Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தண்ணீர், மின்சார விநியோகம் நிறுத்தம்! முகாம்களைவிட்டு வெளியேறுமாறு இடம்பெயர்ந்த மக்கள் மீது அரசு அழுத்தம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர், மின்சார விநியோகம் நிறுத்தம்! முகாம்களைவிட்டு வெளியேறுமாறு இடம்பெயர்ந்த மக்கள் மீது அரசு அழுத்தம்!

Published on August 16, 2011-4:28 am

வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் இடம்பெயர்ந்தோருக்கான இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அந்தந்த மாவட்டங்களுக்குச் செல்லுமாறு கூறியுள்ள அரசாங்கம், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை நிறுத்தி, தங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா போன்ற பல மாவட்டங்களையும் சேர்ந்த இடம்பெயர்ந்த முன்னூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த முகாம்களில் பன்னிரண்டு வருடங்களாக வசித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குடும்பங்களில் ஒரு பகுதியினர், தொண்ணூறுகளில் இடம்பெயர்ந்து, இ;ந்தியாவில் தஞ்சமடைந்திருந்து பின்னர் நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய குடும்பங்கள், கடந்த 1996 ஆம் ஆண்டு, அப்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வன்னிப்பிரதேசத்தில் அரசாங்கம் நடத்திய இராணுவ தாக்குதல்களில் இருந்து விலகியிருப்பதற்காக வவுனியாவில் அரசாங்கம் அமைத்திருந்த இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதனால், இங்குள்ளவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு உடனடியாகச் செல்லுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆயினும், இ;ந்தக் குடும்பங்களுக்குச் சொந்தமாகக் காணிகள் இல்லாத காரணத்தினால் தம்மை வவுனியா மாவட்டத்தில் வேறிடத்தில் காணிகள் வழங்கி குடியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இந்த முகாம்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், அப்போது வன்னிப்பிரதேசத்தில் யுத்த மோதல்கள் இடம்பெற்றமையினால், அங்கு திரும்பிச் செல்ல முடியாதிருந்த காரணத்தினால், வவனியாவில் பல இடங்களில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் குடியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். இதேபோன்று தங்களையும் வவுனியாவில் குடியேற்ற வேண்டும் என இந்தக் குடும்பங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

ஆயினும் யுத்தம் முழுமையாக முடிவடைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருவதனால், அந்தந்த மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் எனவும், அவ்வாறு திரும்பிச்செல்வதற்குச் சொந்தக் காணிகள் இல்லாதவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் காணிகள் வழங்கி மீள்குடியேற்றம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

ஆயினும் இந்த நடவடிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல், தமக்குரிய அடிப்படை வசதிகளான நீர், மின்சாரம், கழிப்பறை வசதிகளை அரசாங்கம் நிறுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அத்துடன் தமது மீள்குடியேற்றத்திற்குரிய நடவடிக்கைகளை சீரான முறையில் மேற்கொண்டு தமது பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

http://www.saritham.com/?p=30570

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பூர்வீக வளம் கொழிக்கும் நிலங்களில் சிங்களவரை வலிந்து குடியேற்றிக் கொண்டு,

12 இரண்டு வருடங்களாக இருந்தவர்களை மின்சாரம், நீரை கொடுக்காமல் நிறுத்துவது, அழகல்ல.

சிங்களவன் கேட்டானா... தமிழ்ப் பகுதியில் குடியேறப் போகிறேன் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர், மின்சார விநியோகம் நிறுத்தம்! முகாம்களைவிட்டு வெளியேறுமாறு இடம்பெயர்ந்த மக்கள் மீது அரசு அழுத்தம்!

இந்த விடயங்களை ௬ட்டமைப்பு சிறிலங்காவில் உள்ள தூதுவர்களுக்கு அறிவித்து அவர்கள் ஊடாக ஒவொரு நாடுகளுக்கும் அறியப்படுத்துவதன் மூலம் சிறிலங்காவின் கோரமுகத்தினை உலகறியட்டும்.

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூந்தோட்டம் இடம்பெயர்ந்தோர் முகாம்

22 ஆகஸ்ட் 2011

மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் நிறுத்தம்

கடந்த 16 வருடங்களாக வவுனியா பூந்தோட்டம் இடம்பெயர்ந்தோர் முகாமில் வசித்து வரும், 187 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 200 பேருக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தை 10 நாட்;களாக அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

கிளிநொச்சியில் மீள்குடியேற மறுப்பு தெரிவித்துள்ள இந்த மக்கள், தமக்கு வவுனியாவில், காணிகளும் வீடுகளும் வழங்கப்பட வேண்டும் என கோரி வருவதாகவும் இது நியாயமற்ற கோரிக்கை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவு காரணமாக தாம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் பூந்தோட்டம் அகதி முகாமில் உள்ள மக்களை கிளிநொச்சிக்கு அனுப்பி வைப்பதற்காகவே தாம் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தை துண்டித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/65998/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.