Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற ஆசன குறைப்பு வட பகுதி மக்களின் அரசியல் உரிமையை பறிக்கும் செயல்: பாராளுமன்றில் இரா .சம்பந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற ஆசன குறைப்பு வட பகுதி மக்களின் அரசியல் உரிமையை பறிக்கும் செயல்: பாராளுமன்றில் இரா .சம்பந்தன்.

[Wednesday, 2011-08-10 21:50:20]

யாழ் வாக்காளர்களுக்கான பாராளுமன்ற ஆசனத் தொகை குறைக்கப்படுவது என்பது வட பகுதி மக்களின் அரசியல் உரிமையை பறிக்கும் செயலென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா .சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற ஆசன குறைப்பு குறித்து பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கில் தற்போது சாதாரண சூழல் காணப்படவில்லை எனவும், அதேநேரத்தில் மீள்குடியேற்றம் அதிகளவில் நிறைவடையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், ஆசனக்குறைப்பு என்பது தவறான விடயம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் டி.எம்.ஜயரட்ன, தேர்தல் ஆணையாளர் திடீரென எடுத்த தீர்மானம் இல்லையெனவும், அரசியல் யாப்புகளுக்கு இணங்க எடுத்த தீர்மானமே ஆசனக்குறைப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாழ் மாவட்டத்தில் மட்டுமல்ல இது போன்று சில மாவட்டங்களில் முன்னைய காலத்தில் ஆசன குறைப்பு இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=48078&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் கொள்ளையிடப் பட்டுள்ளன – சம்பந்தன்

10 ஆகஸ்ட் 2011

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறு;பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் மூலம் அரசியல் உரிமைகள் களவாடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இயல்பு நிலைமை இன்னமும் ஏற்படவில்லை னஎவும், மக்கள் முழுமையாக மீள் குடியேற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளாக பல்வேறு இடர்களை எதிர்நோக்கிய மக்களுக்கு இந்த நடவடிக்கை மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைப்பு இன ரீதியான ஒடுக்குமுறையாக கருதப்படக் கூடாது என பிரதமர் டி.எம். ஜயரட்ன பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளரின் தீர்மானமாகவே இதனைக் கருத வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

சனத்தொகைப் பரம்பல் மற்றும் நிலத்தின் அளவின் அடிப்படையில் பாராளுமன்ற ஆசன எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் இருந்த பாராளுமன்ற ஆசனத்தைக் குறைத்தமையானது வட பகுதி மக்களின் அரசியல் உரிமையை பறிக்கும் செயல்

யாழ் மாவட்டத்தில் இருந்த பாராளுமன்ற ஆசனத்தைக் குறைத்தமையானது வட பகுதி மக்களின் அரசியல் உரிமையை பறிக்கும் செயலென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற ஆசன குறைப்பு குறித்து பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தடன் யுத்தம் நிறைவடைந்து இரண்டுவருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் வடக்கில் இன்னும் சாதாரண சூழல் உருவாக்கப்படவில்லை எனவும், அதேநேரத்தில் மீள்குடியேற்றம் அதிகளவில் நிறைவடையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஆசனக்குறைப்பு என்பது மிகவம் தவறான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் டி.எம்.ஜயரட்ன, இந்த முடிவானது தேர்தல் ஆணையாளர் திடீரென எடுத்த தீர்மானம் இல்லையெனவும், அரசியல் யாப்புகளுக்கு இணங்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாழ் மாவட்டத்தில் மட்டுமல்ல இது போன்றே வேறு சில மாவட்டங்களில் முன்பு ஆசனங்கள் குறைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/65483/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.