Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச அலுவலகங்களில் இப்படியும் நடக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரச அலுவலகங்களில் இப்படியும் நடக்குமா?

வடமாகாண தலைமை அரச அலுவலகம் எல்லாம் இப்ப யாழ்ப்பாணத்தில் வந்து புதிதாகத் திறந்து இயங்குகிறது. அந்த அலுவலகங்களில் வேலை செய்கின்றவர்களுக்குத் தனியாக ஒரு பஸ் ஓடுது. இதை ஏன் சொல்லுறன் என்று பார்க்கிறியளா அந்த அலுவலகம் ஒன்றில் தான் போன வாரம் ஒரு பிரச்சினை நடந்து போச்சு. அந்த அலுவலகத்தில் நடந்த பிரச்சினையை வெளியே போக விடாமல் அதிகாரி பார்த்தபோதும் அந்த செய்தி கசிஞ்சு போச்சு. கடந்த 11 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணி இருக்கும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் வடமாகாண தலைமை அரச அலுவலகம் ஒன்றின் முன் வீதியால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தேன் . அந்த அலு வலகப் பணியாளர்கள் எல்லோரும் வேலை முடிந்து பஸ்ஸுசுக்காக காத்துக் கொண்டு நின்றார்கள். நானும் அவர்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தேன் . அந்த அலுவலக வாசல் தாண்டும்போது சடீர், பிடீர் என்று ஒருசத்தம் வந்தது. எங்கிருந்து வருகிறது என்று திரும்பிப் பார்த்தேன். அந்த அரச அலுவலகத்தில் இருந்து தான். இளம் அரச அலுவலர் ஒருவருக்கு வயதான அரச அலுவலர் கன்னத்தில் அடித்துக் கொண்டிருந்தார். அந்த இளம் அரச அலுவலரும் வாங்கிக் கொண்டு இருந்தார். 4 அடி விழுந்தது. ஆனால் அடி வாங்கிய அந்த இளம் அரச அலுவலர் எந்த விதமான பதட்டமும் இல்லாமல் அடியை வாங்கிவிட்டு, அடி வாங்கியது போல் இல்லாமல் அந்த வயது போன அலுவலருக்கு மரியாதை கொடுத்து நின்றார்.

அடித்த அந்த வயது போன அலுவலர் களைத்துப்போய் இருப்பது அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகளில் தெரிகிறது. ஓரமாக சைக்கிளை நிற்பாட்டி அந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்ட நான் அவர் ஏன் அடித்தார், இவர் ஏன் அடி வாங்கினார், அரச அலுவலகங்களில் இப்படி எல்லாம் அடிப்பாங்களோ என்று எனக்குள்ளே கேள்வியைக் கேட்டுக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றேன்.

வீட்டுக்கு வந்தபோதும் அவர் அடித்த சம்பவம்தான் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. எப்படியாவது என்ன நடந்தது என்று அறியவேண்டும் போலிருந்தது.

வடமாகாண இன்னொரு தலைமை அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் எனக்கு நல்ல பழக்கம். அவரிடம் சென்று கேட்போம் என்று அவர் வீட்டுப் பக்கம் சென்றேன். இரவு 7மணி இருக்கும், அவர் வீட்டுக் கேற்றைத் தட்ட நாயும் விட்ட பாடில்லை, குரைக்க ஆரம்பித்து விட்டது. நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்டு அவரும் வாசலுக்கு வந்து, என்னைப் பார்த்ததும் உள்ளே வரும்படி அழைத்தார். சைக்கிளை வெளியே விடாமல் வீட்டக்குள்ளேயே உருட்டிச் சென்று ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அவரது வீட்டுப் போட்டிக்கோவில் இருக்கும் கதிரையில் போய் உட்கார்ந்தேன். அவரும் வந்து எனக்கு எதிரே உட்கார்ந்தார்.

என்ன இந்த நேரம் வந்தனியள் என்றார். ஒரு சம்பவம் நடந்திருக்கிறது அதைப்பற்றிக் கேட்க வந்தேன் என்றேன். என்ன சம்பவம் சொல்லும் என்றார். உடனே அந்த அரச அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை ஒன்றும் விடாமல் சொன்னேன். அதைக் கேட்டு விட்டு எந்தவித தயக்கமும் இன்றி நானும் அறிந்தேன் என்று சொல்ல ஆரம்பித்தார். அந்த அலுவலகத்தில் அதிகாரியாக இருப்பவருக்கு ஆங்கில மொழியில் சிறப்புத் தேர்ச்சி உள்ளதால் மேலதி காரிக்கு ஆங்கில மொழியில் சிறப்புத் தேர்ச்சி இல்லாதால் எந்த வேலை என்றாலும் அவரையே நாடுவார். இதனால் இவருக்கும் மேலதிகாரிக்கும் நல்ல உறவு. எது வேணுமெண்டாலும் இந்த அதிகாரிக்கு மேலதிகாரி செய்துகொடுப்பார். அதனால் இந்த அதிகாரி தான் நினைச்சதை அலுவலகத்தில் சாதிப்பார். திருகோணமலையில் இந்த அலுவலகம் இருக்கும் போது அங்கே இவர் தனக்குக் கீழேயுள்ள பணியாளர் ஒருவருக்கு கண்டபடி அடித்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த அந்த மேலதிகாரி அடிச்சது சரியோ, பிழையோ என்று அறியாமல் அடி வாங்கினவரை இடமாற்றம் செய்துவிட்டார்.

ஏனெனில் அந்த மேலதிகாரிக்கு இந்த அதிகாரி வேண்டப்பட்டவர் ஆவார். இப்பொழுது அந்த அலுவலகம் யாழ்ப்பாணத்துக்கு வந்ததால் இங்க வந்தும் தன்னுடைய ஆட்டத்தை ஆட வெளிக்கிட்டுட்டார். என்னை எவரும் தட்டிக் கேட்க முடியாது என்ற இறுமாப்பில், தலைக்கனத்தில் தலை கால் எது என்று தெரியாமல் பாட்டுப் போடாமல் ஆடுகின்றார். இந்த அதிகாரிக்கு நிக்கொட்டுக்கு இடமாற்றம் வந்த போது இந்த அலுவலக பணியாளர்கள் அனைவரும் சந்தோஷப்பட்டனர். எங்களை விட்டு துன்பம் ஒன்று விலகிப் போகுது என்று. ஆனால் மேலதிகாரியால் இவரின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டது. சந்தோஷப்பட்ட பணியாளர்கள் இதனால் மீண்டும் சோர்வடைந்தனர். யாழ்ப்பாணம் வந்ததில் இருந்து கீழ் நிலைப் பணியாளர்களுடன் தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்திய வண்ணமே இருப்பார். பெண் பணியாளர்களைப் பார்த்தால் முழுப்பல்லையும் காட்டிக் கொண்டு இருப்பார். தனது அதிகாரி வேலையைப் பாராமல் பணியாளர் ஒவ் வொருவருக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும் கோள் மூட்டுற கீழ்த்தனமான வேலையையும் செய்வார் என்றால் பாருங்களேன். இவர் அதிகாரியோ அல்லது நாராயணனோ என்று தெரியாமல் உள்ளது என்ற அவர், போன் அடிக்கிற சத்தம் கேட்டு அறைக்குள் போனார்.

போன் கதைத்து விட்டு வந்தவர் தொடர்ந்தார். எனது நண்பன் ஒருவன் அந்த அலுவலகத்தில் வேலை செய்கிறான். அவன் தான் சொன்னான் இந்த அடித்த சம்பவத்தை. ஏன் என்று கேட்டேன். வேலை முடிந்து எல்லோரும் பஸ்ஸுக்காக அலுவலகத்துக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கின்ற போது அந்த அதிகாரி அலுவலகத்தில் இருந்தார். அவரைத் தேடி அலுவலகத்துக்கு யாரோ ஒருவர் வர அந்தத் தகவலைத் சொல்லுவதற்காக அந்த அலுவலகத்தில் பணி புரியும் கீழ்நிலைப் பணியாளர் ஒருவர் அதிகாரியின் அறைக்குள் சென்று விட்டார். எப்படி உள்ளே வருவாய் என்று கேட்டு கீழ் நிலைப் பணியாளருக்கு அடி விழுந்தது. உள்ளே என்ன நடந்தது? அந்த அதிகாரி என்ன செய்து கொண்டிருந்தார் என்று சொல்ல எனக்கு வெட்கமாய் இருக்கு என்றார். பரவாயில்லை சொல்லுங்ககோ என்றேன். வேறென்ன இப்ப எங்கட யாழ்ப் பாணத்தில் கூட நடக்கிற சம்பவம் தான் என்று அந்த சம்பவத்தைச் சொல்லி முடித் தார்.

சரி வாறன் என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டன். பார்த்தியளா இப்ப யாழ்ப்பாணத்தில கூட நடக்கிற சம்பவம் என்றால் அது அரச அலுவலகங்களில் நடக்கிறது. எந்த தங்குதடையும் இன்றி தாராளமாக நடக்கிறது. இதைத் தட்டிக் கேட்க மேலதிகாரி கடமையுடன் செயற்படுவாரா அல்லது கண்டும் காணாமல் இருப்பாரா.

நன்றி - உதயனிணையம்

என்ன அங்கு நடந்திருக்கும். எல்லாம் சரசுகளின் சரசங்கள் தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.