணொருவரினதும் பெண்ணொருவரினதும் சடலங்கள் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்ட நிலையிலேயே கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உரும்பிராய் தெற்கு யோகபுரத்தைச் சேர்ந்த டிப்பர்ரக வாகன சாரதியான (வயது 43) என்பவரினதும் அதேயிடத்தைச் சேர்ந்த (வயது 24) என்பவரினதும் சடலங்களே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றன.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் காணப்படும் இடத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் சைக்கிள், பாதணிகள், கையடக்கத் தொலைபேசி, கைமணிக்கூடு ஆகியன ஆங்காங்கே சிதறுண்டு காணப்படுவதுடன், மருந்துச் சிட்டையும் எக்ஸ்ரே அட்டையும் குறித்த சைக்கிளில் தொங்கவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் வெறு வேறு நபர்களைத் திருமணம் செய்தவர்கள் என்றும் பெண்ணுக்கு 3 குழந்தைகள் இருப்பதாகவும் தெரியவருகின்றது. இவர்கள் தூக்கில் தொங்கிய இடத்திற்கு அருகில் உள்ள வாழைத் தோட்டத்தில் அரைவாசி பாவித்த நிலையில் சாரயப் போத்தல் மற்றும் ரொபிகள் திண்பண்டங்கள் சாப்பிட்டதற்கான வெற்று உறைகளும் காணப்படுகின்றன.

thx

http://newjaffna.com/fullview.php?id=NDk0Ng==

Edited by pirasath20

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ இன அழிப்பை இப்படித்தான் செய்கிறார்கள். சுட்டுக் கொன்றால்.. போர்க்குற்றம் என்று கத்திறாங்கள். இப்படி கொன்றால்.. அது தனிப்பட்ட தகராறு.. ஒரு சம்பவம்.. அவ்வளவே என்று பைலை.. மூடிடுறாங்கள்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைச்சால் இனப்படுகொலைகளை இப்படியும் சிறுகச் சிறுக செய்து முடிக்கலாம். சிங்களவன் உண்மையில் புத்திசாலி. அவனின்ர கட்டுப்பாட்டுக்க இல்லாட்டி பயங்கரவாதின்னு கொல்லுவான். கட்டுப்பாட்டுக்க இருந்தா.. இப்படி தற்கொலை என்று சொல்ல வைச்சுக் கொல்லுவான். :unsure::o

வாவ் ..வாட் எ நியூஸ் ..வாட் எ நியூஸ்!

ஏனுங்க "நியூ யவ்னா டாட்.காம் "காரரே......

நீங்க இணையதளம் ஆரம்பிச்சதன் புனித நோக்கம் இதுதானா?

சமூகபிணக்குகள் எங்கும் நிலவுறதுதான்,

என்னமோ யாழ்ப்பாணத்துல மட்டும்தான் எல்லாமே கெட்டுபோச்சு ன்னு அதை தலைப்பு செய்தியாக்கி பிரபலம் தேடுற உங்க முயற்சிக்கு .....மாற்று திட்டம் இரண்டு சொல்றன் கேட்டுகுங்க!

1) பல்சர்ல குறூப்பா போய் கசூரினா பீச்ல மெண்டிஸ் அடிச்சிட்டு குப்புற தூங்குறது.!!.

2) யாழ்வீதிகளில் சிங்களவர்களுடன் சேர்ந்து இளநீர் வியாபாரம் செய்வது.!!

தாயக நிலத்திலிருந்து ... இணய ஊடக முயற்சி வல்லமை உள்ளவன் செய்யகூடியது... புலத்தில் சிதறி(புலம்பி)கிடந்து ...நாறுற மக்களோடு கைகோர்த்து ..

ஏதாவது ஆக்கபூர்வ தகவல்களை வழங்குறது!

அத விடுத்து.. அங்கே அவள் ஓடினாள்...இங்கே பாடசாலை மாணவிகள் சல்சா.............அங்கே பக்கத்து வீட்டு பொன்னமாக்காவும்..... அடுத்த தெரு சுப்பையாவும் ஒரே தூக்கில் தொங்கினர் என்று செய்தி போடுறத விட... யவ்னா டவுண்ல துண்ட விரிச்சு பிச்சை எடுங்க!

சில்லறையாவது தேறும்!!

கோப்பாயில் தூக்கில் தொங்கிய சடலங்கள் கொலை செய்யப்பட்ட பின்னரே தூக்கிலிடப்பட்டுள்ளன:

வைத்திய அதிகாரி

யாழ். கோப்பாயில் சடலமாக மீட்கப்பட்ட ஆண், பெண் இருவரும் கொலை செய்யப்பட்ட பின்னரே தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர் என்றும் இவர்களின் உடல்களில் உட்காயங்கள் பல காணப்படுவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் சிவரூபன் தெவித்துள்ளார்.

கோப்பாயில் இராச வீதியிலுள்ள காணி ஒன்றில் பனைமரத்தில் தூக்கில் தொங்கிய அருளன் தனபாலசிங்கம் (வயது 43) மற்றும் இந்துஷா (வயது 24) ஆகிய இருவரின் மரணம் தொடர்பாக உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தமையை அடுத்து பொலிஸாரின் விசாரணைக்காக சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பின்னரே சடலங்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளன என்று சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இன்று இந்த இருசடலங்களின் பிரேத பரிசோதனை அறிக்கை யாழ். நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.tamilmirr...2-15-44-56.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.