Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செயல்பாட்டாளர் வாசுகி சிறீலங்காவில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Aug 18, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

செயல்பாட்டாளர் வாசுகி சிறீலங்காவில் கைது

கடந்த 14 நாட்களுக்கு முன்னர் தனது பிள்ளையோடு இலங்கைக்குச் சென்ற செயல்பாட்டாளர் வாசுகி கருணாநிதியை சிறீலங்கா அரசு கைதுசெய்துள்ளது.

இவர் கடந்த 12 நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளhர். அவரது மகளை தற்போது விடுவித்துள்ள சிறீலங்கா அரசு வாசுகியை தாம் எப்போது விடுவிப்போம் என்பது குறித்து தெரிவிக்க மறுத்துவருகின்றது.

பிரித்தானியப் பிரஜாவுரிமை பெற்றுள்ள வாசுகி கருணாநிதி பிரித்தானியாவில் நடைபெற்ற பல ஜனநாயக ரீதியான மனித நேய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாசுகியை கைதுசெய்த இரகசியப் பொலிசார் அவர் பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்கான ஆதார வீடியோ ஒன்றையும் காட்டியுள்ளனர்.

சிறீலங்காவுக்கான பிரதி பிரித்தானியத் தூதுவர் இவர் கைது குறித்து சிறீலங்கா அரசுடன் பேசிவருவதாகவும் மேலும் அறியப்படுகிறது.

5 நாட்களில் அவரை விடுவிப்பதாக முதலில் சிறீலங்கா அரசு வாக்குறுதி கொடுத்தாலும், தற்போது அவரை தொடர்ந்தும் 4ம் மாடியில் தடுத்து வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

பிரித்தானியாவில் வட்பேட் என்னும் இடத்தில் இவர் வசித்துவந்தார். இவர் கைது குறித்து வட்பேட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு பிரித்தானியப் பிரஜை ஒருவரை சிறீலங்கா அரசு இவ்வாறு கைதுசெய்து தடுத்துவைத்திருப்பது வெளியுலகிற்கு தெரியவேண்டும்.

அதுமட்டுமல்லாது சர்வதேச பெண்கள் அமைப்பு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு புலம்பெயர் தமிழ் சட்ட வல்லுனர்கள் உதவவேண்டும்.

  1. மனுவை அனுப்புவதற்கான முகவரி ,https://email.number...uk/Contact.aspx
  2. மனு அனுப்பிய பின் உங்கள் மின்னஞ்சலுக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பும் இணைப்பை அழுத்தி மனுவை நிறைவு செய்ய தவறாதீர்கள்

http://www.pathivu.com/news/17983/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வாசுகியை கைதுசெய்த இரகசியப் பொலிசார் அவர் பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்கான ஆதார வீடியோ ஒன்றையும் காட்டியுள்ளனர்.

சிறீலங்காவுக்கான பிரதி பிரித்தானியத் தூதுவர் இவர் கைது குறித்து சிறீலங்கா அரசுடன் பேசிவருவதாகவும் மேலும் அறியப்படுகிறது.

என்னை பொறுத்தவரை ஏற்க்கனவே ஜனநாயக செயற்பாடுகளில் லண்டனில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் வேளையில் இப்படியான செய்திகளை பயன்படுத்தி மேலும் பலர் வராமல் விடப்போகின்றார்கள்.

ஸ்ரீலங்கா ஏன் நிலைமை தெரிந்தும் இவர்கள் விடுமுறைக்கு அங்கு செல்கின்றார்கள் ஏதாவது தவிர்க்க முடியாத காரணங்களுக்கு வேண்டுமானால் செல்லலாம் மற்றும் படி ஸ்ரீலங்கா செல்வதை தவிர்ப்பதே நன்று.

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.